Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆலம் விழுதாக ஆசைகள் - 19

Advertisement

sharanyaa satyanarayanan

Active member
Member
ஆலம் விழுதாக ஆசைகள் - 19

இரவில் தனிமையில் அமர்ந்து தன் நினைவுகளை பின்னோக்கி செலுத்தி கொண்டிருந்தான் சிவா. அன்னையும் தம்பியும் ஊரில் இல்லாத தனிமை இன்று தான் வெகுவாக தெரிந்தது. எதையும் சாப்பிட தோன்றாமல் வானத்தை வெறித்து கொண்டிருந்தவனின் அருகில் வந்து அமர்ந்தனர் ஹரி மற்றும் ஆதி.

ஆதி,"என்ன மச்சி, பாலும் கசந்ததடி படுக்கையும் நொந்ததடினு நிலவ வெறிச்சு பாத்துட்டு இருக்க ".

ஹரி, " அவன் அப்படி இருக்கானோ இல்லையோ , நீ பல நாளா அப்படித்தான் டா சுத்துற " என்று ஆதியை வாரியவாறு வந்து அமர்ந்தான் ஹரி .

இது எதற்கும் சிவாவிடம் பதில் இல்லாமல் போக , ஹரி,"என்ன மச்சா , அதையே நினைச்சுட்டு இருக்காதா, இந்த கல்யாணத்த நிறுத்தி, கான்ட்ராக்ட கேன்சல் பண்றோம் ".

ஆதி, " பண்றதுலாம் இருக்கட்டும் யாருடா அந்த வெள்ளரி பழம் , நல்ல மொலு மொலுக்குனு இருந்துட்டு , நம்மகிட்ட சவால் விடுது , நீ ஏன் அவனை பார்த்து டென்ஷன் ஆனா?".

ஹரியும் அதற்கான பதிலை எதிர்பார்த்து இருப்பதை பார்த்த சிவா , தனக்கு தெரிந்த அனைத்தையும் சொல்ல தொடங்கினான் .

--------------------

மதுரையில் சாரா," எப்படியும் இப்போ பேசிருப்பாங்க, கல்யாணம் எதுவும் நடக்கலைனு தெரிஞ்சுருக்கும்" என்று கூற.

துர்வா ," கல்யாணத்த நிறுத்த தான் லே பொய் சொன்னேன், இப்படி அந்த நெட்ட கொக்கு போன் போட்டு பேசும்ன்னு கனவா கண்டேன் " .

இதில் எதிலும் வாய் திறக்காத சாந்தினியை பார்த்த துர்வா , " என்ன சாண்டி , அந்த சப்பாத்தி மாவை கல்யாணம் பண்ண ரெடி ஆகிட்ட போல, எனக்கு அந்த கோண மூஞ்சி ராம் , இந்தா சாராக்கு அந்த நெட்ட கொக்கு, பொருத்தம் டாப்பா இருக்கு" என்றவளை கண்ணீரோடு ஏறிட்டாள் சாந்தினி.

துர்வாவை அதட்டிய சாரா சாந்தினியை சமாதானம் செய்ய, துர்வா ," பின்ன என்ன லே , இப்பவாது அந்த தவளை வாயனுக்கு(ஆதி) கால் பண்ணி நமக்காக தான் என் ப்ரெண்டு பொய் சொல்லிட்டாங்கனு சொல்றாளா? ஏதோ விட்டத்தை பார்த்துட்டு உக்காந்திருக்கா " என்றவள், " எனக்கு என்னவோ அந்த நெட்டை கொக்கு இந்த கல்யாணத்த நிறுத்த மாட்டான்னு தோணுது ".

சாரா," என்ன லே சொல்ற, இப்போ கல்யாணத்த நிறுத்துறதுக்கு என்ன தான் வழி ?".

துர்வா கூர்மையாக சாராவையும் சாந்தினியும் பார்த்து ," ஒரே ஒரு வழிதான் இருக்கு " என்றாள் .

சாரா, " அதுக்கு ஏன் இப்படி இழுக்குற , என்னனு சொல்லு ?".

" பொண்ணு இல்லேன்னா கல்யாணம் எப்புடி நடக்கும் " என்ற துர்வாவை அதிர்ச்சியுடன் பார்த்தனர் தோழிகள்.

அதை எல்லாம் கணக்கில் எடுக்காத துர்வா , " நாம ஓடி போயிருவோம் " என்பதை கடைக்கு போவது போல் சொல்ல,சாராவிற்கு தலையில் அடித்து கொள்ளலாம் போல் இருந்தது.

