அருணுக்கு பள்ளி காலத்திற்கு பிறகு நண்பர்கள் தான் உலகம். நாலு பேரும் எப்பொழுதும் கூடவே தான் சுற்றி கொண்டு இருப்பார்கள் அதுவும் எப்பொழுதும் அருண் வீட்டில் தான். படித்து முடித்து வேலை கிடைக்கும் முன் செலவுக்கு கையில் காசில்லாத அந்த பதின் பருவத்தில் அருணின் வீடே கதி என்று தான் நால்வரும் இருந்தனர்.
ஏன்டா எப்போ பாத்தாலும் பொம்பளைங்க மாதிரி வீட்லயே அடைஞ்சு கெடக்கறீங்க என்று வாய் விட்டே கேட்டு விட்டார் அருண் அம்மா.
அருண் வீட்டிற்கு வருவது Desktop PC- இல் கும்பலாக படம் பார்ப்பது அருண் வீட்டில் சத்தம் போட்டு அரட்டை அடிப்பது, வெட்கம் இல்லாமல் பொழுது போக்குவது என்று தொடர்ந்து கொண்டு தான் இருந்தது..
என்ன தான் நால்வரும் கூடி கூத்தடித்தாலும் பள்ளிக்கு பிறகு இவர்கள் எடுத்த Professional course-க்கு தனி தனியாக வெவ்வேறு இடத்தில் தான் Class-க்கு சென்றனர். அதற்கு மிக முக்கிய காரணம், நால்வரும் சேர்ந்து பள்ளியில் சுற்றிய பொழுது ஒரு பெண்ணிடமும் யாரும் பழகியதும் இல்லை ஒருவருக்கொருவர் பழக விட்டதும் இல்லை…
செந்திலிடம் பேச வரும் பெண்ணை ஷிவா கலாய்த்து விட்டு விடுவான், அல்லது அந்த பெண்ணிற்கு முன்னால் அவனையே கலாய்த்து விட்டு விடுவார்கள். இப்படி ஒருத்தருக்கொருத்தர் காலை வாரி விடுவதில் மற்றவர்களுக்கு அப்படி ஒரு ஆனந்தம்.
கரெக்ட் செய்வதற்காகவே தனியாக கிளாஸ் போக முடிவு செய்தனர்..
அப்படி தனியாக கிளாஸ் சென்றதால் யாருக்கு என்ன கிடைத்ததோ நம் அருணிற்கு சில பெண்களின் நட்பு கிடைத்தது கூடவே ஸ்ருதியும்… எப்படியோ ஒரு ஒரு Subject-க்கு ஒரு ஒரு Class என்று போய்க்கொண்டிருந்த நிலையில், Accounts – Class-ல் மூன்று பெண்பிகள் (பெண்+ நண்பிகள்) அருணுக்கு கிடைத்தார்கள்..
அருணின் நகைச்சுவை உணர்வில் ஈர்த்து பழகிய பெண்பிகள் அவர்கள்.. பிறகு இரண்டே மாசத்தில் அருணிடம் பேசுவதே இல்லாமல் போனது வேறு விஷயம்.. (ஏன்னா அருணோட டிசைன் அப்படி!!!)
நால்வரும் சேர்ந்து அடுத்த வாரத்தில் வேறு இடத்தில் கிளாஸ் போக முடிவெடுத்தனர். இதில் இந்த மூன்று பெண்பிகளும் அவர்களின் இன்னொரு பள்ளி நண்பியான ஸ்ருதியையும் கூட்டு சேர்த்தனர்..
ஆக மூன்று நண்பிகள் மூலம் அருண்- ஸ்ருதியின் முதல் சந்திப்பு இனிதே நடக்கவிருந்தது.
திருமணம் வேண்டுமானால் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படலாம்… 90’s Kids-in காதல் பெரும்பாலும் பள்ளி, கல்லூரி வளாகங்களில் தான் நிச்சயிக்க பட்டு இருந்தது.
ஏனென்றால் Orkut முடிந்து Facebook கோலோச்சிக்கொண்டு இருந்த காலம் அது.
இருவரும் சந்தித்து கொண்ட முதல் தருணம் பற்றி ஸ்ருதி அடிக்கடி கலாய்த்து சிலாகித்து அருணின் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வது உண்டு.
