Verynice
@உதயா சிஸ் சூப்பர். உங்க கருத்து - தப்பு எங்க நடந்தாலும் கேட்கணும்ங்கறது எனக்கு 100% மறுப்பில்லை. ஆனா என்ன செஞ்சுருக்க முடியும் சாலாவால? குமரன் மறுகல்யாணத்துக்கு தயாரா இருக்கான். தேவி ஒத்துக்கிட்டாச்சு. ஒரு வேளை தேவி சண்டை போட்டு(2 கல்யாணத்திற்கு) இவ எடுத்தெறிந்து பேசியிருந்தால் மகாதப்பு. தேவி தனியா நின்னுருந்தா கூட சாலா ப்ரகாஷ் கிட்ட சில சமயம் பண உதவியோ இல்ல வேலையோ ஏற்பாடு பண்ணியிருக்கலாம். தேவி ஆப்போஸ் பண்ணாம வேற யாரும் ஒண்ணும் செய்ய முடியாது. சாலா தப்பு செய்யலனு சொல்லல அவ எதுவும் செய்யறதுக்கு இல்லை தேவி முன்வராம. இவளால மேக்சிமம் என்ன செய்ய முடிஞ்சிருக்கும் - பேசாம, வருஷத்துக்கு ஊருக்கு வர பத்து நாள் வராம இருந்துருக்கலாம். அதெல்லாம் பாண்டிமாவும், குமரனும் எவ்வளோ கேர் பண்ணிருப்பாங்க? சாலாவுக்கான சப்போர்ட் அவ எதிர்தது நின்னு வாழபோறதால் தான். இல்ல மீனாட்சி, தேவி மாதிரி மறந்து,மழுங்கடிக்கப்பட்டிருப்பாள். அதே மாதிரி எல்லா காரியமும் பொது நலத்தில் ஆரம்பிப்பதில்லை. பொது நலத்துக்குள்ள ஒரு மிகப்பெரிய சுயநலம்(ஆரம்பித்த பொழுதாவது) இருந்திருக்கும். நம்ம எல்லாருக்கும் தெரிந்த காந்தி தாத்தா எப்போ வெள்ளையர்கள் அடக்குமுறையை உணர்ந்தார்? சவுத் ஆப்பிரிக்காவில் பேரிஸ்டர் பட்டம் பெற்று பயிற்சியிலிருந்த போது இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டியிலிருந்து கீழே தள்ளிய பட்ட போது. படித்தால் மட்டும் மரியாதை தரவேண்டும் என்ற எண்ணமா அவருக்கு. அதற்கு முன் கொடுமை வேறு யாருக்கும் நடந்ததில்லையா அவருடைய சொந்தங்கள் உட்பட? அதன் பின்னான அவருடைய செயல்கள் தான் முக்கியம். அந்த நிகழ்வு எத்தகைய நல்ல விளைவுகளை தந்ததென்பது தானே வரலாறு. இன்ஃபாக்ட் அவருடைய சுயசரிதையில் இறந்த பின் சொர்க்கம் செல்ல ஆசை பட்டதால் மக்களுக்கு(நாட்டுக்கு) விடுதலை வாங்கி தந்தால் புண்ணியம் அதன் பலன் சொர்க்கமடையலாம் என்று எண்ணியதாக எழுதியதாக கேள்வி. கண்டிப்பாக இருவரையும் ஒப்பிடவில்லை. ஒரு பாதிக்க கூடிய நிகழ்வு நம்மை என்ன செய்ய வைக்கிறது என்பது தான் நம்மை யார் என்று காட்டும். இந்த பாதிப்பிலிருந்து உணர்ந்து கூட தேவியை பார்ட்னர் ஆக்கியிருக்கலாம். சாலா கண்டிப்பாக புரட்சி பெண் கிடையாது. ஆனால் குறைந்த பட்ச நேர்மை இருக்கிறது என்று நினைக்கிறேன். தேவியையும் கண்டிப்பாக குறை சொல்லவில்லை . அவருக்கு முன் அப்போது இருந்த வழிகளில் ஒரு கம்ஃபோர்ட் ஸோன் டிக் பண்ணிட்டாங்க. சாலா டிஸ்கம்ஃபோர்ட் ஸோன் டிக் பண்ணியிருக்காங்க அதான் சப்போர்ட். சில் @உதயா சிஸ்இந்த கமெண்ட் போடவா வேண்டாமா என்று ரொம்ப குழப்பமா தான் இருந்துச்சு ஆனாலும் எனக்கு தோணுறதை சொல்லாமல் இருக்க முடியல ..
