Ama sissy paya single ah vey suthuran konjam paathu pannunga pa athukaandi antha kicha payalukella jodi venm
Thanks sis ?? (???)super super.... romba interesting ya iruku... please konjam regular ya kodunga pa....
Thanks sago ??Nice going.
10.
ஹாஸ்பிட்டலுக்கு சென்ற வனிதா நேராக ரெண்டாம் தளத்தில் இருந்த ஒரு
அறைக்குள் நுழைந்தாள்.
அவளை பின்தொடர்ந்து வந்த ஹர்ஷாவும் கிஷோரும் வனிதா நுழைந்த அறையின் வாசலில் நின்றுகொண்டிருந்தனர்.
"என்னடா மச்சி இந்த பொண்ணு உள்ள போயிடுச்சு. கதவும் சாத்திருக்கு .நாம
எப்படி உள்ள போய் யாரு அந்த முக்கியமான ஆளுன்னு கண்டுபிடிக்குறது???. எப்படி வனிதாவோட பேசுறது????” என கிஷோர் ஹர்ஷாவிடம் வினவ
“ நானும் அதான் யோசிக்குறேன் கிச்சா” என ஹர்ஷா சொல்லிக்கொண்டிருக்கும் போது திடீரென எதோ தோன்றியவனாக,
“ டேய் கிச்சா எனக்கு ஒரு யோசனை”
“ என்னதுடா????”
“ முன்னாடி ரெஜிஸ்டர்ல நோயாளியோட பேரு இருக்கும்ல. நாம இந்த அறையோட எண்ணை சொல்லி இங்க இருக்குறது ஆணா இல்ல பொண்ணான்னு தெரிஞ்சுக்கலாம்” என கூறி ஹர்ஷா கிஷோரை அழைத்துக்கொண்டு வரவேற்பறைக்கு சென்றான்.
வரவேற்பறையில் இருந்த பெண்ணிடம்,
“ Excuse me ” என ஹர்ஷா அழைக்க,
“ சொல்லுங்க சார்”
“ அறை எண் 101 ல இருக்குற பேஷண்ட் என் நண்பனோட சொந்தம். அவன் என்னைய இந்த ஹாஸ்பிட்டல்ல அவுங்களுக்கு ஆகுற செலவை கட்ட சொல்லி பணம் கொடுத்தான்.
ஆனா பெயர் என்னன்னு மறந்துட்டேன். அதான் அவுங்க பெயரும் எவ்வளவு பணம் கட்டணும்ன்னு சொன்னா நான் பணம் கொடுத்துடுறேன்” என ஹர்ஷா வினவ
“ இதோ ஒரு நிமிஷம் சார் பார்த்து சொல்றேன்” என அந்த பெண் கூறி ரெஜிஸ்டரில் பெயரை பார்த்துவிட்டு,
“ அவுங்க பெயர் வனிதா சார்” என அந்த பெண் கூற,
“ என்னது வனிதாவா!!!????” என கிஷோர் திகைக்க
“ வனிதாவா??? Mam நாங்க கேட்டது அறை எண் 101 ல இருக்குற பேஷண்ட் பெயர” என ஹர்ஷா அந்த பெண்ணிடம் வினவ
“ ஆமா சார் நீங்க சொன்ன அந்த அறையில் இருக்கிற பேஷண்ட் பெயர் வனிதா தான்” என அந்த பெண் கூற,
“ ஓ!! வனிதாவை இங்க சேர்த்தது யாரு???” என ஹர்ஷா கேட்க
அந்த பெண் மீண்டும் ரெஜிஸ்ட்டரை பார்த்துவிட்டு சலிப்புடன் “ ஆதிலிங்க மூர்த்தின்றவரு இங்க வனிதாவ சேர்த்துருக்கார்” என கூறி தொடர்ந்து
“ அப்புறம் பணம் கட்டுறதுன்னா அதோ அங்க இருக்குற முதல் அறைல இருக்குறவர்ட்ட எவ்வளவுன்னு கேட்டு கட்டிருங்க” என கூறி முடித்தாள்.
