அது என்ன அசரை மீன் குழம்பா சகோதரி
ஒரு பெண் சிறிது துடுக்காக இருந்தால் இந்த உலகம் உடனே உரைக்கும் வார்த்தை என்கிட்ட ஏமாந்து போகபோகிறாளோ என்பது தான்
அந்த வார்டன் கூறியது தவறு.
துளசி இப்ப மெட்ராஸா (சென்னை) முழுவதும் அளசி அதனால் வார்டனுக்கு ஜெலசி
மெட்ராஸ் மாகாணம் 1969 ல் தமிழ்நாடு என் பெயர் மாற்றம் செய்யப்பட்டது
மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என்று 1996 ல் மாற்றம் செய்யப்பட்டது
இரண்டு வருடங்களுக்கு உள்ள ஒற்றுமை இரண்டிலும் உள்ள எண்கள் மாற்றம் இல்லை இலக்கங்கள் மற்றுமே மாறியுள்ளது
கடைசியில் துளசியை காணது தன் மண் நோக்கி மன்னவன் பயணம்
கண்டு முரடான பாதை அரை மணிநேரம் என்றால் கார் சென்ற வேகம்???
மூர்த்தி குடும்பம் அழகான அன்பான பெரிய குடும்பம்
என்னதான் பாசம் இருந்தாலும் நெரில் காட்டாத கள்ளம் கபடம் அற்ற அற்புதமான மக்கள்..
அழகும் வளமும் ஒருங்கே அமைந்த பச்சைபசேல் கிராமம்
அவன் மீது வீட்டு மனிதர்கள் மட்டும் அல்ல செல்ல பிராணியும் கொண்ட பாசத்தை தெளிவாக கூறப்பட்டுள்ளது
4000 சதுரடியில் வீடு அதை சுற்றி பார்க்கவே ஒருநாள் புறாவும் பத்தாது போல
கல் & பதனி வேறுபாடு அருமை
தங்கள் வீட்டில் வளர்க்கும் பிராணிகளை தங்கள் குழந்தைகளாக கருதுவதை எவ்வளவு எளிமையாக கூறிவிட்டீர்
செல்வா பாவம் பா நீ
இந்த படத்தில் இருக்கும் தோட்டம் எல்லாம் மூர்த்தி சார் சொத்தா சகோதரி
ஆடு மாடு கோழி நாய் என்று எல்லாவற்றையும் இவ்வளவு நேர்த்தியாக கூறியமைக்கு நன்றி
தங்கம் பெயர் மட்டுமல்ல குணமும், தான் பெராத பிள்ளைக்கு தாயனால் தமக்கை அவள் சேய்க்கு தாயானான் மூர்த்தி.
அட்டை என ஒற்றி திரியும் வாண்டு,
மணிக்கு மூர்த்தி மீதான கோபத்திற்கு காரணம் தன் தாய் தன்னை விட மூர்த்தி மேல் பாசம் கட்டுவது தான், நமக்கு சொந்தமானது மற்றவருடன் பகிரும் போதே பொறுக்காத நெஞ்சம் நம்மைவிட அதிகமா மற்றவர்க்கு கிடைப்பதால் வந்த பொறாமை.
அப்பவே பானுப்ரியா பேர் இருந்ததா சகோதரி கதை நடப்பது 30வருடத்திற்கு முன் அவன் தமக்கை க்கு அகவை 40 என் கேள்வி 70ஆண்டுகளுக்கு முன்பே ஆந்த பெயர் வைத்து இருந்ததா என்பது தான்.
இந்த பதிவு நிறைய பேர்கள் சொந்த கிராமத்திற்கு சென்று வந்த உணர்வு கிடைத்தது
ரொம்ப சந்தோஷமான பதிவு..
நன்றி சகோதரி..