வேகவேகமாக இட்லி, குழம்பு, சட்னி, பொடி என உணவருந்தும் மேசையில் வைத்தவள், தட்டிலும் ஐந்து இட்லி, குழம்பு, சட்னி என வைத்தாள்.
அப்போது... தனக்கு பின் கேட்ட காலடி ஓசையில் லேசாகத் திரும்ப, முகத்தை ஒரு துண்டினால் துடைத்தவாறு, நிதானமான நடையில் மேசையை நோக்கி வந்து கொண்டிருந்தான் அவள் கணவன்.
ஆள்... பார்க்க நல்ல உயரத்தில் வாட்டசாட்டமாக இருப்பான்.
வேட்டி, சட்டையில் பார்க்கும்போதே… அவனிடத்தில் ஒரு கம்பீரம் தெரியும்.
அவனின் சற்றே முறுக்கிவிடப்பட்ட மீசை அவளைக் கவர்ந்ததென்றால், அவனின் தாடையை சுற்றி கொஞ்சமே அதிகமாக இருந்த தாடி… அவளை காண்டாக்கியது.
அளவுக்கதிமாக இருந்த அந்த தாடியின் பின் உள்ள காரணத்தைதான் நன்கு அறிவாளே!
காணும்போதெல்லாம் கையாலே அதை பிய்த்து எறியும் வெறி வந்தாலும், அவனுக்கு வலிக்குமென்ற ஒரே காரணத்தினால் விட்டுவிடுவாள்.
மேலும் அதுவும் அவனுக்கு கூடுதல் அழகாக இருந்ததே!
இதையெல்லாம் எப்போதும் போல அவள் விழிகள் கள்ளத்தனமாக ரசித்துவைக்க, எதிரே அழகே உருவாய் இருந்த மனைவியை அவனும் எப்போதும் போல கண்டுகொள்ளாது, சமையலறையில் கையை அலம்பியவன், துணிடினை சோபாவில் போட்டுவிட்டு, நற்காலியில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தான்.
அவன் முன்னுச்சியில் சில நீர்த்துளிகள் ஒட்டியிருக்க, அதை தன் முந்தானையால் துடைக்க பரபரத்தை கைகளையும் மனதையும், 'அட மானங்கெட்டதே.' என கடிந்து அடக்கியவள், அவனுக்கு உணவு வைப்பதில் மட்டும் கவனம் செலுத்தி தட்டில் உணவு காலியாக ஆக நிரப்பினாள்.
====
ஹாய் மக்களே ?
நான் TNWContest Writer092
இந்த கதை எழுத அனுமதி வழங்கியமைக்கும், எப்படி போஸ்ட் செய்ய வேண்டும் என்பது போன்றவற்றை சொல்லி guide செய்ததற்கும் நன்றி @Admin மேம். ??
கதையின் டீசர் நல்லாருக்கா மக்காஸ்??
கதையோட விரைவில் வருகிறேன். ?
உங்க கருத்தை மறுக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். ?
பிழை ஏதேனும் செய்தால் சுட்டி காட்டுங்க மக்காஸ். கண்டிப்பா திருத்திக்க ட்ரை பண்ணுவேன். ?
உங்கள் ஆதரவை எனக்கும் தருமாறு கேட்டுக்கறேன். ??
நன்றி ?
விரைவில் சந்திப்போம். ?
அப்போது... தனக்கு பின் கேட்ட காலடி ஓசையில் லேசாகத் திரும்ப, முகத்தை ஒரு துண்டினால் துடைத்தவாறு, நிதானமான நடையில் மேசையை நோக்கி வந்து கொண்டிருந்தான் அவள் கணவன்.
ஆள்... பார்க்க நல்ல உயரத்தில் வாட்டசாட்டமாக இருப்பான்.
வேட்டி, சட்டையில் பார்க்கும்போதே… அவனிடத்தில் ஒரு கம்பீரம் தெரியும்.
அவனின் சற்றே முறுக்கிவிடப்பட்ட மீசை அவளைக் கவர்ந்ததென்றால், அவனின் தாடையை சுற்றி கொஞ்சமே அதிகமாக இருந்த தாடி… அவளை காண்டாக்கியது.
அளவுக்கதிமாக இருந்த அந்த தாடியின் பின் உள்ள காரணத்தைதான் நன்கு அறிவாளே!
காணும்போதெல்லாம் கையாலே அதை பிய்த்து எறியும் வெறி வந்தாலும், அவனுக்கு வலிக்குமென்ற ஒரே காரணத்தினால் விட்டுவிடுவாள்.
மேலும் அதுவும் அவனுக்கு கூடுதல் அழகாக இருந்ததே!
இதையெல்லாம் எப்போதும் போல அவள் விழிகள் கள்ளத்தனமாக ரசித்துவைக்க, எதிரே அழகே உருவாய் இருந்த மனைவியை அவனும் எப்போதும் போல கண்டுகொள்ளாது, சமையலறையில் கையை அலம்பியவன், துணிடினை சோபாவில் போட்டுவிட்டு, நற்காலியில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தான்.
அவன் முன்னுச்சியில் சில நீர்த்துளிகள் ஒட்டியிருக்க, அதை தன் முந்தானையால் துடைக்க பரபரத்தை கைகளையும் மனதையும், 'அட மானங்கெட்டதே.' என கடிந்து அடக்கியவள், அவனுக்கு உணவு வைப்பதில் மட்டும் கவனம் செலுத்தி தட்டில் உணவு காலியாக ஆக நிரப்பினாள்.
====
ஹாய் மக்களே ?
நான் TNWContest Writer092
இந்த கதை எழுத அனுமதி வழங்கியமைக்கும், எப்படி போஸ்ட் செய்ய வேண்டும் என்பது போன்றவற்றை சொல்லி guide செய்ததற்கும் நன்றி @Admin மேம். ??
கதையின் டீசர் நல்லாருக்கா மக்காஸ்??
கதையோட விரைவில் வருகிறேன். ?
உங்க கருத்தை மறுக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். ?
பிழை ஏதேனும் செய்தால் சுட்டி காட்டுங்க மக்காஸ். கண்டிப்பா திருத்திக்க ட்ரை பண்ணுவேன். ?
உங்கள் ஆதரவை எனக்கும் தருமாறு கேட்டுக்கறேன். ??
நன்றி ?
விரைவில் சந்திப்போம். ?