AshrafHameedaT
Administrator
அலை – 7
ரிஷிவந்தின் முன் இப்படி குற்றவாளியாக நிற்போம் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை நேத்ரா. அதிலும் அவனின் பார்வை கொஞ்சமும் பிடிக்கவில்லை அவளுக்கு. இடுங்கிய கண்களுடன் முறைக்கும் அவனை மிதப்பாக பார்க்க நினைத்தாலும் அவனின் விழிகளில் தெரிந்த அனலில் கொஞ்சம் ஆடித்தான் போயிருந்தாள்.
யசோதையின் கடுகடு முகத்தை கூட சகித்துகொண்டவளால் ரிஷியின் இந்த பார்வையை கண்கொண்டு பார்க்கமுடியவில்லை.
“ப்ச், இவன் வேற, என்னமோ மாடல்க்கு மார்க் போடறவன் மாதிரி மாஞ்சு மாஞ்சு பார்த்துட்டு இருக்கான்...” என கடுப்பானவள்,
“ஸ்யப்பா, போதும்டி கூழ்வண்டி. இந்த கட்டுமரத்தை கொஞ்சம் பஞ்சாயத்தை முடிச்சு சீக்கிரம் நம்மளை அனுப்ப சொல்லு. சத்தியமா பாக்கமுடியலை...”
அருகில் ராகினியிடம் குனிந்து முணுமுணுக்க அவள்,
“ஆனாலும் உன் வாய் இருக்கு பாரு.சத்தியமா உனக்கு இன்னைக்கு ஆப்புதாண்டி. பெரிய இவளாட்டம் பேசற ஆனா ஏன் கையெல்லாம் வெடவெடன்னு ஆடுதாம்?...” கிண்டலடிக்க,
“அது ஏஸி ஜாஸ்தி இருக்கு. அதனால குளிருது. அதான் நடுக்கம். நீ கொஞ்சம் குறைக்க சொல்லேன்...”
“பேசாம வாயை மூடிட்டு இரு நேத்ரா...” ரோஷிணி அதட்ட,
“நான் நல்லதுக்குதான்பா சொல்றேன். பாரு இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த மூக்குகண்ணாடி தூங்கி இங்கயே தொபுகடீர்னு விழ போகுது. நாலு பேர் அதை தூக்கிட்டு போக போறாங்க. அந்த நாலுபேரா நாம ஆகிட கூடாது பாரு...”
நேத்ராவின் அழிச்சாட்டியத்தில் கண்களை கட்டியது மற்ற மூவருக்கும்.
“அங்க பாரு மூக்கு கண்ணாடி ரெண்டாவது வானம் ஏறிடுச்சு. அடுத்து கனவுலகம் தான். இப்படி இது தூங்கி வழிஞ்சா யார் கட்டுமரத்துக்கு பதில் சொல்றது? பஞ்சாயத்துல ரெண்டு பக்கமும் வாதம் நடக்கனும். அப்போதான் இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும்...”
நேத்ரா தன் பேச்சை இப்போது நிறுத்தமாட்டாள் என முடிவுகட்டிய ரோஷிணி,
“ஏய் அங்க பார் ஸார் நம்மையே தான் முறைச்சுட்டு இருக்கார். உன்னோட ரேடியோவை கொஞ்ச நேரம் ஆஃப் பண்ணு...” நேத்ராவின் கைகளில் கிள்ளி ரிஷியை காண்பிக்க,
“திரும்ப திரும்ப சொல்றேன். எனக்கு கட்டுமரம் முறைப்பை பாத்தா கொஞ்சமும் பயமே இல்லை. இப்டியே இன்னும் ஒரு பைவ் மினிட்ஸ் பார்த்தா இங்கயே உருண்டு புரண்டு சிரிச்சுடுவேன் பார்த்துக்கோ...”
“இவ ஏற்கனவே பத்திக்கிட்டு இருக்கிற கொள்ளியை எடுத்து மொத்தத்தையும் கொளுத்திடுவா. நாமதான் கப்சிப் ஆகனும். என்ன ஏதுன்னு கேட்டா தானே திரும்ப பேசுவா. எதுவும் கேட்காதீங்கடி...” வனமலர் சொல்ல ரோஷிணியும் ராகினியும் வாயை மூடினர்.
அவர்களை அதிகம் சோதிக்காமல் நேத்ராவிடமிருந்து காப்பதற்காகவே ரிஷி பேச ஆரம்பித்தான்.
“அன்னைக்கு நான் உங்க நாலு பேரையும் தானே வார்ன் பண்ணினேன். இருந்தும் நீங்க கிளாஸ் கட் அடிச்சிருக்கீங்க. அப்போ உங்களுக்கு செய்யிறது தப்புன்ற கொஞ்சமும் பயம்ன்றதே இல்லை...”
“ஓஹ் சார்க்கு எங்களை அடையாளம் தெரியலையாமாம். நம்பிட்டோம் நம்பிட்டோம்...”
மனதினுள் கவுண்டர் கொடுத்துக்கொண்டாள் நேத்ரா. அவளையும் மீறி அவள் விழிகளில் கிண்டல் கொப்பளித்தது. ரிஷி சரியாக அதை கண்டுகொண்டான்.
“க்ளாஸ்க்கு போக பிடிக்கலைனா நீங்க எதுக்கு படிக்க வரீங்க? ஆட்டமும் பாட்டமுமா இருக்கனும்னா வீட்லயே இருக்க வேண்டியது தானே? உங்கமே நம்பிக்கை வச்சு உங்க பேரன்ட்ஸ் அனுப்பி வச்சா கொஞ்சமும் அந்த நம்பிக்கையை காப்பாத்தனும்ன்ற பொறுப்பில்லாம நடந்துக்கறீங்க...”
ரிஷியின் கடுமையில் நால்வரும் அமைதியாக நிற்க, யசோதைக்கு உள்ளம் குளிர்ந்து. “எத்தனை ஆட்டம் காட்டியிருப்பாள் இந்த நேத்ரா? இன்னும் வாங்கட்டும்...” என சந்தோஷமாக எண்ணிக்கொண்டது.
“உங்களை என்ன சொல்ல? உங்க பேரன்ட்ஸ சொல்லனும். படிக்க விருப்பம் இல்லாதவங்களை இப்படி எங்க தலையில கட்டி...” முகத்தை அஷ்டகோணலாக வைத்து கூற நேத்ராவிற்கு தாளவில்லை.
ரிஷிக்கொன்றும் அப்பெண்களை இப்படி தாழ்த்தி பேசவேண்டும் என்கிற எண்ணமில்லை. கொஞ்சம் கண்டித்து விட்டுவிடுவோம் என்கிற அவனின் பெருந்தன்மையில் பெட்ரோலை கொட்டி விழிகளின் அலட்சியத்தால் தீயையும் பற்றவைத்துவிட்டாள். நேத்ராவின் மீதாக கோபம் அவனை மதியிழக்க செய்ததுமில்லாமல் இப்போதும் தான் பேசியதை அலட்சிய பார்வையோடு கேட்டுக்கொண்டு நிற்க நிற்க அதை பார்க்க பார்க்க ரிஷியின் ஆத்திரம் அவனின் புத்தியை மழுங்க செய்தது.
இப்படி தரம் தாழ்ந்து தன் நிலை மறந்து தன்னை செயல்படவைத்தவளை வெறுப்பாய் பார்த்தவன் அதற்கு மேலும் வார்த்தைகளை வீசாமல் இருக்க பெரும் பிரயத்தனம் மேற்கொண்டு வெற்றியும் கண்டான். மூச்சை ஆழ இழுத்து ஊப் என ஊதிவிட்டு யசோதையை பார்த்து கிளம்புமாறு சைகை காண்பிக்க ரோஷிணியிடம் திரும்பிய யசோதை பார்வையால் தன் பின் வர சொல்லி முன்னே சென்றார்.
தோழிகள் மற்ற மூவரும் அமைதியாக வெளியேற நேத்ரா மட்டும் ரிஷியை முறைத்துக்கொண்டு நின்றாள். அவளின் குண இயல்பு ரிஷியை இப்படியே விட்டுச்செல்ல இடமளிக்கவில்லை. என்ன ஆனாலும் இன்றைக்கு அவனை ஒரு கை பார்த்துவிடு என உள்மனது தூபமிட கண்கள் சிவந்தாள்.
“போதும் ஸார் உங்க லெக்சர். இதுக்கு மேல ஒரு வார்த்தை எங்க பேரன்ட்ஸ் பத்தி பேசாதீங்க...”
மற்றவர்கள் சென்று ஐந்து நிமிடத்திற்கு பின் நேத்ராவின் குரல் முதுகின் பின்னால் கேட்க திரும்பியவன் அங்கே நேத்ரா மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க கோபாவேசமாக வெறித்து நின்றாள்.