Scooter-a Parking ல நிறுத்த போன இடத்துல என் மூணு Friends-um நின்னுட்டு இருந்தாங்க.. Class-க்கு போகலாம் ல?? னு கேட்டதுக்கு , “இரு டி… அருண் வந்துரட்டும்… அவனுக்காக தான் இவ்ளோ நேரம் Waiting னு சொன்னதும், அப்படி யாரு அவன் இவ்ளோ நேரம் வெயிட் பண்ற அளவுக்கு Worth-a!! னு நானும் வாசலை பாத்துட்டு இருந்தா வெள்ளை கலர் Scooter la Helmet போட்டுக்கிட்டு என் Friends- a பார்த்து வழிஞ்சுக்கிட்ட பெருசா ஒரு ஹாய் சொன்னான் இவன்… அப்படி என்ன உனக்கு அவ்ளோ சீன்- னு நான் கடுப்பா பாத்துட்ட இருந்தது கூட கவனிக்காம அவங்க கிட்ட பேசிட்டு இருந்த பொது தான் Intro - பண்ணி விட்டாங்க… “Hey this is Arun -னு”
ரொம்ப தான் போல- னு கடுப்பு ல தான் அன்னிக்கு அவனுக்கு நான் கையை குடுத்தேன்
என்று ஸ்ருதி அன்றைக்கு கண்கள் விரிய செல்ல கோபத்துடன் ஹோட்டலில் நண்பர்களிடம் விவரித்து கொண்டதை கன்னம் முழுக்க வெட்கத்தோடு அவள் கையை பிடித்து கொண்டும் கேட்டு கொண்டும் இருந்தான் அருண்…
So First First நாங்க மீட் பண்ண இடம்னாலே Sentiment ah அதே பார்க்கிங் லாட் ல தான் இவ Birthday அன்னிக்கு இவளுக்கு ரிங் போட்டு Propose பண்ணேன்..
ஹேய் அடி விழும்!!! நான் Propose பண்ண அப்புறம் 6 மாசமா என்னை அலைய விட்டு வேண்டாம்னு சொல்லி சீன் போட்டு அதுக்கு அப்புறம் இப்படி Ring போட்டவன் தானே நீ….என்று செல்ல சீற்றத்துடன் ஸ்ருதி!!
ஆம்!! ஸ்ருதி தான் முதலில் அருணிடம் தன் காதலை கூறினாள்.. எதிலும் Conservative ஆன அருண் இதையும் நிறைய யோசித்தான். வேண்டாம் என்று சொன்னான். Friend ஆக தான் பழகினேன் என்று சொல்லி பார்த்தான். Life long Well wisher a இருப்பேன் இந்த Relationship மட்டும் வேணாமே என்று கெஞ்சியும் பார்த்தான்.
எதற்கும் மசிவதாக தெரியவில்லை ஸ்ருதி. அதே நேரம் அருணை விடுவதாகவும் இல்லை. முதலில் வேண்டாம் என்று சொன்ன அருண் மெல்ல மெல்ல ஸ்ருதியின் காதல் வலையில் சிக்க தொடங்கினான்…
டேய் எந்த பொண்ணும் இப்படி வந்து ஒருத்தன்னுக்காக தொங்க மாட்டா!! குடுத்து வெச்சவன் தான் நீ… சீக்கிரம் ஒகே சொல்லிடு… அலைய விடாத!!
சூப்பர் மச்சான் நம்ம Gang-லேயே First Committed நீ தான் டா. எப்போ Treat-u?
இப்படி நண்பர்கள் ஏத்தி விட்டு அவனை வானில் மிதக்க செய்தனர் .. பிறகு எல்லோரிடமும் கலந்து யோசித்து ஒரு சுபயோக தினத்தில் தானும் காதலிப்பதாக ஒத்து கொண்டு ring மாட்டி விட்டான் அருண்.
இந்த பூமியில் ஒரு பெண்ணால் Propose செய்யப்பட்ட ஆண்கள் மிக குறைவு. ஒரு பெண் அவளின் காதலை முதன்முதலில் ஒரு ஆணிடம் சொல்லும் வழக்கம் பரிச்சயப்படாத அந்த சூழலில் தனது நண்பியாய் இருந்த பெண்ணால் காதலிக்கப்பட்டு அவள் பால் பின்னர் ஈர்க்கப்பட்டு… திருமண உறவையும் தாண்டி இந்த பந்தம் நிலைக்கும் என்று நம்பி … தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்டவன் போல் உணர்ந்தான் அருண்…
அப்படி காதலிக்கப்பட்டு….. ஈர்க்கப்பட்டு ….ஆசிர்வதிக்கப்பட்டு….. பின்னர் வெறுக்கவும் பட்டு…. யாரோ போல் விலகி நின்றால் யாரால் தான் ஏற்று கொள்ள முடியும்????