எனக்கு சாலோவோட அண்ணி தேவி பத்தி வந்ததோ அதற்கு பிறகு சாலாவுக்கு சப்போர்ட் பண்ண விருப்பமான இல்லை.. அதுவும் சரண்யா கிட்ட நாற்பது வயசு வரைக்கும் நரக வாழ்க்கை வாழ்ந்தேன் என்று சொல்றதை படிச்ச பிறகு சாலா மேல் எந்த நல்ல எண்ணமும் இல்லை
தேவிக்கு குழந்தை இல்லை என்றதும் அவங்க தங்கச்சிய இரண்டாம் தாரமா கல்யாணம் செஞ்சு வைக்கும் போது சாலாவுக்கு உறுத்தலையா ..
தேவி முன்னாடியே அவங்க புருஷனுக்கு சொந்த தங்கச்சிய கட்டி வச்சு தான் புருஷன் இன்னொருத்தி கூட குடும்பம் நடத்துற கொடுமைய ஒரே வீட்டில் இருந்து தினம் அனுபவிச்சாங்களே .. அப்போ எல்லாம் அது கொடுமையா சாலாவுக்கு தெரியல ....
பொண்டாட்டி கிட்ட குறை இருந்தால் புருஷன் இன்னொருத்தி கூட வாழலாம் என்று தானே சாலா வீட்டில் ரூல்ஸ் வச்சிருக்காங்க அது பிரகாஷுக்கு மட்டும் ஏன் பொருந்தாது
தேவிகிட்ட குறை இருந்ததும் சாலாவோட குடும்பமே அவ அண்ணனுக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சு வச்சாங்க அப்போ ஒரு பொண்டாட்டியா தேவிக்கு அது எவ்வளவு பெரிய வலி என்று யோசிக்கவே தோணல
சாலா அண்ணன் மாதிரி பிரகாஷும் அவன் பொண்டாட்டி கிட்ட இருக்க குறைய சொல்லி அவனோட சந்தோஷத்துக்காக ஷாலினி கூட செகண்ட் மேரேஜ் செஞ்சு வைக்க சொல்லி இருக்கணும் போல...
சாலாவுக்கு அவ கிட்ட என்ன குறை இருந்தாலும் அவ புருஷன் அவளுக்காக தான் இருக்கணும் என்று நினைக்குறா இந்த நியாயம் எல்லாம் ஏன் தேவி விஷயத்தில் இல்லை....
இவளுக்காவது ஆறுதலா குழந்தைகள் இருக்கு ஆனா தேவிக்கு குழந்தை இல்லை அதை காரணம் காட்டி புருஷனையும் பறிச்சாச்சு மலடி பட்டம் கட்டி மூலையில் ஒதுக்கி வச்சிட்டு ஒரு நல்லது கெட்டது எதிலும் கலந்துக்க முடியாமல் நாலு சுவத்துக்குள்ள முடக்கியாச்சு ....
இது எதுவும் சாலாவுக்கு இத்தனை வருஷத்தில் ஒரு தடவை கூட தப்பா தெரியல ...
இப்போ நாற்பது வயசில் அவ புருஷன் துரோகம் செஞ்சதும் ஊரை விட்டு வந்தா சொந்தமா தொழில் தொடங்கி சுயமா நிக்குறா ஆனால் இதில் எதையும் தேவிக்கு செய்யணும் என்று தோணவே இல்லை..
சரண் கதையில் தேவி இவ கூட சேரந்து பிஸ்னஸ் பண்ற மாதிரி வந்துச்சு அப்போ இவளுக்கு அந்த நிலைமை வந்ததும் தான் தேவி விஷயத்தில் புத்தி வருமா..
இவங்க தேவிக்கு இத்தனை வருஷம் செஞ்ச பாவத்துக்கு இவ தேவி கிட்ட மன்னிப்பு கேட்டு தொழிலில் கூட சேர்த்து பணமும் பதவியும் கொடுத்தால் ஈடு ஆகிடுமா அப்போ பிரகாஷும் இவ கிட்ட மன்னிப்பு கேட்டு இனி எப்பவும் தப்பு பண்ண மாட்டேன் என்று சொன்னால் அவனை ஏத்துக்க வேண்டிய தான....
