இதயம் கேட்கும் காதல்….
பகுதி 13
கல்யாண நாள் நெருங்க நெருங்க, இதழினிக்கோ, தன் மனதில் எழும் பதட்டமும், தவிப்பும் செழியனின் மீதான நேசத்தை அறிய வைக்க, இத்தகைய சூழலில் தான் அறிந்து கொண்ட நேசத்தை வெளிப்படுத்தவும் முடியாது, அதன் தாக்கத்தை தாங்கவும் இயலாது இருந்தவள், தன் வீட்டில் உள்ளவரிடமிருந்தும் ஒதுங்கி, எதிலும் அக்கரை இல்லாது தவித்தாள்.
கல்யாண பத்திரிக்கை முதல் ஜவுளி வரை எல்லாவற்றையும் தேர்ந்தெடுக்கவென அழைத்த மதுவின் அழைப்பை இயல்பான கூச்சமாய் காட்டி மறுத்தவளை மேலும் வற்புறுத்தாமல், அனைத்தும் செழியனின் ஆசைபடி தேர்ந்தெடுக்கப்பட்டது.
மது வேறு, தங்கள் வீட்டு மருமகள் இனியும் மதி கார்மெண்ட்ஸ்ஸில் வேலைக்காரியாய் வருவது பிடிக்காமல், திருமணம் முடிந்து அந்த கம்பெனி முதலாளியாய் அங்கு வந்தால் போதும் என வந்து சொல்லி சென்று விட, வேலைக்கும் செல்லாததால் வீட்டிலேயே அடைந்து, தனக்கு தானே குழப்பி தவித்தாள் இதழினி..
இதழினியின் முகத்தில் திருமணத்திற்கான எந்த கனவும், ஆசையும் இல்லாது வெறுமாய் இருப்பதை கவனித்த அபிதா, 'செழியன் மாமா தான் மாப்பிள்ளைன்னு தெரியாததால அக்கா இப்படி இருக்கா? இல்ல நம்மள விட்டு பிரிய போறோமின்னு கவலைல இப்படி இருக்கா?' என்று யோசித்தவள்,
முதல் கேள்விக்கு விடையாய், செழியனின் சொல்லை மீறாது, அவன் தான் மாப்பிள்ளை என்பதை காட்டி கொடுக்கும் விதமாய், திருமண அழைப்பிதழை இதழினியிடம் கொடுத்தவள், "அக்கா, இந்த பத்திரிக்கையில, உன் போட்டோவும், மாமா போட்டோவும் போட்டிருக்காங்க. உங்க ஃபேரை இதுல பார்க்கும் போதே சும்மா அள்ளுது.. நேருல நீங்க ஒண்ணா நிக்கும் போது எப்படி இருக்கும் தெரியுமா?" என்றிட, தனது கவலையை, மனதை மறைத்து, மெல்லிய சிரிப்பை பரிசாக்கிய இதழினி,
"நீ சொன்னா சரியா தான்டா இருக்கும்" என்று அதை பெற்றுக்கொண்டு சொன்னவளுக்கு, அதனை பார்க்க மட்டும் மனமே வரவில்லை.
பத்திரிக்கையை கொடுத்த மறுநாளும் இதழினி முகம் தெளியாது இருக்க, தங்களை நினைத்து தான், அவளின் கவலை என்று உறுதியாய் நினைத்தவள், 'திருமணம் முடிந்தால் எல்லாம் சரியாகிவிடும்' என்ற நம்பிக்கையில் தனது வேலையை பார்க்க சென்றாள். அனுபவம் இல்லா பிள்ளையாயிற்றே அவளும்..
நாளும் குறைவாக இருக்க, அடுத்து அடுத்து வேலையும் இருக்க, யாராலும் எதையும் நின்று நிதானமாய் செய்ய முடியவில்லை.
இதில் அபிதாவிற்கும், வினிதாவிற்கும் பரிச்சை திருமணத்தை தொடர்ந்தே இருக்க, அவர்களுக்கு படிப்பும், வீட்டில் சில வேலைகளை முடிக்கவுமே சரியாக இருந்தது நேரம்.
அதனால், முதன் முதலாய் ஆனந்த் மாரியப்பனுக்கு உதவியாய் வேலைகளை பகிர்ந்து கொண்டான். ஆனாலும் அவனின் செயல்களில், சிறு விலகல் இருந்து கொண்டே தான் இருந்தது.
அந்த விலகலும் திருமணத்திற்கு ஒருநாள் முன்பு வரையே நீடித்தது. அவனுக்கும் குடும்பம், உறவு என்பதையெல்லாம் உணர்ந்து கொள்ளும் சந்தர்ப்பம் வந்தது விதி வசத்தால்...