அந்த பெண் பதில் கூறிய விதத்தில் இருந்தே இனி இதற்கு மேல் எந்த கேள்வி கேட் டாலும் பதில் கிடைக்காது என்பதை புரிந்து கொண்ட ஹர்ஷா; அப்பெண்ணிடம் நன்றி கூறிவிட்டு,
“ வா கிச்சா போலாம்” என கூறி கிஷோரை அழைத்துக்கொண்டு அறை எண் 101 ற்கு வந்தான்.
“ என்ன மச்சி வனிதா இப்போத்தானே இந்த அறைக்குள்ள போனா. இந்த பொண்ணு என்னடானா ஆதிலிங்க மூர்த்தி வனிதாவை இங்க சேர்த்துருக்காருன்னு சொல்லுது.
இங்க எதுக்கு வனிதாவை சேர்க்கணும்.அப்போ வனிதா போன்ல முக்கியமான நபர்ன்னு சொல்லுச்சே அது யாரு???....
ஆஆஆ……….. மண்டையா பிச்சுக்கலாம் போல இருக்கு இப்போ என்ன செய்றது????” என கிஷோர் கடுப்புடன் கேட்க
“ என்ன செய்றதுன்னா……” என ஹர்ஷா தன் பார்வையை சுழலவிட்டுக்கொண்டே கிஷோரிடம்
“ கிச்சா இங்க பாரு இந்த அறையோட கதவு லேசா திறந்துருக்கு. அதனால நாம உள்ளபோய்” என ஹர்ஷா எதோ கூற வரையில் இடை புகுந்த கிஷோர்
“ வனிதா இருந்தா அவள்கிட்ட நேரடியாவே கேட்டுரலாம்ன்னு சொல்றியா?????” என வினவ
“ ஆமா வா போலாம்” என கூறி ஹர்ஷா கதவை லேசாக தட்டிவிட்டு சில நிமிடங்கள் இருவரும் காத்திருக்க
“ என்னடா யாரும் எதுவும் உள்ள இருந்து சொல்லாம இருக்காங்க. வாடா போலாம்” என கூறி அறையினுள் நுழைந்தான் கிஷோர்.
“ டேய் !!! இருடா……” என கத்திக்கொண்டு தன் பின்னால் வந்துகொண்டிருந்த ஹர்ஷாவை கண்டுகொள்ளாமல் அறையினுள் நுழைந்த கிஷோர் அதிர்ச்சியில் வாய் பிளந்து நிற்க,
“ என்னடா நீவாட்டுக்கு உள்ள வந்துட்ட…..” என ஹர்ஷா கிஷோரை திட்ட ஆரம்பிக்கையில்
கிஷோர் தன் வலது கையை தூக்கி தனக்கு எதிரே எதையோ ஹர்ஷாவுக்கு காண்பிக்க.
அதுவரை கிஷோரின் முகத்துக்கு நேராக நின்று கொண்டிருந்த ஹர்ஷா தன் பார்வையை திருப்ப,
அந்த விசாலமான அறையின் நடுவில் ஒரு கட்டிலில் நலுங்கிய சேலையுடன், தலை விரித்து தன் கால்களை நீட்டி கட்டிலில் சாய்ந்து அமர்ந்து இருந்த வனிதாவின் கருவளையம் சூழ்ந்த கண்ணின் கருவிழிகள் எதையோ வெறித்து கொண்டிருந்தது.
“ ஏன் மச்சி அரைமணி நேரத்துல இப்பிடி ஆளே மாறிப்போயிடுச்சு இந்த பொண்ணு. வீட்டுல இருந்து நல்லாத்தானே கிளம்பி வந்துச்சு…..”என கிஷோர் யோசனையுடன் கேட்க,
“ ஹ்ம்ம்” என ஹர்ஷா கூறி வனிதாவிடம்
“ வனிதா” என்று அழைக்க ஆனால் வனிதா ஹர்ஷாவை கவனிக்காமல் எங்கையோ வெறித்துக்கொண்டே அமர்ந்துருந்தாள்.
“ வனிதா” என்று மீண்டும் உரக்க அழைக்க,
அந்த சத்தத்தில் தன் மோன நிலையை கலைத்து அவ்விருவரையும் நோக்கி திரும்பிய வனிதா யாரென தன் விழிகளை சுருக்கி நோக்க.