பிரகாஷ் கிட்ட கத்தி குத்து கதை சொன்னாலே அது தேவிக்கும் பொருந்துமே... தேவியும் என் புருஷனுக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சு வச்சது நீங்கள் தானே என்று சாலா குடும்பத்தையே கத்தியால் குத்தணும் தானே ...
சாலா அவ புருஷன் இன்னொருத்தி கூட இருந்தான் என்று பொங்கி எழுவதும் புரட்சி பண்றதும் எனக்கு படிக்க விருப்பம் இல்லை.
பிரகாஷ் கிட்ட இவ நியாயம் பேசும் போது இவளுக்கு என்ன தகுதி இருக்கு என்று தான் எனக்கு தோணுது..
தேவிக்கு குழந்தை இல்லை என்றதும் அவங்களுக்கு ஒரு நியாயம் இவ இரண்டு பிள்ளை பெத்ததும் இவளுக்கு ஒரு நியாயமா
புருஷன் இன்னொருத்தி கூட வாழ்றதை தேவி சகிச்சு கிட்டு வாழணும் ஆனால் இவ புருஷன் இன்னொருத்தி கிட்டு தொடர்பு வச்சிருந்தான் என்பதை இவ சகிச்சுகிட்டு வாழ மாட்டா...
இவ மகன் கிட்ட பிரகாஷ் பண்ணது அயோக்கியத்தனம் என்று சொல்லுவா அவன் திருப்பி தேவி அத்தைக்கு நீங்கள் செஞ்சது சரியா தப்பா என்று கேட்டா என்ன பதில் சொல்லுவா ...
இப்போ கூட சாலா நினைச்சா அவ புருஷனை மன்னிச்சு அவன் கூட சேர்ந்து பழைய படி நல்லா வாழ முடியும் ஆனால் தேவி அவங்க புருஷனை இழந்தது இழந்தது தானே..
பிரகாஷ் கேரக்டர்ல ஒரு விஷயம் ஏத்துக்கவே முடியல புத்தகம் படிக்கிற பழக்கம் இருக்குறவன் அதுவும் நல்ல தரமான புத்தகமா ஒழுக்கத்தையும் நல்ல நெறிகளையும் சொல்லுற புத்தகங்கள் மட்டும் தான் படிக்கிறான் இவன் எப்படி ஒழுக்கம் தவறுவான்..
புத்தகத்தையும் ஒழுக்ககேடையும் ஒன்னா வச்சு பார்க்க முடியல ... புத்தகங்களுக்கு அடிமை ஆனவங்களால் வேற எந்த தப்பான விஷயத்திலும் மனசு செல்லாது .
சாலா ஹீரோயின் என்பதால் அவளை மட்டும் போக்கஸ் பண்ணி அவளுக்கு நடக்கிறது மட்டும் கொடுமை மாதிரி என்னால் படிக்க முடியல தேவி விஷயம் நடுவில் உறுத்தி கிட்டே இருக்கு...
எனக்கு பர்சனலா சாலாவ புரட்சி பெண் மாதிரி படிக்க விருப்பம் இல்லை ஏன்னா இந்த புரட்சி எல்லாம் சுயநலத்துக்காக செய்ய கூடாது.. இவங்க வீட்டுக்கு வாழ வந்த பெண்ணுக்கும் இதே நியாயத்தை பாலோவ் செஞ்சிருந்தா ஏத்துக்கலாம்
ஒரு வேளை பிரகாஷ் எந்த தப்பும் செய்யாமல் நல்லவனாவே இருந்து இருந்தால் தேவி சாகுற வரை இவங்க வீட்டில் அடிமையா நரக வாழ்க்கை தானே வாழ்ந்து இருப்பாங்க..
எனக்கு சாலாவ ஹீரோயினா வச்சு படிக்க விருப்பம் இல்லை ஒரு வேளை பிரகாஷ் கூட சேருவது போல காட்டுனா படிப்பேன்..
