Thanks sis?Nice
Thanks sis?Nice
Thanks sis ?Thirukku eppathan kadal varudu janu mayaguvara. Rutran super
Nice update sis
Thanks sis ?Nice Update Sis ??
Thanks sis ?Hahaaa vayasaana kaalathula divorce ah nice epi
Thanks sis ?சூப்பர் பதிவு
Nice epஅனைவரும் ஹாலில் அமர்ந்திருக்க பொதுவாக எழுந்த ருத்ரன்,
“ முதல்ல ஒன்னு சொல்லிகிறேன். இங்க யாரும் யாருடைய தனிப்பட்ட விஷயத்தையும் பேச வேணடாம். அதாவது பொண்டாட்டி படிக்காதது பொண்டாட்டி கோச்சுக்கிட்டு அம்மா வீட்க்கு போறது கல்யாணத்துக்கு முன்னாடி வேற மாப்பிள்ளை பார்க்குறது இது எல்லாம் அவுங்க புருஷன் பொண்டாட்டி பேசிக்குக்குவாங்க அதுல யாரும் தலையிட வேண்டிய அவசிய இல்ல அது பெத்தவங்களா இருந்தாலும் சரி. அப்புறம் மாறா அண்ணா….” என அவன் அமர்ந்திருந்த சோபாவை நோக்கி திரும்பிய ருத்ரன் “ அம்மா……..” என எதோ கூற முற்படுகையில்
“ நில்லு நீ என்ன கேட்க போறன்னு தெரியும் அம்மாகிட்ட ஏன் இத்தனை நாலு பேசல. இன்னுமா அம்மா மேல கோவமா இருக்கன்னுதானே. ஆனா….” என மாறவர்மன் வழக்கம் போல அவனே முடிவு செய்து பேச ஆரம்பிக்க கடுப்படைந்த ருத்ரனோ
“ டேய்!!.... முந்திரிக்கொட்டை…. அவசரக்குடுக்க!!..” என கத்த அதில் மாறவர்மன் அதிர்ந்து தன் தம்பியை கண்டான். மாறவர்மனின் கண்களில் ‘ நீயா??!!.... நீயா!!!...??... என்னைய இப்படி பேசுனது’ என்ற கேள்வி இருக்க அதனை மற்ற இரு சகோதரர்களும் கண்டாலும் எதுவும் கேளாது அமைதியாக ருத்ரனை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.
ஜானவி மட்டும் “ ருத்ரா…” என சத்தமாக அழைக்க
“ அம்மா நீங்க கொஞ்சம் சும்மா இருங்க. இவனுக்கு….. இன்னைக்கு ஒரு வழி பண்ணுறேன்” என மாறவர்மனை பார்த்துக்கொண்டே கூற அதில் மாயாவதி கடுப்படைந்து
“ ருத்ரா நீ என் மருமகனை பத்தி ஒன்னும் சொல்ல வேணாம். அது என்ன கொஞ்சம் கூட அண்ணன்னு மரியாதை இல்லாம பேசுறது” என எகிற
“ நீங்க நல்லா பார்த்துக்கோங்க அவன் அண்ணனையே மதிக்கமாட்டேன்குறான். அப்புறம் அத்தைன்னு மட்டுமா பார்க்க போறான். பேசாம உட்கார்ந்து என்ன சொல்றான்னு கவனிங்க. எங்க அப்பாவே கம்முன்னு இருக்காங்க. உங்களுக்கு என்ன??” என சிம்மவர்மன் தீடிரென கடுபடிக்க
அதில் அதிர்ந்து மாயாவதி முணுமுணுப்புடன் அமைதியானார். இருந்தாலும் இவன் என்ன இன்னைக்கு இம்புட்டு பேசுறான் என எண்ணினார். அவர் எங்கே அறிவார் நித்யவதியை பேசியதற்கு சிம்மவர்மன் அவர்மீது செம கோவத்தில் இருப்பதை.