தங்களை நோக்கி திரும்பிய வனிதாவை கண்ட ஹர்ஷா
“ வனிதா காலையில நல்லாத்தானே இருந்தீங்க. இப்போ என்னாச்சு எதுக்கு இப்பிடி இங்க சேர்த்துருக்கீங்க????” என வினவ
வனிதா பதில் சொல்லாது தன் விழிகள் கொண்டு அவர்கள் யாரென ஆராயும் எண்ணத்துடன் அமர்ந்துருக்க. அதை புரிந்து கொண்ட ஹர்ஷா ,
“ வனிதா நாங்க மாலையில உங்ககிட்ட பேசனும்ன்னு சொன்னேனே. கதிரவனோட…..” என ஹர்ஷா பேசிக்கொண்டிருக்கையில்,
“ கதிர்….. கதிர்…. எப்பிடியிருக்கார். அவரோட உயிருக்கு ஆபத்து ஒன்னும் இல்லையே!! ப்ளீஸ் சொல்லுங்க சார்.
அவருக்கு ஒன்னும் ஆபத்து இல்லையே. அவரு நல்லாத்தானே இருக்கார்” என பதட்டத்துடன் திரும்ப திரும்ப வனிதா ஹர்ஷாவிடம் கெஞ்சலுடன் வினவ
“ என்னடா மச்சி இந்த பொண்ணு சாயங்காலம் உன்னைய கதிர்ன்னு சொன்னுச்சு. இப்போ கதிருக்கு ஆபத்து இல்லைலன்னு பதறுது” என கிஷோர் ஹர்ஷாவிடம் முணுமுணுக்க;
அதற்கு ஹர்ஷா கிஷோரிடம் ஒரு தலை அசைப்புடன் வனிதாவிடம்,
“ கதிருக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. அவர்தான் உங்களுக்கு என்னாச்சுன்னு கண்டுபிடிக்க சொல்லி எங்க கிட்ட உதவி கேட்டார்” என கூற,
“ சார் கதிரோட ஒருதடவை பேசிக்கிறேன். போன் இருந்தா குடுங்க சார்” என வனிதா கெஞ்ச
“ பேசலாம் வனிதா. ஆனா அதுக்கு முன்னாடி ஒன்னு சொல்லுங்க. நீங்களும் கதிரும் ஓடி போறதா இருந்த அன்னைக்கு என்னாச்சு????.
இப்போ எதுக்கு இந்த ஹாஸ்ப்பிட்டல வந்து சேர்ந்துருக்கீங்க???. உங்க அப்பா ஏற்பாடு பண்ணுன கல்யாணதுக்கு முழு சம்மதம்ன்னு சொன்னிங்களே ஏன் அப்பிடி சொன்னிங்க???” என தன் கேள்விகளை ஹர்ஷா வனிதாவிடம் கேட்டுக்கொண்டிருக்கும்போது,
“ அப்போ உன் காதலால்தான் நீ தற்கொலைக்கு முயற்சி பண்ணியா வனி???” என்று திடீரென கேட்ட பெண் குரலில் கிஷோரும் ஹர்ஷாவும் குரல் வந்த திசையை நோக்கி திரும்பி பார்க்க இருவரும் திகைத்து நின்றனர்.
“ சொல்லு வனி உன்னைத்தான் கேட்குறேன். உன் காதல் தான் உன்னோட இந்த முட்டாள்தனமான முடிவுக்கு காரணமா???” என தன் குரலை உயர்த்தி புதியதாக வந்த அந்த பெண் வினவ
அந்த சத்தத்தில் திகைத்து நின்ற கிஷோர், அதுவரை புதிதாக வந்த பெண்ணையும், அந்த பெண் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் எங்கோ வெறித்துக்கொண்டு அமர்ந்து இருந்த வனிதாவையும் ஆராய்ச்சியுடன் நோக்கி கொண்டிருந்த ஹர்ஷாவிடம்,
“ மச்சி என்ன இந்த பொண்ணு பார்க்க வனிதா மாதிரி இருக்கு. ஆனா நாம விசாரிச்ச வரைக்கும், ஏன் இன்னைக்கு வேலு கூட சொன்னானே ஆதிலிங்க மூர்த்திக்கு ஒரு பையன் ஒரு பொண்ணுன்னு. ஆனா இங்க ரெண்டு பேரு ஒரே மாதிரி நிற்கிறாங்க” என குழப்பத்துடன் கேட்க
“ அது மட்டும் இல்ல இந்த புதுசா வந்துருக்க பொண்ணுதான் இந்த ரெண்டு நாளும் பண்ணையார் வீட்டுல வனிதாவா இருந்தது.
