Hi friends thanks for your lovely support and comments
அத்தியாயம் - 29
பத்மா, இனிய காலைப் பொழுதில் பரபரப்பாக சுத்த, அவள் பின்னாலே சுபியும், நீருவும் சுற்றிக் கொண்டிருந்தனர்....
திருமணம் முடிந்து, பதினைந்து நாட்கள் வேகமாக ஓடி இருக்க… இன்றைக்குத்தான் விஷாலுக்கும், தீப்திக்கும் இங்கு விருந்து…
ஹனிமூன் ட்ரிப் முடித்து விட்டு வந்து இரண்டு நாட்கள் ஆகிறது . இன்றைக்கு இங்கு விருந்து புதுமண ஜோடிகளோட, சுகந்தி மற்றும் சுந்தரத்திற்கும் சேர்த்து ஏற்பாடாகிறது. அதனால் தான் பரபரப்பாக இருக்கிறார்கள்.
பத்மா தீப்தி, விஷாலுக்கு பிடித்த பதார்த்தங்களை நானே, என் கையாலே, செய்கிறேன் என்று சமையலறையை ரெண்டாக்கி கொண்டிருக்கிறாள். உதவிக்கு எத்தனை பேர் இருந்தும் அவளுக்கு போதவில்லை.
சுகுமாரன், காஃபி குடித்துக் கொண்டே தன் மனைவி செய்பவற்றை ரசித்துக் கொண்டிருந்தார்.
மேலிருந்து கவின், சுபி எனக் கத்த… திடுக்கிட்டுப் பார்த்த சுகுமாரன்," எதுக்கு டா,இப்படி கத்துற? உனக்கு என்ன வேண்டும். அவங்க எல்லாம் கிச்சனில் வேலையா இருக்காங்க…" என…
கவின், சுகுமாரனை முறைத்து பார்க்க…
இருடா வர சொல்லுறேன். அதுக்கு ஏன் இப்படி முறைக்குற…
நீங்கள் இப்ப என்ன பண்ணிட்டு இருக்கீங்க…
காஃபி குடிச்சிட்டு இருக்கிறேன். பார்த்தா தெரியவில்லையா…
தெரியுது பா… நல்லா தெரியுது… பர்ஸ்ட் ரவுண்டா இது என…
சேச்ச, நான் தான் காலையில் சீக்கிரம் எழுந்துடுவேனே, அப்பவே குடிச்சிட்டேன். இது செகண்ட் ரவுண்டு என்று பெருமையாகக் கூற…
இன்னும் உங்க பையன் காஃபி குடிக்காம இருக்கிறேன். நீங்க என்னாட,என்றால் இரண்டாவது ரவுண்டே ஆரம்பித்தாச்சு… என்ன பண்றா, உங்க மருமக… சீக்கிரம் காஃபி எடுத்துட்டு வர சொல்லுங்க என்று கடுப்புடன் கூறி விட்டு அறைக்குள் சென்று விட்டான்.
சுகுமாரன் கிச்சனை பார்த்து சுபி,என அழைக்க…
இதோ வந்துட்டேன் மாமா என்று கைகளை துடைத்துக் கொண்டே வந்தாள். என்ன மாமா வேணும் என்று களைப்புடன் கேட்க…
இங்க வாடா, இப்படி உட்காரு, முகமெல்லாம் வியர்த்து இருக்கு, நீ காஃபி குடிச்சியா இல்லையா, என சுகுமாரன் வினவ…
ஐயோ! எனப் பதற…
என்னடா… ஏன் இப்படி பதற…
மாமா, அத்தானுக்கு இன்னும் காஃபி குடுக்கலை. மறந்துட்டேன் , அவங்களுக்கு சரியா எட்டு மணிக்கு காஃபி வேண்டும். இல்லையென்றால் டென்ஷனாகி கத்தப் போறாங்க…
அல்ரெடி கத்திட்டான் மா, காஃபி கேட்டு, அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்.வேற ஏதோ, பேசி மறந்துட்டேன். நீ சீக்கிரம் கொண்டு போ மா…
வேகமாக கிச்சனுக்குள் நுழைந்தவள்,இண்டக்ஷன் ஸ்டவ்வில் பாலை வைத்து, அவனுக்கான காஃபியை கலக்கினாள். காலை காஃபி மட்டும் நேரத்திற்கு அவனுக்கு கொடுத்தாக வேண்டும், இல்லையென்றால் அவ்வளவு தான்… இன்று இருந்த பரபரப்பில் மணியானதை கவனிக்கவில்லை.
இதுக்கு வேற என்ன சொல்ல போறானோ, என்ற பயத்துடன் காஃபி கப்பை எடுத்துக் கொண்டு மாடி ஏறினாள்.
கதவை திறந்து உள்ளே சென்ற சுபி, கவின் எங்கே என்று பார்க்க, வழக்கம் போல பால்கனியில் அமர்ந்து இருந்தான்.
ஆனால் வழக்கமில்லாத வழக்கமா கோபத்தோடு இருந்தான். பதினைந்து நாட்களில், அவனை கோபமாகப் பார்த்தது இல்லை.
இவளும்,அந்த மாதிரி நடந்து கொண்டது இல்லை.இன்று தான் தாமதம் ஆகி விட்டது.
அத்தான் என அழைக்க, ஒன்றும் கூறாமல் கைகளை கட்டியபடியே, அவளைப் பார்க்க…
மெல்ல நாக்கை கடித்துக்கொண்டவள், சாரி அத்தான் என்றவாறு, காஃபி கப்பை அவனிடம் நீட்ட…
சற்று நேரம் அமைதியாக இருந்தவன், காஃபியை வாங்கிக் கொண்டே, இங்கப் பாரு சுபி, " காலை காஃபி எனக்கு மிகவும் முக்கியம், அது நேரத்துக்கு வரலை என்றால், என் மூடே ஸ்பாயிலாயிடும். சோ, காஃபி ஈஸ் மஸ்ட் … உன் கிட்ட அல்ரெடி சொல்லிட்டேன். உன்னால, முடியவில்லை என்றால், அம்மாவையோ, இல்லை வேறு யாரிடமாவது குடுத்து விடு, புரியுதா " என…
ம், என தலையசைத்த சுபி, மனதிற்குள்ளேயே ' காஃபிக்கு இப்படி ஒரு அக்கப்போரா, ஓ காட் முடியலையே!' என கவுண்டர் விட்டுக் கொண்டிருந்தவள், வெளியே அமைதியாக இருந்தாள்.
