Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 3

Advertisement

SHALU shalu

Well-known member
Member
"அப்பறம் ப்பா, ருத்ரா கிட்டப் பேசினேன்" என்று தந்தையிடம் கூறினான் காஷ்மீரன்.

"எப்படி இருக்கா?" என்று கேட்டார் சந்திரதேவ்.

"அவ நல்லா இருக்காளாம் ப்பா. என் கல்யாணத்தில் தான் கண்ணாக இருக்கா!" என்று கூறி சிரித்தான் அவருடைய மகன்.

"நானும் தான் டா. நீ என்ன தான் சொல்ற?" என்று அவனிடம் நேரடியாக வினவினார் தந்தை.

"உங்களோட அப்பறம் ருத்ராவோட விருப்பம் தான் ப்பா. ஆனால், அவ இங்கே வந்து, எனக்காகப் பொண்ணுத் தேடனும். அந்த ஊரிலேயே இருந்துக்கிட்டு, இங்கே என்ன நடக்குதுன்னுக் கேட்கக் கூடாது!" எனத் தன்னுடைய வேண்டுகோளை உரிமையுடன் முன் வைத்தான் காஷ்மீரன்.

"இப்போ தானே ஃபோன்ல பேசின? இதைச் சொல்லி இருக்க வேண்டியது தான?" என்றார் சந்திரதேவ்.

"அவளுக்கும், எனக்கும் லீவ் கிடைக்கட்டும் ப்பா. நான் அப்போ கால் செய்து பேசுறேன்"

"ம்ஹ்ம். அண்ணனும், தங்கச்சியும் சேர்ந்து ஒரு நல்ல முடிவுக்கு வாங்க" என்று அவனிடம் தீர்க்கமாக உரைத்து, மகனை அனுப்பி வைத்தார் சந்திரதேவ்.

தனது கம்பெனியில் இருந்த தரமற்றப் பொருட்களை உடனே நீக்கி, அதை வேறொரு இடத்தில் வைத்து, எரித்து விடுமாறு அலுவலர்களிடம் கூறி விட்டு உறக்கத்தைத் தொடர்ந்தான் காஷ்மீரன்.
__________________

"மாப்பிள்ளையோட பேர் காஷ்மீரன்! அவரோட கம்பெனிகளைப் பத்தி உனக்கே தெரிஞ்சிருக்கும். மேகஸின்ஸில் எல்லாம் அவரோட ஃபோட்டோவைப் பார்த்திருப்ப! ஆனாலும், இந்தா, இதில் பார்த்து சொல்லு" என்று காஷ்மீரனுடைய புகைப்படத்தைத் தனது மகளிடம் கொடுத்து விட்டுச் சென்றார் அவளது அன்னை கனகரூபிணி.

அதைக் கையில் வைத்திருந்த மஹாபத்ராவிற்குத் தன்னவனாகப் போகும் ஆடவனின் வதனத்தைப் பார்க்க மனம் துடிக்க எல்லாம் இல்லை. ஒரு சிறு ஆர்வம் மட்டுமே இருந்தது அவளுக்குள்.

அதனால், புகைப்படத்தில் தன் கண்களைப் பதித்தாள்.

காஷ்மீரன்! குழந்தைகளுக்கானப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனத்தின் முதலாளி! அந்த ஒரு விஷயமே அவளிடமிருந்த ஆர்வத்தை மேலும் தூண்டி விட்டது.

ஏனெனில், மஹாபத்ராவுடைய வேலையும் குழந்தைகள் சம்பந்தப்பட்டது தான். அது தான், காஷ்மீரனைப் பற்றி இன்னும் அறிந்து கொள்ள வைத்தது.

அதற்கு முன்னர், அவளுடைய வேலையைப் பற்றிக் காண்போம்.

மஹாபத்ரா என்பவள், செல்வவளம் பொருந்திய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தனது சொந்தக் காலில் நிற்பதற்குப் பிரயத்தனங்கள் செய்து, தன்னுடைய விருப்பப் படிப்பு மற்றும் வேலையில் சேர்ந்திருந்தாள்.

