எனக்கு தான் தெரியுமே நீங்கள் கண்டிப்பா கொடுப்பீங்கன்னு ஆனாலும் கடைசியில் அதுக்கு எல்லாம் சேர்த்து வைச்சு எழில் மேல் அலரை தள்ளி விட்டு சந்தோஷ படுத்திட்டிங்கன்னு நினைச்சா பின்னாடியே அந்த காட்டேறியையும் அனுப்பி வச்சிருக்கீங்க
இதுக்கு தான் ஒரு தடவை முட்டிட்டு விட்டால் கொம்பு முளைக்கும் என்று சொல்றாங்க நீ இன்னொரு தடவை நல்லா ஓங்கி எழில் தலையில் முட்டியிருந்தா சரசு கிட்ட அடி வாங்கி இருக்க மாட்ட
இப்போ பாரு சரசு விட்ட அடியில் உன் கன்னத்தில் கொம்பு முளைச்சிடுச்சு
ஏய் அலர் அன்னைக்கு எழிலுக்கு கொடுத்த அடியை இன்னைக்கு இரண்டு மடங்காக இந்த மூதேவிக்கு திருப்பி கொடு
யோவ் நாதன் எங்கயா இருக்க பொண்டாட்டியை அடிக்க மட்டும் எங்க இருந்தாலும் கரெக்டா வந்து குதிப்ப இப்போ இந்த சரசு சனியனை வந்து நாலு அறை விடேன்
அலருக்கு எழில் மேல் இருக்க காதலை ஏத்துக்க விடாமல் அவ அப்பா மேல் வச்சிருக்க பாசம் தடுக்குது
ஆனால் கல்யாணம் செஞ்சிக்காமலே இருக்க நாதன் விட மாட்டாரே
அலர் நீ எவ்வளவு தான் எழிலை அலட்சிய படுத்துற மாதிரி நடிச்சாலும் அவன் உன்னை வெறுக்க மாட்டான் அதனால் அவனை மாத்துறதை விட உங்க அப்பாவை மாத்த முயற்சி பண்ணு
எழில் இன்னைக்கு அவ பக்கமே திரும்பாம ஸ்டெடியா இருந்தியோ இதே மாதிரி இருடா அப்போ தான் அவ உன் பின்னாடியே சுத்துவா
Nice ud
சரண் சொன்னப்பவே புடவையை மாற்றி இருக்கலாம்.... கடைசியில் கன்னம் பழுத்ததுதான் மிச்சம்
ஏன் அலர் எழில் உன் பின்னால் சுத்தும் போதெல்லாம் விட்டுட்டு... நிறைந்த சபையில் அவன சைட் அடிக்க அது அந்த சரசு கண்ணில் சிக்க...தேவையா உனக்கு
இந்த பேய் கண்ணில் பட்டது மாதிரி உங்க அப்பாவும் பார்த்திருந்தால் எதாவது நல்லது நடக்க வாய்ப்பு இருந்துருக்குமா...????
ஆத்தாடி.... செம அடி
சரஸ் கண்லயா மாட்டணும்.... அது சரி அவங்க தானே வந்ததுல இருந்து கண்ணுல விளக்கெண்ணெய் ஊத்திட்டு கண்காணிச்சுட்டு இருந்தாங்க.....
இப்போ அடுத்து என்ன நடக்கும்னு தெரியல சரஸ் சலங்கை கட்டி ஆடுவாங்களோ... இல்லைனா
அலர் வாங்குனதை திருப்பி கொடுத்தா ஆட்டம் இன்னும் சூடு பிடிக்கும்....
ஆனாலும் ஹீரோவை பீல் பண்ண விடாம ஒரு ரொமான்ஸ் சீனை ஆக்ஷன் காட்சியா மாத்திப்புட்டிங்க...