நிலை குலைந்து போனான் அருண்…
அவ ஒன்னும் அவ்வளவு பெரிய Figure லா இல்ல டா…. உன் Range- ku கம்மி தான்டா… போய் தொலையட்டும் விட்டு தள்ளு…
என்று அப்பொழுது ஏத்தி விட்ட அதே வாய் இப்பொழுது அவனுக்கு சமாதானம் சொல்லி கொண்டிருக்கும் பொழுதே அவள் மேல் ஈர்க்கப்பட்ட முதல் தருணத்தை பற்றிய நினைவுகளில் மூழ்க தொடங்கினான் அருண்.
Course எல்லாம் முடிந்த பிறகு ஒரு வருடம் கழித்து Bessy பீச்சில் அவளை Get-together -ல் மீண்டும் பார்த்தபோது நிஜமாகவே அருணிற்கு கிளர்ச்சி ஏற்பட்டது. இதற்கு முன் அவளை அத்தனை அழகாக பார்த்ததாக நினைவு இல்லை..
டிசம்பர் மாத காற்றில், பேரிரைச்சலோடு பொருமி கொண்டு இருந்த அலைகளின் சத்தத்தில் பெருந்திரளுக்கு மத்தியில் நீல வண்ண சுரிதாரில் எல்லாருக்கும் ஒரு ஹாய் சொல்லிவிட்டு அருணுக்கு மட்டும் ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு போன போது தான் அவளை ரசிக்க ஆரம்பித்தான்!!!
கருநீல மேகங்கள் அத்தனையும் ஒன்று சேர்ந்து பௌர்ணமி நிலவை சூழ்ந்து கொண்டது போன்ற அவளின் கண்ணின் கருவிழிகள்… இரண்டிற்கும் கீழ் வைத்த அடர் மையில் உண்மையில் சொக்கி தான் போனான்.
இருப்பினும் இது வரை அவளை கண்டுகொள்ளாத போலவே இம்முறையும் இருக்க வேண்டும் என்று காட்டிக்கொள்ள மிகுந்த கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் தான் மனோ பக்கத்தில் வந்து, சொன்னான்.
டேய் மச்சான் ஸ்ருதி உன்னையே பாக்கிற மாதிரி இருக்கு டா…
அந்த நொடியில் அருணின் வயிற்றுக்குள் பறந்த பட்டாம்பூச்சி எப்பொழுதாவது தன் இதயத்தை துளையிட்டு சென்று விடும் என அன்று தெரிய வாய்ப்பில்லை!!!
ஏன்டா எப்போ பாத்தாலும் பொம்பளைங்க மாதிரி வீட்லயே அடைஞ்சு கெடக்கறீங்க என்று வாய் விட்டே கேட்டு விட்டார் அருண் அம்மா.
அருண் வீட்டிற்கு வருவது Desktop PC- இல் கும்பலாக படம் பார்ப்பது அருண் வீட்டில் சத்தம் போட்டு அரட்டை அடிப்பது, வெட்கம் இல்லாமல் பொழுது போக்குவது என்று தொடர்ந்து கொண்டு தான் இருந்தது..
என்ன தான் நால்வரும் கூடி கூத்தடித்தாலும் பள்ளிக்கு பிறகு இவர்கள் எடுத்த Professional course-க்கு தனி தனியாக வெவ்வேறு இடத்தில் தான் Class-க்கு சென்றனர். அதற்கு மிக முக்கிய காரணம், நால்வரும் சேர்ந்து பள்ளியில் சுற்றிய பொழுது ஒரு பெண்ணிடமும் யாரும் பழகியதும் இல்லை ஒருவருக்கொருவர் பழக விட்டதும் இல்லை…
செந்திலிடம் பேச வரும் பெண்ணை ஷிவா கலாய்த்து விட்டு விடுவான், அல்லது அந்த பெண்ணிற்கு முன்னால் அவனையே கலாய்த்து விட்டு விடுவார்கள். இப்படி ஒருத்தருக்கொருத்தர் காலை வாரி விடுவதில் மற்றவர்களுக்கு அப்படி ஒரு ஆனந்தம்.
கரெக்ட் செய்வதற்காகவே தனியாக கிளாஸ் போக முடிவு செய்தனர்..
அப்படி தனியாக கிளாஸ் சென்றதால் யாருக்கு என்ன கிடைத்ததோ நம் அருணிற்கு சில பெண்களின் நட்பு கிடைத்தது கூடவே ஸ்ருதியும்… எப்படியோ ஒரு ஒரு Subject-க்கு ஒரு ஒரு Class என்று போய்க்கொண்டிருந்த நிலையில், Accounts – Class-ல் மூன்று பெண்பிகள் (பெண்+ நண்பிகள்) அருணுக்கு கிடைத்தார்கள்..
அருணின் நகைச்சுவை உணர்வில் ஈர்த்து பழகிய பெண்பிகள் அவர்கள்.. பிறகு இரண்டே மாசத்தில் அருணிடம் பேசுவதே இல்லாமல் போனது வேறு விஷயம்.. (ஏன்னா அருணோட டிசைன் அப்படி!!!)
நால்வரும் சேர்ந்து அடுத்த வாரத்தில் வேறு இடத்தில் கிளாஸ் போக முடிவெடுத்தனர். இதில் இந்த மூன்று பெண்பிகளும் அவர்களின் இன்னொரு பள்ளி நண்பியான ஸ்ருதியையும் கூட்டு சேர்த்தனர்..
ஆக மூன்று நண்பிகள் மூலம் அருண்- ஸ்ருதியின் முதல் சந்திப்பு இனிதே நடக்கவிருந்தது.
திருமணம் வேண்டுமானால் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படலாம்… 90’s Kids-in காதல் பெரும்பாலும் பள்ளி, கல்லூரி வளாகங்களில் தான் நிச்சயிக்க பட்டு இருந்தது.
ஏனென்றால் Orkut முடிந்து Facebook கோலோச்சிக்கொண்டு இருந்த காலம் அது.
இருவரும் சந்தித்து கொண்ட முதல் தருணம் பற்றி ஸ்ருதி அடிக்கடி கலாய்த்து சிலாகித்து அருணின் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வது உண்டு.
Scooter-a Parking ல நிறுத்த போன இடத்துல என் மூணு Friends-um நின்னுட்டு இருந்தாங்க.. Class-க்கு போகலாம் ல?? னு கேட்டதுக்கு , “இரு டி… அருண் வந்துரட்டும்… அவனுக்காக தான் இவ்ளோ நேரம் Waiting னு சொன்னதும், அப்படி யாரு அவன் இவ்ளோ நேரம் வெயிட் பண்ற அளவுக்கு Worth-a!! னு நானும் வாசலை பாத்துட்டு இருந்தா வெள்ளை கலர் Scooter la Helmet போட்டுக்கிட்டு என் Friends- a பார்த்து வழிஞ்சுக்கிட்ட பெருசா ஒரு ஹாய் சொன்னான் இவன்… அப்படி என்ன உனக்கு அவ்ளோ சீன்- னு நான் கடுப்பா பாத்துட்ட இருந்தது கூட கவனிக்காம அவங்க கிட்ட பேசிட்டு இருந்த பொது தான் Intro - பண்ணி விட்டாங்க… “Hey this is Arun -னு”
ரொம்ப தான் போல- னு கடுப்பு ல தான் அன்னிக்கு அவனுக்கு நான் கையை குடுத்தேன்
என்று ஸ்ருதி அன்றைக்கு கண்கள் விரிய செல்ல கோபத்துடன் ஹோட்டலில் நண்பர்களிடம் விவரித்து கொண்டதை கன்னம் முழுக்க வெட்கத்தோடு அவள் கையை பிடித்து கொண்டும் கேட்டு கொண்டும் இருந்தான் அருண்…
So First First நாங்க மீட் பண்ண இடம்னாலே Sentiment ah அதே பார்க்கிங் லாட் ல தான் இவ Birthday அன்னிக்கு இவளுக்கு ரிங் போட்டு Propose பண்ணேன்..
ஹேய் அடி விழும்!!! நான் Propose பண்ண அப்புறம் 6 மாசமா என்னை அலைய விட்டு வேண்டாம்னு சொல்லி சீன் போட்டு அதுக்கு அப்புறம் இப்படி Ring போட்டவன் தானே நீ….என்று செல்ல சீற்றத்துடன் ஸ்ருதி!!
ஆம்!! ஸ்ருதி தான் முதலில் அருணிடம் தன் காதலை கூறினாள்.. எதிலும் Conservative ஆன அருண் இதையும் நிறைய யோசித்தான். வேண்டாம் என்று சொன்னான். Friend ஆக தான் பழகினேன் என்று சொல்லி பார்த்தான். Life long Well wisher a இருப்பேன் இந்த Relationship மட்டும் வேணாமே என்று கெஞ்சியும் பார்த்தான்.
