ஓம் ஸ்ரீ சாயிராம்
இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் எனக்குப் பிடித்த விஷயங்களை உங்களுடன் பகிர்கிறேன் ஆத்தரே.
இனிமையான அன்னை மகள் உரையாடலுடன் தொடங்கும் கதை, அதே இனிமையான பந்தம் பாசத்துடன் தான் இறுதி வரை நகர்ந்தது என்று சொல்ல வேண்டும்.
எந்தச் சூழலிலும் உதட்டில் ஒட்டிய புன்னகையுடன், யாரையும் விட்டுக்கொடுக்காமல் பேசி வலம் வந்த தமயாவின் கதாபாத்திரம் அற்புதம். குறிப்பாக, அப்பாவைப் பற்றி கேட்டு நச்சரிக்கும் மகளிடம் அவரைப் பற்றி நல்லவிதமாகக் கூறும் இடங்கள் சூப்பரோ சூப்பர். சிறந்த பிள்ளை வளர்ப்பு முறை என்ன என்பதை தமயாவிடம் கேட்டறியலாம் என்று சொன்னால் அது மிகையாகாது.
விஷ்வஜித் தான் ஸ்ரீயின் தந்தை என்று முதல் சில அத்தியாயங்களிலேயே தெள்ளத்தெளிவாகத் தெரிந்தபோதும், அவனுக்கு வேறொரு மனைவி மகன் என்று ஒரு குடும்பம் இருப்பதைக் கண்டதும் மேற்கொண்டு படிக்கத் தயக்கமாகத் தான் இருந்தது.
ஆனால் படித்தேன்!!!
காரணம், தமயாவைக் கண்டுகொண்ட மறுநொடியே அவன் மனைவிடம் ஒளிவுமறைவு இல்லாமல் அனைத்தையும் பகிர்ந்துகொண்ட விதம் மனத்தைக் கவர்ந்தது.
போகப்போக நீங்கள் நேத்ராவை வைத்து என்ன இடியாப்பம் சுற்றுகிறீர்கள் என்று கண்டறிந்துவிட்டேன் ஆத்தரே. இருந்தாலும் விஷ்வஜித்தின் முடிவால், நேத்ராவின் எதிர்காலம், குறிப்பாக நிகிலின் எதிர்காலம் என்னவாகும் என்ற ஆர்வம் மேலோங்கியது. அதையும் அசத்தலாக நியாயப்படுத்தி விட்டீர்கள். உங்கள் முடிவு மிகவும் பிடித்திருந்தது.
தமயா, நேத்ரா இருவரின் Flashbackம் எதிர்பார்க்காத திருப்பங்கள். Hats off to your scripting. இமைக்கும் நொடியில் விதி என்னவெல்லாம் செய்துவிடும் என்று பிரமிப்பாக இருந்தது. ஆனால் உங்கள் ஹீரோவின் Flashback பொறுத்தவரை அவனே தன் தலையில் மண்ணை வாரிக்கொட்டிக் கொண்டான் என்று தான் சொல்லவேண்டும்.
பதினைந்து வருடங்கள் வனவாசம் ஏற்றதற்கு முழு காரணமும் அவனது சின்னதொரு சபலம் அல்லவா. அது ஆத்மார்த்தமான அன்பின் வெளிப்பாடாகவே இருந்திருந்தாலும், தமயா கடந்து வந்த பாதை அறிந்த பின்னும் அவன் அப்படிச் செய்திருக்கக்கூடாது என்று தோன்றியது.
ஆனால் நிகழ்கால காட்சிகளில் வந்த விஷ்வஜித் மனத்தைக் கொள்ளைக் கொண்டுவிட்டான். அதுவும் அப்பாவாக, அவன் இரு பிள்ளைகள் மீதும் பாச மழை பொழிந்த இடங்கள் படிக்க சற்று பொறாமையாகவே இருந்தது. Father’s Day அன்று ஒரு நல்லகதை படித்து முடித்த திருப்தி பெற்றேன்.