அவள் ஒரு “நடத்தை தொழில்நுட்ப வல்லுநர்” (Behavioral Technician) ஆவாள்.

இப்படியான வேலையில் இருப்பவர்கள், ஒரு பள்ளியில் குழுவாக இணைந்து செயல்படுவார்கள்.மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இவர்களது பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது ஆகும்.

குழந்தைகளின் மனநிலையை மேம்படுத்துவதே இந்தக் குழுவின் தலையாய கடமையாகும். அதே மாதிரியானப் பிரிவில் தொழில் நடத்தும் காஷ்மீரன், இவளது ஆர்வத்தை ஈர்த்தான்.

“இன்ட்ரெஸ்ட்டிங்!” என்று சிலாகித்துக் கொள்ளவும் செய்தாள் மஹாபத்ரா.

அவனது கம்பெனியில் தயாரிக்கும் அனைத்து பொருட்களைப் பற்றியும், அறிந்து கொண்டவளுக்கு, காஷ்மீரனின் குணாதிசயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய ஆர்வம் எழுந்தது அவளுக்குள்.

அதனால், இணையதளங்களிலும், அவனுடைய அலுவலக வெப்சைட்டிலும், காஷ்மீரனைப் பற்றிய ஆராய்ச்சியை நடத்தினாள் மஹாபத்ரா.

தன்னைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆணோ, பெண்ணோ எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்து கொள்வது அனைவருடைய சுதந்திரமான விருப்பங்களுள் ஒன்று தானே?

ஆகவே, மஹாபத்ராவும் அதில் ஈடுபட ஆரம்பித்தாள்.

ஆனால், பத்திரிக்கைகளிலும், மேகஸின்களிலும் முழுக்க, முழுக்க அவனது தொழில் சம்பந்தமான செய்திகள் தான் வெளி வந்திருந்தது. அதே போல, மேகஸின்களிலும் அவனுடைய கம்பெனிகளைப் பற்றிய கட்டுரைகள் மட்டுமே இடம் பெற்றிருந்தது. காஷ்மீரனுடைய இயல்பான, விருப்பு, வெறுப்புகளைக் கூடப் பொதுவிடத்தில் அவன் பகிர்ந்து கொண்டு இருக்கவில்லை.

தந்தையிடம் கேட்டுப் பார்க்கலாமா? என்று யோசித்து வைத்தாள் மஹாபத்ரா.

ஒருவனைப் பற்றி அறியாமல், கண்மூடித்தனமாகத் திருமணம் செய்து கொள்ளத் தயங்கினாள் அவள். அதனால் தான் இந்த முன்னேற்பாடுகள்!

ஆனால், ஆணோ/ பெண்ணோ குணத்தின் அடிப்படையில்,
திருமணத்திற்கு முன்பு எவ்வாறு இருந்தார்களோ, திருமணத்திற்குப் பிறகும் அப்படியே இருப்பார்களா? என்பது தான் பெருத்த சந்தேகம்! அது அனைவரின் இல்லற வாழ்விலும் நிகழக் கூடியது.வாழ்க்கையில் எதுவுமே நிலையில்லையே? இதையும் தெரிந்து வைத்திருக்கலாம் மஹாபத்ரா.

அவளது அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை ஒரு சில நிகழ்வுகளுக்குப் பிறகு அறிந்து கொள்வோம்.
___________________

ருத்ராக்ஷிக்கு, வேலையைத் தவிர, விருப்பப் பொழுதுபோக்கு என ஒன்று இருந்தது.

அது தான், பலவிதமான வண்ணங்களையும், நறுமணங்களையும் கொண்ட மெழுகுவர்த்திகள் தயாரித்தல்.

அவளுக்கு எப்போதும், நிறங்களின் மீதும், வாசனைகளின் மீதும் அலாதி பிரியம் உண்டு. எனவே, அதற்கேற்ப, பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்.அதிலும் கூட, மற்றவர்களின் உடலுக்கும், மனதுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாத மெழுகுவர்த்திகளைத் தயாரிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளாள் ருத்ராக்ஷி.

அதனால், சோயா மெழுகு மற்றும் தேங்காய் மெழுகு இவற்றை மட்டுமே பயன்படுத்துவாள்.