ஆனந்த் வேலை செய்த இடத்தில் இருந்த ஒரு பெண் தற்கொலைக்கு முயல, அதை தொடர்ந்து அந்த பெண்ணின் உறவினர்கள் விசாரித்த வரையில், அங்கு ஆனந்தால் மட்டுமே சில சிக்கல்கள் பெண்களுக்கு வந்ததாய், ஏற்கனவே மாலதி உள்பட இதழினியிடம் சொன்ன சிலர், அவர்களிடமும் சொல்ல, அதையே காரணமென கருதியவர்கள், நேராக போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க, விசாரனை கைதியாய் அடுத்த ஒரு மணி நேரத்தில் காவல் நிலையத்தில் இருந்தான் ஆனந்த்.
கல்யாண வேலையாய் வெளியே வந்தவனை, அங்கிருந்தே அழைத்து சென்றதால் ஆனந்தால் வீட்டிற்கு அழைத்து தகவல் தரஇயலாது போக, தன்னந்தனி ஆளாய் அங்கு இருப்பவர்களுக்கு நடுவே பயத்தால் நடுங்கி போய் நின்றிருந்தான்.
அந்த பெண்ணின் உறவினர்கள் வேறு, நன்கு பணம் கொண்டு அங்கே கவனித்திருக்க, அவர்கள் குற்றவாளியாய் அவனை முடிவே செய்து விட்டு, அடுத்து விசாரணையை அதன் போக்கில் ஆரம்பித்தனர். அவன் ஒத்துக்கொண்டதும் FIR போடும் எண்ணத்தில்...
அவர்கள் கேட்ட அடுக்கடுக்கான கேள்வியில் பாதி கேள்விக்கு அர்த்தமே புரியாது விழித்தவனை, அவன் நடிப்பதாக நினைத்து, "இங்க பாருடா தம்பி.. ஒழுங்கா அந்த பொண்ணு மருந்து குடிக்க காரணம், நீ தான்னு ஒத்துக்கோ, இல்லாட்டி நிறைய ரேப் கேஸ் பெண்டிங்ல இருக்கு, அதோட போதை மருந்து கடத்தல் கேஸையும் சேர்த்து போட்டோமின்னு வைய்யி, உன் ஆயுசுக்கும் வெளிய வரவே முடியாது. எப்படி வசதி?" என்றிட சகலமும் பதறி போனது அவனுக்கு...
"சார், சத்தியமா சொல்றேன். தப்பான எந்த எண்ணத்தோட அங்க யார் கூடவும் நான் பேசினதே இல்ல. எனக்கும் அக்கா, தங்கை ன்னு கூட பிறந்த பெண்கள் இருக்காங்க" என்ற ஆனந்தின் பேச்சையும், கண்ணீரையும் கண்டு கொள்ள தான் யாருமில்லை.
பகுதி 13
கல்யாண நாள் நெருங்க நெருங்க, இதழினிக்கோ, தன் மனதில் எழும் பதட்டமும், தவிப்பும் செழியனின் மீதான நேசத்தை அறிய வைக்க, இத்தகைய சூழலில் தான் அறிந்து கொண்ட நேசத்தை வெளிப்படுத்தவும் முடியாது, அதன் தாக்கத்தை தாங்கவும் இயலாது இருந்தவள், தன் வீட்டில் உள்ளவரிடமிருந்தும் ஒதுங்கி, எதிலும் அக்கரை இல்லாது தவித்தாள்.
கல்யாண பத்திரிக்கை முதல் ஜவுளி வரை எல்லாவற்றையும் தேர்ந்தெடுக்கவென அழைத்த மதுவின் அழைப்பை இயல்பான கூச்சமாய் காட்டி மறுத்தவளை மேலும் வற்புறுத்தாமல், அனைத்தும் செழியனின் ஆசைபடி தேர்ந்தெடுக்கப்பட்டது.
மது வேறு, தங்கள் வீட்டு மருமகள் இனியும் மதி கார்மெண்ட்ஸ்ஸில் வேலைக்காரியாய் வருவது பிடிக்காமல், திருமணம் முடிந்து அந்த கம்பெனி முதலாளியாய் அங்கு வந்தால் போதும் என வந்து சொல்லி சென்று விட, வேலைக்கும் செல்லாததால் வீட்டிலேயே அடைந்து, தனக்கு தானே குழப்பி தவித்தாள் இதழினி..
இதழினியின் முகத்தில் திருமணத்திற்கான எந்த கனவும், ஆசையும் இல்லாது வெறுமாய் இருப்பதை கவனித்த அபிதா, 'செழியன் மாமா தான் மாப்பிள்ளைன்னு தெரியாததால அக்கா இப்படி இருக்கா? இல்ல நம்மள விட்டு பிரிய போறோமின்னு கவலைல இப்படி இருக்கா?' என்று யோசித்தவள்,
முதல் கேள்விக்கு விடையாய், செழியனின் சொல்லை மீறாது, அவன் தான் மாப்பிள்ளை என்பதை காட்டி கொடுக்கும் விதமாய், திருமண அழைப்பிதழை இதழினியிடம் கொடுத்தவள், "அக்கா, இந்த பத்திரிக்கையில, உன் போட்டோவும், மாமா போட்டோவும் போட்டிருக்காங்க. உங்க ஃபேரை இதுல பார்க்கும் போதே சும்மா அள்ளுது.. நேருல நீங்க ஒண்ணா நிக்கும் போது எப்படி இருக்கும் தெரியுமா?" என்றிட, தனது கவலையை, மனதை மறைத்து, மெல்லிய சிரிப்பை பரிசாக்கிய இதழினி,
"நீ சொன்னா சரியா தான்டா இருக்கும்" என்று அதை பெற்றுக்கொண்டு சொன்னவளுக்கு, அதனை பார்க்க மட்டும் மனமே வரவில்லை.
