வேல்முருகன் நீங்க செய்த தவறு எங்கு கொண்டு வந்து ஒரு அப்பாவி பெண் சரண்யாவை நிறுத்தி இருக்கு பாருங்க.....
வெற்றி உண்மையில் உனக்கு மனசாட்சி இருக்கா??? சரண்யா பேசிய வார்த்தைகள் அவளின் வலி, வாழ்கை மீதான பயம் தான் காரணம்... ஆனால் நீ உன் பிள்ளையை சுமந்து நிற்கும் மனைவி என்றும் பாராமல் அனைவர் முன்பும் அடித்தது ஏற்றுக்கொள்ளவே முடியல..... சத்தியமா சொல்றேன் இப்பவும் உன்னை ஹீரோவா ஒரு பெர்சென்ட்டேஜ் கூட நினைக்க முடியல
மனச்சாட்சி இல்லாதவர்கள் வெற்றியின் குடும்பம்.
தனம் பேச இடம் கொடுத்தது யாரு? வெற்றி தான் ஒரு பெண்ணை இவ்வளவு கிழாக ஒரு புருஷனே நடத்தும் போது மற்றவர்கள் வாய் எந்த எல்லைக்கும் செல்லும் .
அபிராமி இவளும் ஒரு பெண் தானே.. காதல் கை கூடாமல் போனது அவரவர் தலைவிதி என்று எண்ணாமல் வெற்றியின் வாழ்கை கூத்தை அறிந்து கொண்டு அவனிடம் தன் மனதை வெளிப்படுத்தி அனைத்து கை மீறிய செயலுக்கும் காரணமான இவள் மீது துளியும் மரியாதை இல்லை....
அம்மாடி போதும் flashback இத்தோடு முடிச்சுக்கலாம்.
தனம்னு ஒரு character கொஞ்ச நாளைக்கு கதைக்குள்ள வராமலேயே இருந்தா இந்த அர்த்த ஜாமத்துல BP ஏறாமல் இருக்கும்.
சரண்யா சின்ன பொண்ணு அந்த பிரச்சினைய பக்குவமா எல்லாம் ஹேண்டில் பண்ண வராது ஒரு வேளை வெற்றியோ அவன் குடும்பமோ அவளை நல்ல விதமா நடத்தி இருந்தால் இதை பார்த்ததும் அவளுக்கு கோவம் வந்திருக்காது என்ன விஷயம் என்று நிதானமா கேட்டிருப்பா
இங்கு அவ கல்யாணம் ஆகி வந்த நாளில் இருந்தே எவ்வளவு கொடுமை படுத்தி இருக்காங்க பிறகு எப்படி நிதானமா யோசிக்க முடியும்
சரண் பண்ண தப்பு அவன் வீடு தேடி வந்து மன்னிப்பு கேட்ட போது அதை ஏத்துக்காதது அவன் தான் தன்னோட காதலை மறக்க டைம் கேட்டான் இப்போ நான் உன் மனசுல இல்லை தானே என்று அந்த கோவத்தை மட்டும் வச்சு முடிவு எடுத்துட்டா
சரண் தான் அவளோட மன கஷ்டத்தில் ஒரு முடிவு எடுத்துட்டா ஆனால் அவ குடும்பம் அவளுக்கு எடுத்து சொல்லி புரிய வச்சிருக்கலாம் ஆனால் அவங்களுக்கு மகன் அடி பட்டது தான் பெரிய விஷயமா போயிட்டு
இந்த நாலு வருஷம் சொந்த குடும்பத்தில் அவ பட்ட அவமானம் தான் குழந்தைக்கு அப்பாவா இருந்துட்டு போகட்டும் என்று எண்ண வச்சிடுச்சு ஆனால் இதை வெற்றி வந்து பேசும் போது சரண் முடிவு எடுத்திருந்தா நல்லா இருந்து இருக்கும்
வெற்றி சரண்யாவை சமாதான படுத்துற வரை வெளிநாடு போகாமல் இருந்திருக்கலாம் அவளை சமாதான படுத்தி வெளியூரில் வேலை தேடி கிட்டு தனி குடித்தனம் போயிருந்தா நல்லா இருந்திருப்ப
சரண் வெற்றி இரண்டு பேரும் நிதானம் இல்லாமல் கொட்டி கவிழ்த்து இப்போ அதை சரி செய்ய முயற்சியும் எடுத்துட்டிங்க