“ என்ன ருத்ரா??” என பாவமாக கேட்ட மாறவர்மனிடம்
“ என்ன என்ன ருத்ரா??. நான் என்ன சொல்லவந்தேன் என்ன கேட்கவந்தேன்னு ஒண்ணுமே தெரிஞ்சுக்காம நீயா கேள்வி கேட்டு நீயா பதில் சொல்லுற. நீ என்ன முற்றும் தெரிந்த ஞானியா??... நீயா கேள்வி கேட்டு நீயா பேசணும்ன்னா போய் செவுத்துக்கிட்ட பேசு.
செவுருதான் எதுவும் பேசாது நீயா எதாவது கற்பனை பண்ணி பேசிக்கலாம்” என ருத்ரன் திட்ட
“ ஏண்டா??” என மாறவர்மன் சற்றே கோவம் கலந்து கேட்க
“ ஏன் சாருக்கு கோவம் வேற வருதோ??. என்ன சொல்லவராங்கன்னு கேட்க பொறுமை இல்லாம நீவாட்டுக்கு முடிவு பண்ணி பேசிட்டே போவ. கொஞ்சமாது உனக்கு மூளை இருக்கா மூளை கெட்டவனே” என ருத்ரன் மீண்டும் திட்ட இடைபுகுந்த மாறவர்மனோ,
“ டேய்!!.. ருத்ரா நீ இன்னும் கேவலமா அசிங்க அசிங்கமா கூட திட்டிக்கோ. தயவு செய்து எதுக்கு திட்டுறன்னு சொல்லிட்டு திட்டுடா மனசு கேட்க மாட்டேங்குது” என மாறவர்மன் பாவமாக கெஞ்ச
“ ஏண்டா அதான் உனக்கு எட்டறிவு ஒம்பதறிவு எல்லாம் இருக்கே அப்புறம் என்ன அத்தவச்சு யோசி” என ருத்ரன் மீண்டும் கோவமாக கூற மாறவர்மன் பாவமாக நின்றுகொண்டிருந்தான்.
அதனை கண்டு மேலும் கோவமான ருத்ரன்,
“ உன்னோட இந்த அவசரபுத்தி குணத்தாலதான் இன்னைக்கு அம்மாவுக்கு இந்த நிலைமை” என மாறவர்மன் கல்யாணத்தில் நடந்த குளறுபடிகளை ருத்ரன் கூறிமுடிக்க அங்கு அனைவரும் அதிர்ந்து ஜானவியை பார்த்தனர்.
மாறவர்மனோ, ‘ அப்போ அன்னைக்கு அவ என்னைய பார்க்க வந்தது அவ காதல் விஷயத்தை சொல்லவா நான்தான் வழக்கம் போல பேசவிடாம பண்ணி சொதப்பிட்டேன்’ என மாறவர்மன் எண்ணிக்கொண்டிருக்கயில் தொடர்ந்த ருத்ரன்
“ அதோட அம்மா ஏன் அன்னைகு கல்யாணம் பண்ணிவச்சாங்க??.. அதுவும் சொந்தபையன் கலயாணம்ன்னுகூட பார்க்காம அதானே உங்க எல்லார் மனசுலையும் இருக்குற கேள்வி.
நல்லா கேட்டுக்கோங்க பொண்ணு காதல் விஷயத்தை நம்மகிட்ட மறைச்சு மாமா அவரு பொண்ணை கட்டி வைக்க பார்த்தாருன்னா நிச்சயம் பொண்ணு அன்னைக்கு ஓடிருந்தாலும் கவுரம் மானம்ன்னு யோசிச்சு சபையிலே பொண்ணு காதல் விசயத்தி சொல்லிருக்க மாட்டாரு.
