என்னுடைய ஒரு கடிதத் தொடர் MM தளத்தில் பொழுது போக்கு பக்கத்தில் பதிவிட்டு உள்ளேன். என் உயிரின் உயிரான மனைவிக்கு என்னும் அந்த தொடரில் இரண்டு கடிதங்கள் உள்ளது. வாசித்துப் பாருங்களேன். பிடித்தால் எல்லோருக்கும் சொல்லுங்கள்....
போட்டியில் என்னோட இரண்டாவது கதையான என்னடி மாயாவி நீ!! முடித்து விட்டேன்.... உங்கள் எல்லோருடைய ஆதரவிற்கும் நன்றி நன்றி.... கதையை படித்து விட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்க ப்ரண்ட்ஸ்...
கனவு பட்டறையில் என்னடி மாயாவி நீ !என்ற தலைப்பில் என்னோட இரண்டாவது கதையோட வந்திருக்கேன்... முதல் கதைக்கு கருத்தும் வாழ்த்தும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி! முதல் எபி போட்டிருக்கேன் எல்லோரும் படிச்சுட்டு உங்க கருத்து எதுவானாலும் சொல்லுங்க பிரெண்ட்ஸ்... நன்றி!
பலதரப்பட்ட விருப்பங்களுக்கு மத்தியில்
உன்னை என்னவனாக நான் அடையாளம் காட்ட
நீ எந்தன் விருப்பம் மட்டுமல்ல...
உந்தன் ஆளுமையால் என்னுள் நீ
ஆழமாக இறங்கியதால் மட்டுமே... ??
இப்படிக்கு,
எந்த ஹோட்டல் சென்றாலும் எத்தனை மெனு இருந்தாலும் மிகவும் பிடித்த உணவை முதலில் கேட்பவர்கள் சங்கம்.??
என்னோட இருளில் தேடும் ஒளியாய் நீ! நாவலை முடிச்சுட்டேன். ஆரம்பம் முதலே இப்ப வரைக்கும் படிச்சு கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் கொடுத்தவங்களுக்கும் சைலண்ட் ரீடர்ஸ் எல்லாருக்கும் நன்றி! கதை முடிஞ்சதும் படிக்க இருந்தவங்க படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க.... நன்றி!
நீங்காத ரீங்காரமாக என்னுள் நீ இசைப்பது போல!!
என்னைச் சுற்றி உந்தன் குரலும் இசைப்பதாய் உணர்ந்து நான் திரும்பினேன்!!
ஆனால் அழைத்தது நீயல்ல உந்தன் கானல் குரல் என்பதை அப்போதே உணர்ந்தேன்!!! ?❣
இப்படிக்கு,
பசி வயிற்றுக்குள் தபேலா இசைக்க, அந்நேரம் கீழே விழும் கரண்டி சத்தத்தை கூட சமையலின் கீதமாய் உணர்பவர்கள் சங்கம்.??
கட்டற்ற படைப்புகளை
அணிசெய்யும்
தமிழ் தாயின்
சிநேக புதல்விக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தமிழ் நாவல் எழுத்தாளர்கள் சார்பில்
பாரதிப்பிரியன்