Helllloooo makkale!!!!
சில்லுனு ஒரு காஃபி..!! ?Feb-ல எழுத ஆரம்பிச்ச கதை... ஆனா தொடர முடியல... இப்போ தூசிதட்டி வெளில எடுத்துருக்கேன்...
Share your thoughts makkale!!!!
சில்லுனு ஒரு காஃபி..!!?
“என்ன பண்றீங்க…?” என்று அவள் கடுப்பாக
“பாத்தா தெரியல...ஓட்டறேன்” என்று அந்த அறிவாளித்தனமான பதிலை அள்ளி வீசியிருந்தான் அவன்...ரிஷிமித்ரன்…!!
“ஓட்டல உருட்டறீங்க” என்று அந்த ஆள் அரவமில்லா சாலையைப் பார்த்தவள்,
“நிறுத்துங்ககக!!!” என்று கத்திவிட
என்னவோ ஏதோவென்று பதறி நிறுத்தியிருந்தான்.
இறங்கியவள் அவன்முன் வந்து
“நகருங்க" என்றாள் சற்று அதடல்லாகவே...விட்டால் தள்ளிவிட்டு விடுபவள்போல.
"ஏன்??" என்று புருவமத்தியில் சிறுமுடிச்சிட வினவியவனிடம்,
"அட எறங்குங்க ப்ரொஃபஸரே!!!" என்றவளின் குரலில் தீவிரம் கூடியிருந்தது.
‘எதுக்கு ரிஸ்க்கு’ என்று தோன்றிட அவன் இறங்கிய மறுகணம் அவள் ஏறிக்கொண்டு அவனிடம்
“உக்காருங்க…” என்றிருந்தாள்.
அவளையே பார்த்திருந்தவனோ…”ஹே!!! என்ன விளையாடறீங்களா…? பைக் வெய்ட் என்ன தெரியுமா…?”
“அதெல்லாம் தெரியும். இப்போ உக்கார்றீங்களா...இல்ல நடந்தே வர்றீங்களா?” என்று அசால்டாக சொல்ல ஆளில்லாத அந்த சாலையைப் பார்த்தவனோ அடுத்த நொடியே ஏறியிருந்தான்.
அவள் வண்டியை எடுத்த விதத்தில் ‘ஓட்டுவாளா…?’ என்று பார்த்தவன்
மறுநொடியே பயத்தில் அவளை இறுக்கியிருந்தான்….” ஏ!!! ஸ்லோவா போங்க!!!” என்று கத்த வேகத்தை சற்று குறைத்தவள் சீரான வேகத்தில் ஓட்டிச் சென்றாள் அவனை சீண்டிப்பார்ப்பவளாய்..!!
“இந்த வேகத்துலேயே ஓட்டியிருக்கலாம்ல…?” என்றவனை ரியர்வ்யூ மிரரில் பார்த்தவள்
“நீங்க மட்டும் உருட்டி என்ன கடுப்பேத்துனீங்கல்ல??” என்று சர்வ சாதாரணமாக சொல்லிவிட்டு சாலையில் கவனத்தை திருப்பியிருந்தாள் தாரா..!!
அவனோ ‘க்ராதகி!!!’ என்ற பொறுமலுடன் அவளை இறுக்கமாக பற்றிக் கொண்டான்...
***********************************************************
அந்த டீவி திரையில் ஜோதிகா ஒருவனை பொறட்டியெடுத்துக் கொண்டிருக்க… ப்ரித்வி ராஜிற்கு தலைக்கு மேல் பல்பு பளீரென சிரித்து அதன் எதிரொளியாய் அருகில் மணியோசை...
கிட்டத்தட்ட அந்த டீவிக்குள்ளேயே மூழ்கியிருந்த அர்ஜுன் எதேர்ச்சையாக திரும்பினான். அவனது அருமை அண்ணனோ அவ்வுலகிலேயே இல்லை.
‘இவன் ஏன் இப்போ என்னவோ மாதிரி இருக்கான்??சரியில்லையே’ என்று அவன் மனது அலாரமடிக்க
“ரிஷி...ரிஷி! டேய் அண்ணா!!!” என்று உலுக்கியிருந்தான்.
