Episode 25.2 இருக்கு ji
Episode 25.2 இருக்கு ji
. எப்படியோ 25.2 to 25.4 படிக்க miss பண்ணி epilogue போய்ட்டேன் போல. Thanks பா. படிச்சு முடிச்சுட்டேன்Episode 25.2 இருக்கு ji
மிக்க மிக்க நன்றி மா ரொம்ப சந்தோஷமா இருக்கு....சிலர் கதைகளை படிக்கும் போது postive vibration இருக்கும் இந்த கதையை படிக்கும் போது அதை உணர்ந்தேன்.
ரொம்ப அருமையா சொல்லிருக்கீங்க மா... முதலில் நேரமெடுத்து கதையைப் படித்ததற்கு பெரிய நன்றிகள் மா ரொம்ப அருமையான, அழகான விமர்சனம்...கதைக்கான விமர்சனங்கள் படித்து பின்பு கதை படித்தேன்.
இன்றும் சமுதாயத்தில் வெகு சாதரணமாக எடுத்துக்கொள்ளப்படும் செய்தி marital rape. இந்த கதையின் நாயகிக்கு நடப்பது. நமக்கு அந்த வன்புணர்வின் கொடுமைகளையும் அதன் தாக்கங்களையும் உணர்த்தி, அதனை எதிர்த்து நல்ல மாற்றங்களைப் பயில வலியுறுத்தும் கதைக்களம். சொர்ணவள்ளிகளும் சிவகாமிகளும் தான் கார்த்திகேயனை விட மோசமானவர்கள். காசி விஷ்வநாதன் சற்று ஆறுதல்.
Lead pair charecterization அருமை. Supporting characters நல்லா இருந்தது. குறிப்பாக பிரியா and முத்துமாலை இரண்டுமே வெகு சிறப்பு.
அம்பிகாவதி பாட்டி super.
தீரஜோட level of idealness நிஜ சமூகத்தில் இருக்குமா? இருந்தா நல்லா தான் இருக்கும்.
Doubts:
ஹீரோ ஹீரோயின்-ஐ எப்போது சந்தித்து காதல் வயப்பட்டான்?
எந்த விபத்து அவனது காதலை இழக்க வைத்தது?
தீரஜ் cupboard story book inside the child's bag - அது திறக்கப்பட்டதா - படிக்கப்பட்டதா?
இதெல்லாம் நான் வாசித்த வரை படித்ததாக நினைவில்லை.
[ நான் ஏதாவது episode miss பண்ணுகிறேனோன்னு இருக்கு. ஆனால் எதுன்னு கண்டுபிடிக்க முடியலை ]
படிச்சுட்டுட்டேன் பா. நல்லா இருந்தது.ரொம்ப அருமையா சொல்லிருக்கீங்க மா... முதலில் நேரமெடுத்து கதையைப் படித்ததற்கு பெரிய நன்றிகள் மா ரொம்ப அருமையான, அழகான விமர்சனம்...
கதையில் உள்ள கதாப்பாத்திரங்கள் பத்தி சூப்பரா சொல்லிட்டீங்க
உங்களுடய டடவுட்ஸ் கிளியர் ஆகிடுச்சா மா?
அருமையான ரிவ்யூBawani Balasubramaniyam அவர்கள் கொடுத்த அழகான, ஆழமான விமர்சனம்
#பவாவிமர்சனம்
#நேசமிட்ட #மையலே..
ஆசிரியர் அனுஜெய்
நாயகன் தீரஜ் நரசிம்மரெட்டி❤
நாயகி . நட்ஷத்திர உமையாள்.❤
"நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு."
என்ற குறுந்தொகை பாடல் எனக்கு ஞாபகம் வந்தது இந்த கதை படித்து முடித்தபோது..அதாவது நீரில் இணைந்தே பயணிக்கும் அன்றில் பறவை ஒரு பூ இடையில் வந்து பிரித்த அந்த நொடி கூட ஆண்டு கணக்காய் எண்ணுமாம்.
அதைப்போல தன் மனக்காதலோடு வாழும் இந்நாயகன் எங்கே தான் தூங்கினால் கூட அவள் நினைவுகளை மறந்து விடுவேனோ என அதன் நினைவொகளோடு வாழும் காதல் வாழ்வை எண்ணி மெய் சிலிர்க்கவே முடிகிறது.
காதல் மௌனங்களால் நிரப்படுகிறது இங்கே
காதல் ஒரு வழிப் பயணங்களால் புறப்படுகிறது
காதல் அரணைய் உணர உணர்த்த முடிகிறது இங்கே❤❤
மாயங்கள் தேவையில்லை மயக்கம் தேவையில்லை
காதலித்த நிமிடங்கள் போதுமே உன் நினைவுகளை நிரப்பிட
பக்கம் இருந்தாலென்ன தூரம் துரத்தினால் என்ன..❤❤
உன் நினைவுகள் போதுமடி நான் நேசமிட்ட மையலோடு
தொலைதூரம் பயணிக்க..❤❤
நேசமிட்ட மையலே சாகா வரமான காதல் காவியம் !!❤❤
தீரஜ் -தன் காதலை பொத்தி வைத்து அதை ஓவியத்தின் உள்ளை பதுக்கி அடைகாத்து உயிர் வாழும் நேசமான மனிதன். அவன் காதல் கை நழுவி போகுமிடத்து .எதிர்பாரா திருமணம் அதனோடு அவன் காதலும் தள்ளிவிட அவனுக்கான வலி அவன் மட்டுமே உணர பாவமான நிமிடங்கள் .❤❤❤❤❤❤
தீரஜ் அருமையான மகன் .அதனோடு அருமையான பல உறவுகளின் ஆத்ம திருப்தி இவன். அதிகம் பேசாது பார்வையாலே சகலதும் புரிந்துணர்வில் மிதக்க விடுவது அருமை.
காதலில் இவனை மிஞ்சவே முடியாது என உரக்க கூறினாலும் தகும்.❤❤❤
உமையாள் - ஆண் இனத்தையே வெறுக்கும் நாயகியின் மனநிலை புரிந்து கொள்ளவே முடிகிறது எதனால் என்று. இவளின் திடீர் திருமணம் அதனோடு இவளின் பதற்ற போராட்ட வாழ்க்கை என மனதை நெகிழ வைக்கிறது.
ரூபவிசாலாட்சி - இவளால் தான் கதையே நகர்வது என்றால் மிகையில்லை .பாசத்திற்காகவும் தன் காதலை தூர இருந்து ரசிப்பது பாவமே.❤
ப்ரியா- அருமையான தோழி. நட்பே என்றாலும் தவறு செய்யும் இடத்தில் அதற்காக அதட்டி உருட்டி தன் நட்பின் தவறை உணர்த்தி உயர வைப்பது அழகே.❤❤❤
வினோத்- நட்பின் இலக்கணம் இவன்.அந்த நட்புக்காய் இவன் செய்யும் காரியம். வாவ்... தோழா என தோள் தட்டவே தோன்றியது .
இவன் வரும் இடமெல்லாம் நகைச்சுவைக்கு பஞ்சகமில்லை .மனதோடு பேசும் இவன் செயல் மிக அருமைமா.
மனோஜ் -அண்ணனுக்கான இவனின் காதல் பயணம் அருமையான ஒன்று.❤ஆனாலும் வினோத்தை காலை வாறிவிடுவது சிரிப்பின் உச்சநிலை .
கண்ணம்மா - ஆளின் ஆள் அருமையான பெண்மணி.❤
இன்னும் ஏகப்பட்ட பாத்திரபடைப்புகள் அவரவர் தேவைகேற்ற உலாவருதல் அருமையே.
ஆசிரிய தோழியே.
காதல் என்ற பதத்திற்கு ஒரு காவியத்தையே படைத்து தலைப்புக்கும் கதைக்கும் பொருத்தமான நிலையை தந்திருப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி மா.❤❤
நாயகனின் காதலை இப்படி கூட சொல்லலாம் என உருவப்படுத்தல் அருமைமா. நாயகியின் மனநிலையை வலியை உணரவைத்து விட்டிர்கள். தீரஜின் காதல் வலியெல்லாம் விழிநீரே எமக்கு.
ஆதிரா அவளின் அப்பா பாசம் நெகிழ்ச்சி .அதை கூட அனுபவிக்காத பாவியென அவன் நினைக்கும் இடமெல்லாம் கண்ணீரேமா.
சொல்லியே ஆகவேண்டும் வரவர உங்களின் எழுத்தின் ஆளுமை,ஒரு பக்குவம் ,விறுவிறுப்பான எழுத்தாக்கம் ,உவமான நிலைகள் எல்லாம் அசத்தல் மா. அதுவும் அந்த முத்துமாலை சிந்தனை மற்றும் நாயகி அவளின் பழயவை தெரியாது அவள் காதலனோடு சேருவது மிக அருமையான விடையங்கள் மா.
ஒரு காதல் காவியத்தை மனதோடு ஒன்றி படித்த திருப்தி.ஆத்மார்த்தமான ஆழமான காதல் கதை.
வாழ்த்துக்கள் மா.
போட்டியில் வெற்றிபெறவும் வாழ்த்துக்கள் மா.