Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் சுவாசம் என் மூச்சில்.......(கவிதைன்னு போடுவோமா??.... )

Advertisement

TNWContestWriter042

Well-known member
Member
உன் சுவாசம் என் மூச்சில்

கடலில் பிறக்கும் இவனை பிடிக்க அல்லி போல் விரிந்த ஆயிரம் கயல்விழிகள் காத்திருந்து என்ன பயன்????.....
உதித்தவன் உற்று நோக்குவது என்னவோ கரையில் மலர்ந்த அந்த எழில் விழியை காணத்தானே......

ஆழ்கடலில் பிறந்தாலும் அருங்கரத்தில் வந்து சேர்ந்த சங்கு போல ஆற்றருகே பிறந்த தாமரை போல மலர்ந்து ஏழு வண்ணங்களில் இல்லாத வண்ணத்தால் தீட்டப்பட்ட இவள் சேர வேண்டிய இடம் அவன் நெஞ்சம் தானே!!!.....

தன் மனம் வென்றவளை காதல் கொண்டு தன் குணம் மாறாது ஆளுபவன் இவன்

உச்சி வெயிலாய் சுட்டெரிக்கும் இவனை அன்பால் தனித்து மார்பில் பணித்து மாலை வெயிலாக்கிவிட்டாள்
இந்த வெகுளி .

ஆம் வெங்கதிர் வெயிலோனை செவ்வேரி விழிகளால் செங்கதிர் சூரியனாக்கிவிட்டாள். ஆயினும் இது மாயை என்பதை அவள் அறிவாள்.

ஏன்னென்றால் இப்போதும் எப்போதும் அவன் கதிரவன்தான்.......


thanks for the supporting friends......
 
Last edited:
Top