பெண்கள் தன் குடும்பங்களை உடைப்பதில்லை -ஏன்?
தனக்கான நியாயத்தை பேசும் பெண் விமர்சிக்கப்படுகிறாள். அது தனக்கு ஒன்னு அடுத்தவங்களுக்கு ஒன்னுன்னு செயல்படும் எண்ணம் இல்லை. ஒரு பெண்ணோட வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையை முழுதாக தன் கையில் வைத்திருக்கும் பெற்றோர் அவளோட மணமுறிவை ஏற்க விரும்பாது அவளது நியாயங்களை செவி கொடுத்து கேட்காது இருப்பதால் வரும் பயம். தன் நிம்மதிக்காக அவள் தன் குடும்பத்தை மாற்றி அமைத்தால் அவள் குடும்பத்தையே அழித்தவளாகிறாள். இத்தனையையும் மீறி வாழ நினைக்கும் பெண் அநேகமா தனித்து தான் ஜெயிக்கணும்.
அப்பா வேணும்னு நினைக்கிற அஜயும் அஞ்சுவும் அயல் நாட்டுல நிம்மதியா வாழுவாங்க. அவங்களோட நிம்மதிக்கு இங்க அவங்கம்மா தினமும் தனக்கு துரோகம் செஞ்ச புருஷனுக்கு சமைச்சு வைக்கணும்.
நல்லா நடமாட்டிட்டு இருக்குற பிரகாஷ் நாளைக்கு படுத்துட்டா? அப்பவும் பிள்ளைங்க phone
மூலமாதான் தன் அக்கறையை வெளிப்படுத்துவாங்க. அப்பவும் சாலா தான் அவன் கூட இருந்து பார்த்துக்கணும். Atleast nurse வெச்சு பார்த்துக்க பணம் இருக்கணும்.
ஆக சாலா அளவுக்கு பொருளாதார தன்னிறைவு அடைய முடியாத பெண்களோட எதார்த்தம் அவங்க புருஷனை அவன் எப்படி இருந்தாலும் அனுசரிப்பது தானா?
பெண்ணின் பொருளாதார தன்னிறைவாவது நடைமுறை எதார்த்தத்தில் இருக்கும் நிம்மதியோடு, ஷாலினிகளுக்கு கிடைத்த தண்டனை பிரகாஷுகளுக்கும் நடைமுறையில் வர வேண்டும், இன்னும் அறை நூற்றாண்டிலாவது அதுவும் எதார்த்தத்தில் ஒன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு...