காதல் 1:
வண்ணங்களில் பல வண்ணங்கள் இருப்பதைப் போல...மனிதர்களிலும் பலவகை மனிதர்கள்..அவர்களின் மனங்களிலும் பலவித எண்ணங்கள். இன்றைய நாள் சிலருக்கு பத்தோடு பதினொன்று,சிலருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் நாள்,சிலருக்கு துக்கத்தை கொடுக்கும் நாள்,பலருக்கு நல்ல பாடங்களை புகட்டும் நாள்..
இப்படி ஒரு நாளின் பங்களிப்பு....ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு வித மாறுதல்.எல்லாருக்கும் ஒன்றாய் அமைவதில்லை.. அன்றைய நாளும் சரி,வாழ்க்கையும் சரி.
எதை நோக்கி செல்கிறோம் என்று தெரியாமல் சில மனிதர்கள்,எதற்காக செல்கிறோம் என்று தெரியாத சில மனிதர்கள்,செல்லும் இடம் தெரிந்தாலும் வழி தெரியாத சில மனிதர்கள்,அப்படியே இறுதியாக அங்கு சென்றாலும் எதற்காக அந்த இடத்தை அடைந்தோம் என்று அறியாத சில மனிதர்கள்.
இவர்களில் வெகு ஒரு சிலர் தான் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே.. வாழ்க்கைப் பாதையை கடக்கின்றனர்.கடந்து வந்த பாதையில் ஆயிரம் தடங்கல் இருந்தாலும்..கடந்துவிட்ட திருப்தி தான் அவர்களின் வாழ்வில் அனுபவமாய் கிடைக்கிறது.
எப்படியும் வாழ்ந்துவிட்டு போகலாம் என்ற சில மனிதர்களின் மத்தியில் இப்படித்தான் வாழவேண்டும் என்ற சில கட்டுப்பாடுகளும்,தங்களுடையை கடமைகளையும் மனதில் வைத்துக் கொண்டு வாழும் சில மனதர்களை நாம் காணப் போகிறோம்...
இயற்கை- தன்னுடைய அழகையும்,ஆபத்தையும் ஒருங்கே காட்டும் ஒரு அற்புத சக்தி.அதை அழகாய் பார்ப்பவர்களுக்கு அது அழகு.ஆபத்தாய் பார்ப்பவர்களுக்கு அது ஆபத்து.சீண்டியவர் வேண்டி நின்றாலும்..அது தன் கோர தாண்டவத்தை நிறுத்தியதில்லை.
இயற்கையை மாற்ற நினைத்தவர்கள்,நினைப்பவர்கள் ஓரு போதும் வென்றதாக சரித்திரம் இல்லை.இது இயற்கைக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் பொருந்தும்.அது நம் நாயகிக்கும் பொருந்துமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இன்று....
சேலம் அருகில் உள்ள சிற்றூருக்கு செல்லும் பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருந்தாள் மதி என்று அழைக்கப்படும் வண்ண மதி.பெயரில் உள்ள வண்ணம் அவள் வாழ்வில் இல்லை என்ற பிரம்மை அவளுள்.
பொதுவாக அந்த ஊருக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறைதான் சிற்றுந்து செல்லும்.
கனரக வாகனங்களின் வரத்து இல்லாமல் இருந்ததாலோ என்னவோ அந்த ஊரின் பசுமையும் செழிப்பும் அளவளாவிக் கிடந்தது.சாலையின் இருபுறங்களிலும் வாழைத் தோப்புக்களும்..வழி நெடுகிலும் சாலையை ஒட்டிய நீர் ஓடையும்,சாலையின் இருபுறமும் புளிய மரங்களும்..இப்படி பார்ப்பதற்கே ரம்மியமாக,மனதில் எவ்வளவு சுமை இருந்தாலும் குறைக்கும் வலி நிவாரணியாக காட்சி அளித்தது அந்த பகுதி.
பெயருக்கு ஏற்ற மதி போன்ற முகம்.அழகி என்று ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும் என்று சொல்லக் கூடிய வசீகர முகம்.அவளுக்கு பிடிக்காத அந்த முகம்.ஆனால் அனைவருக்கும் பிடித்த அழகு முகம்.
சுடிதார் அணிந்திருந்தாலும்..அதை இருபுறமும் பின் செய்திருந்தாள். திருத்தப்படாத புருவங்கள்...திருத்தவே தேவையில்லை என்னும் அளவிற்கு வில்லாய் வளைந்திருந்தது.காஜல் இடப்படாத விழிகள்..அதன் தேவையே தெரியாத அளவிற்கு அழகாய் இருந்தது.
ஆனால் முகத்தில் இருந்த அமைதியும்,உணர்வும் மனதில் இல்லை என்பதை மெய்யாக்கும் விதத்தில் அவளின் முக பாவனைகள் இருந்தது.அந்த ஊரை நெருங்க நெருங்க...கண்ணில் பட்ட சில இடங்கள் அவள் மனதை ரணமாய் கீற..பல நியாபகங்கள் அவள் எண்ண இடுக்குகளில்.