ரிஷியின் அறையை விட்டு யோசனையோடே வெளியேறிய ரோஷிணி தங்கள் பின்னால் நேத்ரா வராததை அப்போதுதான் கவனித்து அவளை மீண்டும் அழைத்துவர திரும்புவதற்குள் நேத்ரா பொரிய ஆரம்பித்திருந்தாள்.
“ஏன் ஸார் எங்கட்ட என்ன நடந்தது? எதுக்கு கிளாஸ் கட் அடிச்சோம்னே ரீசன் கேட்காம உங்க இஷ்டத்துக்கு யார் கம்ளைன்ட் குடுத்தாலும் இப்படித்தான் பேசுவீங்களா?...”
“ஏய்...” என்றபடி ரிஷியும் விரல் நீட்டியபடி ஆத்திரத்தோடு உறுத்து விழித்தபடி அவளருகில் வர அவன் பேச நேத்ரா அனுமதிக்கவே இல்லை.
அவனிற்கு சளைக்காமல் நேத்ராவும் சப்தமிட அறையின் கதவை திறந்துகொண்டு ரோஷிணி படபடப்பாக உள்ளே நுழைந்தாள்.
“என்ன ஏய் சொல்றீங்க? அவ்வளோ தான்...” நேத்ராவின் இந்த எகிறலில் ரோஷிணிக்கு பயத்தில் நா உலர்ந்துவிட்டது.
“என்ன பண்ணிட்டு இருக்க நேத்ரா. அவர் நம்ம காலேஜ் கரஸ்பாண்டென்ட். கொஞ்சம் ரெஸ்பெக்ட் குடுத்து பேசு...” கடிந்தவள் ரிஷியிடம் திரும்பி,
“சாரி ஸார். இவ கொஞ்சம் எமோஷனல் டைப். ஆனா மனசுல ஒன்னும் இருக்காது. ப்ளீஸ் ஸார்...” இறைஞ்சல் குரலில் மன்னிப்பை வேண்ட,
“நீ சும்மா இரு ரோஷி. நீ எதுக்கு இவர்க்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு இருக்க. இவர் காலேஜ்ல நாம ஒன்னும் சும்மா படிக்கலை. அது மாதிரி இவங்களும் இலவச படிப்பு சொல்லி குடுக்கலை. நாம காசுகுடுத்து தான் படிக்கிறோம். என்னமோ இவர்க்கிட்ட யாசகம் வாங்கி ஒன்னும் படிக்கலை...”
நேத்ரா கட்டுகடங்காத கோபத்தில் இருப்பதை உணர்ந்த ரோஷிணிக்கு நிலைமையை எப்படி கையாள்வது என புரியவே இல்லை.
நேத்ராவை இப்போது அமைதிபடுத்த தான் என்ன கூறினாலும் அதுவே ரிஷியிடம் அவள் இன்னும் வேகத்துடன் பாயவைக்கும் என்பது அவளின் திண்ணம்.
ரிஷியிடம் திரும்பிய நேத்ரா, “இங்க பாருங்க சார், நீங்க யாரா வேணாலும் இருந்துக்கோங்க. முதல்ல ஒரு பொண்ணுகிட்ட எப்டி பிகேவ் பண்ணனும்னு படிச்சுட்டு வாங்க அதுக்கப்றமா இந்த காலேஜை நிர்வாகிக்கலாம்...”
ரிஷியின் மூக்குடைக்க அவள் பேசியது அவனை சீண்ட,
“யார்க்கிட்ட எப்படி பேசனும்னு நடந்துக்கனும்னு நீ எனக்கு கத்துக்க சொல்றியா? ஷிட்...” என இரைந்தவன்,
“கெட் லாஸ்ட் மை பிளேஸ். இனியும் உன்னை போல ஒரு பொண்ணை என்னோட காலேஜ்ல நான் இருக்க விடமாட்டேன். நாளைக்கு உன் பேரண்ட்ஸ வரவழச்சு உன் சீட்டை கிழிச்சிடறேன்...”
ரிஷியின் கோபம் இந்தளவுக்கு செல்லும் என்பதை எதிர்பாராத ரோஷிணி மீண்டும் நேத்ராவிற்காக மன்னிப்பை கேட்க அதற்கும் முட்டுக்கட்டையிட்டாள்.