தன்னவளைக் கண்ட மறுகணமே, அதிரடி சரவெடியாகக் களத்தில் இறங்கியது அட்டகாசம். அன்று அவள் கசப்பான பக்கங்கள் தெரிந்த பின்னும் சரி, இன்று வருடங்கள் பல கடந்த அவளைச் சந்தித்த போதும் சரி, கண்ட நாள் முதல் விஷ்வஜித் காதல் குறையாமல் இருந்தது அழகிலும் அழகு. அவன் தமயந்தியை எந்தளவுக்கு நேசித்திருக்கிறான் என்பதை, பதினைந்து வருடங்களுக்குப் பின்பு காதல் மன்னனாக Back To Form வந்ததை உங்கள் சொல்லாடலில் உணரமுடிந்தது.
பல இடங்களில், தமயா மற்றும் விஷ்வஜித்தின் முடிவுகள் ஏற்க முடியவில்ல என்ற நெருடலுடன் படித்தேன். ஆனால் ஏதோ என் உள்ளுணர்வுகள் அறிந்தது போல, நீங்கள் அடுத்து வந்த காட்சியிலேயே என் கேள்விகளுக்கு எல்லாம் திருப்தியான பதில் தந்துவிட்டீர்.
உதாரணத்திற்கு, ‘இவள் மட்டும் மகளைத் தனியாக வளர்க்க நினைப்பது நியாயமா?’ என்று நான் தமயாவைத் திட்டும் சமயத்தில், அவளே தன் முடிவை நினைத்து குமுறுவதும் மன்னிப்பு யாசிப்பதும் போல காட்சிகள் அமைத்து நெகிழ வைத்துவிட்டீர்கள் ஆத்தரே.
இவர்கள் இருவரும் தான் கதையின் நாயகன் நாயகி என்றாலும், என்னைப் பொறுத்தவரை, இக்கதையின் நாயகி ஸ்ரீ தான்.
வயதிற்கே உரிய வெகுளித்தனமும் ஆசைகளும் எவ்வளவோ இருந்தாலும் அம்மாவின் மனநிலை அறிந்து செயல்படும் பக்குவம் கொள்ளை அழகு என்றால், எந்த நிலையிலும் அன்னையை விட்டுக்கொடுக்காத குணம் அதற்கும் ஒருபடி மேல்.
தந்தை இவன் தான் என்று தெரிந்த பின்னும், பெற்றோர்களின் தர்மசங்கடம் உணர்ந்து பாட்டி வீட்டில் அவள் தள்ளி நின்று உறவாடியதும், தேக்கிவைத்த ஏக்கங்களை தந்தை மடியில் கொட்டித் தீர்த்த காட்சியும், பாராட்ட வார்த்தை இல்லை. கண்கலங்கி விட்டேன். Simply Wow ஆத்தரே.
அவள் கடவுளிடம் கொஞ்சுவதும், கெஞ்சுவதும், சண்டையிடுவதும் என ரோஜா பூக்களுடன் வலம் வந்த காட்சிகள் ரசனையாக இருந்தது.
கதை மாந்தர்கள் அனைவரின் கண்ணோட்டத்திலும் கதையை நகர்த்திய உங்கள் பாங்கு அட்டகாசம். குறிப்பாக ராஜேஸ்வரி, நேத்ரா இருவரின் கதாபாத்திரங்கள் வெகு இயல்பாக இருந்தது.
ராஜேஸ்வரி ஊருக்கு வருவதைப் பற்றி நேத்ரா விஷ்வஜித்திடம் சொல்வதும், அதற்கு அவன் முகபாவனையும் அட்டகாசம்.
அது எப்படி ஆத்தரே! கடைசி அத்தியாயம் வரை சஸ்பென்ஸ் வைத்து எழுதுறீங்க. கணவன் உட்பட புகுந்த வீட்டு சொந்தங்கள் வைத்த சஸ்பென்சில், தமயந்திக்கு மட்டுமல்ல, படிக்கும் எங்களுக்கும் தான் தலையே சுற்றியது. மொத்தத்தில் அசத்திட்டீங்க ஆத்தரே.
பெற்றவர்கள் சேகரிக்கும் பாவமும் புண்ணியமும் பிள்ளைகளுக்குப் போய் சேரும் என்று சொல்லும் விதமாக நேர்மறையான கதை தந்த நீங்கள் இப்போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்,
வித்யா வெங்ககேஷ்.
இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் எனக்குப் பிடித்த விஷயங்களை உங்களுடன் பகிர்கிறேன் ஆத்தரே.
இனிமையான அன்னை மகள் உரையாடலுடன் தொடங்கும் கதை, அதே இனிமையான பந்தம் பாசத்துடன் தான் இறுதி வரை நகர்ந்தது என்று சொல்ல வேண்டும்.
எந்தச் சூழலிலும் உதட்டில் ஒட்டிய புன்னகையுடன், யாரையும் விட்டுக்கொடுக்காமல் பேசி வலம் வந்த தமயாவின் கதாபாத்திரம் அற்புதம். குறிப்பாக, அப்பாவைப் பற்றி கேட்டு நச்சரிக்கும் மகளிடம் அவரைப் பற்றி நல்லவிதமாகக் கூறும் இடங்கள் சூப்பரோ சூப்பர். சிறந்த பிள்ளை வளர்ப்பு முறை என்ன என்பதை தமயாவிடம் கேட்டறியலாம் என்று சொன்னால் அது மிகையாகாது.
விஷ்வஜித் தான் ஸ்ரீயின் தந்தை என்று முதல் சில அத்தியாயங்களிலேயே தெள்ளத்தெளிவாகத் தெரிந்தபோதும், அவனுக்கு வேறொரு மனைவி மகன் என்று ஒரு குடும்பம் இருப்பதைக் கண்டதும் மேற்கொண்டு படிக்கத் தயக்கமாகத் தான் இருந்தது.
ஆனால் படித்தேன்!!!
காரணம், தமயாவைக் கண்டுகொண்ட மறுநொடியே அவன் மனைவிடம் ஒளிவுமறைவு இல்லாமல் அனைத்தையும் பகிர்ந்துகொண்ட விதம் மனத்தைக் கவர்ந்தது.
போகப்போக நீங்கள் நேத்ராவை வைத்து என்ன இடியாப்பம் சுற்றுகிறீர்கள் என்று கண்டறிந்துவிட்டேன் ஆத்தரே. இருந்தாலும் விஷ்வஜித்தின் முடிவால், நேத்ராவின் எதிர்காலம், குறிப்பாக நிகிலின் எதிர்காலம் என்னவாகும் என்ற ஆர்வம் மேலோங்கியது. அதையும் அசத்தலாக நியாயப்படுத்தி விட்டீர்கள். உங்கள் முடிவு மிகவும் பிடித்திருந்தது.
தமயா, நேத்ரா இருவரின் Flashbackம் எதிர்பார்க்காத திருப்பங்கள். Hats off to your scripting. இமைக்கும் நொடியில் விதி என்னவெல்லாம் செய்துவிடும் என்று பிரமிப்பாக இருந்தது. ஆனால் உங்கள் ஹீரோவின் Flashback பொறுத்தவரை அவனே தன் தலையில் மண்ணை வாரிக்கொட்டிக் கொண்டான் என்று தான் சொல்லவேண்டும்.
பதினைந்து வருடங்கள் வனவாசம் ஏற்றதற்கு முழு காரணமும் அவனது சின்னதொரு சபலம் அல்லவா. அது ஆத்மார்த்தமான அன்பின் வெளிப்பாடாகவே இருந்திருந்தாலும், தமயா கடந்து வந்த பாதை அறிந்த பின்னும் அவன் அப்படிச் செய்திருக்கக்கூடாது என்று தோன்றியது.
ஆனால் நிகழ்கால காட்சிகளில் வந்த விஷ்வஜித் மனத்தைக் கொள்ளைக் கொண்டுவிட்டான். அதுவும் அப்பாவாக, அவன் இரு பிள்ளைகள் மீதும் பாச மழை பொழிந்த இடங்கள் படிக்க சற்று பொறாமையாகவே இருந்தது. Father’s Day அன்று ஒரு நல்லகதை படித்து முடித்த திருப்தி பெற்றேன்.