இவள் கவினுக்கு காஃபி எடுத்துக் கொண்டு வரும் போதே பத்மா கூறிவிட்டார், சுபி மா கீழ இனி வேற வேலை இல்ல டா. நானும் நீரும் இருக்கற மீதி வேலையைப் பாத்துக்குறோம். நீ ரெடியாகி வாடா… என்று கூறிவிட, அதனால் இப்போது கீழேப் போற வேலை இல்லை.
தனது கஃப்போர்டில் தலையை நுழைத்து என்ன புடவை கட்டலாம் என யோசித்துக் கொண்டிருந்தாள்.
காபி குடித்துக்கொண்டே கவின் இவளைப் பார்க்க, அவளது குழப்பத்தையேப் பார்த்தான்…
காஃபியைக் குடித்துக் கொண்டே, அவளருகில் வந்தவன் என்ன என்று புருவத்தை உயர்த்த…
அது அத்தான், இன்றைக்கு கெஸ்ட் வருவதால், அத்தை நல்ல சாரியா கட்ட சொன்னாங்க. பட் வேலை செய்யும் போது,கம்ஃபர்டபிளா இருக்கணும் என்று தேடுறேன் …
சரி நகரு நான் எடுத்து தரேன் எனக் கவின் கூற…
என்ன அத்தான், நீங்க செலக்ட் செய்து தரீங்களா? புடவையைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்று கிண்டல் அடிக்க…
ஹலோ, நாம துணிக் கடை தான் வைத்திருக்கிறோம். எல்லாம் எனக்கு தெரியும், நீ கொஞ்சம் நகரு என அவளை நகர்த்தி விட்டு, அங்கிருந்தப் புடவைகளை ஆராய்ந்தான். பேபி பிங்க் நிறத்தில் இருந்த மைசூர் சில்க் சேரியை தேர்வு செய்தான்.
அதன் அழகில் மயங்கிய சுபி, தேங்க்ஸ் அத்தான் என்றுக் கூறி விட்டு, அவன் கையில் இருந்த புடவையை வாங்கிக் கொண்டு ட்ரஸ்ஸிங் ரூம்கிற்கு சென்றாள்.
ஒரு வழியாக கவினும், சுபியும் தயாராகி இறங்கி வர…
அங்கோ, எல்லோரும் வந்திருக்க…
தீப்தி, ஓடி வந்து ஹாய் அத்தான் என்க.
"தீபு, மா எப்படி இருக்கடா? விஷால் ஒழுங்கா கவனித்துக் கொள்கிறானா, இல்லையென்றால் சொல்லு நான் ரெண்டு தட்டு தட்டுறேன்." எனக் கவின் கூற…
தீப்தியோ, முகம் முழுவதும் வெட்கத்தோட, போங்கத்தான். அவர் நல்லாத்தான் கவனித்துக் கொள்கிறார் என…
கவின், சுபியைப் பார்க்க, அவளோ பார்வையை திருப்பிக் கொண்டாள்.
தீப்தி அருகில் விஷால், புன்னகையுடன் நின்றுக் கொண்டிருந்தான்.
மாப்பிள்ளை எப்படிடா இருக்க, என விஷாலை கட்டிப் பிடித்து விசாரித்துக் கொண்டிருந்தான் கவின்.
அந்த இனிமையான சூழலில் சுகந்தி இடை புகுந்தாள்.
மருமகனே… என் மாப்பிளைய என் பொண்ணு நல்லா பார்த்துக்கிறா... நீ எப்படி இருக்க… அதை முதலில் சொல்லு… இன்னும் உனக்கு ஒன்னும் புரியல... இல்லையென்றால் நாங்க வீட்டுக்கு வந்து அரைமணி நேரம் ஆகுது. எப்ப வந்தோம், நீ இப்ப வந்து வரவேற்கிற? நீ முதலில் சரியா இருந்தால் தானே, உன் பொண்டாட்டி ஒழுங்கா இருப்பா, என சுபியை வம்பிழுக்க…
சுபிக்கு வந்த கோபத்திற்கு, கவினை ஒரு முறை முறைத்து விட்டு, அங்கிருந்தவர்களைப் பொதுவாகப் பார்த்து, வாங்க என்றவள் கிச்சனுக்குள் சென்றாள்.
உள்ளே சென்ற சுபியை, யோசனையோடு பார்த்தான் விஷால். புதுமணத் தம்பதியருக்கு உரிய எந்த இணக்கமும், தெரியவில்லை.
கவினைத் திரும்பிப் பார்க்க, அவனோ, என்ன என்று புருவத்தை உயர்த்த... ஒன்றுமில்லை என விஷால் தலையசைத்தான். ஆனால் உள்ளுக்குள் குழப்பத்துடனே இருந்தான்.
அவனை ரொம்பவே யோசிக்க விடாமல், நீரஜா, வந்து அனைவரையும் உணவருந்த அழைத்தாள்.
அதற்குப் பிறகு கைக்கும் வாய்க்கும் மட்டுமே வேலை இருந்தது. இடையிடையே பேசிக் கொண்டிருந்தனர். எல்லோருக்கும் பரிமாறிக் கொண்டிருந்த சுபி, கவின், மற்றும் நவீன் பக்கம் மட்டும் பரிமாற வரவில்லை.
நவீன், அதை கவனித்து, சுபியை அழைத்து, ஏதாவது கேட்க…
அவளோ, முறைத்துக் கொண்டே பரிமாறினாள்.
