அத்தியாயம்: 24
சமீராவின் 'நானே அழிஞ்சாலும் கூட பரவாயில்லை!' என்ற வார்த்தைகளை கேட்டு, சமர்த்தின் மனம் புண்பட்டது.
"வேண்டாம் மீரா. இந்த கோபம் வேண்டாம்.!! எனக்காக நம் காதலுக்காக உன் கோபத்தை குறைத்துக்கொள்ள முயற்சி செய்!! அந்த சகாயத்திற்கு சட்டப்படி தண்டனை கிடைக்க எல்லா வழியிலேயும் முயற்சி செய்யலாம்." என்ற சமர்த்தைப் பார்த்து கசந்த புன்னகை(விரக்தி புன்னகை) புரிந்தாள் சமீரா.
"என்ன மீரா? பதில் பேசு!!"
"சமீர், சட்டம் அவன் கையில் இருக்கு!!"
"அதுக்காக நீயும் சட்டத்தை உன் கையில் எடுத்துப்பியா மீரா?"
"தெரியல சமீர்!! நிறைய யோசிச்சிருக்கேன்!!
"இந்த டைம்ல தான் நீ தைரியமா இருக்கணும் மீரா!! உன்ன பத்தி ஆத்துல சொல்றத கொஞ்சம் தள்ளி போடலாம். சகாயம் கேஸ்ல என்ன செய்யறதுன்னு பார்க்கலாம். நேக்கு இந்த ஊரும் புதுசு, இந்த வேலையும் புதுசு. யாரை நம்பறது, யார் கிட்ட உதவிக் கேட்கறது எதுவுமே நேக்கு தெரில. இதெல்லாம் ஒரு லேர்னிங் எக்ஸ்பீரியன்ஸ் தான் நேக்கு!!
பட் உன்னோட பாயிண்ட் ஆப் வியுல இருந்து பார்த்தா சீக்கிரமே அவனுக்கு தண்டனை கிடைக்கணும்ங்கிறது புரியறது. எப்போ நான் எல்லாத்தையும் கத்துண்டு, புரிஞ்சுண்டு நடவடிக்கை எடுக்கப் போறேனோன்னு நினைச்சா மலைப்பா தான் இருக்கு!! நான் அப்படி செய்வேன், இப்படி செய்வேன். அந்த சகாயம் பெரிய இவனா!! என் கிட்ட இருக்கிற அதிகாரத்தை பயன்படுத்தி அவன் இருக்கிற இடமே தெரியாம இருக்க வைக்க முடியும்ன்னு எல்லாம் என்னால பேச முடியாது மீரா!! நான் பெரிய ஹீரோ எல்லாம் இல்ல!! யதார்த்தவாதி!! ஆட்சியரா நேக்கு அனுபவமும் ரொம்ப குறைச்சல் தான்.
அதே மாதிரி ஒத்தைக்கு ஒத்தை வரியான்னு போய் சண்டையும் போட முடியாதுங்கிறதை விட தெரியாதுங்கிறது தான் உண்மை!! அன்னிக்கு நீ அந்த சகாயத்தை போட்டு அடிக்கறச்ச நேக்கு கொஞ்சம் பயமா இருந்தது!! பாவம் உன் ஆம்படையான்!! ன்னு கூட நினைச்சேன். ஆனா அந்த ஆம்படையானா நானே இருப்பேன்னு அப்போ நேக்கு தெரியாம போய்டுத்து!!" என்ற சமர்த் சமீராவை பரிதாபமாக பார்த்தான்.
சமர்த்தின் பேச்சில் சமீராவின் முகத்தில் பெரிய புன்னகை பூத்தது.