அப்போ மத்தவங்க பார்வைக்கு மாறவர்மன்கிட்ட எதோ பிரச்சனை அதான் சொந்த மாமா பொண்ணே கல்யாணம் வேணாம்ன்னு ஓடிருச்சுன்னு பேசி நம்ம பையனை அசிங்க படுத்துவங்களேன்னும்;
ஒரு நல்லா காதல் ஜெயிக்கணும்ன்னுதான் அம்மா அந்த கல்யாணத்தை பண்ணி வச்சாங்க. உங்க யாருக்கு அம்மாகிட்ட என்ன நடந்துச்சு கேட்க நேரமும் இல்ல, மனசும் இல்ல. உங்க சூழ்நிலையை பயன்படுத்தி அவுங்க மகளையும் கல்யாணம் பண்ணிவச்சுட்டு பெரிய தியாகம் பண்ணுன மாதிரி பேசிகிட்டு இருக்காங்க.
நீங்க எல்லாரும் பார்த்திக்கிட்டு இருக்கிங்க. எனக்கு ஒரு விஷயம் புரியல மாறா அண்ணா இவ்வளவு பண்ணுன அம்மா உனக்கு ஒரு நல்லா வழி யோசிச்சுருக்க மாட்டாங்களா??.... அதுவும் உனக்கு என்ன குறை அவசரமா கிடைச்ச பொண்ணு போதும்ன்னு திருமணம் முடிக்க.
கடைசியா ஒன்னு எனக்காவது சுயநினைவு இல்லாதப்பதான் கல்யாணம் நடந்துச்சு. ஆனா உனக்கு சுய அறிவு இல்லாம கல்யாணம் நடந்துருக்கு. என்னத்த சொல்ல இனிமேயாவது யாரோ பெரிய தியாகம் பண்ணுனமாதிரி பேசுனா பொறுத்துட்டு போகாதா.
என்ன உன்னோட சூழ்நிலையை பயன்படுத்திருக்காங்களே தவிர்த்து யாரும் தியாகம் பண்ணல” என மாறவர்மனிடம் கூறிவிட்டு திருவாசகத்தையும் ஒரு பார்வை பாத்துட்டு தனது அறைக்கு சென்றுவிட்டான் ருத்ரன்.
அனைவரும் அவ்விடத்தைவிட்டு நகர மாயாவதி எதுவும் செய்ய முடியாத நிலையில் வெளியே சென்றுவிட. மாறவர்மன் ஜானவியை நெருங்கி மண்டியிட்டு ஜனாவின் இடையை கட்டிக்கொண்டு,
“ அம்மா என்னைய மன்னுச்சுருங்கமா. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. உங்கள இத்தனை நாள் ரொம்ப படுத்திட்டேன்ல. சாரி ம்மா,…… சாரி ம்மா….” என கண்ணீருடன் கூறிக்கொண்டிருந்த மாறவர்மனை ஜானவியும் கண்ணீருடன் அனைத்து ஆறுதல் கூறி சமாதானம் செய்து ஒருவழியாக அனுப்பி வைத்தபின்,
கண்ணீரை துடைத்துக்கொண்டு திரும்பிய ஜானவி அங்கு அதிர்ந்த தோற்றத்துடன் கலங்கிய விழிகளுடன் ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்த திருவாசகத்தை கண்டு ஜானவி முறைத்துவிட்டு அங்கிருந்து நகர பார்க்க,
“ ஜா…. ஜானு…” என மெலிதாக ஒலித்த திருவாசகத்தின் குரலில் அங்கேயே நின்று திரும்பி பார்த்த ஜானவியை நெருங்கிய திருவாசகம்,
“ ஜானும் என….எனக்கு உன்கிட்ட மன்னிப்பு கேட்குற தகுதிகூட இல்ல” என திருவாசகம் பேசிக்கொண்டிருக்கையில்
“ ஆமா உங்களுக்கு மன்னிப்பு கேட்குற தகுதிகூட இல்லைன்னு தெரியும். எப்போ என்னைய நம்பாம இத்தனை நாள் பேசாம இருந்திங்களோ அப்படியே இருங்க நம்மக்குள்ள ஒண்ணுமே இல்ல” என ஜானவி கோவமாக கூறிவிட்டு நகர
“ அச்சச்சோ இவ என்ன இவ்வளவு கோவமா இருக்கா போற போக்க பாத்தா பிள்ளைகள் எல்லாம் குடும்பமாகி இந்த வயசான காலத்துல இவ என்னைய டிவேர்ஸ் பண்ணிடுவா போலையே. இல்ல இல்ல திரு எப்படியாவது ஜானவியை சமாதானம் பண்ணியே ஆகணும். அடியே ஜானு குட்டி இனிமே பாரு இந்த திருவோட காதல் திருவிளையாடலை” என எண்ணிக்கொண்டு அவரது அலுவலை கவனிக்க சென்றார்.