" அடியே , மற கழண்டுருச்சா ? , அது ஏதோ அறியாத வயசுல பக்கத்து வீட்டு அக்கா மாதிரி ஓடி போய் தான் கல்யாணம் பண்ணுவேன்னு சபதம் போட்ட, எதோ விளையாட்டுனு நினச்சா, சபதத்தை நிறைவேத்துறீங்களோ?" என்று பல்லை கடித்த சாராவை இடைமறித்த சாந்தினி," பொண்ணு மட்டும் இல்ல மாப்பிள்ளை இல்லேன்னாலும் கல்யாணம் நிக்கும் " என்றவளை அதிர்ச்சியுடன் சாரா பார்த்தாள்.

துர்வாவோ , " சிங்கம் களமிறங்கிருச்சு ..... இந்தா வந்துட்டாள என் சூர்யா , என் குட்டி பகவதி .. இப்போ தான் லே நீ பழைய சாண்டி , தி பாஸ் " என்று வாழ்த்து மழை பொலிந்து கொண்டிருந்தாள்.

அவர்கள் இருவரும் மாப்பிள்ளைகளை எப்படி கடத்துவது என்று மாஸ்டர் பிளான் போட்டு கொண்டிருக்க , அவர்களை வெறித்த சாரா ' இதுகள் பிளானை பார்த்தா ஏற்கணமே 4 கொலை , 10 கொள்ளை, 5 - 6 கடத்தல் பன்னிருபாளுங்க போலையே " என்று எண்ணி கொண்டிருந்தாள்.

---------/----------------

திருமணத்திற்கு ஒரு வாரமே , இருக்கும் நிலையில் விஷ்வா ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தான்.தோழிகள் மூவரும் கடத்தல் தொழிலில் மூழ்கி விட , முஹுர்த்த பட்டு எடுப்பதில் கவனம் செலுத்தவில்லை . ஆனால் மாப்பிள்ளை மூவருக்கு இந்த திருமணம் அவர்கள் திட்டத்தின் முக்கிய கட்டம் என்பதால் அதிக உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

அதிலும் ரிஷி மிகுந்த உற்சாகத்துடன் சுற்றி திரிந்தான், இதை அறிந்த பிறைசூடனுக்கு வாய் வயிறு மட்டும் இல்லாமல் உடம்பே அடுப்பில் வைத்த சூடு தண்ணீர் போல் கொதித்து கொண்டிருந்தது.

ஒரு பக்கம் மாப்பிளைகளின் கடத்தல் திட்டம், மறுபுறம் திருமணத்தை தடுக்கும் ஆதி & கோவின் திட்டம், அடுத்ததாக இந்த திருமணத்தை நடத்தியே தீரும் முடிவுடன் ரிஷி & கோ. இவர்களை தவிர்த்து சில ஜீவன்கள் புது திட்டம் தீட்டி கொண்டிருந்தனர்.

அதில் ஒன்று ருத்ரன், தன் தமயனுக்கு தெரியாமல் தான் அவனை சந்தித்ததும், தமையனை பற்றிய தகவல்களை பரிமாறியதும் அவன் வயிற்றில் புளியை கரைத்து கொண்டிருந்தது.

ராகவி தன் பங்கிற்கு இந்த திருமணத்தை நடத்தியே தீரும் எண்ணத்துடன் சுற்றி கொண்டிருந்தாள். அவளை பொறுத்தவரை , நாத்தனார் மற்றும் இலவச இணைப்பு நாத்தனார், இந்த மூன்று பேருக்கும் பிடிக்காத வாழ்கை அமைத்து, என்றும் விஷ்வாவின் மனைவியான தனக்கு அடிமையாக வைத்து கொள்ளவேண்டும் என்று மனக்கணக்கு போட்டு கொண்டிருந்தாள்.

பிறைசூடன் a இந்த திருமணத்தை நிறுத்த வேண்டிய அனைத்து வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டிருந்தார். இந்த திருமணம் நடந்தால் தன் கௌரவத்திற்கு இழுக்கு மட்டுமில்லாமல், தன் மகனிடம் தான் தோற்பதா என்ற எண்ணமும் தான் காரணம் .

இது எதுவும் தெரியாமல்,தங்கைகளின் நல் வாழ்விற்காக ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தான் விஷ்வா. அவன் மனம் முழுவதும் சொன்னபடி தங்கைகளின் திருமணத்தை குறித்த காலத்துக்குள் நடத்த போகும் பூரிப்பில் அலைந்து கொண்டிருந்தான். அவன் எண்ணம் ஈடேற பல தடைகள் இருப்பதை அவன் அறியவில்லை.

மனிதர்கள் பலதிட்டம் போட்டாலும் , இறுதியில் இறைவன் போட்ட திட்டமே வெல்லும். இவர்களில் யார் போட்ட திட்டம் வெல்லும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தொடரும்......
 
