தோகை 4:
ஆற்றிலேயே நீந்தி சென்று ஷூட்டிங் ஸ்பாட்டை அடைந்தான் அஜய்.உடையில் இருந்த சேறு எல்லாம் சுத்தமாகி இருக்க...வேகமாய் கரையேறியவன்...சட்டென்று கேரவனுக்குள் புகுந்து கொண்டான்.
அவனைப் பார்த்துக் கொண்டிருந்த கண்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை.”சார் இப்பதான குளிச்சுட்டு ரெடியாகி இருந்தார்..மறுபடியும் ஆத்துல குளிச்சுட்டு வரார்...” என்று எண்ணியவன்...அதை அஜய்யிடம் கேட்டும் துணிவின்றி அமைதியாக இருந்தான்.
கேரவனுக்குள் புகுந்த அஜய்க்கோ....என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வு.அவள் இதழை தீண்டிய வேட்கை இன்னும் அவனை விட்டு அகன்ற பாடில்லை.அந்த உணர்விலிருந்து அவனால் வெளிவர முடியவில்லை.அப்படி ஒரு செயலை செய்ய வேண்டும் என்று அவன் எந்த முன் திட்டமும் தீட்டவில்லை.
ஆனால் அவளின் பேச்சு,அவளின் நடவடிக்கை எல்லாம் அவனை தூண்டிவிட....அவளின் கையைப் பிடித்தவனுக்குள் மின்சாரத்தின் பாய்ச்சல்.அவளைத் தன் மேல் விழ வைக்க அவன் செய்த யூகம்...அவளிடம் தோற்றுப் போக...அந்த கடுப்பில் இருந்தவன்.. வேகமாக அவளின் இதழைத் தீண்டிவிட்டான்.
ஆனால் மனம் இப்பொழுது...அந்த தீண்டல் மறுபடியும் வேண்டும் என்று ஏங்க..தன் மனம் போன போக்கை எண்ணியவனுக்கு சிறு வியப்பு.
“யாரவள்...? ஒரு சாதாரண கிராமத்துப் பெண்..அழகிற்கு குறைவில்லை. ஆனால் அதை தவிர்த்து என்ன உள்ளது அவளிடம்...சரியான படிப்பு கிடையாது...நாகரிகம் கிடையாது...ஒரு சினிமா ரசனை கூட இல்லை..அப்படி இருக்கும் பட்சத்தில்..எது என்னை அவளை நோக்கி இழுக்கிறது...ஒரு சின்ன பெண் எந்த வகையில் என்னை பாதிக்கிறாள்....
அவள் நினைவு என்னை பாதிக்கிறது என்றால் அந்த அளவு நான் பலவீனமானவனா..? இல்லை என் மனம் தான் தவறாக யோசிக்கிறதா...?” என்று தனக்குத் தானே கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்க...
“அவள் உன் மனதில் நுழைந்து ஒரு வருடம் ஆகிறது...உனக்குத்தான் அது புரியவில்லை மகனே..!”என்று மனம் ரவுண்டு கட்ட...
“இல்லை...அவளை எனக்கு பிடிக்காது...! என்னுடைய மார்க்கெட்டையே பின்னால் தள்ளியவள் அவள்..அவளிடம் எனக்கு என்ன ஈர்ப்பு..அவளை என் காலடியில் விழவைப்பேன்..” என்று தனக்குள் சபதம் எடுக்க...
விதி அவனைப் பார்த்து சிரித்தது....”அவளை உன் காலடியில் விழவைக்க போகிறாயா..? இல்லை அவள் காலடியில் நீ விழப் போகிறாயா..?” என்று.
அவன் இதழ் பட்ட இடத்தில் அவள் பச்சை மிளகாயை தேய்த்த அந்த நிமிடம்..அவன் கண்ணிற்கு முன்னால் வர....”இருந்தாலும் உனக்கு ஆங்காராம் அதிகம் தான்....நான் குறைக்கிறேன் அதை..” என்று எண்ணிக் கொண்டிருக்க...
