Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பு இல்லையெனில் இல்லை பண்பு

Advertisement

Joyram

New member
Member
திருவள்ளுவர் பிறந்து குறளில் நல்வாங்கு வாழ்வை அருளினார்
ஒவையார் பிறப்பெடுத்து மனித பண்பின் சிறப்பினை நிறுவினார்
வள்ளலார் தோன்றி அன்பில் கலந்து கருணையாகவே வாழ்ந்தார்
மாணிக்கவாசகர் உழன்று இறைவனின் கருணைக்காக ஏங்கினார்
ரமணர் மணம் செய்யாமல் ஆத்ம சிந்தனையில் மனம் லயித்தார்
பரமஹம்சர் மனைவியுடன் கடவுளை கண்டு துதித்து உருகினார்
சைதன்யர் கீதை தந்த கண்ணனை ஆடிப்பாடி தோத்திரம் செய்தார்
இன்னும் எவ்வளவோ ஞானிகள் இவ்வுலகுக்கு சேவை செய்தனர்
பொருளை பின்னே தள்ளி அருளை முன் தள்ளி முன்னடைந்தனர்
பெரும்பான்மையினர் விஞ்ஞானம் தான் மெய் என நம்புகின்றனர்
எவரும் எதை வேண்டுமானாலும் நம்பட்டும் நம்பாமலிருக்கட்டும்
ஒன்றைமட்டும் ஒவ்வொரு மனிதனும் நன்கு புரிந்துகொள்ளட்டும்
சுயநலம் இல்லாத கரை படியாத தூய அன்புதான் உண்மை வாழ்வு
இதை உணராத ஒரு செல்வந்தரின் வாழ்வும் உண்மையில் தாழ்வு

Joyram
 
Top