அவளுடைய இந்த ஆர்வத்தை
வரவேற்கும் வகையில், தங்களுக்கான மெழுகுவர்த்திகளையும் செய்து, அவளிடமிருந்து வாங்கிக் கொண்டார்கள் அவளது ருத்ராக்ஷியின் தந்தையும், தமையனும்.

அங்கே சொந்த வீட்டில், அவளுக்கான அறையில், இதற்கென்றே பிரத்தியேகமாக, ஒரு இடத்தை ஒதுக்கிக் கொடுத்து, அதில் பொருட்களை அடுக்கி வைத்து, தயார் பண்ணித் தந்திருந்தார்கள்.

இந்த ஊரில் மட்டும் அவளது தங்கியிருக்கும் வீட்டில், அதையெல்லாம் செய்து தராமல் விட்டிருப்பானா? தங்கைத் தங்களை விட்டு வேறு இடத்தில் தான், தங்கி இருக்கிறாளே தவிர, பிரிந்து சென்றிடவில்லையே? எனவே, அவளது வீட்டு உரிமையாளரான மிருதுளாவிடம் அனுமதி பெற்று, அனைத்தையும் செய்து கொடுத்து விட்டான் காஷ்மீரன். அதை ருத்ராக்ஷி, வேண்டாமென தடுத்தும் கூட அவளது அண்ணன் விடவில்லை.

தங்கையின் சந்தோஷங்கள் சிறியதோ, பெரியதோ எல்லாமே அவனுக்கு முக்கியமானது தான். அதை உணர்ந்து கொண்ட ருத்ராக்ஷியும் அதன் பிறகு, தமையனின் செயலைத் தடுக்க நினைக்கவில்லை.

இப்போதும், தனது நூலக வேலை முடிந்து வந்து, உடை மாற்றி விட்டு, சிற்றுண்டி எடுத்துக் கொண்டு, மெழுகுவர்த்திகளைத் தயாரிக்க அமர்ந்து விட்டாள் ருத்ராக்ஷி.

தற்போதைய பொழுதைக் கழிக்க அதை விட, வேறெதுவும் சிறந்தது இல்லை என்பது அவளது எண்ணமாக இருந்தது.

அன்றைய நாள் மற்றும் அப்போதைய நேரத்தில், மிருதுளாவும் அவளைத் தொல்லை செய்யவில்லை.

அவருக்கும், அந்த ஊரில் இருக்கும் பெரும்பான்மையான குடும்பங்களுக்கு, அவள் தான், மெழுகுவர்த்திகளை உற்பத்தியாக்கி, விநியோகம் செய்கிறாள் ருத்ராக்ஷி.

அவ்ஊரில் வசிப்பவர்கள், தங்களுடைய சொந்த உபயோகத்திற்காகவும், அலங்காரப் பொருளாக வைத்துக் கொள்வதற்காகவும் இவற்றை வாங்க வருவார்கள். அதனால், அவளுடைய இந்த தொழில், அங்கே மிகவும் பிரபலமானதாக இருக்கிறது.

இதை வியாபாரமாக நடத்தினால், அங்குள்ள பெண்களுக்கு உபயோகமாக இருக்கும் என்ற யோசனையும் உள்ளது. அதை விரிவுபடுத்த என்னவெல்லாம் செய்யலாம் என்றும் குறிப்பெடுத்து வைத்துள்ளாள். அந்த யோசனைகளுக்கு ஊடாகவே மெழுகுவர்த்திகளைத் தயாரித்து முடித்தாள் ருத்ராக்ஷி.

அங்கே மஹாபத்ராவோ, தனக்கு மணாளனாக வருபவனைக் குணத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்க நினைக்கின்றாள், இங்கே, ருத்ராக்ஷியோ, ஆண்மகனைப் பற்றி எதுவுமே தெரியாமல், காதல் வயப்படப் போகின்றாள்! இருவருடைய தாம்பத்திய வாழ்க்கையும் எவ்வாறாக இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


- தொடரும்
 
Last edited:
ருத்ராக்ஷிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா. 🤔🤔
கணவனும், தமையனும்னு வருது 🙄🙄🙄
 
"அப்பறம் ப்பா, ருத்ரா கிட்டப் பேசினேன்" என்று தந்தையிடம் கூறினான் காஷ்மீரன்.

