Last edited:
உங்களை ரொம்ப நாளா காணோம் நான் தான் கவனிக்கலையா//ஏற்கனவே முதல் முதலில் போட்டப்ப 1st epi படிச்சதால இந்த சுதந்திர விலாச கதாபாத்திரங்களும் கதை தொடக்கமும் ஞாபகம் இருந்தது//
ரொம்ப நல்லா இருந்தது கதை. First final epi தான் படிச்சேன்.
சித்தரஞ்சன்-வசுந்தரா part தான் எனக்கு ஒரே swing-ல கதை என்னன்னு படிக்க தூண்டின factor.
Bullet ஓட்டற பொண்ணும் அவளோட தெளிவும் நிதானமும் சித்தரஞ்சனை சாய்ச்ச மாதிரி என்னையும் சாய்ச்சுருச்சு. அவ திட்டற மாதிரி இவன் போலீஸ் மாதிரி இல்லாமல் பொறுக்கி வேலை பார்த்துருக்கானேன்னு கோவமா தான் வருது. ஆனால் வசு-சித்துவோட 'with பகத்' இந்நாள் வாழ்க்கையை முதலில் காமிச்சு DSP எப்படியெல்லாம் திறமையா உண்மையான காதலோட வசுவை வசியம் பண்ணறாருன்னு portray பண்ணி, அப்புறம் பொறுமையா அவரோட கேடுகெட்ட செயலை FB-யா காமிச்சு, என்னோட கோவத்தை கரைச்சு சும்மா அசத்திடீங்க பவித்ரா (as usual).
வசுந்தரா மனசு மாதிரியே, கல்யாணத்தை possesive-ஆ selfish thoughts கொண்டு செஞ்சுகிட்டாலும் அப்புறம் அந்த கல்யாண வாழ்க்கையில் சித்து காட்டும் நிதானம், அவரை திட்ட மனசு வாராமல் செய்யுது. மொத்தத்தில் சித்தரஞ்சனுக்கு பிடிச்ச மாதிரியே வசுந்தராவையும், வசுந்தரா கண்ணோட்டத்திலேயே சித்தரஞ்சனையும் பார்க்க வைக்குது உங்க எழுத்து.
(இது DSP-க்கு favourable-ஆ யோசிக்கும் 'சூர்யா fan' பவித்ராவோட சதி.)
திலகரும் லட்சுமணனும் கடைசியில் இப்படி காமெடி piece-ஆ நிக்கறாங்களே.
சக்தி-சரோஜினி பத்தி ஸ்பெஷல்-ஆ சொல்ல எனக்கு ஒன்னும் இல்லை. வழக்கமா வரும் lovers தான்.
வசுந்தராவோட சசி அண்ணியையும் பிடிச்சுது. முக்கியமா பொண்ணு பார்க்கற சீன்ல அவங்க சரோவை கிண்டலடிச்சது.
பிடிக்காமல் இருப்பதற்கும் சுதந்திரம் இருக்கு -
Well said பவித்ரா.
இதை "பார்க்க பார்க்க தான் பிடிக்கும்....பிடிக்கணும்"-என்று நம்பும் தற்கால இளைஞர்கள் புரிந்து கொண்டால் நல்லா இருக்கும்.
அதெல்லாமில்லைப்பா. நான் தான் வரலை.உங்களை ரொம்ப நாளா காணோம் நான் தான் கவனிக்கலையா