அதோட காலையில பார்த்ததும் சாயங்காலம் நாம பேசுனதும் இந்த பொண்ணுக்கிட்டதான்” என ஹர்ஷா கூற
“ எப்பிடி சொல்றடா???”
“ நல்லா பாரு நாம சாயங்காலம் பார்த்து பேசுனப்போ எந்த சுடிதார் போட்டுருந்தாளோ அதே உடைத்தான்.
அதோட கதிர் சொன்னது உண்மையா இருக்குற பட்சத்துல இங்க இந்த ஹாஸ்ப்பிட்டல்ல இருக்குற பொண்ணுதான் வனிதாவா இருக்கணும்” என ஹர்ஷா தன் எண்ணத்தை கூற,
“ நீ சொல்ற மாதிரியும் இருக்கலாம் மச்சி” என கிஷோர் பேசிக்கொண்டிருக்கையில் அதனை தடை செய்யும் விதமாக,
“ என்ன ஒரு தலை காதலாக்கும். அதான் இந்த தற்கொலை முயற்சியா???” என புதிதாக வந்த பெண் தன் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் வனிதா எங்கோ வெறித்து கொண்டிருப்பதை பார்த்து கடுப்புடன் வினவ,
அதற்கும் பதில் சொல்லாமல் வனிதா அமர்ந்துருக்க. அதனை கண்டு மீண்டும் அந்த புதியவள் எதோ கூறவருகையில்,
“ நீங்க எதுக்காக தற்கொலைக்கு முயற்சி பண்ணுனீங்க வனிதா??? என ஹர்ஷா இடைபுகுந்து வினவ
அதற்கு ஹர்ஷாவை நேருக்கு நேர் சந்தித்து தன் கலங்கிய விழிகளோடு தன் தலையசைப்புடன் “ நான் தற்கொலைக்கு முயற்சிக்கல சார்” என வனிதா கூறினாள்.
“ என்னது தற்கொலைக்கு முயற்சிக்கலையா????. பொய் சொல்லாத டாக்டர் ரிப்போர்ட்ல நீ பாலுல விஷம் கலந்து குடுச்சுருக்கன்னு போட்டுருக்கு” என அந்த புதியவள் கோவத்தோடு கூற
“ விஷத்தை நானாதான் குடிக்கனுமா??. வேற யாரும் எனக்கு கலந்து குடுத்து கொலைக்கு கூட முயற்சி செஞ்சுருக்கலாம் இல்லையா விசித்ரா????” என வனிதா அந்த புதியவளிடம் நக்கலாக கூறினாள்.
“ டேய் மச்சி இந்த பொண்ணு பேரு விசித்ராவாம்” என கிஷோர் ஹர்ஷாவிடம் முணுமுணுக்க;
“ நானும் கவனிச்சேன். இப்போ நீ கம்முன்னு இருடா” என ஹர்ஷா கூறிவிட்டு வனிதாவிடம்,
“ கொலை முயற்சியா யாரு???. எதுக்காக வனிதா???” என கேட்க. அதற்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருந்த வனிதாவிடம்
“ சொல்லு வனி யாரு உன்னைய கொலை செய்ய முயற்சி பண்ணுனது” என விசித்ரா கேட்க,
“ அப்பாதான்” என வனிதா விரக்தி குரலில் கூற,
“ என்னது அப்பாவா!!!!!!” என விசித்திராவும்
“ பண்ணையாரா!!!!!” என கிஷோரும் திகைத்தனர்.
“ ஆதிலிங்க மூர்த்தியா!!!!, அவரே கொலை செய்ய முயற்சி பண்ணிட்டு அவரே எதுக்கு காப்பாத்த நினைக்கணும்????” என ஹர்ஷா சந்தேகமாக கேள்வி எழுப்பினான்.
விசித்ரா வனிதாவாக நடிக்க காரணாம் என்ன?????....................
கொலை முயற்சி செய்தது ஆதிலிங்க மூர்த்தியா????.............................
ஹர்ஷாவின் கேள்விக்கு விடை கிடைக்குமா?????...............................................
sikiram ella questions kum ans sollunga madam
10.
ஹாஸ்பிட்டலுக்கு சென்ற வனிதா நேராக ரெண்டாம் தளத்தில் இருந்த ஒரு
அறைக்குள் நுழைந்தாள்.
அவளை பின்தொடர்ந்து வந்த ஹர்ஷாவும் கிஷோரும் வனிதா நுழைந்த அறையின் வாசலில் நின்றுகொண்டிருந்தனர்.
"என்னடா மச்சி இந்த பொண்ணு உள்ள போயிடுச்சு. கதவும் சாத்திருக்கு .நாம
எப்படி உள்ள போய் யாரு அந்த முக்கியமான ஆளுன்னு கண்டுபிடிக்குறது???. எப்படி வனிதாவோட பேசுறது????” என கிஷோர் ஹர்ஷாவிடம் வினவ
“ நானும் அதான் யோசிக்குறேன் கிச்சா” என ஹர்ஷா சொல்லிக்கொண்டிருக்கும் போது திடீரென எதோ தோன்றியவனாக,
“ டேய் கிச்சா எனக்கு ஒரு யோசனை”
“ என்னதுடா????”
“ முன்னாடி ரெஜிஸ்டர்ல நோயாளியோட பேரு இருக்கும்ல. நாம இந்த அறையோட எண்ணை சொல்லி இங்க இருக்குறது ஆணா இல்ல பொண்ணான்னு தெரிஞ்சுக்கலாம்” என கூறி ஹர்ஷா கிஷோரை அழைத்துக்கொண்டு வரவேற்பறைக்கு சென்றான்.
வரவேற்பறையில் இருந்த பெண்ணிடம்,
“ Excuse me ” என ஹர்ஷா அழைக்க,
“ சொல்லுங்க சார்”
“ அறை எண் 101 ல இருக்குற பேஷண்ட் என் நண்பனோட சொந்தம். அவன் என்னைய இந்த ஹாஸ்பிட்டல்ல அவுங்களுக்கு ஆகுற செலவை கட்ட சொல்லி பணம் கொடுத்தான்.
ஆனா பெயர் என்னன்னு மறந்துட்டேன். அதான் அவுங்க பெயரும் எவ்வளவு பணம் கட்டணும்ன்னு சொன்னா நான் பணம் கொடுத்துடுறேன்” என ஹர்ஷா வினவ
“ இதோ ஒரு நிமிஷம் சார் பார்த்து சொல்றேன்” என அந்த பெண் கூறி ரெஜிஸ்டரில் பெயரை பார்த்துவிட்டு,
“ அவுங்க பெயர் வனிதா சார்” என அந்த பெண் கூற,
“ என்னது வனிதாவா!!!????” என கிஷோர் திகைக்க
“ வனிதாவா??? Mam நாங்க கேட்டது அறை எண் 101 ல இருக்குற பேஷண்ட் பெயர” என ஹர்ஷா அந்த பெண்ணிடம் வினவ
“ ஆமா சார் நீங்க சொன்ன அந்த அறையில் இருக்கிற பேஷண்ட் பெயர் வனிதா தான்” என அந்த பெண் கூற,
“ ஓ!! வனிதாவை இங்க சேர்த்தது யாரு???” என ஹர்ஷா கேட்க
அந்த பெண் மீண்டும் ரெஜிஸ்ட்டரை பார்த்துவிட்டு சலிப்புடன் “ ஆதிலிங்க மூர்த்தின்றவரு இங்க வனிதாவ சேர்த்துருக்கார்” என கூறி தொடர்ந்து
“ அப்புறம் பணம் கட்டுறதுன்னா அதோ அங்க இருக்குற முதல் அறைல இருக்குறவர்ட்ட எவ்வளவுன்னு கேட்டு கட்டிருங்க” என கூறி முடித்தாள்.
அந்த பெண் பதில் கூறிய விதத்தில் இருந்தே இனி இதற்கு மேல் எந்த கேள்வி கேட் டாலும் பதில் கிடைக்காது என்பதை புரிந்து கொண்ட ஹர்ஷா; அப்பெண்ணிடம் நன்றி கூறிவிட்டு,
“ வா கிச்சா போலாம்” என கூறி கிஷோரை அழைத்துக்கொண்டு அறை எண் 101 ற்கு வந்தான்.
“ என்ன மச்சி வனிதா இப்போத்தானே இந்த அறைக்குள்ள போனா. இந்த பொண்ணு என்னடானா ஆதிலிங்க மூர்த்தி வனிதாவை இங்க சேர்த்துருக்காருன்னு சொல்லுது.
இங்க எதுக்கு வனிதாவை சேர்க்கணும்.அப்போ வனிதா போன்ல முக்கியமான நபர்ன்னு சொல்லுச்சே அது யாரு???....
ஆஆஆ……….. மண்டையா பிச்சுக்கலாம் போல இருக்கு இப்போ என்ன செய்றது????” என கிஷோர் கடுப்புடன் கேட்க
“ என்ன செய்றதுன்னா……” என ஹர்ஷா தன் பார்வையை சுழலவிட்டுக்கொண்டே கிஷோரிடம்
“ கிச்சா இங்க பாரு இந்த அறையோட கதவு லேசா திறந்துருக்கு. அதனால நாம உள்ளபோய்” என ஹர்ஷா எதோ கூற வரையில் இடை புகுந்த கிஷோர்
“ வனிதா இருந்தா அவள்கிட்ட நேரடியாவே கேட்டுரலாம்ன்னு சொல்றியா?????” என வினவ
“ ஆமா வா போலாம்” என கூறி ஹர்ஷா கதவை லேசாக தட்டிவிட்டு சில நிமிடங்கள் இருவரும் காத்திருக்க
“ என்னடா யாரும் எதுவும் உள்ள இருந்து சொல்லாம இருக்காங்க. வாடா போலாம்” என கூறி அறையினுள் நுழைந்தான் கிஷோர்.
“ டேய் !!! இருடா……” என கத்திக்கொண்டு தன் பின்னால் வந்துகொண்டிருந்த ஹர்ஷாவை கண்டுகொள்ளாமல் அறையினுள் நுழைந்த கிஷோர் அதிர்ச்சியில் வாய் பிளந்து நிற்க,
“ என்னடா நீவாட்டுக்கு உள்ள வந்துட்ட…..” என ஹர்ஷா கிஷோரை திட்ட ஆரம்பிக்கையில்
கிஷோர் தன் வலது கையை தூக்கி தனக்கு எதிரே எதையோ ஹர்ஷாவுக்கு காண்பிக்க.
அதுவரை கிஷோரின் முகத்துக்கு நேராக நின்று கொண்டிருந்த ஹர்ஷா தன் பார்வையை திருப்ப,
அந்த விசாலமான அறையின் நடுவில் ஒரு கட்டிலில் நலுங்கிய சேலையுடன், தலை விரித்து தன் கால்களை நீட்டி கட்டிலில் சாய்ந்து அமர்ந்து இருந்த வனிதாவின் கருவளையம் சூழ்ந்த கண்ணின் கருவிழிகள் எதையோ வெறித்து கொண்டிருந்தது.
“ ஏன் மச்சி அரைமணி நேரத்துல இப்பிடி ஆளே மாறிப்போயிடுச்சு இந்த பொண்ணு. வீட்டுல இருந்து நல்லாத்தானே கிளம்பி வந்துச்சு…..”என கிஷோர் யோசனையுடன் கேட்க,
“ ஹ்ம்ம்” என ஹர்ஷா கூறி வனிதாவிடம்
“ வனிதா” என்று அழைக்க ஆனால் வனிதா ஹர்ஷாவை கவனிக்காமல் எங்கையோ வெறித்துக்கொண்டே அமர்ந்துருந்தாள்.
“ வனிதா” என்று மீண்டும் உரக்க அழைக்க,
அந்த சத்தத்தில் தன் மோன நிலையை கலைத்து அவ்விருவரையும் நோக்கி திரும்பிய வனிதா யாரென தன் விழிகளை சுருக்கி நோக்க.
