நகரின் முக்கியமான பகுதியில் பிரமாண்டமாய் அமைந்திருந்த அந்த மண்டபம் முழுவதும் அலங்கார விளக்காலும், வண்ண வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு, மணமகளின் வரவிற்காய் காத்திருந்தது. மண்டபத்தின் வாயிலில் வீற்றிருந்த பதகையில், " செழியன் வெட்ஸ் இதழினி " என்று தங்க நிற எழுத்துக்கள் மின்ன, அதனுள் இருவரின் புகைபடமும் இணைந்து வருவோரை பரவசபடுத்தி கொண்டிருந்தது.
குறைவான நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்று சொன்னால் நம்பிட இயலாத வகையில், அனைத்து விசயங்களும் மிக மிக பிரமாண்டமாய் செய்து முடிக்கப்பட்டிருந்தது, மதியின் அழகான திட்டமிடுதலில்….
சந்துருவும், செழியனும் வெளி வேலைகளோடு, அவர்களின் தொழிலையும் பார்க்க வேண்டி இருந்ததால், முக்கிய விசயங்களை மட்டும் அவர்களை கொண்டு முடித்தவர், மற்ற அனைத்தையும், அதற்கான ஏஜென்ட்டை கொண்டு சிறப்பாக செய்திருந்தார், தனது ஆசை மகனின் திருமணத்திற்காக…
வீட்டிலிருந்து புறப்பட்ட கணம் முதல், அபிதாவும், வினிதாவும், ஆனந்தோடு சேர்ந்து இதழினியை கலாய்த்த படி வர, அந்த ஏசி காரிலும் வேர்த்து போனது இதழினிக்கு..
அதே மனநிலையில், இதழினி இருக்கும் போது, மண்டபத்திற்குள் கார் நுழைய, அவளின் மனமோ படபடத்து போனது. அதனால் எதையும் பாராமல், வியர்வையால் ஈரமாகி போன கரத்தை ஒன்றோடென்று பிணைத்துக்கொண்டு, எங்கே தனது இந்த பதட்டம் தனக்கு மயக்கத்தை தந்திடுமோ?! அதனால் தனது தந்தைக்கு எதாவது அவப்பெயர் வந்திடுமோ?! என்ற குழப்பத்தோடு… காரிலிருந்து தரையில் கால் பதித்தாள் இதழினி..
வாசலில் அவள் இறங்கியதும், வாணவேடிக்கையோடு, வரிசையாக வந்த பலரும் பலவிதமான ஆலம் சுற்றி வரவேற்க, தன் குடும்பம் சூழ, அந்த மண்டபத்தில் வலது கால் எடுத்து வைத்து நுழைந்தாள் இதழினி.
அவள் வந்து இறங்கிய நொடியே அவளை பார்த்தவன், "எங்கே தன் விழியை மூடினால் கூட காட்சி மறைந்திடுமோ!" என்றவாறு சிலையாகி போனான், செழியன்.
சந்துருவோடு சேர்ந்த அவர்களின் நண்பர்களின் கேலியும், கிண்டலும் கூட அவனின் அந்நிலையை மாற்றவில்லை.
எத்தனை வருட கனவிது. அதிலும் தான் தேர்ந்தெடுத்த புடவையில், முழு மணமகள் அலங்காரத்தில்… தன்னவளின் அழகு மேலும் அவனை பித்தனாக்கி, சிலை போல நிற்க வைத்ததில் வியப்பேது.
"மச்சான், இவன இப்படியே விட்டா நாளைக்கு கல்யாணம் கூட பண்ணாம பார்த்துட்டே இருப்பான் போலடா. எதாச்சும் செஞ்சு அவள எழுப்பி விடுங்கடா, தூங்கறானா?! முழுச்சிருக்கானா.?! தெரியாத மாதிரியே நிக்கறானே.
மாப்பிள்ளை மாதிரியான.. "ஸ்டேச்சூ" ன்னு கொண்டு போய், என்ட்ரன்ஸ்ல, வரவேற்புக்கு வச்சிட போறாங்க" என்ற சந்துருவின் வார்த்தையில், நண்பர்கள் குழு சிரிப்போடு, செழியனை உசிப்பிவிட, அப்போது தான் நடப்பிற்கு வந்தவன்,
அவர்கள் முன்பு, தான் நின்ற நிலை புரிய சிறு சிரிப்போடு, வெக்கத்தை வெளிப்படுத்த.. "ஓ.. " என்ற நண்பர்களின் ஆர்ப்பரிப்பில், மேலும் முகம் சிவக்க நின்றான் செழியன்.