ரிஷிவந்தின் முன் இப்படி குற்றவாளியாக நிற்போம் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை நேத்ரா. அதிலும் அவனின் பார்வை கொஞ்சமும் பிடிக்கவில்லை அவளுக்கு. இடுங்கிய கண்களுடன் முறைக்கும் அவனை மிதப்பாக பார்க்க நினைத்தாலும் அவனின் விழிகளில் தெரிந்த அனலில் கொஞ்சம் ஆடித்தான் போயிருந்தாள்.
யசோதையின் கடுகடு முகத்தை கூட சகித்துகொண்டவளால் ரிஷியின் இந்த பார்வையை கண்கொண்டு பார்க்கமுடியவில்லை.
“ப்ச், இவன் வேற, என்னமோ மாடல்க்கு மார்க் போடறவன் மாதிரி மாஞ்சு மாஞ்சு பார்த்துட்டு இருக்கான்...” என கடுப்பானவள்,
“ஸ்யப்பா, போதும்டி கூழ்வண்டி. இந்த கட்டுமரத்தை கொஞ்சம் பஞ்சாயத்தை முடிச்சு சீக்கிரம் நம்மளை அனுப்ப சொல்லு. சத்தியமா பாக்கமுடியலை...”
அருகில் ராகினியிடம் குனிந்து முணுமுணுக்க அவள்,
“ஆனாலும் உன் வாய் இருக்கு பாரு.சத்தியமா உனக்கு இன்னைக்கு ஆப்புதாண்டி. பெரிய இவளாட்டம் பேசற ஆனா ஏன் கையெல்லாம் வெடவெடன்னு ஆடுதாம்?...” கிண்டலடிக்க,
“அது ஏஸி ஜாஸ்தி இருக்கு. அதனால குளிருது. அதான் நடுக்கம். நீ கொஞ்சம் குறைக்க சொல்லேன்...”
“பேசாம வாயை மூடிட்டு இரு நேத்ரா...” ரோஷிணி அதட்ட,
“நான் நல்லதுக்குதான்பா சொல்றேன். பாரு இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த மூக்குகண்ணாடி தூங்கி இங்கயே தொபுகடீர்னு விழ போகுது. நாலு பேர் அதை தூக்கிட்டு போக போறாங்க. அந்த நாலுபேரா நாம ஆகிட கூடாது பாரு...”
நேத்ராவின் அழிச்சாட்டியத்தில் கண்களை கட்டியது மற்ற மூவருக்கும்.
“அங்க பாரு மூக்கு கண்ணாடி ரெண்டாவது வானம் ஏறிடுச்சு. அடுத்து கனவுலகம் தான். இப்படி இது தூங்கி வழிஞ்சா யார் கட்டுமரத்துக்கு பதில் சொல்றது? பஞ்சாயத்துல ரெண்டு பக்கமும் வாதம் நடக்கனும். அப்போதான் இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும்...”
நேத்ரா தன் பேச்சை இப்போது நிறுத்தமாட்டாள் என முடிவுகட்டிய ரோஷிணி,
“ஏய் அங்க பார் ஸார் நம்மையே தான் முறைச்சுட்டு இருக்கார். உன்னோட ரேடியோவை கொஞ்ச நேரம் ஆஃப் பண்ணு...” நேத்ராவின் கைகளில் கிள்ளி ரிஷியை காண்பிக்க,
“திரும்ப திரும்ப சொல்றேன். எனக்கு கட்டுமரம் முறைப்பை பாத்தா கொஞ்சமும் பயமே இல்லை. இப்டியே இன்னும் ஒரு பைவ் மினிட்ஸ் பார்த்தா இங்கயே உருண்டு புரண்டு சிரிச்சுடுவேன் பார்த்துக்கோ...”
“இவ ஏற்கனவே பத்திக்கிட்டு இருக்கிற கொள்ளியை எடுத்து மொத்தத்தையும் கொளுத்திடுவா. நாமதான் கப்சிப் ஆகனும். என்ன ஏதுன்னு கேட்டா தானே திரும்ப பேசுவா. எதுவும் கேட்காதீங்கடி...” வனமலர் சொல்ல ரோஷிணியும் ராகினியும் வாயை மூடினர்.
அவர்களை அதிகம் சோதிக்காமல் நேத்ராவிடமிருந்து காப்பதற்காகவே ரிஷி பேச ஆரம்பித்தான்.