அவன் உலுக்கிய வேகத்தில், "ஹான் சொல்றா என்னாச்சு???” என்று பதறி கலைந்தவனைக் கண்டவனோ
“ம்ம்ம் வெளங்கிச்சு!” என்றான் தலையிலடித்தவனாய்
“என்னது??”
“அதான்டா கேக்கறேன் உனக்கு என்னாச்சு???” என்றவன் அவன் முகத்தைப் பார்த்துவிட்டு
“டேய்!!! மித்ரா….” என்று கிண்டலாக இழுக்க
“அடேய் நீ நினைக்கறது மாதிரி ஒன்னுமில்லடா”
“ஏ...ஏ...யார ஏமாத்துற…”
“அஜூ!!!”
இந்த மிரட்டலுக்கெல்லாம் பயப்படுபவனா அவன்…!!?
“நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை….யா ண்ணா?....இல்ல…”
என்றவனின் கவனம் டீவியில் ஓடிய பாடல் ஒன்றில் பதிய...அதிலோ ப்ரகாஷ் ராஜின் விரல்கள் கிடாரில் மேவி மீட்டிய இசையில் ப்ரித்வி ராஜின் கனவுலகு விரிந்தது. ரிஷியிடம் திரும்பிவனோ
“ஓ….அப்போ...செவ்வானம் சேலைக்கட்டி வந்தது பூமியில...வா???” என்று ராகமாய் இழுத்தான்.
“படத்த பார்த்து கெட்டு போயிருக்க..” என்ற ரிஷி அங்கிருந்து எழுந்து தன்னறைக்கு தப்பியிருந்தான்.
‘தன்னானா தானா நானா தனானா னா’ என்று அவன் உதடுகள் அவன் அனுமதியின்றியே ஹம் செய்ய ‘ச்சே’ என்று தலையில் தட்டியவாறு உள்ளே நுழைந்தவனின் இதழ்களில் கள்ளச்சிரிப்பொன்று அழகாய் வளைந்தது..!!
விரைவில்....
சில்லுனு ஒரு காஃபி..!! ?Feb-ல எழுத ஆரம்பிச்ச கதை... ஆனா தொடர முடியல... இப்போ தூசிதட்டி வெளில எடுத்துருக்கேன்...
Share your thoughts makkale!!!!
சில்லுனு ஒரு காஃபி..!!?
“என்ன பண்றீங்க…?” என்று அவள் கடுப்பாக
“பாத்தா தெரியல...ஓட்டறேன்” என்று அந்த அறிவாளித்தனமான பதிலை அள்ளி வீசியிருந்தான் அவன்...ரிஷிமித்ரன்…!!
“ஓட்டல உருட்டறீங்க” என்று அந்த ஆள் அரவமில்லா சாலையைப் பார்த்தவள்,
“நிறுத்துங்ககக!!!” என்று கத்திவிட
என்னவோ ஏதோவென்று பதறி நிறுத்தியிருந்தான்.
இறங்கியவள் அவன்முன் வந்து
“நகருங்க" என்றாள் சற்று அதடல்லாகவே...விட்டால் தள்ளிவிட்டு விடுபவள்போல.
"ஏன்??" என்று புருவமத்தியில் சிறுமுடிச்சிட வினவியவனிடம்,
"அட எறங்குங்க ப்ரொஃபஸரே!!!" என்றவளின் குரலில் தீவிரம் கூடியிருந்தது.
‘எதுக்கு ரிஸ்க்கு’ என்று தோன்றிட அவன் இறங்கிய மறுகணம் அவள் ஏறிக்கொண்டு அவனிடம்
“உக்காருங்க…” என்றிருந்தாள்.
அவளையே பார்த்திருந்தவனோ…”ஹே!!! என்ன விளையாடறீங்களா…? பைக் வெய்ட் என்ன தெரியுமா…?”
“அதெல்லாம் தெரியும். இப்போ உக்கார்றீங்களா...இல்ல நடந்தே வர்றீங்களா?” என்று அசால்டாக சொல்ல ஆளில்லாத அந்த சாலையைப் பார்த்தவனோ அடுத்த நொடியே ஏறியிருந்தான்.