“சார்..ஷாட் ரெடி...” என்று ஆட்கள் வந்து சொல்ல...அவளின் நினைவுகளை பின்னுக்குத் தள்ளியவன்...வேகமாய் கேரவனிலிருந்து வெளியே சென்றான்.
மேக்கப் மேன் வேகமாய் வந்து மீண்டும் அவனுக்கு ஒரு டச் அப் கொடுக்க....பிறகு தன் வேலையில் முழு கவனத்தையும் செலுத்தினான்.
முன்னனி ஹீரோ என்பதால்..அங்கே கூட்டம் அலைமோத....அவனுக்கு பாதுகாப்புத் தர....அங்கே காவல்துறையினர் நின்றிருந்தனர்.
விவசாய பின்னணி கொண்ட வேடத்தில் அவன் நடிக்க...அவன் உடையும்..வேட்டி சட்டையாக இருந்தது.
“வெள்ளை வேட்டியும்....வெள்ளை சட்டையுமாய்...இடுப்பில் கைவைத்தபடி அவன் நிற்க....”
அவனை அப்படிப் பார்த்த கண்ணனுக்கு....”ச்ச்ச...இவர் மட்டும் எதுக்கு இப்படி அழகா பிறந்து தொலச்சாரோ தெரியல..மனுஷன் என்ன டிரஸ் போட்டாலும்..சும்மா அள்ளுது...” என்று எண்ணிக் கொண்டு அவனை ரசனையோடு பார்க்க...
“இங்க வாங்க கண்ணன்..” என்றான் அஜய்.
“சார்..” என்றபடி வேகமாய் அருகில் போக..
“என்னை சைட் அடிக்கிறதை விட்டுட்டு ஆகுற வேலையைப் பாருங்க...கிரவுட் அதிகம் ஆகுற மாதிரி தெரியுது..சோ..டைரக்டர் கிட்ட பேசுங்க...! அப்பறம் ஷூட்டிங் பாதிக்கும்..” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே..வந்து இறங்கினாள் துப்னா.
அவள் வருவதைப் பார்த்த இளைஞர் பட்டாளம்...அங்கே கரகோஷத்தை எழுப்ப....அனைவரையும் பார்த்து கையை ஆட்டியவள்..அஜய்யின் புறம் திரும்பி...ஒரு சவாலான பார்வை பார்க்க...
அஜய்யின் மனதிலோ...கோபத் தீ கொழுந்து விட்டு எரிந்தது.கண்களில் கனலைக் கக்கியவன்....திரும்பி கண்ணனை முறைக்க...
“இந்தம்மா வேற சும்மாவே இருக்காது...!ஏற்கனவே இங்க சார்... எரிஞ்சுக்கிட்டு இருக்கார்..இந்தம்மா வந்ததும் வராததுமா எண்ணையை வேற ஊத்துது....” என்று எண்ண...
மீண்டும் பிரச்சனை எதுவும் வந்துவிடக் கூடாது என்று எண்ணிய டைரக்டர் வேகமாக அஜய்யின் அருகில் வந்து...”சார் ஷாட் போகலாம்...” என்றார்.
அவரைப் பார்த்து கோபமாகத் தலையாட்டியவன்....தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.
கதைப்படி அன்று இருவருக்கும் இடையிலான ஒரு பாடல் காட்சியை எடுக்க முடிவு செய்திருந்தனர்.
ஹீரோயின் துப்னாவும்...கண்டாங்கி சேலையில் ரெடியாகி வர..அவளைப் பார்த்த இளவட்டங்கள்....அளவுக்கு அதிகமான ஜொல்லை வடிக்க..அந்த இடமே கலை கட்டியது.
“ரோலிங்...ஸ்டார்ட் ...கேமரா....ஆக்சன்...” என்ற வார்த்தைகள் காதில் கேட்ட மாயம்...டைரக்டர் சொன்னதை அஜய் ஒரே ஷாட்டில் சரியாக முடிக்க....அவனைப் பார்த்த இயக்குனர் வாயைப் பிளந்தார்.