அம்மா,அப்பா,தங்கை என அனைவரும் அவ்வூரில் தான் இருக்கின்றனர். ஆனால் அவளோ முழுதாக பத்து வருடங்களுக்குப் பிறகு அந்த ஊருக்கு வருகிறாள்.
அவளின் வைராக்கியத்திற்காக அல்ல.அவள் அம்மாவின் ரோஷத்திற்காக. அவர் சொன்ன சொல்லுக்காக...பத்து வருடங்கள் கடந்த நிலையில் அந்த ஊருக்கு வருகிறாள்.அதற்காக அவர்களை இத்தனை வருடங்கள் பார்க்காமல் இருந்தால் என்று சொல்ல முடியாது.இவள் இருக்கும் இடம் தேடி அவர்கள் சென்று பார்த்தனர்.ஆனால் இவளை வரவிடவில்லை என்பதே உண்மை.
அந்த மினி பஸ்ஸில் இருந்த யாருக்கும் அவளை சுத்தமாக அடையாளம் தெரியவில்லை.ஆள் மாறவில்லை என்றாலும்,அவள் அழகும்,உடலும் வளர்ச்சி கண்டிருந்தது.கூர்மையாக பார்த்தாலே ஒழிய அடையாளம் தெரியாது.
அதுவே அவளுக்கும் வசதியாக போனது.யாரும் எதுவும் பேசவில்லை.சிந்தனைகளில் மூழ்கி இருந்தவளை கையில் இருந்த செல்போன் அழைத்தது.பட்டன் செல் தான்.
அழைத்தவள் அவளின் நண்பி வினோதினி.
ஒருநிமிடம் யோசித்தவள்..மெதுவாக அட்டென் செய்து காதில் வைத்தாள்.
“சொல்லு வினோ..!” என்றாள்.
“மதி..ஊருக்கு போயிட்டியா..?”
வண்ணங்களில் பல வண்ணங்கள் இருப்பதைப் போல...மனிதர்களிலும் பலவகை மனிதர்கள்..அவர்களின் மனங்களிலும் பலவித எண்ணங்கள். இன்றைய நாள் சிலருக்கு பத்தோடு பதினொன்று,சிலருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் நாள்,சிலருக்கு துக்கத்தை கொடுக்கும் நாள்,பலருக்கு நல்ல பாடங்களை புகட்டும் நாள்..
இப்படி ஒரு நாளின் பங்களிப்பு....ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு வித மாறுதல்.எல்லாருக்கும் ஒன்றாய் அமைவதில்லை.. அன்றைய நாளும் சரி,வாழ்க்கையும் சரி.
எதை நோக்கி செல்கிறோம் என்று தெரியாமல் சில மனிதர்கள்,எதற்காக செல்கிறோம் என்று தெரியாத சில மனிதர்கள்,செல்லும் இடம் தெரிந்தாலும் வழி தெரியாத சில மனிதர்கள்,அப்படியே இறுதியாக அங்கு சென்றாலும் எதற்காக அந்த இடத்தை அடைந்தோம் என்று அறியாத சில மனிதர்கள்.
இவர்களில் வெகு ஒரு சிலர் தான் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே.. வாழ்க்கைப் பாதையை கடக்கின்றனர்.கடந்து வந்த பாதையில் ஆயிரம் தடங்கல் இருந்தாலும்..கடந்துவிட்ட திருப்தி தான் அவர்களின் வாழ்வில் அனுபவமாய் கிடைக்கிறது.
எப்படியும் வாழ்ந்துவிட்டு போகலாம் என்ற சில மனிதர்களின் மத்தியில் இப்படித்தான் வாழவேண்டும் என்ற சில கட்டுப்பாடுகளும்,தங்களுடையை கடமைகளையும் மனதில் வைத்துக் கொண்டு வாழும் சில மனதர்களை நாம் காணப் போகிறோம்...
இயற்கை- தன்னுடைய அழகையும்,ஆபத்தையும் ஒருங்கே காட்டும் ஒரு அற்புத சக்தி.அதை அழகாய் பார்ப்பவர்களுக்கு அது அழகு.ஆபத்தாய் பார்ப்பவர்களுக்கு அது ஆபத்து.சீண்டியவர் வேண்டி நின்றாலும்..அது தன் கோர தாண்டவத்தை நிறுத்தியதில்லை.
இயற்கையை மாற்ற நினைத்தவர்கள்,நினைப்பவர்கள் ஓரு போதும் வென்றதாக சரித்திரம் இல்லை.இது இயற்கைக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் பொருந்தும்.அது நம் நாயகிக்கும் பொருந்துமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இன்று....
சேலம் அருகில் உள்ள சிற்றூருக்கு செல்லும் பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருந்தாள் மதி என்று அழைக்கப்படும் வண்ண மதி.பெயரில் உள்ள வண்ணம் அவள் வாழ்வில் இல்லை என்ற பிரம்மை அவளுள்.