ஆலம் விழுதாக ஆசைகள் - 19

இரவில் தனிமையில் அமர்ந்து தன் நினைவுகளை பின்னோக்கி செலுத்தி கொண்டிருந்தான் சிவா. அன்னையும் தம்பியும் ஊரில் இல்லாத தனிமை இன்று தான் வெகுவாக தெரிந்தது. எதையும் சாப்பிட தோன்றாமல் வானத்தை வெறித்து கொண்டிருந்தவனின் அருகில் வந்து அமர்ந்தனர் ஹரி மற்றும் ஆதி.

ஆதி,"என்ன மச்சி, பாலும் கசந்ததடி படுக்கையும் நொந்ததடினு நிலவ வெறிச்சு பாத்துட்டு இருக்க ".

ஹரி, " அவன் அப்படி இருக்கானோ இல்லையோ , நீ பல நாளா அப்படித்தான் டா சுத்துற " என்று ஆதியை வாரியவாறு வந்து அமர்ந்தான் ஹரி .

இது எதற்கும் சிவாவிடம் பதில் இல்லாமல் போக , ஹரி,"என்ன மச்சா , அதையே நினைச்சுட்டு இருக்காதா, இந்த கல்யாணத்த நிறுத்தி, கான்ட்ராக்ட கேன்சல் பண்றோம் ".

ஆதி, " பண்றதுலாம் இருக்கட்டும் யாருடா அந்த வெள்ளரி பழம் , நல்ல மொலு மொலுக்குனு இருந்துட்டு , நம்மகிட்ட சவால் விடுது , நீ ஏன் அவனை பார்த்து டென்ஷன் ஆனா?".

ஹரியும் அதற்கான பதிலை எதிர்பார்த்து இருப்பதை பார்த்த சிவா , தனக்கு தெரிந்த அனைத்தையும் சொல்ல தொடங்கினான் .

--------------------

மதுரையில் சாரா," எப்படியும் இப்போ பேசிருப்பாங்க, கல்யாணம் எதுவும் நடக்கலைனு தெரிஞ்சுருக்கும்" என்று கூற.

துர்வா ," கல்யாணத்த நிறுத்த தான் லே பொய் சொன்னேன், இப்படி அந்த நெட்ட கொக்கு போன் போட்டு பேசும்ன்னு கனவா கண்டேன் " .

இதில் எதிலும் வாய் திறக்காத சாந்தினியை பார்த்த துர்வா , " என்ன சாண்டி , அந்த சப்பாத்தி மாவை கல்யாணம் பண்ண ரெடி ஆகிட்ட போல, எனக்கு அந்த கோண மூஞ்சி ராம் , இந்தா சாராக்கு அந்த நெட்ட கொக்கு, பொருத்தம் டாப்பா இருக்கு" என்றவளை கண்ணீரோடு ஏறிட்டாள் சாந்தினி.

துர்வாவை அதட்டிய சாரா சாந்தினியை சமாதானம் செய்ய, துர்வா ," பின்ன என்ன லே , இப்பவாது அந்த தவளை வாயனுக்கு(ஆதி) கால் பண்ணி நமக்காக தான் என் ப்ரெண்டு பொய் சொல்லிட்டாங்கனு சொல்றாளா? ஏதோ விட்டத்தை பார்த்துட்டு உக்காந்திருக்கா " என்றவள், " எனக்கு என்னவோ அந்த நெட்டை கொக்கு இந்த கல்யாணத்த நிறுத்த மாட்டான்னு தோணுது ".

சாரா," என்ன லே சொல்ற, இப்போ கல்யாணத்த நிறுத்துறதுக்கு என்ன தான் வழி ?".

துர்வா கூர்மையாக சாராவையும் சாந்தினியும் பார்த்து ," ஒரே ஒரு வழிதான் இருக்கு " என்றாள் .

சாரா, " அதுக்கு ஏன் இப்படி இழுக்குற , என்னனு சொல்லு ?".

" பொண்ணு இல்லேன்னா கல்யாணம் எப்புடி நடக்கும் " என்ற துர்வாவை அதிர்ச்சியுடன் பார்த்தனர் தோழிகள்.

அதை எல்லாம் கணக்கில் எடுக்காத துர்வா , " நாம ஓடி போயிருவோம் " என்பதை கடைக்கு போவது போல் சொல்ல,சாராவிற்கு தலையில் அடித்து கொள்ளலாம் போல் இருந்தது.

