Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! - சிறு முன்னோட்டம்

Advertisement

TNWContestWriter047

Well-known member
Member
ஹாய்! ஹாய்! ஹாய்!

அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்.?????

போட்டி தொடங்கும் அன்று ஒரு அட்டென்டன்ஸ் போடுவோம்னு வந்துட்டேன்.. உங்களை நம்பியே இந்த கதையை ஆரம்பிக்கிறேன்.. இப்போட்டியில் வெற்றி பெருகிறேனோ இல்லையோ, உங்கள் அனைவரின் மனதில் இந்த கதை நீங்கா இடம் பிடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை.. உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்..


முதலில் தலைப்பிற்கான அர்த்தத்தைப் பார்க்கலாம்..

‘அத்தம்’ என்ற வார்த்தைக்கு பல பொருள்கள் உண்டு.. அதில் ‘கரடு முரடான கடின பாதை’, ‘பாலைவனம்’ என்ற அர்த்தங்களை நான் எடுத்து இருக்கிறேன்..

பாலைவனம் போன்ற வறண்ட கடின வாழ்வை மேற்கொள்ளும் நாயகனின் வாழ்வில் காதல் எனும் மகரந்தத்தை தூவி அவனது வாழ்வை வசந்தமயமாய் மாற்றும் நாயகியின் காதலைப் பற்றிய கதை தான் ‘அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்!’

நாயகன் – ஜெயதேவ்
இளவயதிலேயே குடும்ப பொறுப்பை சுமக்கும் ஆளுமை நிறைந்த டெரர் பீஸ்.

நாயகி – ஆத்மிகா
பொறியியல் இறுதி ஆண்டு படிக்கும், நேர்மறை எண்ணங்கள் கொண்ட, துணிவு நிறைந்த துருதுரு குட்டி புயல்.

விரைவில் முதல் அத்தியாத்துடன் வருகிறேன்..
- எழுத்தாளர்047.
 
Top