ரொம்ப ரொம்ப சூப்பரான கதை சரண்யா சிஸ். ஆத்மா பிடிவாதம், அடாவடி, கெத்து, குறும்பு நிறைந்தவன். ரிது அமைதி, தன்மானம், சுயமரியாதை, பிடிவாதம் நிறைந்தவள். இருவரும் எதிர்பாராமல் இணைந்து ஒரு அழகியல் வாழ்க்கை. ஆத்மா குளிக்காம பட்டு வேஸ்டி சட்டை போடாமலே தாலி கட்டினாலும் யதார்த்தமாக ஏற்று இருவரும் ஆத்மார்த்தமாக வாழ்ந்து வாழ்கிறார்கள். அண்ணாமலை முற்கோபம், எட்டூருக்குக் கேட்கிறமாதிரிக் கத்திக் கதைச்சாலும் அன்பு, பாசம் நிறைந்த மனிதர். மனைவியால் முடியாவிட்டாலும் மனதாலும், உடலாலும் ஒழுக்கமாக வாழ்ந்தது சூப்பர். வித்யாக்கு இரத்தம் கொடுத் ததாகட்டும், மருமகளின் பணத்தைப் பொக்கிசமா, பெருமையா பார்ப்பது அருமை. ஆனந்திக்குக் குழந்தைகளை அன்பா பாசமாவும் வளர்க்கத் தெரியவில்லை. ஏதோ பெத்திட்டம் என்டு வாழுறது. உறவுகளுடனும், இணைந்து, அன்பா வாழவும் எப்படிக் கதைக்க என்றும் தெரியவில்லை. தமயந்தி பயந்த சுபாவமாயும், புருசனை எப்படி அடக்கி அதட்டி வாழத் தெரியேல்லை. தனசேகருக்குக் குடிக்கவும், நகையை, வியாபாரத்தை இழக்கவும் தமயந்தி இறந்தவுடன் முருகேஸ்வரியை ஏமாற்றிக் கட்டவும் தான் தெரிஞ்சது. முருகேஸ்வரி பாவப்பட்ட ஜீவன். குடும்ப உறவுகள் போறதுக்குப் போக்கிடமில்லாமல் தனது மகள் வித்யாவுடன் ரிதுவின் நிழலில் தற்காலிக வாசிகளாக தன்னையும் மகளையும் நினைத்து வாழ்கிறார். ரிதுவின் அன்பு செலுத்துவதிலாகட்டும் ரிதுவின் வீட்டிலேயோ சொத்திலேயோ தங்களுக்கு உரிமையில்லையென்று யதார்த்தமாக நேர்மையாக வாழ்கிறார். வித்யா மெளனக்குயிலாக வருகிறாள். அழகாகக் கோலம் போடுவதில் நேர்த்தியிருக்கு. பாவம் கோயில்மணி தலையில விழுந்து பாவமா இருந்தது. விசாலாட்சி மிக மிக அருமையான பெண்மணி ரிதுமேல் பாசம் காட்டுவதிலாகட்டும், முருகேஸ்வரி தன்னுடைய தங்கையின் இடத்துக்கு வந்திட்டாளென்ற ஆவேசம், கோபமில்லாமல் முருகேசுவையும் வித்யாவையும் அரவணைப்பதிலாகட்டும், ஆனந்தியைக் கண்டிப்பதிலாகட்டும் சூப்பரோ சூப்பர். ஏழுமலை, சுந்தரி சாதாரணமாக வந்து செல்கிறார்கள். பரத்துக்கு பெரிய மாமனின் இரத்தம் ஓடுவதால் முருகேசு, வித்யாவைக் கண்ணுல காட்டக் கூடாது. சபர்மதி பாவம் புருசனுக்குப் பயந்த சுபாவம். இளவரசு, செண்பகம் ரிதுவின் மேல் பாசம் காட்டுகிறார்கள், ஆனால் செண்பகத்துக்கு ஆரம்பத்துல முருகேசப் பிடிக்காது பின்னர் முருகேஸ்வரியை சக மனிசியாப்பாவிச்சு வீட்டுக்கு எல்லாம் போற சூழல் வருகுது ஆனால் முரளிக்கு வித்யா மேலிருக்கும் நேசம் அன்பு புரிந்து மகனுக்கு மணம் பேசுவாரோ தெரியாது. அதுவும் வித்யா வேறு வாய் பேசாதவள். அதுக்கு வித்யா, முரளிக்குக் கதை வந்தால் தான் தெரியும். ரிதுவுக்கு மாமனின் பிச்சைக்காரி எனும் வார்த்தைகளாலும், தாயின் இயலாமை தெரிந்ததாலும் உழைத்து தன்னோட பணத்தில வாழ நினைப்பது சூப்பர். புருசனோட தொழிலயே தொழிலாலியா சம்பளத்துக்கு வேலை செய்வது அருமை. அதோட ஆத்மா கம்பனியில் எல்லோரும் பின்பற்றும் ரூல்சை மனைவிக்கும் கடைப் பிடிப்பதும், வேலையிடத்தில் முதலாளியா தேர்ந்த வியாபாரியாகவும், வீட்டில் அன்பு நிறைந்த காதல் கணவனாக இருப்பது சூப்பரோ சூப்பர். ரிது ஆத்மா வாசலில் நிராதரவா விட்டுவிட்டு சென்ற பின் போனிலையும், நேரிலையும் கேள்வி கேட்கிறது வெகு அருமை. ஒரு ஜிமிக்கியை வைத்து பண்ற அளப்பரை இருக்கே அப்பப்பா. ஜிமிக்கியில் ஆரம்பித்த இவர்கள் அன்பு ஜிமிக்கி ஹாரத்தில தொடருது. ஆத்மகண்ணன் ரிதுகண்ணனாக மாறி பூர்விதாவுடன் ஆத்மார்த்தமாக வாழ்கிறார்கள் வாழ்வார்களென வாழ்த்துகின்றேன். சூப்பரான மனதுக்கு இனிமை சேர்த்த கதை சூப்பர். நன்றி சிஸ்.