“அன்னைக்கு நான் உங்க நாலு பேரையும் தானே வார்ன் பண்ணினேன். இருந்தும் நீங்க கிளாஸ் கட் அடிச்சிருக்கீங்க. அப்போ உங்களுக்கு செய்யிறது தப்புன்ற கொஞ்சமும் பயம்ன்றதே இல்லை...”
“ஓஹ் சார்க்கு எங்களை அடையாளம் தெரியலையாமாம். நம்பிட்டோம் நம்பிட்டோம்...”
மனதினுள் கவுண்டர் கொடுத்துக்கொண்டாள் நேத்ரா. அவளையும் மீறி அவள் விழிகளில் கிண்டல் கொப்பளித்தது. ரிஷி சரியாக அதை கண்டுகொண்டான்.
“க்ளாஸ்க்கு போக பிடிக்கலைனா நீங்க எதுக்கு படிக்க வரீங்க? ஆட்டமும் பாட்டமுமா இருக்கனும்னா வீட்லயே இருக்க வேண்டியது தானே? உங்கமே நம்பிக்கை வச்சு உங்க பேரன்ட்ஸ் அனுப்பி வச்சா கொஞ்சமும் அந்த நம்பிக்கையை காப்பாத்தனும்ன்ற பொறுப்பில்லாம நடந்துக்கறீங்க...”
ரிஷியின் கடுமையில் நால்வரும் அமைதியாக நிற்க, யசோதைக்கு உள்ளம் குளிர்ந்து. “எத்தனை ஆட்டம் காட்டியிருப்பாள் இந்த நேத்ரா? இன்னும் வாங்கட்டும்...” என சந்தோஷமாக எண்ணிக்கொண்டது.
“உங்களை என்ன சொல்ல? உங்க பேரன்ட்ஸ சொல்லனும். படிக்க விருப்பம் இல்லாதவங்களை இப்படி எங்க தலையில கட்டி...” முகத்தை அஷ்டகோணலாக வைத்து கூற நேத்ராவிற்கு தாளவில்லை.
ரிஷிக்கொன்றும் அப்பெண்களை இப்படி தாழ்த்தி பேசவேண்டும் என்கிற எண்ணமில்லை. கொஞ்சம் கண்டித்து விட்டுவிடுவோம் என்கிற அவனின் பெருந்தன்மையில் பெட்ரோலை கொட்டி விழிகளின் அலட்சியத்தால் தீயையும் பற்றவைத்துவிட்டாள். நேத்ராவின் மீதாக கோபம் அவனை மதியிழக்க செய்ததுமில்லாமல் இப்போதும் தான் பேசியதை அலட்சிய பார்வையோடு கேட்டுக்கொண்டு நிற்க நிற்க அதை பார்க்க பார்க்க ரிஷியின் ஆத்திரம் அவனின் புத்தியை மழுங்க செய்தது.
இப்படி தரம் தாழ்ந்து தன் நிலை மறந்து தன்னை செயல்படவைத்தவளை வெறுப்பாய் பார்த்தவன் அதற்கு மேலும் வார்த்தைகளை வீசாமல் இருக்க பெரும் பிரயத்தனம் மேற்கொண்டு வெற்றியும் கண்டான். மூச்சை ஆழ இழுத்து ஊப் என ஊதிவிட்டு யசோதையை பார்த்து கிளம்புமாறு சைகை காண்பிக்க ரோஷிணியிடம் திரும்பிய யசோதை பார்வையால் தன் பின் வர சொல்லி முன்னே சென்றார்.
தோழிகள் மற்ற மூவரும் அமைதியாக வெளியேற நேத்ரா மட்டும் ரிஷியை முறைத்துக்கொண்டு நின்றாள். அவளின் குண இயல்பு ரிஷியை இப்படியே விட்டுச்செல்ல இடமளிக்கவில்லை. என்ன ஆனாலும் இன்றைக்கு அவனை ஒரு கை பார்த்துவிடு என உள்மனது தூபமிட கண்கள் சிவந்தாள்.
“போதும் ஸார் உங்க லெக்சர். இதுக்கு மேல ஒரு வார்த்தை எங்க பேரன்ட்ஸ் பத்தி பேசாதீங்க...”
மற்றவர்கள் சென்று ஐந்து நிமிடத்திற்கு பின் நேத்ராவின் குரல் முதுகின் பின்னால் கேட்க திரும்பியவன் அங்கே நேத்ரா மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க கோபாவேசமாக வெறித்து நின்றாள்.