தன்னவளைக் கண்ட மறுகணமே, அதிரடி சரவெடியாகக் களத்தில் இறங்கியது அட்டகாசம். அன்று அவள் கசப்பான பக்கங்கள் தெரிந்த பின்னும் சரி, இன்று வருடங்கள் பல கடந்த அவளைச் சந்தித்த போதும் சரி, கண்ட நாள் முதல் விஷ்வஜித் காதல் குறையாமல் இருந்தது அழகிலும் அழகு. அவன் தமயந்தியை எந்தளவுக்கு நேசித்திருக்கிறான் என்பதை, பதினைந்து வருடங்களுக்குப் பின்பு காதல் மன்னனாக Back To Form வந்ததை உங்கள் சொல்லாடலில் உணரமுடிந்தது.
பல இடங்களில், தமயா மற்றும் விஷ்வஜித்தின் முடிவுகள் ஏற்க முடியவில்ல என்ற நெருடலுடன் படித்தேன். ஆனால் ஏதோ என் உள்ளுணர்வுகள் அறிந்தது போல, நீங்கள் அடுத்து வந்த காட்சியிலேயே என் கேள்விகளுக்கு எல்லாம் திருப்தியான பதில் தந்துவிட்டீர்.
உதாரணத்திற்கு, ‘இவள் மட்டும் மகளைத் தனியாக வளர்க்க நினைப்பது நியாயமா?’ என்று நான் தமயாவைத் திட்டும் சமயத்தில், அவளே தன் முடிவை நினைத்து குமுறுவதும் மன்னிப்பு யாசிப்பதும் போல காட்சிகள் அமைத்து நெகிழ வைத்துவிட்டீர்கள் ஆத்தரே.
இவர்கள் இருவரும் தான் கதையின் நாயகன் நாயகி என்றாலும், என்னைப் பொறுத்தவரை, இக்கதையின் நாயகி ஸ்ரீ தான்.
வயதிற்கே உரிய வெகுளித்தனமும் ஆசைகளும் எவ்வளவோ இருந்தாலும் அம்மாவின் மனநிலை அறிந்து செயல்படும் பக்குவம் கொள்ளை அழகு என்றால், எந்த நிலையிலும் அன்னையை விட்டுக்கொடுக்காத குணம் அதற்கும் ஒருபடி மேல்.
தந்தை இவன் தான் என்று தெரிந்த பின்னும், பெற்றோர்களின் தர்மசங்கடம் உணர்ந்து பாட்டி வீட்டில் அவள் தள்ளி நின்று உறவாடியதும், தேக்கிவைத்த ஏக்கங்களை தந்தை மடியில் கொட்டித் தீர்த்த காட்சியும், பாராட்ட வார்த்தை இல்லை. கண்கலங்கி விட்டேன். Simply Wow ஆத்தரே.
அவள் கடவுளிடம் கொஞ்சுவதும், கெஞ்சுவதும், சண்டையிடுவதும் என ரோஜா பூக்களுடன் வலம் வந்த காட்சிகள் ரசனையாக இருந்தது.
கதை மாந்தர்கள் அனைவரின் கண்ணோட்டத்திலும் கதையை நகர்த்திய உங்கள் பாங்கு அட்டகாசம். குறிப்பாக ராஜேஸ்வரி, நேத்ரா இருவரின் கதாபாத்திரங்கள் வெகு இயல்பாக இருந்தது.
ராஜேஸ்வரி ஊருக்கு வருவதைப் பற்றி நேத்ரா விஷ்வஜித்திடம் சொல்வதும், அதற்கு அவன் முகபாவனையும் அட்டகாசம்.
அது எப்படி ஆத்தரே! கடைசி அத்தியாயம் வரை சஸ்பென்ஸ் வைத்து எழுதுறீங்க. கணவன் உட்பட புகுந்த வீட்டு சொந்தங்கள் வைத்த சஸ்பென்சில், தமயந்திக்கு மட்டுமல்ல, படிக்கும் எங்களுக்கும் தான் தலையே சுற்றியது. மொத்தத்தில் அசத்திட்டீங்க ஆத்தரே.
பெற்றவர்கள் சேகரிக்கும் பாவமும் புண்ணியமும் பிள்ளைகளுக்குப் போய் சேரும் என்று சொல்லும் விதமாக நேர்மறையான கதை தந்த நீங்கள் இப்போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்,
வித்யா வெங்ககேஷ்.