"இப்போ சிரிக்கற அப்றமா கை நீட்டுவியோ? பார்த்து அடிம்மா!! பார்க்கறதுக்கு தான் நான் பெரிய பாடி பில்டர் மாதிரி இருப்பேன். ஆனா பூஞ்சை உடம்பும்மா!! உடம்பு மட்டுமில்ல மனசும் தான்.. கொழந்தை மாதிரி பார்த்துக்கணும் நீ என்னை!!" என்று பெரிதாக சிரித்தான்.
சமீராவும் அவனுடன் சேர்ந்து புன்னகைத்தாள்.
வாய் விட்டு சத்தமாக சிரிப்பது தான் அவளுக்கு மறந்து போய் இருந்ததே!!
சமர்த் அவளின் சிரிப்பை கண்டிப்பாக மீட்டெடுப்பான்.
அவர்கள் அந்த சகாயத்திற்கு எப்படி தண்டனை வாங்கி தருவது என்று மேலும் பேசிக்கொண்டிருந்த போது தான், அறையின் கதவை வேகமாக திறந்து உள்ளே நுழைந்தான் கோவிந்த்.
"மிமீ மீரா நீ 'சமீரா' இல்ல!! நீ எங்காத்து பொண்ணும்மா!! என்னோட தங்கை!! கண்ணன் சித்தப்பா பொண்ணுடா நீ!! என்று அவளின் முகத்தைப் பற்றிக்கொண்டு அலறினான் கோவிந்த்.
"என்னடா சொல்ற கோவிந்தா?" என்று சமர்த் பதைபதைத்தான்.
கோவிந்த் சமர்த்தை கண்டுகொள்ளவேயில்லை. அவனுக்கு மனதிலிருந்த பாரம் குறைந்து லேசாக இருந்தது.
அதேபோல் இத்தனை நாட்களாக தேடித் கொண்டிருந்த தங்கை மீரா கிடைத்துவிட்டாள் என்ற மகிழ்ச்சி, சமீராவை தவிர வேறெதையுமே அவனை கவனிக்க வைக்கவில்லை.
"கோவிந்த்!! கோவிந்த்!!" என்று சமர்த் கோவிந்தை போட்டு உலுக்கினான்.
ம்ஹும்! எதற்குமே கோவிந்த் அசைந்துக்கொடுக்கவில்லை.
சமீராவோ கோவிந்தின் கைகளில் சிக்கி இருக்கும் தன் முகத்தை அசைக்க கூட முடியாமல் அமர்ந்திருந்தாள். கோவிந்தின் பிடி அவ்வளவு இறுக்கமாக இருந்தது.
கோவிந்த் 'ஏன் இப்படி செய்கிறான்?' என்று புரிபடாமல் வலியுடன் அமர்ந்திருந்தாள்.
சில நிமிட இடைவெளியில் அங்கு கண்ணன் ஓடி வந்தார்.
"எங்க என் பொண்ணு கோவிந்தா? இவளா என் பொண்ணு!! இந்த மீரா தான் என் பொண்ணா?" என்ற கண்ணன் கோவிந்தின் பிடியில் சிக்கியிருந்த சமீராவின் முகத்தைப் பற்றி தன்னிடம் இழுத்துக்கொண்டார்.
சமீராவிற்கு என்ன நடக்கிறது என்று புரியவேயில்லை.
கண்ணனின் பின்னால் ஓடிவந்த கிருஷ்ணனும், கோவிந்தின் அலறலில் சமையலறையிலிருந்து ஓடிவந்த சுமித்ராவும், சமீராவின் அருகில் சென்று அமர்ந்து, அவளின் கைகளை பற்றிக்கொண்டனர்.
முகத்தை கோவிந்த்தும், கண்ணனும் பற்றியிருக்க கைகளை ஆளுக்கு ஒன்றாக சுமித்ராவும் கிருஷ்ணனும் பிடித்திருக்க, சமர்த்திற்கு பாவம் அவளை பிடித்துக்கொள்வதற்கு இடமே இல்லாமல், கோவிந்த்தை போட்டு உலுக்கிக் கொண்டிருந்தான்.