அருகில் உணவருந்திக் கொண்டிருந்த விஷாலோ, நவீன் காதில் டேய், சுபி சிஸ்டர், ஏன் டா உன்னைப் பார்த்து முறைக்கிறாங்க… கவினை முறைத்தாலும், ஏதாவது காரணம் இருக்கும். உன்னை ஏன் டா? முறைச்சிட்டு இருக்காங்க… நீ என்ன மச்சி பண்ணி வச்ச..
ம் என பெருமூச்சு விட்டவன், அது ஒரு பெரிய கதைடா… சாப்பிடு அப்புறமா பேசலாம் என்று முடித்துவிட்டான்.
சரி என விஷால் அமைதியாக இருக்க, சுகந்திப் பேச்சை ஆரம்பித்தாள். தன் மகள் மருமகன் போயிட்டு வந்த ஹனிமூன் டூரைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தாள்.
காஷ்மீரிலிருந்து ஆப்பிள் வாங்கிட்டு வந்தாங்க, அது சூப்பரா, ஃப்ரஷ்ஷா இருந்தது தெரியுமா எனக் கூற…
ஏன் அத்தை இங்க ஆப்பிளே கிடைக்காதா… அதைப் போய் வாங்கிட்டு வந்துருக்கு, உங்கப் பொண்ணு என்று நவீன் கிண்டலடிக்க…
அவனை முறைத்த சுகந்தி, டேய் நீங்க தான் அவசரத்தில் கல்யாணம் பண்ணிக்கிட்டு, எங்கேயும் போகல… உன் கூட பிறந்தவனும், எங்கேயும் போகலையாஎன வினவ…
கவினும், சுபியும் ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ந்து நின்றனர். ஓரிரு நிமிடத்தில் சமாளித்த கவின், தனது அத்தையிடம், "அத்தை இரண்டு நாளில் ரிசப்ஷன் இருக்குல, அதை முடிச்சிட்டு அடுத்த நாள்,கேரளா போகலாம் என்று இருக்கோம்" என…
ஏன்டா, நவீன் நீங்களும் இவங்களோட ஹனிமூனுக்கு போகலாம் இல்லையா என பத்மா வினவ…
ஐயோ! அம்மா, இது ஹனிமூன் மா… அவங்க மட்டும் போனால், அது ஹனிமூன், நாங்களும் போனால் அது ஃபேமிலி டூர் மா… நான் வேற ஐடியா வச்சிருக்கேன். வெளிநாட்டு டூர் போலாம் என்று இருக்கேன் மா. பட் இப்ப கொரணா அது,இது என்று வெளிநாட்டில் இருக்கு, அதனால கொஞ்ச நாள் போகட்டும், என்று முடித்து விட…
கொஞ்சம் நேரம்,ரிஷப்ஷன் ஏற்பாடு பற்றி பேசினர். விஷால் பக்காவாக ஏற்பாடு செய்து இருக்க, நிம்மதியாக இருந்தனர்.
அதற்கு பிறகு காலை உணவு, இனிமையாக முடிந்தது.
பெண்கள் மதிய உணவிற்காக ஏற்பாடுகளை பேசிக்கொண்டே ஆரம்பிக்க...
பெரியவர்களோ, ஹாலில் அமர்ந்து நாட்டு நடப்பை பேசிக்கொண்டு இருந்தனர்.
கவின், நவீன், விஷால் மூவரும் மாடிக்கு வந்து விட்டார்கள். மாடித்தோட்டத்தில், ஒரு புறம் போடப்பட்டிருந்த திட்டில் சென்று அமர…
விஷால், நவீனிடம், "என்னடா பிரச்சனை உனக்கும்,சுபிக்கும் என்று வினவ…"
கவினும், நவீனும் ஒன்றும் கூறாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் பார்வை பரிமாற்றத்தை பார்த்து விஷால், இருவரையும் பார்த்து என்னை இன்னமும் அந்நியம்மா தான் நினைக்கிறீங்கல, என வருத்தப்பட…
டேய் நீ நினைக்கிற மாதிரி ரொம்ப முக்கியமான விஷயம் இல்ல என நவீன் மழுப்பலாக் கூற… கவின் அமைதியாக இருந்தான்.
நவீனிடம், ஒன்றும் கூறாமல்,கவினிடம்,"டேய், இப்படி அமைதியாக இருந்தால் என்னடா, அர்த்தம்…"
நீங்க மறைக்க மறைக்க எனக்கு என்னமோ,தோணுதுடா. நான் வேண்டாத இடத்தில் இருக்கிற மாதிரி ஃபீல்… சாரிடா… நண்பன் என்ற என்ற உரிமையில் தான்டா கேட்டேன். இல்லை என்றால் உங்களோட பர்ஸனல கேட்க மாட்டேன் டா… சரிடா, தீப்தி தேடுவா, நான் கீழேப் போறேன், என்று கிளம்ப முயல,
டேய், என்று இருவரும் அவனை இழுத்து உட்கார வைத்தனர்.
கவின், விஷாலின் அருகே அமர்ந்து, பார்வையை, எங்கோ வைத்திருக்க… நவீன், விஷாலின் மறுபுறம் அமர்ந்து நடந்தவற்றைக் கூறினான்.
" கவினும்,சுபியும் ஏற்கனவே ஒருவரை ஒருவர் விரும்பினார்கள்." என…
விஷால், "என்னது என்று ஷாக்காகி" நிற்க…
நவீன், "அதுக்கு நீ ஏன் டா ஷாக்காகுற… ஷாக்கக் குறை… ஷாக்கக் குறை… " எனக் கூற…
கவின் முகத்தில் புன்னகை மலர, நவீனைப் பார்க்க…
ஆமாம் டா, நான் இன்னும் சொல்றதுக்கு எவ்வளவோ இருக்கு…
நவீனிடம், "என்னது இந்த விஷயம் உனக்கு முன்னாடியே தெரியுமா? என்னமோ வீட்ல கவின் திருமணம் பற்றி பேச்சு வந்த போது நீயா தானே சுபிக்கு, கவினை கல்யாணம் பண்ணி வைக்கலாமா என்று கேட்ட… தீப்திக் கூட அப்படி தானே சொன்னா…"
ஆமாண்டா, இவங்க லவ் பண்ண விஷயத்தை வீட்ல சொல்லாமல் அரேஞ்ச் மேரேஜா நான் தான்டா மாத்துனேன்.
