அருமையான பதிவு சரண்யா???.தாமரை கல்யாணத்தின் போது எத்தனையோ பிரச்சனை வந்தும்,நகை,சீர் என ஒன்றும் இல்லாமல் வந்ததை பற்றி பேசிய சொந்தங்களின் வாயை அடைத்து இன்றுவரை பாசம் குறையாமல் இருக்குது யமுனா குடும்பம்????.
அவங்களே விருப்பப்பட்டு,நிவியை தர்ஷூக்கு கேட்க,சிலரின் பேச்சுக்காக தாமரை மறுப்பதை கண்டு கதிர் கோபப்படுவது நியாயம் தான்????.தர்ஷனை விட நல்ல மாப்பிள்ளை கிடைக்க மாட்டாங்கன்னு சொல்லும் தாமரை,அவளுக்கு கிடைக்கும் நல்ல வாழ்க்கைய மறுக்கறாளே???
அங்கை வீட்டில் அந்த பொம்பளை எதுக்கு அப்படி பேசுச்சுனு அங்கை சொன்ற பிறகும், பொண்ண காட்டி மயக்கிட்டாங்கன்னு சொல்வாங்க என தாமரை சொல்வது சரியில்லை????.தாமரை அப்பாம்மாவை கதிர் பிரித்து பார்க்காமல் நடத்த,தாமரை இன்னும் என் குடும்பம்,கௌரவம் என பேசறதை பார்த்து கதிர் கோபப்படறது சரிதான்.கதிரின் கோபமே அவள் தவறை புரிய வச்சிருக்கு...
ஒரு வழியா தாமரை,யமுனாட்ட நிவியை பெண் கேட்க சம்மதம் சொல்லிட்டா???.தாமரை பெத்தவங்களுக்கு இதில் விருப்பம் தான்.எல்லாம் சரியாச்சுன்னு நெனச்சா தர்ஷ் வேணாம்னு நினைக்கறான்???.தர்ஷூ வேணாம்னு சொன்னா யமுனா விட்டுறுவாங்களா????.தர்ஷ்,
நிவிட்ட வம்பிழுத்து வாங்கி கட்டிக்கிட்டானா??.அவ பேரை சொல்லவும் அலர்றான்????.