உங்க அடுத்த கதையில் வந்து ஜாயிணட் ஆகிக்குறேன்
Nice ...@உதயா சிஸ் சூப்பர். உங்க கருத்து தப்பு எங்க நடந்தாலும் கேட்கணும்ங்கறது எனக்கு 100% மறுப்பில்லை. ஆனா என்ன செஞ்சுருக்க முடியும் சாலாவால? குமரன் மறுகல்யாணத்துக்கு தயாரா இருக்கான். தேவி ஒத்துக்கிட்டாச்சு. ஒரு வேளை தேவி சண்டை போட்டு(2 கல்யாணத்திற்கு) இவ எடுத்தெறிந்து பேசியிருந்தால் மகாதப்பு. தேவி தனியா நின்னுருந்தா கூட சாலா ப்ரகாஷ் கிட்ட சில சமயம் பண உதவியோ இல்ல வேலையோ ஏற்பாடு பண்ணியிருக்கலாம். தேவி ஆப்போஸ் பண்ணாம வேற யாரும் ஒண்ணும் செய்ய முடியாது. தேவி தப்பு செய்யலனு சொல்லல அவ எதுவும் செய்யறதுக்கு இல்லை தேவி முன்வராம. இவளால மேக்சிமம் என்ன செய்ய முடிஞ்சிருக்கு - பேசாம, வருஷத்துக்கு ஊருக்கு வர பத்து நாள் வராம இருந்துருக்கலாம். அதெல்லாம் பாண்டிமாவும், குமரனும் எவ்வளோ கேர் பண்ணிருப்பாங்க? சாலாவுக்கான சப்போர்ட் அவ எதிர்தது நின்னு வாழபோறதால் தான். இல்ல மீனாட்சி, தேவி மாதிரி மறந்து,மழுங்கடிக்கப்பட்டிருப்பாள். அதே மாதிரி எல்லா காரியமும் பொது நலத்தில் ஆரம்பிப்பதில்லை. பொது நலத்துக்குள்ள ஒரு மிகப்பெரிய சுயநலம்(ஆரம்பித்த பொழுதாவது) இருந்திருக்கும். நம்ம எல்லாருக்கும் தெரிந்த காந்தி தாத்தா எப்போ வெள்ளையர்கள் அடக்குமுறையை உணர்ந்தார்? சவுத் ஆப்பிரிக்காவில் பேரிஸ்டர் பட்டம் பெற்று பயிற்சியிலிருந்த போது இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டியிலிருந்து கீழே தள்ளிய பட்ட போது. படித்தால் மட்டும் மரியாதை தரவேண்டும் என்ற எண்ணமா அவருக்கு. அதற்கு முன் கொடுமை வேறு யாருக்கும் நடந்ததில்லையா அவருடைய சொந்தங்கள் உட்பட? அதன் பின்னான அவருடைய செயல்கள் தான் முக்கியம். அந்த நிகழ்வு எத்தகைய நல்ல விளைவுகளை தந்ததென்பது தானே வரலாறு. இன்ஃபாக்ட் அவருடைய சுயசரிதையில் இறந்த பின் சொர்க்கம் செல்ல ஆசை பட்டதால் மக்களுக்கு(நாட்டுக்கு) விடுதலை வாங்கி தந்தால் புண்ணியம் அதன் பலன் சொர்க்கமடையலாம் என்று எண்ணியதாக எழுதியதாக கேள்வி. கண்டிப்பாக இருவரையும் ஒப்பிடவில்லை. ஒரு பாதிக்க கூடிய நிகழ்வு நம்மை என்ன செய்ய வைக்கிறது என்பது தான் நம்மை யார் என்று காட்டும். இந்த பாதிப்பிலிருந்து உணர்ந்து கூட தேவியை பார்ட்னர் ஆக்கியிருக்கலாம். சாலா கண்டிப்பாக புரட்சி பெண் கிடையாது. ஆனால் குறைந்த பட்ச நேர்மை இருக்கிறது என்று நினைக்கிறேன். தேவியையும் கண்டிப்பாக குறை சொல்லவில்லை . அவருக்கு முன் அப்போது இருந்த வழிகளில் ஒரு கம்ஃபோர்ட் ஸோன் டிக் பண்ணிட்டாங்க. சாலா டிஸ்கம்ஃபோர்ட் ஸோன் டிக் பண்ணியிருக்காங்க அதான் சப்போர்ட். சில் @உதயா சிஸ்![]()