வீட்டுல கவினோட திருமண பேச்சு ஆரம்பிக்கும் போது, தான் சார் வந்து சுபியை லவ் பண்ண விஷயத்தை சொன்னார்.
சோ, கல்யாணப் பேச்சை ஆரம்பிக்கும் போது, லேசா கோடு இழுத்தேன். என் இன்னசன்ட் டார்லிங் நீரு, அவளா வந்து ஹெல்ப் பண்ணி எப்படியோ, அரேஞ்ச் மேரேஜ் ஆயிடுச்சு டா, என நவீன் கூற…
அப்புறம் என்னடா பிரச்சனை? இவங்க ரெண்டு பேரும் விரும்பி இருக்காங்க... அப்புறம் ஏன் இன்னைக்கு ஹனிமூன் டூரப்பத்தி பேசவும், அப்படி முழிச்சாங்க…
டேய் விஷால், இன்னும் அவங்களுக்கு நடுவுல நிறைய விஷயங்கள் பேசப்படாமல் இருக்குதுடா…
டேய் என்னடா! இது, கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுடா?
சரி டா மச்சி, இப்ப நான் புரியிற மாதிரி சொல்றேன். ஊருல கவின், சுபிக் கிட்ட லவ்வ சொன்னான். ஆனால் சொல்லவில்லை, என மேலும் குழப்ப…
விஷாலோ, கொலைவெறியில் இருந்தான்.
கவினோ,அடக்கமாட்டாமல் நகைத்து டேய் நீ சும்மா இரு டா... நானே சொல்லிக்கிறேன்... மாப்ளை வேற ரொம்ப டென்ஷனா இருக்கிறார் என்றவன், விஷாலைப் பார்த்து உனக்கு ஞாபகம் இருக்கா... ஆறு மாசத்துக்கு முன்னாடி நடந்த எதையும் நீ மறந்து இருக்க மாட்ட... நாங்க குலதெய்வ கோயிலுக்கு போனோமே, அங்க தான் அவகிட்ட லவ்வ சொன்னேன். நான் அவக் கிட்ட சொல்லிட்டு திரும்புனா, இந்த தடியன் திடீரென்று வந்து நிக்குறான். இவனப் பார்த்த அதிர்ச்சியில் நான் ஓடிப் போயிட்டேன்.
அதுக்கப்புறம்,உன் கிட்ட இருந்து ஃபோன் கால் வந்தது. நான் அப்புறம் இங்க வந்துட்டேன். அதுக்கு அடுத்த ரெண்டு நாளுக்கு அப்புறம் ஏற்பட்ட கலவரம் தான் உனக்கு தெரியும் இல்ல...
அதற்கப்புறம் என் காதலை சொல்லும் நிலை வரவில்லை. அவளா உணர வேண்டும் என்று நான் நினைக்கிறேன் அவ்வளவுதான் டா…
ஓ, என்ற விஷால்,உன் கிட்ட ஏன் கோபமாக இருக்காங்க என நவீனைப் பார்த்து கேட்க...
ஐந்து நிமிடம் அமைதியாக இருந்த நவீன், விஷாலிடம், " டேய் நானும், அவளும் நல்ல நண்பர்கள் என்று உனக்கு தெரியும் தானே, அவக் கிட்ட சொல்லாம திடீர்னு கல்யாணம் பண்ணிக்கிட்டேன், என்று கோவமா இருக்கா… " என…
அதிர்ச்சியில் வாயடைத்து போய் இருந்தான் விஷால்.
கவின், நவீன் இருவரோடும் சுபி பேசாமல் இருப்பதற்கும், அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைக்கும் தான் தான் காரணம் என்பதை உணர்ந்தான் விஷால்.
சாரிடா… என்னால உங்க ரெண்டு பேருக்கும் எவ்வளவு சங்கடம் என்று தெரியுது, பட் நீங்க எனக்கு எவ்வளவு பெரிய சொர்க்கத்தை கொடுத்து இருக்கீங்க தெரியுமா? அதற்கு நான் உங்க ரெண்டு பேருக்கும் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
சிஸ்டர் கிட்ட, நானே எல்லா உண்மையும் சொல்லுறேன் என…
டேய், அதெல்லாம் வேண்டாம் என்று இருவரும் தடுக்க…
"நீங்க இரண்டு பேரும் இப்படி தவிச்சிட்டு இருக்கும் போது, நான் மட்டும் சந்தோஷத்தின் உச்சியில் இருக்கிறது, எனக்கு குற்றவுணர்ச்சியா இருக்குடா." என விஷால் கூற…
லூசாடா, நீ பெரிய வார்த்தை எல்லாம் சொல்லுற… தீப்தியும், நீயும் சந்தோஷமா இருந்தாலேப் போதும் என்று நவீன் கூற…
கவினும், ஆமாம் டா... நீ போய், எல்லாம் சொல்லி ஒன்னும் அவ, என்னைப் புரிந்துக் கொள்ள வேண்டாம்… அவளா, புரிந்துக் கொள்ள வேண்டும்… அவளே, நானாக மாறணும் டா…
விஷாலோ, கவின் பேச்சை ஆரம்பிக்கும் போது, அவன் மேல் பார்வை வைத்தவன், இப்போதோ, வேற எங்கோ பார்த்துக் கொண்டிருக்க…
கவின் மனதிற்குள்,' நான் எவ்வளவு சீரியஸாக பேசிட்டு இருக்கேன். இவன் என்னவென்றால் பராக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.' என வைதுக் கொண்டே, அவன் பார்வை போன திசையில் திரும்பியவன், அதிர்ச்சியில் எழுந்து நின்றான்.
