நான் நினைத்த மாதிரியே டேவிட் அண்ணாவைக் கூப்பிட்ட அந்த பெண் நந்தா பீடையின் ஸ்டெப்னி பொண்டாட்டியாயிட்டாளே
இன்று காலையிலேதான் நினைத்தேன் ஒருவேளை அந்த பெண் நரசிம்மனின் மகளா இருப்பாளோன்னு
அது சரியா போச்சே
இல்லாட்டி இந்த நாசமா போற நந்தாவுக்கு இவ்வளவு திமிரும் மாதுரியைக் கொல்லணும்ங்கிற தைரியமும் வந்திருக்குமா?
அட வீணாப் போன நந்தா நாயே பணத்துக்காகத்தான் மாதுரியைக் கல்யாணம் செஞ்சியா?
வெளிநாட்டில் இருந்தாலும் அந்தப் பெண் ஐஸ்வர்யா கொஞ்சூண்டு நல்லவளோ?
அதனாலதான் பொண்ணுக்கு ஒண்ணும் தெரியக் கூடாதுன்னு நரசிம்மன் நாதாரி சொல்லுறானா?
எரியிற கொள்ளியில எண்ணெய்யை ஊத்தின மாதிரி நரசிம்மனே அம்பரீஷ்ஷைக் கொல்லணும்ன்னு நினைக்கிறான்
அவனிடம் போய் இந்த நந்தா நாதாரி மாமனாரைப் போட்டு தள்ளணும்னு சொல்லுறானே
டிரைவர் கோபால் என்ன உளறினான்?
அம்பரீஷ்ஷின் இரண்டு கடைகளையும் கொள்ளையடித்தது, நெருப்பு வைச்சது பற்றியா?
நந்தகுமார் சேவ் செய்து வைத்திருந்த இந்த ரகசியங்களை மாதுரி கண்டு கொண்டாளோ?
அதனால்தான் மாதுரியை கொல்ல நந்தா தீவிரமாக இருக்கானோ?
இந்த ரகசியங்களை மாதுரி யாரிடம் கொடுத்திருக்கிறாள்?