தங்களை நோக்கி திரும்பிய வனிதாவை கண்ட ஹர்ஷா
“ வனிதா காலையில நல்லாத்தானே இருந்தீங்க. இப்போ என்னாச்சு எதுக்கு இப்பிடி இங்க சேர்த்துருக்கீங்க????” என வினவ
வனிதா பதில் சொல்லாது தன் விழிகள் கொண்டு அவர்கள் யாரென ஆராயும் எண்ணத்துடன் அமர்ந்துருக்க. அதை புரிந்து கொண்ட ஹர்ஷா ,
“ வனிதா நாங்க மாலையில உங்ககிட்ட பேசனும்ன்னு சொன்னேனே. கதிரவனோட…..” என ஹர்ஷா பேசிக்கொண்டிருக்கையில்,
“ கதிர்….. கதிர்…. எப்பிடியிருக்கார். அவரோட உயிருக்கு ஆபத்து ஒன்னும் இல்லையே!! ப்ளீஸ் சொல்லுங்க சார்.
அவருக்கு ஒன்னும் ஆபத்து இல்லையே. அவரு நல்லாத்தானே இருக்கார்” என பதட்டத்துடன் திரும்ப திரும்ப வனிதா ஹர்ஷாவிடம் கெஞ்சலுடன் வினவ
“ என்னடா மச்சி இந்த பொண்ணு சாயங்காலம் உன்னைய கதிர்ன்னு சொன்னுச்சு. இப்போ கதிருக்கு ஆபத்து இல்லைலன்னு பதறுது” என கிஷோர் ஹர்ஷாவிடம் முணுமுணுக்க;
அதற்கு ஹர்ஷா கிஷோரிடம் ஒரு தலை அசைப்புடன் வனிதாவிடம்,
“ கதிருக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. அவர்தான் உங்களுக்கு என்னாச்சுன்னு கண்டுபிடிக்க சொல்லி எங்க கிட்ட உதவி கேட்டார்” என கூற,
“ சார் கதிரோட ஒருதடவை பேசிக்கிறேன். போன் இருந்தா குடுங்க சார்” என வனிதா கெஞ்ச
“ பேசலாம் வனிதா. ஆனா அதுக்கு முன்னாடி ஒன்னு சொல்லுங்க. நீங்களும் கதிரும் ஓடி போறதா இருந்த அன்னைக்கு என்னாச்சு????.
இப்போ எதுக்கு இந்த ஹாஸ்ப்பிட்டல வந்து சேர்ந்துருக்கீங்க???. உங்க அப்பா ஏற்பாடு பண்ணுன கல்யாணதுக்கு முழு சம்மதம்ன்னு சொன்னிங்களே ஏன் அப்பிடி சொன்னிங்க???” என தன் கேள்விகளை ஹர்ஷா வனிதாவிடம் கேட்டுக்கொண்டிருக்கும்போது,
“ அப்போ உன் காதலால்தான் நீ தற்கொலைக்கு முயற்சி பண்ணியா வனி???” என்று திடீரென கேட்ட பெண் குரலில் கிஷோரும் ஹர்ஷாவும் குரல் வந்த திசையை நோக்கி திரும்பி பார்க்க இருவரும் திகைத்து நின்றனர்.
“ சொல்லு வனி உன்னைத்தான் கேட்குறேன். உன் காதல் தான் உன்னோட இந்த முட்டாள்தனமான முடிவுக்கு காரணமா???” என தன் குரலை உயர்த்தி புதியதாக வந்த அந்த பெண் வினவ
அந்த சத்தத்தில் திகைத்து நின்ற கிஷோர், அதுவரை புதிதாக வந்த பெண்ணையும், அந்த பெண் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் எங்கோ வெறித்துக்கொண்டு அமர்ந்து இருந்த வனிதாவையும் ஆராய்ச்சியுடன் நோக்கி கொண்டிருந்த ஹர்ஷாவிடம்,
“ மச்சி என்ன இந்த பொண்ணு பார்க்க வனிதா மாதிரி இருக்கு. ஆனா நாம விசாரிச்ச வரைக்கும், ஏன் இன்னைக்கு வேலு கூட சொன்னானே ஆதிலிங்க மூர்த்திக்கு ஒரு பையன் ஒரு பொண்ணுன்னு. ஆனா இங்க ரெண்டு பேரு ஒரே மாதிரி நிற்கிறாங்க” என குழப்பத்துடன் கேட்க
“ அது மட்டும் இல்ல இந்த புதுசா வந்துருக்க பொண்ணுதான் இந்த ரெண்டு நாளும் பண்ணையார் வீட்டுல வனிதாவா இருந்தது.