அத்தியாயம் - 29
பத்மா, இனிய காலைப் பொழுதில் பரபரப்பாக சுத்த, அவள் பின்னாலே சுபியும், நீருவும் சுற்றிக் கொண்டிருந்தனர்....
திருமணம் முடிந்து, பதினைந்து நாட்கள் வேகமாக ஓடி இருக்க… இன்றைக்குத்தான் விஷாலுக்கும், தீப்திக்கும் இங்கு விருந்து…
ஹனிமூன் ட்ரிப் முடித்து விட்டு வந்து இரண்டு நாட்கள் ஆகிறது . இன்றைக்கு இங்கு விருந்து புதுமண ஜோடிகளோட, சுகந்தி மற்றும் சுந்தரத்திற்கும் சேர்த்து ஏற்பாடாகிறது. அதனால் தான் பரபரப்பாக இருக்கிறார்கள்.
பத்மா தீப்தி, விஷாலுக்கு பிடித்த பதார்த்தங்களை நானே, என் கையாலே, செய்கிறேன் என்று சமையலறையை ரெண்டாக்கி கொண்டிருக்கிறாள். உதவிக்கு எத்தனை பேர் இருந்தும் அவளுக்கு போதவில்லை.
சுகுமாரன், காஃபி குடித்துக் கொண்டே தன் மனைவி செய்பவற்றை ரசித்துக் கொண்டிருந்தார்.
மேலிருந்து கவின், சுபி எனக் கத்த… திடுக்கிட்டுப் பார்த்த சுகுமாரன்," எதுக்கு டா,இப்படி கத்துற? உனக்கு என்ன வேண்டும். அவங்க எல்லாம் கிச்சனில் வேலையா இருக்காங்க…" என…
கவின், சுகுமாரனை முறைத்து பார்க்க…
இருடா வர சொல்லுறேன். அதுக்கு ஏன் இப்படி முறைக்குற…
நீங்கள் இப்ப என்ன பண்ணிட்டு இருக்கீங்க…
காஃபி குடிச்சிட்டு இருக்கிறேன். பார்த்தா தெரியவில்லையா…
தெரியுது பா… நல்லா தெரியுது… பர்ஸ்ட் ரவுண்டா இது என…
சேச்ச, நான் தான் காலையில் சீக்கிரம் எழுந்துடுவேனே, அப்பவே குடிச்சிட்டேன். இது செகண்ட் ரவுண்டு என்று பெருமையாகக் கூற…
இன்னும் உங்க பையன் காஃபி குடிக்காம இருக்கிறேன். நீங்க என்னாட,என்றால் இரண்டாவது ரவுண்டே ஆரம்பித்தாச்சு… என்ன பண்றா, உங்க மருமக… சீக்கிரம் காஃபி எடுத்துட்டு வர சொல்லுங்க என்று கடுப்புடன் கூறி விட்டு அறைக்குள் சென்று விட்டான்.
சுகுமாரன் கிச்சனை பார்த்து சுபி,என அழைக்க…
இதோ வந்துட்டேன் மாமா என்று கைகளை துடைத்துக் கொண்டே வந்தாள். என்ன மாமா வேணும் என்று களைப்புடன் கேட்க…
இங்க வாடா, இப்படி உட்காரு, முகமெல்லாம் வியர்த்து இருக்கு, நீ காஃபி குடிச்சியா இல்லையா, என சுகுமாரன் வினவ…
ஐயோ! எனப் பதற…
என்னடா… ஏன் இப்படி பதற…
மாமா, அத்தானுக்கு இன்னும் காஃபி குடுக்கலை. மறந்துட்டேன் , அவங்களுக்கு சரியா எட்டு மணிக்கு காஃபி வேண்டும். இல்லையென்றால் டென்ஷனாகி கத்தப் போறாங்க…
அல்ரெடி கத்திட்டான் மா, காஃபி கேட்டு, அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்.வேற ஏதோ, பேசி மறந்துட்டேன். நீ சீக்கிரம் கொண்டு போ மா…
வேகமாக கிச்சனுக்குள் நுழைந்தவள்,இண்டக்ஷன் ஸ்டவ்வில் பாலை வைத்து, அவனுக்கான காஃபியை கலக்கினாள். காலை காஃபி மட்டும் நேரத்திற்கு அவனுக்கு கொடுத்தாக வேண்டும், இல்லையென்றால் அவ்வளவு தான்… இன்று இருந்த பரபரப்பில் மணியானதை கவனிக்கவில்லை.
இதுக்கு வேற என்ன சொல்ல போறானோ, என்ற பயத்துடன் காஃபி கப்பை எடுத்துக் கொண்டு மாடி ஏறினாள்.
கதவை திறந்து உள்ளே சென்ற சுபி, கவின் எங்கே என்று பார்க்க, வழக்கம் போல பால்கனியில் அமர்ந்து இருந்தான்.
ஆனால் வழக்கமில்லாத வழக்கமா கோபத்தோடு இருந்தான். பதினைந்து நாட்களில், அவனை கோபமாகப் பார்த்தது இல்லை.
இவளும்,அந்த மாதிரி நடந்து கொண்டது இல்லை.இன்று தான் தாமதம் ஆகி விட்டது.
அத்தான் என அழைக்க, ஒன்றும் கூறாமல் கைகளை கட்டியபடியே, அவளைப் பார்க்க…
மெல்ல நாக்கை கடித்துக்கொண்டவள், சாரி அத்தான் என்றவாறு, காஃபி கப்பை அவனிடம் நீட்ட…
சற்று நேரம் அமைதியாக இருந்தவன், காஃபியை வாங்கிக் கொண்டே, இங்கப் பாரு சுபி, " காலை காஃபி எனக்கு மிகவும் முக்கியம், அது நேரத்துக்கு வரலை என்றால், என் மூடே ஸ்பாயிலாயிடும். சோ, காஃபி ஈஸ் மஸ்ட் … உன் கிட்ட அல்ரெடி சொல்லிட்டேன். உன்னால, முடியவில்லை என்றால், அம்மாவையோ, இல்லை வேறு யாரிடமாவது குடுத்து விடு, புரியுதா " என…
ம், என தலையசைத்த சுபி, மனதிற்குள்ளேயே ' காஃபிக்கு இப்படி ஒரு அக்கப்போரா, ஓ காட் முடியலையே!' என கவுண்டர் விட்டுக் கொண்டிருந்தவள், வெளியே அமைதியாக இருந்தாள்.