துப்னாவும்...”நான் உனக்கு சளைத்தவள் இல்லை..” என்பதைப் போல் நடித்துக் கொண்டிருக்க...அவர்களின் நடிப்புத் திறனைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் வியந்தனர்.
“சரியான ஜோடி...” என்று யாரோ சொல்ல....அது கண்ணனின் காதில் விழுந்து வைக்க...
“டேய் மெதுவா சொல்லுங்கடா...சார் காதுல விழுந்தது...அப்பறம் அவரும் பேக் பண்ணிட்டு,உங்களையும் பேக் பண்ணிடுவார்..” என்று புலம்பிக் கொண்டிருந்தான்.
ஆற்றின் கரையோரத்தில் எடுக்க வேண்டிய ஷாட்களை அன்றைக்கு எடுத்து முடிக்க....எண்ணியிருந்தனர்.
அடுத்து நெற்பயிர்கள் விளைந்த வயலுக்குள் இரண்டு மூன்று ஷாட் எடுக்க வேண்டியிருந்தது.
ஏற்கனவே அனுமதி வாங்கியிருந்த ஒருவரின் வயலுக்கு சென்று பார்வையிட...அங்கு நெல் விளைந்து...புற்கள்...இளம் பழுப்பு நிறத்தில் இருந்தது.
“என்னய்யா..அன்னைக்கு பார்க்குறப்ப பச்சை பசேல்ன்னு இருந்தது...இன்னைக்கு இப்படி இருக்கு..” என்று டைரக்டர் சொல்ல...
“சார்....அறுவடைக்கு ரெடியகிருச்சு சார்..” என்று உதவி இயக்குனர் சொல்ல...என்ன செய்வதென்று தலையைப் பிடித்தார் டைரக்டர்.
அங்கே ஒருவன்...ஷூட்டிங்கை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க....
“தம்பி இங்க வாப்பா..!”
ஆற்றிலேயே நீந்தி சென்று ஷூட்டிங் ஸ்பாட்டை அடைந்தான் அஜய்.உடையில் இருந்த சேறு எல்லாம் சுத்தமாகி இருக்க...வேகமாய் கரையேறியவன்...சட்டென்று கேரவனுக்குள் புகுந்து கொண்டான்.
அவனைப் பார்த்துக் கொண்டிருந்த கண்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை.”சார் இப்பதான குளிச்சுட்டு ரெடியாகி இருந்தார்..மறுபடியும் ஆத்துல குளிச்சுட்டு வரார்...” என்று எண்ணியவன்...அதை அஜய்யிடம் கேட்டும் துணிவின்றி அமைதியாக இருந்தான்.
கேரவனுக்குள் புகுந்த அஜய்க்கோ....என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வு.அவள் இதழை தீண்டிய வேட்கை இன்னும் அவனை விட்டு அகன்ற பாடில்லை.அந்த உணர்விலிருந்து அவனால் வெளிவர முடியவில்லை.அப்படி ஒரு செயலை செய்ய வேண்டும் என்று அவன் எந்த முன் திட்டமும் தீட்டவில்லை.
ஆனால் அவளின் பேச்சு,அவளின் நடவடிக்கை எல்லாம் அவனை தூண்டிவிட....அவளின் கையைப் பிடித்தவனுக்குள் மின்சாரத்தின் பாய்ச்சல்.அவளைத் தன் மேல் விழ வைக்க அவன் செய்த யூகம்...அவளிடம் தோற்றுப் போக...அந்த கடுப்பில் இருந்தவன்.. வேகமாக அவளின் இதழைத் தீண்டிவிட்டான்.
ஆனால் மனம் இப்பொழுது...அந்த தீண்டல் மறுபடியும் வேண்டும் என்று ஏங்க..தன் மனம் போன போக்கை எண்ணியவனுக்கு சிறு வியப்பு.