இதழினி, சரியாக மேடை ஏறும் போது, ஒரு புறம் கேட்ட பயங்கரமான ஆர்ப்பரிப்பில், தன் பார்வையை அந்த திசை நோக்கி திருப்பிட, அங்கிருந்த செழியனையும், சந்துருவையும் பார்த்த நொடி.. 'என்ன மாதிரி உணர்ந்தாள்!' என்பது புரியாத புதிர் தான்.
மனதில் இருந்த இறுக்கம் மெல்ல தளர, பிடிமானம் இல்லா படகாய் தடுமாறியவளை, நல்ல வேளையாக பின்னே வந்த அபிதா தாங்கி பிடித்திருந்தாள். முதலில் அதிர்ச்சியும், பின் அவனை பார்த்துவிட்ட ஆசுவாசமும் வெளிப்பட்ட அதே நேரம், அவன் இங்கே எப்படி?! எதற்கு வந்திருப்பான்?! என்ற சில நொடி அதிர்வுக்கு பின், அவனின் உடையும், அவனுடன் இருக்கும் சந்துருவினால், செழியன், மது மேடத்தின் மகனாய் இருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், இனி தன் மனதில் வந்த நேசத்தை, பொய் முலாம் பூசி மறைத்திட வேண்டிய அவசியமில்லை என்ற நிம்மதியும் அடுத்தடுத்து தோன்றிட, செழியனிடமிருந்து தனது பார்வையை விலக்காது நின்றிருந்தாள், சில நிமிடங்களுக்கு முன் செழியன் நின்ற அதே கோலத்தில்….
அவளையே பார்த்திருந்த செழியனுக்கு, அவளின் கண்ணில் வந்த ஒரு நொடி வெளிச்சம், அவன், அவளிடம் இத்தனை வருடமாக எதை எதிர்பார்த்திருந்தானோ அதற்கு பதில் கிடைத்துவிட்ட போதும்,
அவளின் தடுமாற்றம், அடுத்தடுத்த பாவங்கள், அவளை எப்படியான மனஉளைச்சலை, தனது செயல் தந்திருக்கும் என்பது மிகவும் கால தாமதமாக உணர்த்தியதில், சிறு குற்ற குறுகுறும்பு எழுவதை தவிர்க்க தான் அவனால் முடியவில்லை.
அந்த குற்ற உணர்வு, அவனின் முகத்தில் இதுவரை இருந்த சிரிப்பை முற்றிலும் மறைத்திட, முகம் மெல்ல கடுமைக்கு மாறி போனது. அவனின் மாற்றத்தை முதலில் கவனித்த சந்திரு, "செழியா ஏன்டா, என்னாச்சு திடீர்ன்னு டல்லாகிட்ட?!" என்று மற்றவர் அறியாத வாறு மெதுவாக கேட்க,
குறைவான நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்று சொன்னால் நம்பிட இயலாத வகையில், அனைத்து விசயங்களும் மிக மிக பிரமாண்டமாய் செய்து முடிக்கப்பட்டிருந்தது, மதியின் அழகான திட்டமிடுதலில்….
சந்துருவும், செழியனும் வெளி வேலைகளோடு, அவர்களின் தொழிலையும் பார்க்க வேண்டி இருந்ததால், முக்கிய விசயங்களை மட்டும் அவர்களை கொண்டு முடித்தவர், மற்ற அனைத்தையும், அதற்கான ஏஜென்ட்டை கொண்டு சிறப்பாக செய்திருந்தார், தனது ஆசை மகனின் திருமணத்திற்காக…
வீட்டிலிருந்து புறப்பட்ட கணம் முதல், அபிதாவும், வினிதாவும், ஆனந்தோடு சேர்ந்து இதழினியை கலாய்த்த படி வர, அந்த ஏசி காரிலும் வேர்த்து போனது இதழினிக்கு..
அதே மனநிலையில், இதழினி இருக்கும் போது, மண்டபத்திற்குள் கார் நுழைய, அவளின் மனமோ படபடத்து போனது. அதனால் எதையும் பாராமல், வியர்வையால் ஈரமாகி போன கரத்தை ஒன்றோடென்று பிணைத்துக்கொண்டு, எங்கே தனது இந்த பதட்டம் தனக்கு மயக்கத்தை தந்திடுமோ?! அதனால் தனது தந்தைக்கு எதாவது அவப்பெயர் வந்திடுமோ?! என்ற குழப்பத்தோடு… காரிலிருந்து தரையில் கால் பதித்தாள் இதழினி..
வாசலில் அவள் இறங்கியதும், வாணவேடிக்கையோடு, வரிசையாக வந்த பலரும் பலவிதமான ஆலம் சுற்றி வரவேற்க, தன் குடும்பம் சூழ, அந்த மண்டபத்தில் வலது கால் எடுத்து வைத்து நுழைந்தாள் இதழினி.