" அடியே , மற கழண்டுருச்சா ? , அது ஏதோ அறியாத வயசுல பக்கத்து வீட்டு அக்கா மாதிரி ஓடி போய் தான் கல்யாணம் பண்ணுவேன்னு சபதம் போட்ட, எதோ விளையாட்டுனு நினச்சா, சபதத்தை நிறைவேத்துறீங்களோ?" என்று பல்லை கடித்த சாராவை இடைமறித்த சாந்தினி," பொண்ணு மட்டும் இல்ல மாப்பிள்ளை இல்லேன்னாலும் கல்யாணம் நிக்கும் " என்றவளை அதிர்ச்சியுடன் சாரா பார்த்தாள்.

துர்வாவோ , " சிங்கம் களமிறங்கிருச்சு ..... இந்தா வந்துட்டாள என் சூர்யா , என் குட்டி பகவதி .. இப்போ தான் லே நீ பழைய சாண்டி , தி பாஸ் " என்று வாழ்த்து மழை பொலிந்து கொண்டிருந்தாள்.

அவர்கள் இருவரும் மாப்பிள்ளைகளை எப்படி கடத்துவது என்று மாஸ்டர் பிளான் போட்டு கொண்டிருக்க , அவர்களை வெறித்த சாரா ' இதுகள் பிளானை பார்த்தா ஏற்கணமே 4 கொலை , 10 கொள்ளை, 5 - 6 கடத்தல் பன்னிருபாளுங்க போலையே " என்று எண்ணி கொண்டிருந்தாள்.

---------/----------------

திருமணத்திற்கு ஒரு வாரமே , இருக்கும் நிலையில் விஷ்வா ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தான்.தோழிகள் மூவரும் கடத்தல் தொழிலில் மூழ்கி விட , முஹுர்த்த பட்டு எடுப்பதில் கவனம் செலுத்தவில்லை . ஆனால் மாப்பிள்ளை மூவருக்கு இந்த திருமணம் அவர்கள் திட்டத்தின் முக்கிய கட்டம் என்பதால் அதிக உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

அதிலும் ரிஷி மிகுந்த உற்சாகத்துடன் சுற்றி திரிந்தான், இதை அறிந்த பிறைசூடனுக்கு வாய் வயிறு மட்டும் இல்லாமல் உடம்பே அடுப்பில் வைத்த சூடு தண்ணீர் போல் கொதித்து கொண்டிருந்தது.

ஒரு பக்கம் மாப்பிளைகளின் கடத்தல் திட்டம், மறுபுறம் திருமணத்தை தடுக்கும் ஆதி & கோவின் திட்டம், அடுத்ததாக இந்த திருமணத்தை நடத்தியே தீரும் முடிவுடன் ரிஷி & கோ. இவர்களை தவிர்த்து சில ஜீவன்கள் புது திட்டம் தீட்டி கொண்டிருந்தனர்.

அதில் ஒன்று ருத்ரன், தன் தமயனுக்கு தெரியாமல் தான் அவனை சந்தித்ததும், தமையனை பற்றிய தகவல்களை பரிமாறியதும் அவன் வயிற்றில் புளியை கரைத்து கொண்டிருந்தது.

ராகவி தன் பங்கிற்கு இந்த திருமணத்தை நடத்தியே தீரும் எண்ணத்துடன் சுற்றி கொண்டிருந்தாள். அவளை பொறுத்தவரை , நாத்தனார் மற்றும் இலவச இணைப்பு நாத்தனார், இந்த மூன்று பேருக்கும் பிடிக்காத வாழ்கை அமைத்து, என்றும் விஷ்வாவின் மனைவியான தனக்கு அடிமையாக வைத்து கொள்ளவேண்டும் என்று மனக்கணக்கு போட்டு கொண்டிருந்தாள்.

பிறைசூடன் a இந்த திருமணத்தை நிறுத்த வேண்டிய அனைத்து வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டிருந்தார். இந்த திருமணம் நடந்தால் தன் கௌரவத்திற்கு இழுக்கு மட்டுமில்லாமல், தன் மகனிடம் தான் தோற்பதா என்ற எண்ணமும் தான் காரணம் .

இது எதுவும் தெரியாமல்,தங்கைகளின் நல் வாழ்விற்காக ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தான் விஷ்வா. அவன் மனம் முழுவதும் சொன்னபடி தங்கைகளின் திருமணத்தை குறித்த காலத்துக்குள் நடத்த போகும் பூரிப்பில் அலைந்து கொண்டிருந்தான். அவன் எண்ணம் ஈடேற பல தடைகள் இருப்பதை அவன் அறியவில்லை.

மனிதர்கள் பலதிட்டம் போட்டாலும் , இறுதியில் இறைவன் போட்ட திட்டமே வெல்லும். இவர்களில் யார் போட்ட திட்டம் வெல்லும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தொடரும்......
Nice sis
 
Top