“யாரவள்...? ஒரு சாதாரண கிராமத்துப் பெண்..அழகிற்கு குறைவில்லை. ஆனால் அதை தவிர்த்து என்ன உள்ளது அவளிடம்...சரியான படிப்பு கிடையாது...நாகரிகம் கிடையாது...ஒரு சினிமா ரசனை கூட இல்லை..அப்படி இருக்கும் பட்சத்தில்..எது என்னை அவளை நோக்கி இழுக்கிறது...ஒரு சின்ன பெண் எந்த வகையில் என்னை பாதிக்கிறாள்....
அவள் நினைவு என்னை பாதிக்கிறது என்றால் அந்த அளவு நான் பலவீனமானவனா..? இல்லை என் மனம் தான் தவறாக யோசிக்கிறதா...?” என்று தனக்குத் தானே கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்க...
“அவள் உன் மனதில் நுழைந்து ஒரு வருடம் ஆகிறது...உனக்குத்தான் அது புரியவில்லை மகனே..!”என்று மனம் ரவுண்டு கட்ட...
“இல்லை...அவளை எனக்கு பிடிக்காது...! என்னுடைய மார்க்கெட்டையே பின்னால் தள்ளியவள் அவள்..அவளிடம் எனக்கு என்ன ஈர்ப்பு..அவளை என் காலடியில் விழவைப்பேன்..” என்று தனக்குள் சபதம் எடுக்க...
விதி அவனைப் பார்த்து சிரித்தது....”அவளை உன் காலடியில் விழவைக்க போகிறாயா..? இல்லை அவள் காலடியில் நீ விழப் போகிறாயா..?” என்று.
அவன் இதழ் பட்ட இடத்தில் அவள் பச்சை மிளகாயை தேய்த்த அந்த நிமிடம்..அவன் கண்ணிற்கு முன்னால் வர....”இருந்தாலும் உனக்கு ஆங்காராம் அதிகம் தான்....நான் குறைக்கிறேன் அதை..” என்று எண்ணிக் கொண்டிருக்க...
“சார்..ஷாட் ரெடி...” என்று ஆட்கள் வந்து சொல்ல...அவளின் நினைவுகளை பின்னுக்குத் தள்ளியவன்...வேகமாய் கேரவனிலிருந்து வெளியே சென்றான்.
மேக்கப் மேன் வேகமாய் வந்து மீண்டும் அவனுக்கு ஒரு டச் அப் கொடுக்க....பிறகு தன் வேலையில் முழு கவனத்தையும் செலுத்தினான்.
முன்னனி ஹீரோ என்பதால்..அங்கே கூட்டம் அலைமோத....அவனுக்கு பாதுகாப்புத் தர....அங்கே காவல்துறையினர் நின்றிருந்தனர்.
விவசாய பின்னணி கொண்ட வேடத்தில் அவன் நடிக்க...அவன் உடையும்..வேட்டி சட்டையாக இருந்தது.
“வெள்ளை வேட்டியும்....வெள்ளை சட்டையுமாய்...இடுப்பில் கைவைத்தபடி அவன் நிற்க....”
அவனை அப்படிப் பார்த்த கண்ணனுக்கு....”ச்ச்ச...இவர் மட்டும் எதுக்கு இப்படி அழகா பிறந்து தொலச்சாரோ தெரியல..மனுஷன் என்ன டிரஸ் போட்டாலும்..சும்மா அள்ளுது...” என்று எண்ணிக் கொண்டு அவனை ரசனையோடு பார்க்க...
“இங்க வாங்க கண்ணன்..” என்றான் அஜய்.
“சார்..” என்றபடி வேகமாய் அருகில் போக..
“என்னை சைட் அடிக்கிறதை விட்டுட்டு ஆகுற வேலையைப் பாருங்க...கிரவுட் அதிகம் ஆகுற மாதிரி தெரியுது..சோ..டைரக்டர் கிட்ட பேசுங்க...! அப்பறம் ஷூட்டிங் பாதிக்கும்..” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே..வந்து இறங்கினாள் துப்னா.