இவள் கவினுக்கு காஃபி எடுத்துக் கொண்டு வரும் போதே பத்மா கூறிவிட்டார், சுபி மா கீழ இனி வேற வேலை இல்ல டா. நானும் நீரும் இருக்கற மீதி வேலையைப் பாத்துக்குறோம். நீ ரெடியாகி வாடா… என்று கூறிவிட, அதனால் இப்போது கீழேப் போற வேலை இல்லை.
தனது கஃப்போர்டில் தலையை நுழைத்து என்ன புடவை கட்டலாம் என யோசித்துக் கொண்டிருந்தாள்.
காபி குடித்துக்கொண்டே கவின் இவளைப் பார்க்க, அவளது குழப்பத்தையேப் பார்த்தான்…
காஃபியைக் குடித்துக் கொண்டே, அவளருகில் வந்தவன் என்ன என்று புருவத்தை உயர்த்த…
அது அத்தான், இன்றைக்கு கெஸ்ட் வருவதால், அத்தை நல்ல சாரியா கட்ட சொன்னாங்க. பட் வேலை செய்யும் போது,கம்ஃபர்டபிளா இருக்கணும் என்று தேடுறேன் …
சரி நகரு நான் எடுத்து தரேன் எனக் கவின் கூற…
என்ன அத்தான், நீங்க செலக்ட் செய்து தரீங்களா? புடவையைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்று கிண்டல் அடிக்க…
ஹலோ, நாம துணிக் கடை தான் வைத்திருக்கிறோம். எல்லாம் எனக்கு தெரியும், நீ கொஞ்சம் நகரு என அவளை நகர்த்தி விட்டு, அங்கிருந்தப் புடவைகளை ஆராய்ந்தான். பேபி பிங்க் நிறத்தில் இருந்த மைசூர் சில்க் சேரியை தேர்வு செய்தான்.
அதன் அழகில் மயங்கிய சுபி, தேங்க்ஸ் அத்தான் என்றுக் கூறி விட்டு, அவன் கையில் இருந்த புடவையை வாங்கிக் கொண்டு ட்ரஸ்ஸிங் ரூம்கிற்கு சென்றாள்.
ஒரு வழியாக கவினும், சுபியும் தயாராகி இறங்கி வர…
அங்கோ, எல்லோரும் வந்திருக்க…
தீப்தி, ஓடி வந்து ஹாய் அத்தான் என்க.
"தீபு, மா எப்படி இருக்கடா? விஷால் ஒழுங்கா கவனித்துக் கொள்கிறானா, இல்லையென்றால் சொல்லு நான் ரெண்டு தட்டு தட்டுறேன்." எனக் கவின் கூற…
தீப்தியோ, முகம் முழுவதும் வெட்கத்தோட, போங்கத்தான். அவர் நல்லாத்தான் கவனித்துக் கொள்கிறார் என…
கவின், சுபியைப் பார்க்க, அவளோ பார்வையை திருப்பிக் கொண்டாள்.
தீப்தி அருகில் விஷால், புன்னகையுடன் நின்றுக் கொண்டிருந்தான்.
மாப்பிள்ளை எப்படிடா இருக்க, என விஷாலை கட்டிப் பிடித்து விசாரித்துக் கொண்டிருந்தான் கவின்.
அந்த இனிமையான சூழலில் சுகந்தி இடை புகுந்தாள்.
மருமகனே… என் மாப்பிளைய என் பொண்ணு நல்லா பார்த்துக்கிறா... நீ எப்படி இருக்க… அதை முதலில் சொல்லு… இன்னும் உனக்கு ஒன்னும் புரியல... இல்லையென்றால் நாங்க வீட்டுக்கு வந்து அரைமணி நேரம் ஆகுது. எப்ப வந்தோம், நீ இப்ப வந்து வரவேற்கிற? நீ முதலில் சரியா இருந்தால் தானே, உன் பொண்டாட்டி ஒழுங்கா இருப்பா, என சுபியை வம்பிழுக்க…
சுபிக்கு வந்த கோபத்திற்கு, கவினை ஒரு முறை முறைத்து விட்டு, அங்கிருந்தவர்களைப் பொதுவாகப் பார்த்து, வாங்க என்றவள் கிச்சனுக்குள் சென்றாள்.
உள்ளே சென்ற சுபியை, யோசனையோடு பார்த்தான் விஷால். புதுமணத் தம்பதியருக்கு உரிய எந்த இணக்கமும், தெரியவில்லை.
கவினைத் திரும்பிப் பார்க்க, அவனோ, என்ன என்று புருவத்தை உயர்த்த... ஒன்றுமில்லை என விஷால் தலையசைத்தான். ஆனால் உள்ளுக்குள் குழப்பத்துடனே இருந்தான்.
அவனை ரொம்பவே யோசிக்க விடாமல், நீரஜா, வந்து அனைவரையும் உணவருந்த அழைத்தாள்.
அதற்குப் பிறகு கைக்கும் வாய்க்கும் மட்டுமே வேலை இருந்தது. இடையிடையே பேசிக் கொண்டிருந்தனர். எல்லோருக்கும் பரிமாறிக் கொண்டிருந்த சுபி, கவின், மற்றும் நவீன் பக்கம் மட்டும் பரிமாற வரவில்லை.
நவீன், அதை கவனித்து, சுபியை அழைத்து, ஏதாவது கேட்க…
அவளோ, முறைத்துக் கொண்டே பரிமாறினாள்.