அதோட காலையில பார்த்ததும் சாயங்காலம் நாம பேசுனதும் இந்த பொண்ணுக்கிட்டதான்” என ஹர்ஷா கூற
“ எப்பிடி சொல்றடா???”
“ நல்லா பாரு நாம சாயங்காலம் பார்த்து பேசுனப்போ எந்த சுடிதார் போட்டுருந்தாளோ அதே உடைத்தான்.
அதோட கதிர் சொன்னது உண்மையா இருக்குற பட்சத்துல இங்க இந்த ஹாஸ்ப்பிட்டல்ல இருக்குற பொண்ணுதான் வனிதாவா இருக்கணும்” என ஹர்ஷா தன் எண்ணத்தை கூற,
“ நீ சொல்ற மாதிரியும் இருக்கலாம் மச்சி” என கிஷோர் பேசிக்கொண்டிருக்கையில் அதனை தடை செய்யும் விதமாக,
“ என்ன ஒரு தலை காதலாக்கும். அதான் இந்த தற்கொலை முயற்சியா???” என புதிதாக வந்த பெண் தன் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் வனிதா எங்கோ வெறித்து கொண்டிருப்பதை பார்த்து கடுப்புடன் வினவ,
அதற்கும் பதில் சொல்லாமல் வனிதா அமர்ந்துருக்க. அதனை கண்டு மீண்டும் அந்த புதியவள் எதோ கூறவருகையில்,
“ நீங்க எதுக்காக தற்கொலைக்கு முயற்சி பண்ணுனீங்க வனிதா??? என ஹர்ஷா இடைபுகுந்து வினவ
அதற்கு ஹர்ஷாவை நேருக்கு நேர் சந்தித்து தன் கலங்கிய விழிகளோடு தன் தலையசைப்புடன் “ நான் தற்கொலைக்கு முயற்சிக்கல சார்” என வனிதா கூறினாள்.
“ என்னது தற்கொலைக்கு முயற்சிக்கலையா????. பொய் சொல்லாத டாக்டர் ரிப்போர்ட்ல நீ பாலுல விஷம் கலந்து குடுச்சுருக்கன்னு போட்டுருக்கு” என அந்த புதியவள் கோவத்தோடு கூற
“ விஷத்தை நானாதான் குடிக்கனுமா??. வேற யாரும் எனக்கு கலந்து குடுத்து கொலைக்கு கூட முயற்சி செஞ்சுருக்கலாம் இல்லையா விசித்ரா????” என வனிதா அந்த புதியவளிடம் நக்கலாக கூறினாள்.
“ டேய் மச்சி இந்த பொண்ணு பேரு விசித்ராவாம்” என கிஷோர் ஹர்ஷாவிடம் முணுமுணுக்க;
“ நானும் கவனிச்சேன். இப்போ நீ கம்முன்னு இருடா” என ஹர்ஷா கூறிவிட்டு வனிதாவிடம்,
“ கொலை முயற்சியா யாரு???. எதுக்காக வனிதா???” என கேட்க. அதற்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருந்த வனிதாவிடம்
“ சொல்லு வனி யாரு உன்னைய கொலை செய்ய முயற்சி பண்ணுனது” என விசித்ரா கேட்க,
“ அப்பாதான்” என வனிதா விரக்தி குரலில் கூற,
“ என்னது அப்பாவா!!!!!!” என விசித்திராவும்
“ பண்ணையாரா!!!!!” என கிஷோரும் திகைத்தனர்.
“ ஆதிலிங்க மூர்த்தியா!!!!, அவரே கொலை செய்ய முயற்சி பண்ணிட்டு அவரே எதுக்கு காப்பாத்த நினைக்கணும்????” என ஹர்ஷா சந்தேகமாக கேள்வி எழுப்பினான்.
விசித்ரா வனிதாவாக நடிக்க காரணாம் என்ன?????....................
கொலை முயற்சி செய்தது ஆதிலிங்க மூர்த்தியா????.............................
ஹர்ஷாவின் கேள்விக்கு விடை கிடைக்குமா?????...............................................
Eagerly Waiting for next episodesikiram ella questions kum ans sollunga madam
SUPER TURNING POINT
Thanks mam ????sikiram ella questions kum ans sollunga madam
SUPER TURNING POINT