அவள் வருவதைப் பார்த்த இளைஞர் பட்டாளம்...அங்கே கரகோஷத்தை எழுப்ப....அனைவரையும் பார்த்து கையை ஆட்டியவள்..அஜய்யின் புறம் திரும்பி...ஒரு சவாலான பார்வை பார்க்க...
அஜய்யின் மனதிலோ...கோபத் தீ கொழுந்து விட்டு எரிந்தது.கண்களில் கனலைக் கக்கியவன்....திரும்பி கண்ணனை முறைக்க...
“இந்தம்மா வேற சும்மாவே இருக்காது...!ஏற்கனவே இங்க சார்... எரிஞ்சுக்கிட்டு இருக்கார்..இந்தம்மா வந்ததும் வராததுமா எண்ணையை வேற ஊத்துது....” என்று எண்ண...
மீண்டும் பிரச்சனை எதுவும் வந்துவிடக் கூடாது என்று எண்ணிய டைரக்டர் வேகமாக அஜய்யின் அருகில் வந்து...”சார் ஷாட் போகலாம்...” என்றார்.
அவரைப் பார்த்து கோபமாகத் தலையாட்டியவன்....தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.
கதைப்படி அன்று இருவருக்கும் இடையிலான ஒரு பாடல் காட்சியை எடுக்க முடிவு செய்திருந்தனர்.
ஹீரோயின் துப்னாவும்...கண்டாங்கி சேலையில் ரெடியாகி வர..அவளைப் பார்த்த இளவட்டங்கள்....அளவுக்கு அதிகமான ஜொல்லை வடிக்க..அந்த இடமே கலை கட்டியது.
“ரோலிங்...ஸ்டார்ட் ...கேமரா....ஆக்சன்...” என்ற வார்த்தைகள் காதில் கேட்ட மாயம்...டைரக்டர் சொன்னதை அஜய் ஒரே ஷாட்டில் சரியாக முடிக்க....அவனைப் பார்த்த இயக்குனர் வாயைப் பிளந்தார்.
துப்னாவும்...”நான் உனக்கு சளைத்தவள் இல்லை..” என்பதைப் போல் நடித்துக் கொண்டிருக்க...அவர்களின் நடிப்புத் திறனைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் வியந்தனர்.
“சரியான ஜோடி...” என்று யாரோ சொல்ல....அது கண்ணனின் காதில் விழுந்து வைக்க...
“டேய் மெதுவா சொல்லுங்கடா...சார் காதுல விழுந்தது...அப்பறம் அவரும் பேக் பண்ணிட்டு,உங்களையும் பேக் பண்ணிடுவார்..” என்று புலம்பிக் கொண்டிருந்தான்.
ஆற்றின் கரையோரத்தில் எடுக்க வேண்டிய ஷாட்களை அன்றைக்கு எடுத்து முடிக்க....எண்ணியிருந்தனர்.
அடுத்து நெற்பயிர்கள் விளைந்த வயலுக்குள் இரண்டு மூன்று ஷாட் எடுக்க வேண்டியிருந்தது.
ஏற்கனவே அனுமதி வாங்கியிருந்த ஒருவரின் வயலுக்கு சென்று பார்வையிட...அங்கு நெல் விளைந்து...புற்கள்...இளம் பழுப்பு நிறத்தில் இருந்தது.
“என்னய்யா..அன்னைக்கு பார்க்குறப்ப பச்சை பசேல்ன்னு இருந்தது...இன்னைக்கு இப்படி இருக்கு..” என்று டைரக்டர் சொல்ல...
“சார்....அறுவடைக்கு ரெடியகிருச்சு சார்..” என்று உதவி இயக்குனர் சொல்ல...என்ன செய்வதென்று தலையைப் பிடித்தார் டைரக்டர்.
அங்கே ஒருவன்...ஷூட்டிங்கை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க....
“தம்பி இங்க வாப்பா..!”