அருகில் உணவருந்திக் கொண்டிருந்த விஷாலோ, நவீன் காதில் டேய், சுபி சிஸ்டர், ஏன் டா உன்னைப் பார்த்து முறைக்கிறாங்க… கவினை முறைத்தாலும், ஏதாவது காரணம் இருக்கும். உன்னை ஏன் டா? முறைச்சிட்டு இருக்காங்க… நீ என்ன மச்சி பண்ணி வச்ச..
ம் என பெருமூச்சு விட்டவன், அது ஒரு பெரிய கதைடா… சாப்பிடு அப்புறமா பேசலாம் என்று முடித்துவிட்டான்.
சரி என விஷால் அமைதியாக இருக்க, சுகந்திப் பேச்சை ஆரம்பித்தாள். தன் மகள் மருமகன் போயிட்டு வந்த ஹனிமூன் டூரைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தாள்.
காஷ்மீரிலிருந்து ஆப்பிள் வாங்கிட்டு வந்தாங்க, அது சூப்பரா, ஃப்ரஷ்ஷா இருந்தது தெரியுமா எனக் கூற…
ஏன் அத்தை இங்க ஆப்பிளே கிடைக்காதா… அதைப் போய் வாங்கிட்டு வந்துருக்கு, உங்கப் பொண்ணு என்று நவீன் கிண்டலடிக்க…
அவனை முறைத்த சுகந்தி, டேய் நீங்க தான் அவசரத்தில் கல்யாணம் பண்ணிக்கிட்டு, எங்கேயும் போகல… உன் கூட பிறந்தவனும், எங்கேயும் போகலையாஎன வினவ…
கவினும், சுபியும் ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ந்து நின்றனர். ஓரிரு நிமிடத்தில் சமாளித்த கவின், தனது அத்தையிடம், "அத்தை இரண்டு நாளில் ரிசப்ஷன் இருக்குல, அதை முடிச்சிட்டு அடுத்த நாள்,கேரளா போகலாம் என்று இருக்கோம்" என…
ஏன்டா, நவீன் நீங்களும் இவங்களோட ஹனிமூனுக்கு போகலாம் இல்லையா என பத்மா வினவ…
ஐயோ! அம்மா, இது ஹனிமூன் மா… அவங்க மட்டும் போனால், அது ஹனிமூன், நாங்களும் போனால் அது ஃபேமிலி டூர் மா… நான் வேற ஐடியா வச்சிருக்கேன். வெளிநாட்டு டூர் போலாம் என்று இருக்கேன் மா. பட் இப்ப கொரணா அது,இது என்று வெளிநாட்டில் இருக்கு, அதனால கொஞ்ச நாள் போகட்டும், என்று முடித்து விட…
கொஞ்சம் நேரம்,ரிஷப்ஷன் ஏற்பாடு பற்றி பேசினர். விஷால் பக்காவாக ஏற்பாடு செய்து இருக்க, நிம்மதியாக இருந்தனர்.
அதற்கு பிறகு காலை உணவு, இனிமையாக முடிந்தது.
பெண்கள் மதிய உணவிற்காக ஏற்பாடுகளை பேசிக்கொண்டே ஆரம்பிக்க...
பெரியவர்களோ, ஹாலில் அமர்ந்து நாட்டு நடப்பை பேசிக்கொண்டு இருந்தனர்.
கவின், நவீன், விஷால் மூவரும் மாடிக்கு வந்து விட்டார்கள். மாடித்தோட்டத்தில், ஒரு புறம் போடப்பட்டிருந்த திட்டில் சென்று அமர…
விஷால், நவீனிடம், "என்னடா பிரச்சனை உனக்கும்,சுபிக்கும் என்று வினவ…"
கவினும், நவீனும் ஒன்றும் கூறாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் பார்வை பரிமாற்றத்தை பார்த்து விஷால், இருவரையும் பார்த்து என்னை இன்னமும் அந்நியம்மா தான் நினைக்கிறீங்கல, என வருத்தப்பட…
டேய் நீ நினைக்கிற மாதிரி ரொம்ப முக்கியமான விஷயம் இல்ல என நவீன் மழுப்பலாக் கூற… கவின் அமைதியாக இருந்தான்.
நவீனிடம், ஒன்றும் கூறாமல்,கவினிடம்,"டேய், இப்படி அமைதியாக இருந்தால் என்னடா, அர்த்தம்…"
நீங்க மறைக்க மறைக்க எனக்கு என்னமோ,தோணுதுடா. நான் வேண்டாத இடத்தில் இருக்கிற மாதிரி ஃபீல்… சாரிடா… நண்பன் என்ற என்ற உரிமையில் தான்டா கேட்டேன். இல்லை என்றால் உங்களோட பர்ஸனல கேட்க மாட்டேன் டா… சரிடா, தீப்தி தேடுவா, நான் கீழேப் போறேன், என்று கிளம்ப முயல,
டேய், என்று இருவரும் அவனை இழுத்து உட்கார வைத்தனர்.
கவின், விஷாலின் அருகே அமர்ந்து, பார்வையை, எங்கோ வைத்திருக்க… நவீன், விஷாலின் மறுபுறம் அமர்ந்து நடந்தவற்றைக் கூறினான்.
" கவினும்,சுபியும் ஏற்கனவே ஒருவரை ஒருவர் விரும்பினார்கள்." என…
விஷால், "என்னது என்று ஷாக்காகி" நிற்க…
நவீன், "அதுக்கு நீ ஏன் டா ஷாக்காகுற… ஷாக்கக் குறை… ஷாக்கக் குறை… " எனக் கூற…
கவின் முகத்தில் புன்னகை மலர, நவீனைப் பார்க்க…
ஆமாம் டா, நான் இன்னும் சொல்றதுக்கு எவ்வளவோ இருக்கு…
நவீனிடம், "என்னது இந்த விஷயம் உனக்கு முன்னாடியே தெரியுமா? என்னமோ வீட்ல கவின் திருமணம் பற்றி பேச்சு வந்த போது நீயா தானே சுபிக்கு, கவினை கல்யாணம் பண்ணி வைக்கலாமா என்று கேட்ட… தீப்திக் கூட அப்படி தானே சொன்னா…"
ஆமாண்டா, இவங்க லவ் பண்ண விஷயத்தை வீட்ல சொல்லாமல் அரேஞ்ச் மேரேஜா நான் தான்டா மாத்துனேன்.