பொதுவாக அந்த ஊருக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறைதான் சிற்றுந்து செல்லும்.
கனரக வாகனங்களின் வரத்து இல்லாமல் இருந்ததாலோ என்னவோ அந்த ஊரின் பசுமையும் செழிப்பும் அளவளாவிக் கிடந்தது.சாலையின் இருபுறங்களிலும் வாழைத் தோப்புக்களும்..வழி நெடுகிலும் சாலையை ஒட்டிய நீர் ஓடையும்,சாலையின் இருபுறமும் புளிய மரங்களும்..இப்படி பார்ப்பதற்கே ரம்மியமாக,மனதில் எவ்வளவு சுமை இருந்தாலும் குறைக்கும் வலி நிவாரணியாக காட்சி அளித்தது அந்த பகுதி.
“மலரின் கதவொன்று திறக்கின்றதா..
மௌனம் வெளியேறத் தவிக்கின்றதா..
பெண்மை புதிதாக துடிக்கின்றதா..
உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா..
முத்தம் கொடுத்தானே,இதழ் முத்துக் குளித்தானே..
இரவுகள் இதமானதா...
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே..”
என்ற வைரமுத்துவின் வரிகள்..இளையராஜாவின் இசையில் ..மனதை வருடி செல்ல..வெளியே நிலவிய மேகம் கூடிய காலநிலையும்,தன்னைத் தழுவிச் சென்ற தென்றலும்,சுற்றி இருந்த பசுமையும்...இவை எதையும் உணராமல் ஜன்னல் கம்பியில் தலை சாய்த்து அமர்ந்திருந்தாள் வண்ணமதி.மௌனம் வெளியேறத் தவிக்கின்றதா..
பெண்மை புதிதாக துடிக்கின்றதா..
உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா..
முத்தம் கொடுத்தானே,இதழ் முத்துக் குளித்தானே..
இரவுகள் இதமானதா...
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே..”
பெயருக்கு ஏற்ற மதி போன்ற முகம்.அழகி என்று ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும் என்று சொல்லக் கூடிய வசீகர முகம்.அவளுக்கு பிடிக்காத அந்த முகம்.ஆனால் அனைவருக்கும் பிடித்த அழகு முகம்.
சுடிதார் அணிந்திருந்தாலும்..அதை இருபுறமும் பின் செய்திருந்தாள். திருத்தப்படாத புருவங்கள்...திருத்தவே தேவையில்லை என்னும் அளவிற்கு வில்லாய் வளைந்திருந்தது.காஜல் இடப்படாத விழிகள்..அதன் தேவையே தெரியாத அளவிற்கு அழகாய் இருந்தது.
ஆனால் முகத்தில் இருந்த அமைதியும்,உணர்வும் மனதில் இல்லை என்பதை மெய்யாக்கும் விதத்தில் அவளின் முக பாவனைகள் இருந்தது.அந்த ஊரை நெருங்க நெருங்க...கண்ணில் பட்ட சில இடங்கள் அவள் மனதை ரணமாய் கீற..பல நியாபகங்கள் அவள் எண்ண இடுக்குகளில்.
அம்மா,அப்பா,தங்கை என அனைவரும் அவ்வூரில் தான் இருக்கின்றனர். ஆனால் அவளோ முழுதாக பத்து வருடங்களுக்குப் பிறகு அந்த ஊருக்கு வருகிறாள்.
அவளின் வைராக்கியத்திற்காக அல்ல.அவள் அம்மாவின் ரோஷத்திற்காக. அவர் சொன்ன சொல்லுக்காக...பத்து வருடங்கள் கடந்த நிலையில் அந்த ஊருக்கு வருகிறாள்.அதற்காக அவர்களை இத்தனை வருடங்கள் பார்க்காமல் இருந்தால் என்று சொல்ல முடியாது.இவள் இருக்கும் இடம் தேடி அவர்கள் சென்று பார்த்தனர்.ஆனால் இவளை வரவிடவில்லை என்பதே உண்மை.
அந்த மினி பஸ்ஸில் இருந்த யாருக்கும் அவளை சுத்தமாக அடையாளம் தெரியவில்லை.ஆள் மாறவில்லை என்றாலும்,அவள் அழகும்,உடலும் வளர்ச்சி கண்டிருந்தது.கூர்மையாக பார்த்தாலே ஒழிய அடையாளம் தெரியாது.
அதுவே அவளுக்கும் வசதியாக போனது.யாரும் எதுவும் பேசவில்லை.சிந்தனைகளில் மூழ்கி இருந்தவளை கையில் இருந்த செல்போன் அழைத்தது.பட்டன் செல் தான்.
அழைத்தவள் அவளின் நண்பி வினோதினி.
ஒருநிமிடம் யோசித்தவள்..மெதுவாக அட்டென் செய்து காதில் வைத்தாள்.
“சொல்லு வினோ..!” என்றாள்.
“மதி..ஊருக்கு போயிட்டியா..?”