உங்கள என்ன சொல்லன்னு கூட தெரியல!!அன்பு சகோதரி ஷோபா அவர்களுக்கு
நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை அன்புடன் அழைக்கிறேன் இன்று தாங்கள் கொடுத்த பதிவுக்கான பரிசு..
நான் தினமும் காலை 60கிமீ மாலை 60கிமீ விசைஉந்தில் அலுவலகம் சென்று வருகிறேன் இது கொரோனாவின் பரிசு என்னை போன்ற பலருக்கு
நீங்கள் நம்ப மாட்டீர்கள் இன்று காலை செல்லும் போது முழுவதும் உங்கள் கதையை பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டே சென்றேன்..
அந்த அளவுக்கு என்னை பாதித்தது என்றால் மிகையாகாது
கடந்த பதிவில் கமண்டில சொல்லி இருந்தேன் ஏதாவது காரணத்தால் துளசி கல்யாணம் நின்று வருந்தினால் இனி உங்கள் கதை படிக்க மாட்டேன் என்று அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்…
நேற்று கூட ரியா சகோதரி உடன் உங்கள் கதை பற்றி பேசினேன்..
என்னைப் போலவே பலர் என்ன அடுத்து என்ன என்று புலம்பினார்கள் என்று கூறுவது குறைவு
நான் 2000 ஆண்டு நாகர்கோயிலில் என் உடன் பணிபுரிந்த தோழி திருமணத்திற்கு சென்றிருந்தேன் அங்கு திருமணத்தில் பருப்பு பாயாசத்தில் வாழைப்பழம் குழைத்து உண்டார்கள் அப்போது ஏதோ அதிசயமாக பார்த்தேன்,
இப்போது உங்கள் வரிகளை படிக்கும் போது நான் 20வருடங்கள் பின் சென்றேன்..
அழகான திருமணத்தை நேரில் காணும் பாக்கியம் தந்ததற்கு நன்றி..
இப்ப கூட நம்ப முடியவில்லை உங்களை திருமணம் உண்மையாகவே முடிந்து விட்டதா
அப்புறம் அடுத்த பதிவில் துளசி அல்லது மூர்த்தி அல்லது வேறு யாராவது கனவு காண்பது போல காட்சி அமைத்து விடுவீர்களோ என்ற பயம் இருக்கு..
மனதிற்கு நிறைவான ஒரு பதிவு கொடுத்துள்ளீர்கள் ஆனாலும் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை..
இப்படி புலம்ப வைத்துவிட்டீர்களே… ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ?
எந்த மாதரி எபி கொடுத்தாலும்... ஒரு டெரராவே பார்த்தா எப்படி?
ஆனா... இந்த கனவு ஐடியா கூட நல்லா தான் இருக்கு!!
ம்ம்ம்? யோசிக்க வேண்டிய விஷயம் தான்.
happy to know u enjoyed the epi ?????