"எப்படி இருக்கா?" என்று கேட்டார் சந்திரதேவ்.

"அவ நல்லா இருக்காளாம் ப்பா. என் கல்யாணத்தில் தான் கண்ணாக இருக்கா!" என்று கூறி சிரித்தான் அவருடைய மகன்.

"நானும் தான் டா. நீ என்ன தான் சொல்ற?" என்று அவனிடம் நேரடியாக வினவினார் தந்தை.

"உங்களோட அப்பறம் ருத்ராவோட விருப்பம் தான் ப்பா. ஆனால், அவ இங்கே வந்து, எனக்காகப் பொண்ணுத் தேடனும். அந்த ஊரிலேயே இருந்துக்கிட்டு, இங்கே என்ன நடக்குதுன்னுக் கேட்கக் கூடாது!" எனத் தன்னுடைய வேண்டுகோளை உரிமையுடன் முன் வைத்தான் காஷ்மீரன்.

"இப்போ தானே ஃபோன்ல பேசின? இதைச் சொல்லி இருக்க வேண்டியது தான?" என்றார் சந்திரதேவ்.

"அவளுக்கும், எனக்கும் லீவ் கிடைக்கட்டும் ப்பா. நான் அப்போ கால் செய்து பேசுறேன்"

"ம்ஹ்ம். அண்ணனும், தங்கச்சியும் சேர்ந்து ஒரு நல்ல முடிவுக்கு வாங்க" என்று அவனிடம் தீர்க்கமாக உரைத்து, மகனை அனுப்பி வைத்தார் சந்திரதேவ்.

தனது கம்பெனியில் இருந்த தரமற்றப் பொருட்களை உடனே நீக்கி, அதை வேறொரு இடத்தில் வைத்து, எரித்து விடுமாறு அலுவலர்களிடம் கூறி விட்டு உறக்கத்தைத் தொடர்ந்தான் காஷ்மீரன்.
__________________

"மாப்பிள்ளையோட பேர் காஷ்மீரன்! அவரோட கம்பெனிகளைப் பத்தி உனக்கே தெரிஞ்சிருக்கும். மேகஸின்ஸில் எல்லாம் அவரோட ஃபோட்டோவைப் பார்த்திருப்ப! ஆனாலும், இந்தா, இதில் பார்த்து சொல்லு" என்று காஷ்மீரனுடைய புகைப்படத்தைத் தனது மகளிடம் கொடுத்து விட்டுச் சென்றார் அவளது அன்னை கனகரூபிணி.

அதைக் கையில் வைத்திருந்த மஹாபத்ராவிற்குத் தன்னவனாகப் போகும் ஆடவனின் வதனத்தைப் பார்க்க மனம் துடிக்க எல்லாம் இல்லை. ஒரு சிறு ஆர்வம் மட்டுமே இருந்தது அவளுக்குள்.

அதனால், புகைப்படத்தில் தன் கண்களைப் பதித்தாள்.

காஷ்மீரன்! குழந்தைகளுக்கானப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனத்தின் முதலாளி! அந்த ஒரு விஷயமே அவளிடமிருந்த ஆர்வத்தை மேலும் தூண்டி விட்டது.

ஏனெனில், மஹாபத்ராவுடைய வேலையும் குழந்தைகள் சம்பந்தப்பட்டது தான். அது தான், காஷ்மீரனைப் பற்றி இன்னும் அறிந்து கொள்ள வைத்தது.

அதற்கு முன்னர், அவளுடைய வேலையைப் பற்றிக் காண்போம்.

மஹாபத்ரா என்பவள், செல்வவளம் பொருந்திய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தனது சொந்தக் காலில் நிற்பதற்குப் பிரயத்தனங்கள் செய்து, தன்னுடைய விருப்பப் படிப்பு மற்றும் வேலையில் சேர்ந்திருந்தாள்.

