சக்திவாசன் மட்டுமில்லை அவனுடைய குடும்பவும் மனதளவில் மிகவும் உயர்ந்தவர்கள் .
தேவிகா ஆரம்பத்தில் உங்களை நினைத்து கொஞ்சம் கவலையாக இருந்தது ஆனால் உண்மையில் உங்கள் பெருந்தன்மையான பேச்சு என்ன சொல்ல நெஞ்சம் நெகிழ செய்கிறது.
சக்தி உன்னுடைய பொக்கிஷம் உன்னிடம் வந்து சேர்ந்து விட்டது தான், ஆனால் கடவுள் இவ்வளவு சோதனையை கொடுத்து உன் கை சேர வைத்தது கொஞ்சம் மனசுக்கு கஷ்டமாக உள்ளது, விதியின் விளையாட்டை யார் அறிவார்... உன்னுடைய உண்மையான பாசத்தையும், நேசத்தையும் விரைவில் சிவமித்ரா புரிந்து உன்னுடன் காதலுடன் ஒரு வாழ்க்கையை வாழ வேண்டுகிறேன்.
சிவமித்ரா நடந்து முடிந்தவை எதையும் இனிமேல் மாற்ற இயலாது, நடப்பவை எல்லாம் இனி நன்மைக்கே என்று அதிலிருந்து வெளிவந்து சக்தியின் காதலுக்காக முழு மனதுடன் வாழ வேண்டும்.
சக்தி குடும்பத்தில் எல்லோரும் மனதால் உயர்வானவர்கள்..மித்ரா கண்ணப்பன் தேவிகாவ பத்தி இந்நேரம் புரிஞ்சுகிட்டு இருப்பா...சக்திய அவன் காதல எப்ப புரிவாளோ
நான் கேட்ட சந்தேகத்திற்கு விளக்கம் வந்திருச்சு...பெண்ணைப் பெத்தவங்க ஒன்றுக்கு இரண்டு தடவை வெவ்வேறு வழிகளில் மாப்பிள்ளையைப் பற்றி தீர விசாரிப்பது நல்லது...