அவள் வந்து இறங்கிய நொடியே அவளை பார்த்தவன், "எங்கே தன் விழியை மூடினால் கூட காட்சி மறைந்திடுமோ!" என்றவாறு சிலையாகி போனான், செழியன்.
சந்துருவோடு சேர்ந்த அவர்களின் நண்பர்களின் கேலியும், கிண்டலும் கூட அவனின் அந்நிலையை மாற்றவில்லை.
எத்தனை வருட கனவிது. அதிலும் தான் தேர்ந்தெடுத்த புடவையில், முழு மணமகள் அலங்காரத்தில்… தன்னவளின் அழகு மேலும் அவனை பித்தனாக்கி, சிலை போல நிற்க வைத்ததில் வியப்பேது.
"மச்சான், இவன இப்படியே விட்டா நாளைக்கு கல்யாணம் கூட பண்ணாம பார்த்துட்டே இருப்பான் போலடா. எதாச்சும் செஞ்சு அவள எழுப்பி விடுங்கடா, தூங்கறானா?! முழுச்சிருக்கானா.?! தெரியாத மாதிரியே நிக்கறானே.
மாப்பிள்ளை மாதிரியான.. "ஸ்டேச்சூ" ன்னு கொண்டு போய், என்ட்ரன்ஸ்ல, வரவேற்புக்கு வச்சிட போறாங்க" என்ற சந்துருவின் வார்த்தையில், நண்பர்கள் குழு சிரிப்போடு, செழியனை உசிப்பிவிட, அப்போது தான் நடப்பிற்கு வந்தவன்,
அவர்கள் முன்பு, தான் நின்ற நிலை புரிய சிறு சிரிப்போடு, வெக்கத்தை வெளிப்படுத்த.. "ஓ.. " என்ற நண்பர்களின் ஆர்ப்பரிப்பில், மேலும் முகம் சிவக்க நின்றான் செழியன்.
இதழினி, சரியாக மேடை ஏறும் போது, ஒரு புறம் கேட்ட பயங்கரமான ஆர்ப்பரிப்பில், தன் பார்வையை அந்த திசை நோக்கி திருப்பிட, அங்கிருந்த செழியனையும், சந்துருவையும் பார்த்த நொடி.. 'என்ன மாதிரி உணர்ந்தாள்!' என்பது புரியாத புதிர் தான்.
மனதில் இருந்த இறுக்கம் மெல்ல தளர, பிடிமானம் இல்லா படகாய் தடுமாறியவளை, நல்ல வேளையாக பின்னே வந்த அபிதா தாங்கி பிடித்திருந்தாள். முதலில் அதிர்ச்சியும், பின் அவனை பார்த்துவிட்ட ஆசுவாசமும் வெளிப்பட்ட அதே நேரம், அவன் இங்கே எப்படி?! எதற்கு வந்திருப்பான்?! என்ற சில நொடி அதிர்வுக்கு பின், அவனின் உடையும், அவனுடன் இருக்கும் சந்துருவினால், செழியன், மது மேடத்தின் மகனாய் இருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், இனி தன் மனதில் வந்த நேசத்தை, பொய் முலாம் பூசி மறைத்திட வேண்டிய அவசியமில்லை என்ற நிம்மதியும் அடுத்தடுத்து தோன்றிட, செழியனிடமிருந்து தனது பார்வையை விலக்காது நின்றிருந்தாள், சில நிமிடங்களுக்கு முன் செழியன் நின்ற அதே கோலத்தில்….
அவளையே பார்த்திருந்த செழியனுக்கு, அவளின் கண்ணில் வந்த ஒரு நொடி வெளிச்சம், அவன், அவளிடம் இத்தனை வருடமாக எதை எதிர்பார்த்திருந்தானோ அதற்கு பதில் கிடைத்துவிட்ட போதும்,
அவளின் தடுமாற்றம், அடுத்தடுத்த பாவங்கள், அவளை எப்படியான மனஉளைச்சலை, தனது செயல் தந்திருக்கும் என்பது மிகவும் கால தாமதமாக உணர்த்தியதில், சிறு குற்ற குறுகுறும்பு எழுவதை தவிர்க்க தான் அவனால் முடியவில்லை.
அந்த குற்ற உணர்வு, அவனின் முகத்தில் இதுவரை இருந்த சிரிப்பை முற்றிலும் மறைத்திட, முகம் மெல்ல கடுமைக்கு மாறி போனது. அவனின் மாற்றத்தை முதலில் கவனித்த சந்திரு, "செழியா ஏன்டா, என்னாச்சு திடீர்ன்னு டல்லாகிட்ட?!" என்று மற்றவர் அறியாத வாறு மெதுவாக கேட்க,