உதய் அக்கா தங்கச்சி பேசுறதுல எனக்கு உடன்பாடு இல்லை இவங்க புருஷன் வீட்டுக்கு போயிடுவாங்க தளிர் தான் அவங்க கூட ஒரே வீட்டில் இருக்கணும் எத்தனை நாள் சகிச்சுக்க முடியும் புருஷன் நல்லவனா இருந்தால் போதும் என்று பொண்ணை கட்டி கொடுப்பது தப்பு வீட்டில் மத்தவங்க குணத்தையும் பார்த்து கட்டி கொடுப்பது தான் நல்லது நல்லவனா இருக்கிற எத்தனை பேர் பொண்டாட்டிக்காக அம்மா கிட்ட பேசுறாங்க
இவங்க இரண்டு பேரும் உதயோ அவன் அப்பாவோ இருக்கும் போது தளிரை எதுவும் சொல்ல மாட்டாங்க அவங்க இல்லாத நேரம் எவ்வளவு மோசமா வேணாலும் பேசுவாங்க அதை எல்லாம் தளிரும் யாரிடமும் சொல்ல மாட்டா அவளுக்கு தேவை இல்லாத மன அழுத்தம் தான் உண்டாகும்
பொது இடத்தில் அம்மாவையும் பெரியம்மாவையும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க இங்கே வந்தும் பெரியம்மாவுக்கு உதய் மேல் பாசம் அதிகம் என்று பூசுறாங்க இவங்க பேசுன எதையும் என்னால் ஏத்துக்க முடியல
சீதா இந்த கல்யாண விஷயத்தில் யோசிச்சு முடிவு எடுக்கிறது நல்லது அம்பலவாணனுக்காவது இவங்க நடந்துக்கிட்டது தெரிஞ்சா தான் தளிர் அந்த வீட்டில் நிம்மதியா இருக்க முடியும்
எங்க ஹீரோ ரொம்ப நல்லவன் தான் ஆனால் அவனும் தளிர் கூடவே இருக்க முடியுமா அந்த பஜாரிங்க முன்னாடி உதய் கிட்ட தென்றலால் இயல்பா பேச முடியுமா
இவ்வளவு கலவரத்திலும் ஒரு விஷயம் மட்டும் தான் நல்லதா நடந்திருக்கு தளிருக்கு உதய் மேல் பிடித்தம் வந்திடுச்சு எங்க கல்யாணம் நின்று விடுமோ என்று பயம்