விண்மீன்களின் சதிராட்டம்
தலைப்புக்கேற்ற கதை....அன்னையரின் சதிராட்டம் என்றால் இன்னுமே பொருத்தமாய் இருக்கும்....??
இரு இணையரின் கதையாக இருந்தாலும் எந்த இடத்திலும் எந்த கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் குறையாமல் கதையை நடத்திச் சென்ற விதம் அருமை..
இரு இணைகளுக்கிடையேயான புரிதலையும் நேசத்தையும் தவிப்பையும் இயல்பாக எழுதி இருக்கிறார்...
குடும்பப் பொறுப்புகள், அது சார்ந்த சில மனக்கசப்புகள் என ஒரு சாதாரண குடும்பத்தின் அத்தனை பரிமாணத்தையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்.....
ஒருபுறம்..
தன் இலட்சியத்தைத் தடைகளைத் தாண்டி எப்பாடுபட்டாவது அடைந்துவிட வேண்டுமென்று முயற்சிக்கும் வேதாவும் உறுதுணையாய் எப்பொழுதும் நிற்கும் விக்ரமும் படிப்போரைக் கவர்வார்களெனில்,
மறுபுறுமோ
காதலில் உறுதியாய் நின்று போராடி காதலைக் கைகூடச் செய்யும் தங்கள் முயற்சியில் ராஜனும் மஞ்சரியும் வசீகரித்து விடுவார்கள்....
ஜோசியத்தை விட மனிதரின் மனமென்ற ஒன்றில் இருக்கும் விருப்புகள் வெறுப்புகள் தான் கருத்தில் கொள்ளவேண்டியன என படிப்போர் மனதில் நிறுத்தி அழகாய்க் கதையை நிறைவு செய்கிறார் எழுத்தாளர்...
எழுத்தாளரின் முதல் கதை என்றால் நம்புவது சிரமமே...கதையில் எங்கும் தொய்வில்லாமல் குழப்பங்கள் இல்லா எளிமையான நடை...
இயல்பான பெரிதான திருப்புமுனைகளும் சோகமும் இல்லாத கதை படிக்க விரும்புவோர் நிச்சயமாய்ப் படியுங்கள்...??
@Kavitha hearty wishes for the upcoming successes too....
தலைப்புக்கேற்ற கதை....அன்னையரின் சதிராட்டம் என்றால் இன்னுமே பொருத்தமாய் இருக்கும்....??
இரு இணையரின் கதையாக இருந்தாலும் எந்த இடத்திலும் எந்த கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் குறையாமல் கதையை நடத்திச் சென்ற விதம் அருமை..
இரு இணைகளுக்கிடையேயான புரிதலையும் நேசத்தையும் தவிப்பையும் இயல்பாக எழுதி இருக்கிறார்...
குடும்பப் பொறுப்புகள், அது சார்ந்த சில மனக்கசப்புகள் என ஒரு சாதாரண குடும்பத்தின் அத்தனை பரிமாணத்தையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்.....
ஒருபுறம்..
தன் இலட்சியத்தைத் தடைகளைத் தாண்டி எப்பாடுபட்டாவது அடைந்துவிட வேண்டுமென்று முயற்சிக்கும் வேதாவும் உறுதுணையாய் எப்பொழுதும் நிற்கும் விக்ரமும் படிப்போரைக் கவர்வார்களெனில்,
மறுபுறுமோ
காதலில் உறுதியாய் நின்று போராடி காதலைக் கைகூடச் செய்யும் தங்கள் முயற்சியில் ராஜனும் மஞ்சரியும் வசீகரித்து விடுவார்கள்....
ஜோசியத்தை விட மனிதரின் மனமென்ற ஒன்றில் இருக்கும் விருப்புகள் வெறுப்புகள் தான் கருத்தில் கொள்ளவேண்டியன என படிப்போர் மனதில் நிறுத்தி அழகாய்க் கதையை நிறைவு செய்கிறார் எழுத்தாளர்...
எழுத்தாளரின் முதல் கதை என்றால் நம்புவது சிரமமே...கதையில் எங்கும் தொய்வில்லாமல் குழப்பங்கள் இல்லா எளிமையான நடை...
இயல்பான பெரிதான திருப்புமுனைகளும் சோகமும் இல்லாத கதை படிக்க விரும்புவோர் நிச்சயமாய்ப் படியுங்கள்...??
@Kavitha hearty wishes for the upcoming successes too....