ரிஷியின் அறையை விட்டு யோசனையோடே வெளியேறிய ரோஷிணி தங்கள் பின்னால் நேத்ரா வராததை அப்போதுதான் கவனித்து அவளை மீண்டும் அழைத்துவர திரும்புவதற்குள் நேத்ரா பொரிய ஆரம்பித்திருந்தாள்.
“ஏன் ஸார் எங்கட்ட என்ன நடந்தது? எதுக்கு கிளாஸ் கட் அடிச்சோம்னே ரீசன் கேட்காம உங்க இஷ்டத்துக்கு யார் கம்ளைன்ட் குடுத்தாலும் இப்படித்தான் பேசுவீங்களா?...”
“ஏய்...” என்றபடி ரிஷியும் விரல் நீட்டியபடி ஆத்திரத்தோடு உறுத்து விழித்தபடி அவளருகில் வர அவன் பேச நேத்ரா அனுமதிக்கவே இல்லை.
அவனிற்கு சளைக்காமல் நேத்ராவும் சப்தமிட அறையின் கதவை திறந்துகொண்டு ரோஷிணி படபடப்பாக உள்ளே நுழைந்தாள்.
“என்ன ஏய் சொல்றீங்க? அவ்வளோ தான்...” நேத்ராவின் இந்த எகிறலில் ரோஷிணிக்கு பயத்தில் நா உலர்ந்துவிட்டது.
“என்ன பண்ணிட்டு இருக்க நேத்ரா. அவர் நம்ம காலேஜ் கரஸ்பாண்டென்ட். கொஞ்சம் ரெஸ்பெக்ட் குடுத்து பேசு...” கடிந்தவள் ரிஷியிடம் திரும்பி,
“சாரி ஸார். இவ கொஞ்சம் எமோஷனல் டைப். ஆனா மனசுல ஒன்னும் இருக்காது. ப்ளீஸ் ஸார்...” இறைஞ்சல் குரலில் மன்னிப்பை வேண்ட,
“நீ சும்மா இரு ரோஷி. நீ எதுக்கு இவர்க்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு இருக்க. இவர் காலேஜ்ல நாம ஒன்னும் சும்மா படிக்கலை. அது மாதிரி இவங்களும் இலவச படிப்பு சொல்லி குடுக்கலை. நாம காசுகுடுத்து தான் படிக்கிறோம். என்னமோ இவர்க்கிட்ட யாசகம் வாங்கி ஒன்னும் படிக்கலை...”
நேத்ரா கட்டுகடங்காத கோபத்தில் இருப்பதை உணர்ந்த ரோஷிணிக்கு நிலைமையை எப்படி கையாள்வது என புரியவே இல்லை.
நேத்ராவை இப்போது அமைதிபடுத்த தான் என்ன கூறினாலும் அதுவே ரிஷியிடம் அவள் இன்னும் வேகத்துடன் பாயவைக்கும் என்பது அவளின் திண்ணம்.
ரிஷியிடம் திரும்பிய நேத்ரா, “இங்க பாருங்க சார், நீங்க யாரா வேணாலும் இருந்துக்கோங்க. முதல்ல ஒரு பொண்ணுகிட்ட எப்டி பிகேவ் பண்ணனும்னு படிச்சுட்டு வாங்க அதுக்கப்றமா இந்த காலேஜை நிர்வாகிக்கலாம்...”
ரிஷியின் மூக்குடைக்க அவள் பேசியது அவனை சீண்ட,
“யார்க்கிட்ட எப்படி பேசனும்னு நடந்துக்கனும்னு நீ எனக்கு கத்துக்க சொல்றியா? ஷிட்...” என இரைந்தவன்,
“கெட் லாஸ்ட் மை பிளேஸ். இனியும் உன்னை போல ஒரு பொண்ணை என்னோட காலேஜ்ல நான் இருக்க விடமாட்டேன். நாளைக்கு உன் பேரண்ட்ஸ வரவழச்சு உன் சீட்டை கிழிச்சிடறேன்...”
ரிஷியின் கோபம் இந்தளவுக்கு செல்லும் என்பதை எதிர்பாராத ரோஷிணி மீண்டும் நேத்ராவிற்காக மன்னிப்பை கேட்க அதற்கும் முட்டுக்கட்டையிட்டாள்.