அதே நேரம் ருத்ரன் தனது அறையில் கட்டிலில் ஏதோ யோசனையில் அமர்ந்திருந்த தென்றலின் அருகில் அமர அதில் திடுக்கிட்டு நகர பார்த்த தென்றலின் கையை பிடித்து தனது அருகில் அமர் வைத்த ருத்ரன்,
“ எதுக்கு இப்படி பயப்புடற என் பொண்டாட்டி பக்கத்துல என்னைய தவிர யாரு இப்படி உட்காரமுடியும். சரி என்ன அப்படி யோசிச்சுகிட்டு இருந்த தென்றல்”
“ இல்ல நீங்க போன் எடுத்துட்டு வர சொன்னிங்க”
“ ஆமா”
“ ஆனா போன் இங்க எங்கையும் இல்ல”
“ எப்பிடி இருக்கும் அதான் என்கிட்டே இருக்கே” என் ருத்ரன் சாதாரணமாக கூற
“ அப்போ பொய் சொன்னிங்களா வச்சுகிட்டே என்னைய தேடவிட்டுருக்கீங்க” என சற்றே கோவமாக கேட்ட தென்றலிடம்
“ ஆமா நீ கொஞ்ச நேரம் ரூம்ல இருன்னு சொன்னா கேட்பியா அதான் வேலை குடுத்து அனுப்புனே. சரி சரி எனக்கு பாலும் பழமும் எடுத்துட்டுவா காலைல சாப்பிடாதது பசிக்குது” என கூற தென்றலும் சரி என்ற தலை அசைப்புடன் நகர பார்க்க
“ ஏய் நில்லு நீயும் சாப்டலைல உனக்கு ஏதாவது எடுத்துட்டுவா” என ருத்ரன் கூற
“ எனக்கு ஒன்னும் வேணாம் இப்போ பசிக்கல” என தென்றல் கூற
“ இப்படி சாப்பிடாம பட்னி இருந்தா எப்படி இந்த ருத்ரவர்மன் வாரிசுகளை சுமப்பாய் தெம்புவேணாம். அதனால போய் ரெண்டு பேருக்கு சாப்பாடு எடுத்துடுவா” என ருத்ரன் கூற
ருத்ரனின் வாரிசு என்ற சொல் தென்றலை நாணமடைய செய்ய அதனால் வந்த முக சிவப்பை மறைக்க முயன்றவாறே “ இல்ல எனக்கு பசிக்கல எனக்கு வேணாம்” என தென்றல் கூற
“ நீ உனக்கு எடுத்துட்டு வரலைன்னா எனக்கு எடுத்துட்டு வரதை நானே ஊட்டிவிடுவேன். அதுதான் உன் ஆசைன்னா மாமனும் ரெடியா இருக்கேன் செல்லக்குட்டி” என கூற அங்கிருந்து ஓடினாள் தென்றல்
mistakes iruntha sollunga friends change pannituren
thanks for the supporting friends
Thanks sisNice ep