சிஸ் சித்ராவ கல்யாணம் செஞ்சதே தேவி வேறு எங்கும் போக தேவையில்லனு தான். இவ வீட்டுல இன்னும் வெச்சிருக்கான்னு சொல்றீங்களேப்பா! வெளியில இருந்திருந்தாலும் வேற பேரு, உழைச்சு(ஃபிஸிக்கல்) மடடும் கஷ்டபடணும். இங்க இவங்க ஒண்ணா இருக்கறதிலேர்ந்து எல்லாத்தையும் நேராவோ, இலை மறை காயாவோ கவனிக்கவேண்டியிருக்கும். இந்த தொல்லைக்கு வேற யாரையாவது கட்டிருக்கலாம். குறைந்த பட்சம் அம்மா வீட்டு சப்போர்ட் ஏதோ ஒரு டைம்ல கிடைச்சிருக்கும். இப்போ அங்கயும் சித்ரா வருவா. மொத்த தப்பும் பாண்டிமா முக்கியமா குமரன் மேல தான். ஆனா சித்ரா ரொம்ப பாவமில்லை. நம் இருவருக்கும் அந்த கதை தெரியாது. 3 குழந்தைகளை பெற்ற சித்ரா ஒரு தடவையாவது தேவி,குமரன் தன் குழந்தைகளுடன் வெளியே செல்ல விடுவாளா? வெளியில் செல்வது பெரிய விஷயமில்லை தான் ஆனால் சும்மா போகவே தேவிக்கு நிறைய தடை.இந்த கதையில்ல ப்ரகாஷ் வில்லன் இல்லை... அந்த பாண்டியம்மா தா சரியான வில்லி..இப்படி ஒரு டாக்சிகான ஆள நா பாத்ததே இல்லை. இவங்க மகளுக்கு ஒரு நியாயம் மருமகளுக்கு நியாயம்.. இங்க எல்லாருமே சாலா பாவம் தேவி பாவம்னு சொல்லுறீங்க.. ஏன் யாரும் சித்ராவ பத்தி யோசிக்க மாட்டேங்கரீங்க.. அக்காவோட குறைய சுட்டி காட்டி ஊரே ஒன்னு சேந்து அக்கா புருஷனுக்கு ரெண்டாம் தாரமா கட்டி வெச்சி இருக்கு. அவ மனநிலைய யாராவுது யோசிச்சி பாத்தீங்களா சொந்த அக்கா வாழ்கைய பறிக்க எந்த தங்கச்சியும் நினைக்க மாட்டா அப்படி நெனச்சி இருந்தா இன்னேரம் தேவி அந்த வீட்டுல இருந்து இருக்கவே மாட்டா.. ப்ரகாஷ விட கெடு கெட்டவன் இந்த குமார்
யாரா இருந்தாலும் நாத்தனர் வந்து வீட்டுல இருந்தா எரிச்சல் வர தான் செய்யும் அது ஒன்னும் தப்பு கிடையாதே. அவ வாழ்கைய தானே அவ பாப்பா. ரெண்டாவதா கட்டி கிட்டதும் இல்லாம நீ இல்லனா தேவி னு ஆப்ஷன் வெச்சி சுத்தறவன் எல்லாம் ஒரு மனுஷனா தூ..
ஏன்டா மூணு புள்ள பெக்கும் பொது தெரிலயா அவ குடும்பம் நடத்த சரி பட்டு வர மாட்டானு?? என்ன சொன்ன தேவி கால் தூசிக்கு வருவாளானா.. அப்றம் எந்த மயித்துக்கு டா தேவிக்கு குழந்தை இல்லனு சொல்லி பஞ்சாயத்து கூட்டுன.. உனக்கு புள்ள பெக்க ஒருத்தி உன்ன தங்கச்சிங்கள அனுசரிக்க ஒருத்தி வேணுமோ ஏன் அடுத்து உன் அம்மா அப்பாக்கு கஞ்சி ஊத்த ஒருத்திய கட்டிட்டு வர வேண்டியது தானே.
குமரன கம்பர் பண்ணும் போது ப்ரகாஷே பரவாலனு தோணுது. தெரிஞ்சே பண்ணான் மறச்சி பண்ணுனான் மன்னிப்பு கேக்கரான். ஆனா பாண்டியம்மாவும் குமரனும் தேவிக்கும் சித்ராக்கும் பண்ண துரோகத்துக்கு யார் நியாயம் கேப்பா. மொத்தல்ல இந்த பாண்டியம்மாவ சாத்தனும்...
![]()