ஷான்வி சரணின் தேன் மழை தூவுதடி.
கல கலன்னு ஒரு பெரிய குடும்பம்!ஒரு திருவிழாவில் ஆரம்பிக்கும் கதை.நிறைய பேரப்பிள்ளைகள்,மகன்கள் மகள்கள் ,மருமகளகள் என பெரிய குடும்பத்தில் பிறந்த விஸ்வநாதன் காதல் கல்யாணம் செய்ததால் அம்மாவுக்கு பிடிக்காமல் போனதால் வட நாட்டிலேயே செட்டில் ஆகிவிடுகிறார்.
மனைவியை ஒரு விபத்தில் இழந்துவிட பிள்ளைகள் அரவிந்த்,அமிர்தவர்ஷினி இருவரையும் பாசத்தைக்கொட்டி வளர்க்கிறார்.பிள்ளைகள் வளர்ந்து இப்போதுதான் கிராமத்துக்கு அழைத்து வருகிறார்.பாட்டி பாசமாக அழைத்தாலும் வர்ஷினியின் ஆடை குறித்தும் அவள் அம்மா பற்றியும் குத்திக்காட்டிக்கொண்டே இருப்பார்.ஆடை குறித்த கண்ணொட்டத்தை இந்த கதையில் ரொம்ப அழகா சொல்லியிருக்கார்.விக்ரம் கதையின் நாய்கன்,தங்கை வித்யா மீது அளவு கடந்த பாசம்.வர்ஷினியின் வெகுளித்தனத்தில் வித்யா அவளை அன்புடன் நட்பாக்க,அரவிந்த் காதலுடன் பார்ப்பான்!வர்ஷினியை விக்ரம் ஒரு இரவில் மொட்டை மாடியில் தன் சுய நினைவில்லாத நிலையிலும் பண்புடன் நடத்தியதில் அவள் அவன்மீது காதல் கொள்கிறாள்.கஸின் கூட்டத்தில் பிரதாப் அவளை காதலிப்பதாக விக்ரம் நினைக்க,வர்ஷினியின் காதல் அவனுக்கு தெரியாமலே போகிறது!எதிர் பாராத ஒரு நிகழ்வால் வர்ஷினியை விக்ரம் காப்பாற்ற அவளும் தன் குரலை இழந்து பாட்டியின் பேச்சால் விஸ்வனாதனும் கோபத்தில் கிராமத்தை விட்டு கிளம்பி விட,விக்ரம் வர்ஷினி காதல் கல்யாணத்தில் முடிந்ததா? அவளை அவன் அடையாளம் கண்டு கொண்டானா?அவளின் காதலை அறிந்துகொண்டானா எல்லாவற்றையும் கதையில் பார்க்கலாம்!
கடைசி வரை அன்று நடந்தது என்னன்னு சொல்லாமலே சஸ்பென்ஸா கொண்டு போயிருக்காங்க!அந்த கிப்ட்,புடவை,டீஷர்ட்,மினியேச்சர்கள் என எல்லாமே நல்ல சஸ்பென்ஸ்கள்!
அரவிந்த் வித்யாவின் காதல்,அம்மாவை விக்ரம் உருவில் பார்க்கும் வர்ஷினி,விக்ஸ்டப்பாவும் பம்ப்கின்னும்!இப்படி கதையில் குட்டி குட்டி அழகுகள்!உடை குறித்து வர்ஷினி சொல்லும் கருத்துகள் அருமை!நல்ல ஒரு காதல் கதை.
கல கலன்னு ஒரு பெரிய குடும்பம்!ஒரு திருவிழாவில் ஆரம்பிக்கும் கதை.நிறைய பேரப்பிள்ளைகள்,மகன்கள் மகள்கள் ,மருமகளகள் என பெரிய குடும்பத்தில் பிறந்த விஸ்வநாதன் காதல் கல்யாணம் செய்ததால் அம்மாவுக்கு பிடிக்காமல் போனதால் வட நாட்டிலேயே செட்டில் ஆகிவிடுகிறார்.
மனைவியை ஒரு விபத்தில் இழந்துவிட பிள்ளைகள் அரவிந்த்,அமிர்தவர்ஷினி இருவரையும் பாசத்தைக்கொட்டி வளர்க்கிறார்.பிள்ளைகள் வளர்ந்து இப்போதுதான் கிராமத்துக்கு அழைத்து வருகிறார்.பாட்டி பாசமாக அழைத்தாலும் வர்ஷினியின் ஆடை குறித்தும் அவள் அம்மா பற்றியும் குத்திக்காட்டிக்கொண்டே இருப்பார்.ஆடை குறித்த கண்ணொட்டத்தை இந்த கதையில் ரொம்ப அழகா சொல்லியிருக்கார்.விக்ரம் கதையின் நாய்கன்,தங்கை வித்யா மீது அளவு கடந்த பாசம்.வர்ஷினியின் வெகுளித்தனத்தில் வித்யா அவளை அன்புடன் நட்பாக்க,அரவிந்த் காதலுடன் பார்ப்பான்!வர்ஷினியை விக்ரம் ஒரு இரவில் மொட்டை மாடியில் தன் சுய நினைவில்லாத நிலையிலும் பண்புடன் நடத்தியதில் அவள் அவன்மீது காதல் கொள்கிறாள்.கஸின் கூட்டத்தில் பிரதாப் அவளை காதலிப்பதாக விக்ரம் நினைக்க,வர்ஷினியின் காதல் அவனுக்கு தெரியாமலே போகிறது!எதிர் பாராத ஒரு நிகழ்வால் வர்ஷினியை விக்ரம் காப்பாற்ற அவளும் தன் குரலை இழந்து பாட்டியின் பேச்சால் விஸ்வனாதனும் கோபத்தில் கிராமத்தை விட்டு கிளம்பி விட,விக்ரம் வர்ஷினி காதல் கல்யாணத்தில் முடிந்ததா? அவளை அவன் அடையாளம் கண்டு கொண்டானா?அவளின் காதலை அறிந்துகொண்டானா எல்லாவற்றையும் கதையில் பார்க்கலாம்!
கடைசி வரை அன்று நடந்தது என்னன்னு சொல்லாமலே சஸ்பென்ஸா கொண்டு போயிருக்காங்க!அந்த கிப்ட்,புடவை,டீஷர்ட்,மினியேச்சர்கள் என எல்லாமே நல்ல சஸ்பென்ஸ்கள்!
அரவிந்த் வித்யாவின் காதல்,அம்மாவை விக்ரம் உருவில் பார்க்கும் வர்ஷினி,விக்ஸ்டப்பாவும் பம்ப்கின்னும்!இப்படி கதையில் குட்டி குட்டி அழகுகள்!உடை குறித்து வர்ஷினி சொல்லும் கருத்துகள் அருமை!நல்ல ஒரு காதல் கதை.