அவள் ஒரு “நடத்தை தொழில்நுட்ப வல்லுநர்” (Behavioral Technician) ஆவாள்.

இப்படியான வேலையில் இருப்பவர்கள், ஒரு பள்ளியில் குழுவாக இணைந்து செயல்படுவார்கள்.மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இவர்களது பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது ஆகும்.

குழந்தைகளின் மனநிலையை மேம்படுத்துவதே இந்தக் குழுவின் தலையாய கடமையாகும். அதே மாதிரியானப் பிரிவில் தொழில் நடத்தும் காஷ்மீரன், இவளது ஆர்வத்தை ஈர்த்தான்.

“இன்ட்ரெஸ்ட்டிங்!” என்று சிலாகித்துக் கொள்ளவும் செய்தாள் மஹாபத்ரா.

அவனது கம்பெனியில் தயாரிக்கும் அனைத்து பொருட்களைப் பற்றியும், அறிந்து கொண்டவளுக்கு, காஷ்மீரனின் குணாதிசயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய ஆர்வம் எழுந்தது அவளுக்குள்.

அதனால், இணையதளங்களிலும், அவனுடைய அலுவலக வெப்சைட்டிலும், காஷ்மீரனைப் பற்றிய ஆராய்ச்சியை நடத்தினாள் மஹாபத்ரா.

தன்னைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆணோ, பெண்ணோ எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்து கொள்வது அனைவருடைய சுதந்திரமான விருப்பங்களுள் ஒன்று தானே?

ஆகவே, மஹாபத்ராவும் அதில் ஈடுபட ஆரம்பித்தாள்.

ஆனால், பத்திரிக்கைகளிலும், மேகஸின்களிலும் முழுக்க, முழுக்க அவனது தொழில் சம்பந்தமான செய்திகள் தான் வெளி வந்திருந்தது. அதே போல, மேகஸின்களிலும் அவனுடைய கம்பெனிகளைப் பற்றிய கட்டுரைகள் மட்டுமே இடம் பெற்றிருந்தது. காஷ்மீரனுடைய இயல்பான, விருப்பு, வெறுப்புகளைக் கூடப் பொதுவிடத்தில் அவன் பகிர்ந்து கொண்டு இருக்கவில்லை.

தந்தையிடம் கேட்டுப் பார்க்கலாமா? என்று யோசித்து வைத்தாள் மஹாபத்ரா.

ஒருவனைப் பற்றி அறியாமல், கண்மூடித்தனமாகத் திருமணம் செய்து கொள்ளத் தயங்கினாள் அவள். அதனால் தான் இந்த முன்னேற்பாடுகள்!

ஆனால், ஆணோ/ பெண்ணோ குணத்தின் அடிப்படையில்,
திருமணத்திற்கு முன்பு எவ்வாறு இருந்தார்களோ, திருமணத்திற்குப் பிறகும் அப்படியே இருப்பார்களா? என்பது தான் பெருத்த சந்தேகம்! அது அனைவரின் இல்லற வாழ்விலும் நிகழக் கூடியது.வாழ்க்கையில் எதுவுமே நிலையில்லையே? இதையும் தெரிந்து வைத்திருக்கலாம் மஹாபத்ரா.

அவளது அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை ஒரு சில நிகழ்வுகளுக்குப் பிறகு அறிந்து கொள்வோம்.
___________________

ருத்ராக்ஷிக்கு, வேலையைத் தவிர, விருப்பப் பொழுதுபோக்கு என ஒன்று இருந்தது.

அது தான், பலவிதமான வண்ணங்களையும், நறுமணங்களையும் கொண்ட மெழுகுவர்த்திகள் தயாரித்தல்.

அவளுக்கு எப்போதும், நிறங்களின் மீதும், வாசனைகளின் மீதும் அலாதி பிரியம் உண்டு. எனவே, அதற்கேற்ப, பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்.அதிலும் கூட, மற்றவர்களின் உடலுக்கும், மனதுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாத மெழுகுவர்த்திகளைத் தயாரிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளாள் ருத்ராக்ஷி.