அவள் வண்டியை எடுத்த விதத்தில் ‘ஓட்டுவாளா…?’ என்று பார்த்தவன்
மறுநொடியே பயத்தில் அவளை இறுக்கியிருந்தான்….” ஏ!!! ஸ்லோவா போங்க!!!” என்று கத்த வேகத்தை சற்று குறைத்தவள் சீரான வேகத்தில் ஓட்டிச் சென்றாள் அவனை சீண்டிப்பார்ப்பவளாய்..!!
“இந்த வேகத்துலேயே ஓட்டியிருக்கலாம்ல…?” என்றவனை ரியர்வ்யூ மிரரில் பார்த்தவள்
“நீங்க மட்டும் உருட்டி என்ன கடுப்பேத்துனீங்கல்ல??” என்று சர்வ சாதாரணமாக சொல்லிவிட்டு சாலையில் கவனத்தை திருப்பியிருந்தாள் தாரா..!!
அவனோ ‘க்ராதகி!!!’ என்ற பொறுமலுடன் அவளை இறுக்கமாக பற்றிக் கொண்டான்...
***********************************************************
அந்த டீவி திரையில் ஜோதிகா ஒருவனை பொறட்டியெடுத்துக் கொண்டிருக்க… ப்ரித்வி ராஜிற்கு தலைக்கு மேல் பல்பு பளீரென சிரித்து அதன் எதிரொளியாய் அருகில் மணியோசை...
கிட்டத்தட்ட அந்த டீவிக்குள்ளேயே மூழ்கியிருந்த அர்ஜுன் எதேர்ச்சையாக திரும்பினான். அவனது அருமை அண்ணனோ அவ்வுலகிலேயே இல்லை.
‘இவன் ஏன் இப்போ என்னவோ மாதிரி இருக்கான்??சரியில்லையே’ என்று அவன் மனது அலாரமடிக்க
“ரிஷி...ரிஷி! டேய் அண்ணா!!!” என்று உலுக்கியிருந்தான்.
அவன் உலுக்கிய வேகத்தில், "ஹான் சொல்றா என்னாச்சு???” என்று பதறி கலைந்தவனைக் கண்டவனோ
“ம்ம்ம் வெளங்கிச்சு!” என்றான் தலையிலடித்தவனாய்
“என்னது??”
“அதான்டா கேக்கறேன் உனக்கு என்னாச்சு???” என்றவன் அவன் முகத்தைப் பார்த்துவிட்டு
“டேய்!!! மித்ரா….” என்று கிண்டலாக இழுக்க
“அடேய் நீ நினைக்கறது மாதிரி ஒன்னுமில்லடா”
“ஏ...ஏ...யார ஏமாத்துற…”
“அஜூ!!!”
இந்த மிரட்டலுக்கெல்லாம் பயப்படுபவனா அவன்…!!?
“நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை….யா ண்ணா?....இல்ல…”
என்றவனின் கவனம் டீவியில் ஓடிய பாடல் ஒன்றில் பதிய...அதிலோ ப்ரகாஷ் ராஜின் விரல்கள் கிடாரில் மேவி மீட்டிய இசையில் ப்ரித்வி ராஜின் கனவுலகு விரிந்தது. ரிஷியிடம் திரும்பிவனோ
“ஓ….அப்போ...செவ்வானம் சேலைக்கட்டி வந்தது பூமியில...வா???” என்று ராகமாய் இழுத்தான்.
“படத்த பார்த்து கெட்டு போயிருக்க..” என்ற ரிஷி அங்கிருந்து எழுந்து தன்னறைக்கு தப்பியிருந்தான்.
‘தன்னானா தானா நானா தனானா னா’ என்று அவன் உதடுகள் அவன் அனுமதியின்றியே ஹம் செய்ய ‘ச்சே’ என்று தலையில் தட்டியவாறு உள்ளே நுழைந்தவனின் இதழ்களில் கள்ளச்சிரிப்பொன்று அழகாய் வளைந்தது..!!
விரைவில்....