கவி மித்ரா உடன் அந்த அறையில் தங்கிக் கொண்டாள். விஷ்வா மற்றும் தேவ் மற்றொரு அறையில் தங்கிக் கொண்டனர். கவி தூங்கிய பிறகு மித்ரா விஷ்வாவை பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள்.எவ்வளவு சரியாக தகவல்களை யூகித்து இருக்கிறான். அழகா தான் இருக்கான் என்ன பார்வை டா சாமி பார்வையாலேயே நம்ம மனசுக்குள்ள இருக்காத கண்டுபிடிச்சுடுவாங்க போல.அவங்க நம்மளை பார்த்த பார்வையில் என்ன இருந்துச்சு ஆராய்ச்சியா ரசனையா என்று யோசித்து குழம்பிக் கொண்டிருந்தாள். அவன் புத்தி கூர்மையை நினைத்து செம பிசினஸ்மேன் என்று நினைத்தாள். அவன் அவளை தூக்கி மெத்தையில் அமர வைத்ததை நினைக்கும்போது இப்போதும் அவள் கன்னங்கள் சிவந்தன.அங்கு மற்றொரு அறையில் விஷ்வாவும் மித்ராவை பற்றி தான் ஒரு புன்னகையோடு நினைத்து கொண்டிருந்தான்.அப்போது தேவ் இதெல்லாம் சரி உன் தலைக்கு மேல் ஒரு கயிறு தொங்கிக் கொண்டு இருக்கிறது அதற்கு என்ன யோசித்தாய்.அந்தக் கயிறை அறுக்க ஒரு கத்தரிக்கோல் கண்டுபிடித்துவிட்டேன் என்றான் ஓர் மர்மப் புன்னகையோடு. டேய் என்ன சொல்ற ஒன்னும் புரியலஒரு சொல்யூஷன் சொல்றேன். எங்கள் இருவரது பிரச்சனையும் ஒன்றாக யோசித்துப்பார். தேவ் ஆச்சரியத்தோடு ஆனால் இதை எப்படி சரியாக வரும். இதில் மித்ராவும் முடிவெடுக்க வேண்டியுள்ளது. சரிதான் தேவ் ஆனா இப்ப இருக்கிற பிரச்சனைக்கு இதைத்தவிர வேற தீர்வு கிடையாது. நமக்கு நேரமும் குறைவா இருக்கு. சரி விஸ்வா காலையில பேசலாம். இன்னிக்கி ஒரு நாள்ல நடந்த விஷயங்களை யோசிச்சா ரொம்ப தூரம் ஓடின மாதிரி இருக்கு சோ தூங்கலாம்.ரெண்டுபேரோட பிரச்சினைக்கு ஒரே தீர்வு.