அதனால், சோயா மெழுகு மற்றும் தேங்காய் மெழுகு இவற்றை மட்டுமே பயன்படுத்துவாள்.

அவளுடைய இந்த ஆர்வத்தை
வரவேற்கும் வகையில், தங்களுக்கான மெழுகுவர்த்திகளையும் செய்து, அவளிடமிருந்து வாங்கிக் கொண்டார்கள் அவளது ருத்ராக்ஷியின் தந்தையும், தமையனும்.

அங்கே சொந்த வீட்டில், அவளுக்கான அறையில், இதற்கென்றே பிரத்தியேகமாக, ஒரு இடத்தை ஒதுக்கிக் கொடுத்து, அதில் பொருட்களை அடுக்கி வைத்து, தயார் பண்ணித் தந்திருந்தார்கள்.

இந்த ஊரில் மட்டும் அவளது தங்கியிருக்கும் வீட்டில், அதையெல்லாம் செய்து தராமல் விட்டிருப்பானா? தங்கைத் தங்களை விட்டு வேறு இடத்தில் தான், தங்கி இருக்கிறாளே தவிர, பிரிந்து சென்றிடவில்லையே? எனவே, அவளது வீட்டு உரிமையாளரான மிருதுளாவிடம் அனுமதி பெற்று, அனைத்தையும் செய்து கொடுத்து விட்டான் காஷ்மீரன். அதை ருத்ராக்ஷி, வேண்டாமென தடுத்தும் கூட அவளது அண்ணன் விடவில்லை.

தங்கையின் சந்தோஷங்கள் சிறியதோ, பெரியதோ எல்லாமே அவனுக்கு முக்கியமானது தான். அதை உணர்ந்து கொண்ட ருத்ராக்ஷியும் அதன் பிறகு, தமையனின் செயலைத் தடுக்க நினைக்கவில்லை.

இப்போதும், தனது நூலக வேலை முடிந்து வந்து, உடை மாற்றி விட்டு, சிற்றுண்டி எடுத்துக் கொண்டு, மெழுகுவர்த்திகளைத் தயாரிக்க அமர்ந்து விட்டாள் ருத்ராக்ஷி.

தற்போதைய பொழுதைக் கழிக்க அதை விட, வேறெதுவும் சிறந்தது இல்லை என்பது அவளது எண்ணமாக இருந்தது.

அன்றைய நாள் மற்றும் அப்போதைய நேரத்தில், மிருதுளாவும் அவளைத் தொல்லை செய்யவில்லை.

அவருக்கும், அந்த ஊரில் இருக்கும் பெரும்பான்மையான குடும்பங்களுக்கு, அவள் தான், மெழுகுவர்த்திகளை உற்பத்தியாக்கி, விநியோகம் செய்கிறாள் ருத்ராக்ஷி.

அவ்ஊரில் வசிப்பவர்கள், தங்களுடைய சொந்த உபயோகத்திற்காகவும், அலங்காரப் பொருளாக வைத்துக் கொள்வதற்காகவும் இவற்றை வாங்க வருவார்கள். அதனால், அவளுடைய இந்த தொழில், அங்கே மிகவும் பிரபலமானதாக இருக்கிறது.

இதை வியாபாரமாக நடத்தினால், அங்குள்ள பெண்களுக்கு உபயோகமாக இருக்கும் என்ற யோசனையும் உள்ளது. அதை விரிவுபடுத்த என்னவெல்லாம் செய்யலாம் என்றும் குறிப்பெடுத்து வைத்துள்ளாள். அந்த யோசனைகளுக்கு ஊடாகவே மெழுகுவர்த்திகளைத் தயாரித்து முடித்தாள் ருத்ராக்ஷி.

அங்கே மஹாபத்ராவோ, தனக்கு மணாளனாக வருபவனைக் குணத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்க நினைக்கின்றாள், இங்கே, ருத்ராக்ஷியோ, ஆண்மகனைப் பற்றி எதுவுமே தெரியாமல், காதல் வயப்படப் போகின்றாள்! இருவருடைய தாம்பத்திய வாழ்க்கையும் எவ்வாறாக இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


- தொடரும்
Very nice 👍
 
Top