வீட்டுல கவினோட திருமண பேச்சு ஆரம்பிக்கும் போது, தான் சார் வந்து சுபியை லவ் பண்ண விஷயத்தை சொன்னார்.
சோ, கல்யாணப் பேச்சை ஆரம்பிக்கும் போது, லேசா கோடு இழுத்தேன். என் இன்னசன்ட் டார்லிங் நீரு, அவளா வந்து ஹெல்ப் பண்ணி எப்படியோ, அரேஞ்ச் மேரேஜ் ஆயிடுச்சு டா, என நவீன் கூற…
அப்புறம் என்னடா பிரச்சனை? இவங்க ரெண்டு பேரும் விரும்பி இருக்காங்க... அப்புறம் ஏன் இன்னைக்கு ஹனிமூன் டூரப்பத்தி பேசவும், அப்படி முழிச்சாங்க…
டேய் விஷால், இன்னும் அவங்களுக்கு நடுவுல நிறைய விஷயங்கள் பேசப்படாமல் இருக்குதுடா…
டேய் என்னடா! இது, கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுடா?
சரி டா மச்சி, இப்ப நான் புரியிற மாதிரி சொல்றேன். ஊருல கவின், சுபிக் கிட்ட லவ்வ சொன்னான். ஆனால் சொல்லவில்லை, என மேலும் குழப்ப…
விஷாலோ, கொலைவெறியில் இருந்தான்.
கவினோ,அடக்கமாட்டாமல் நகைத்து டேய் நீ சும்மா இரு டா... நானே சொல்லிக்கிறேன்... மாப்ளை வேற ரொம்ப டென்ஷனா இருக்கிறார் என்றவன், விஷாலைப் பார்த்து உனக்கு ஞாபகம் இருக்கா... ஆறு மாசத்துக்கு முன்னாடி நடந்த எதையும் நீ மறந்து இருக்க மாட்ட... நாங்க குலதெய்வ கோயிலுக்கு போனோமே, அங்க தான் அவகிட்ட லவ்வ சொன்னேன். நான் அவக் கிட்ட சொல்லிட்டு திரும்புனா, இந்த தடியன் திடீரென்று வந்து நிக்குறான். இவனப் பார்த்த அதிர்ச்சியில் நான் ஓடிப் போயிட்டேன்.
அதுக்கப்புறம்,உன் கிட்ட இருந்து ஃபோன் கால் வந்தது. நான் அப்புறம் இங்க வந்துட்டேன். அதுக்கு அடுத்த ரெண்டு நாளுக்கு அப்புறம் ஏற்பட்ட கலவரம் தான் உனக்கு தெரியும் இல்ல...
அதற்கப்புறம் என் காதலை சொல்லும் நிலை வரவில்லை. அவளா உணர வேண்டும் என்று நான் நினைக்கிறேன் அவ்வளவுதான் டா…
ஓ, என்ற விஷால்,உன் கிட்ட ஏன் கோபமாக இருக்காங்க என நவீனைப் பார்த்து கேட்க...
ஐந்து நிமிடம் அமைதியாக இருந்த நவீன், விஷாலிடம், " டேய் நானும், அவளும் நல்ல நண்பர்கள் என்று உனக்கு தெரியும் தானே, அவக் கிட்ட சொல்லாம திடீர்னு கல்யாணம் பண்ணிக்கிட்டேன், என்று கோவமா இருக்கா… " என…
அதிர்ச்சியில் வாயடைத்து போய் இருந்தான் விஷால்.
கவின், நவீன் இருவரோடும் சுபி பேசாமல் இருப்பதற்கும், அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைக்கும் தான் தான் காரணம் என்பதை உணர்ந்தான் விஷால்.
சாரிடா… என்னால உங்க ரெண்டு பேருக்கும் எவ்வளவு சங்கடம் என்று தெரியுது, பட் நீங்க எனக்கு எவ்வளவு பெரிய சொர்க்கத்தை கொடுத்து இருக்கீங்க தெரியுமா? அதற்கு நான் உங்க ரெண்டு பேருக்கும் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
சிஸ்டர் கிட்ட, நானே எல்லா உண்மையும் சொல்லுறேன் என…
டேய், அதெல்லாம் வேண்டாம் என்று இருவரும் தடுக்க…
"நீங்க இரண்டு பேரும் இப்படி தவிச்சிட்டு இருக்கும் போது, நான் மட்டும் சந்தோஷத்தின் உச்சியில் இருக்கிறது, எனக்கு குற்றவுணர்ச்சியா இருக்குடா." என விஷால் கூற…
லூசாடா, நீ பெரிய வார்த்தை எல்லாம் சொல்லுற… தீப்தியும், நீயும் சந்தோஷமா இருந்தாலேப் போதும் என்று நவீன் கூற…
கவினும், ஆமாம் டா... நீ போய், எல்லாம் சொல்லி ஒன்னும் அவ, என்னைப் புரிந்துக் கொள்ள வேண்டாம்… அவளா, புரிந்துக் கொள்ள வேண்டும்… அவளே, நானாக மாறணும் டா…
விஷாலோ, கவின் பேச்சை ஆரம்பிக்கும் போது, அவன் மேல் பார்வை வைத்தவன், இப்போதோ, வேற எங்கோ பார்த்துக் கொண்டிருக்க…
கவின் மனதிற்குள்,' நான் எவ்வளவு சீரியஸாக பேசிட்டு இருக்கேன். இவன் என்னவென்றால் பராக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.' என வைதுக் கொண்டே, அவன் பார்வை போன திசையில் திரும்பியவன், அதிர்ச்சியில் எழுந்து நின்றான்.