எதற்கும் மசிவதாக தெரியவில்லை ஸ்ருதி. அதே நேரம் அருணை விடுவதாகவும் இல்லை. முதலில் வேண்டாம் என்று சொன்ன அருண் மெல்ல மெல்ல ஸ்ருதியின் காதல் வலையில் சிக்க தொடங்கினான்…
டேய் எந்த பொண்ணும் இப்படி வந்து ஒருத்தன்னுக்காக தொங்க மாட்டா!! குடுத்து வெச்சவன் தான் நீ… சீக்கிரம் ஒகே சொல்லிடு… அலைய விடாத!!
சூப்பர் மச்சான் நம்ம Gang-லேயே First Committed நீ தான் டா. எப்போ Treat-u?
இப்படி நண்பர்கள் ஏத்தி விட்டு அவனை வானில் மிதக்க செய்தனர் .. பிறகு எல்லோரிடமும் கலந்து யோசித்து ஒரு சுபயோக தினத்தில் தானும் காதலிப்பதாக ஒத்து கொண்டு ring மாட்டி விட்டான் அருண்.
இந்த பூமியில் ஒரு பெண்ணால் Propose செய்யப்பட்ட ஆண்கள் மிக குறைவு. ஒரு பெண் அவளின் காதலை முதன்முதலில் ஒரு ஆணிடம் சொல்லும் வழக்கம் பரிச்சயப்படாத அந்த சூழலில் தனது நண்பியாய் இருந்த பெண்ணால் காதலிக்கப்பட்டு அவள் பால் பின்னர் ஈர்க்கப்பட்டு… திருமண உறவையும் தாண்டி இந்த பந்தம் நிலைக்கும் என்று நம்பி … தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்டவன் போல் உணர்ந்தான் அருண்…
அப்படி காதலிக்கப்பட்டு….. ஈர்க்கப்பட்டு ….ஆசிர்வதிக்கப்பட்டு….. பின்னர் வெறுக்கவும் பட்டு…. யாரோ போல் விலகி நின்றால் யாரால் தான் ஏற்று கொள்ள முடியும்????
நிலை குலைந்து போனான் அருண்…
அவ ஒன்னும் அவ்வளவு பெரிய Figure லா இல்ல டா…. உன் Range- ku கம்மி தான்டா… போய் தொலையட்டும் விட்டு தள்ளு…
என்று அப்பொழுது ஏத்தி விட்ட அதே வாய் இப்பொழுது அவனுக்கு சமாதானம் சொல்லி கொண்டிருக்கும் பொழுதே அவள் மேல் ஈர்க்கப்பட்ட முதல் தருணத்தை பற்றிய நினைவுகளில் மூழ்க தொடங்கினான் அருண்.
Course எல்லாம் முடிந்த பிறகு ஒரு வருடம் கழித்து Bessy பீச்சில் அவளை Get-together -ல் மீண்டும் பார்த்தபோது நிஜமாகவே அருணிற்கு கிளர்ச்சி ஏற்பட்டது. இதற்கு முன் அவளை அத்தனை அழகாக பார்த்ததாக நினைவு இல்லை..
டிசம்பர் மாத காற்றில், பேரிரைச்சலோடு பொருமி கொண்டு இருந்த அலைகளின் சத்தத்தில் பெருந்திரளுக்கு மத்தியில் நீல வண்ண சுரிதாரில் எல்லாருக்கும் ஒரு ஹாய் சொல்லிவிட்டு அருணுக்கு மட்டும் ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு போன போது தான் அவளை ரசிக்க ஆரம்பித்தான்!!!
கருநீல மேகங்கள் அத்தனையும் ஒன்று சேர்ந்து பௌர்ணமி நிலவை சூழ்ந்து கொண்டது போன்ற அவளின் கண்ணின் கருவிழிகள்… இரண்டிற்கும் கீழ் வைத்த அடர் மையில் உண்மையில் சொக்கி தான் போனான்.
இருப்பினும் இது வரை அவளை கண்டுகொள்ளாத போலவே இம்முறையும் இருக்க வேண்டும் என்று காட்டிக்கொள்ள மிகுந்த கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் தான் மனோ பக்கத்தில் வந்து, சொன்னான்.
டேய் மச்சான் ஸ்ருதி உன்னையே பாக்கிற மாதிரி இருக்கு டா…
அந்த நொடியில் அருணின் வயிற்றுக்குள் பறந்த பட்டாம்பூச்சி எப்பொழுதாவது தன் இதயத்தை துளையிட்டு சென்று விடும் என அன்று தெரிய வாய்ப்பில்லை!!!