பத்திரிக்கையை கொடுத்த மறுநாளும் இதழினி முகம் தெளியாது இருக்க, தங்களை நினைத்து தான், அவளின் கவலை என்று உறுதியாய் நினைத்தவள், 'திருமணம் முடிந்தால் எல்லாம் சரியாகிவிடும்' என்ற நம்பிக்கையில் தனது வேலையை பார்க்க சென்றாள். அனுபவம் இல்லா பிள்ளையாயிற்றே அவளும்..
நாளும் குறைவாக இருக்க, அடுத்து அடுத்து வேலையும் இருக்க, யாராலும் எதையும் நின்று நிதானமாய் செய்ய முடியவில்லை.
இதில் அபிதாவிற்கும், வினிதாவிற்கும் பரிச்சை திருமணத்தை தொடர்ந்தே இருக்க, அவர்களுக்கு படிப்பும், வீட்டில் சில வேலைகளை முடிக்கவுமே சரியாக இருந்தது நேரம்.
அதனால், முதன் முதலாய் ஆனந்த் மாரியப்பனுக்கு உதவியாய் வேலைகளை பகிர்ந்து கொண்டான். ஆனாலும் அவனின் செயல்களில், சிறு விலகல் இருந்து கொண்டே தான் இருந்தது.
அந்த விலகலும் திருமணத்திற்கு ஒருநாள் முன்பு வரையே நீடித்தது. அவனுக்கும் குடும்பம், உறவு என்பதையெல்லாம் உணர்ந்து கொள்ளும் சந்தர்ப்பம் வந்தது விதி வசத்தால்...
ஆனந்த் வேலை செய்த இடத்தில் இருந்த ஒரு பெண் தற்கொலைக்கு முயல, அதை தொடர்ந்து அந்த பெண்ணின் உறவினர்கள் விசாரித்த வரையில், அங்கு ஆனந்தால் மட்டுமே சில சிக்கல்கள் பெண்களுக்கு வந்ததாய், ஏற்கனவே மாலதி உள்பட இதழினியிடம் சொன்ன சிலர், அவர்களிடமும் சொல்ல, அதையே காரணமென கருதியவர்கள், நேராக போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க, விசாரனை கைதியாய் அடுத்த ஒரு மணி நேரத்தில் காவல் நிலையத்தில் இருந்தான் ஆனந்த்.
கல்யாண வேலையாய் வெளியே வந்தவனை, அங்கிருந்தே அழைத்து சென்றதால் ஆனந்தால் வீட்டிற்கு அழைத்து தகவல் தரஇயலாது போக, தன்னந்தனி ஆளாய் அங்கு இருப்பவர்களுக்கு நடுவே பயத்தால் நடுங்கி போய் நின்றிருந்தான்.
அந்த பெண்ணின் உறவினர்கள் வேறு, நன்கு பணம் கொண்டு அங்கே கவனித்திருக்க, அவர்கள் குற்றவாளியாய் அவனை முடிவே செய்து விட்டு, அடுத்து விசாரணையை அதன் போக்கில் ஆரம்பித்தனர். அவன் ஒத்துக்கொண்டதும் FIR போடும் எண்ணத்தில்...
அவர்கள் கேட்ட அடுக்கடுக்கான கேள்வியில் பாதி கேள்விக்கு அர்த்தமே புரியாது விழித்தவனை, அவன் நடிப்பதாக நினைத்து, "இங்க பாருடா தம்பி.. ஒழுங்கா அந்த பொண்ணு மருந்து குடிக்க காரணம், நீ தான்னு ஒத்துக்கோ, இல்லாட்டி நிறைய ரேப் கேஸ் பெண்டிங்ல இருக்கு, அதோட போதை மருந்து கடத்தல் கேஸையும் சேர்த்து போட்டோமின்னு வைய்யி, உன் ஆயுசுக்கும் வெளிய வரவே முடியாது. எப்படி வசதி?" என்றிட சகலமும் பதறி போனது அவனுக்கு...
"சார், சத்தியமா சொல்றேன். தப்பான எந்த எண்ணத்தோட அங்க யார் கூடவும் நான் பேசினதே இல்ல. எனக்கும் அக்கா, தங்கை ன்னு கூட பிறந்த பெண்கள் இருக்காங்க" என்ற ஆனந்தின் பேச்சையும், கண்ணீரையும் கண்டு கொள்ள தான் யாருமில்லை.