இதயம் கேட்கும் காதல்….
பகுதி 11
ஹரிஹரன், அங்கிருந்து சென்றதும், தோய்ந்து போய் சில நிமிடம் அமர்ந்த இதழினியின் மனமோ, 'தான் எடுத்த முடிவு சரி தான். இதில் மாற்று கருத்து இல்லை' என்ற தெளிவு கிட்டும் வரையிலும், அலைபாய்ந்தபடி இருக்க, மனம் தெளிவானவுடன் பழைய நிமிர்வும், துணிவும் வர, தனது வேலையை தொடர சென்றாள்.
இதுவரை, அங்கு இதழினியின் பேச்சினை கேட்டது, ஹரிஹரன் மட்டுமல்ல, வேறு இரு நபர்களும் கூட தான்!
சந்துருவிடம் சென்ற இதழினி, தனது முடிந்த வேலைக்கான ரிப்போர்ட்டை ஒப்படைத்தவள், அவளின் மற்ற வேலையில் ஆழ்ந்து போக..
சந்துருவுக்கோ, மீண்டும் இதழினியை பார்த்ததும், செழியன் பற்றிய சிந்தனையும், அங்கு அவன் எப்படியான கேள்வியில் சிக்கி தவிக்கிறானோ?! என்ற நினைவும் பாட்டாய் படுத்திட, 'நேராக அங்கே செல்வதும் சரிவராது. எப்படி, என்ன காரணம் கொண்டு, அங்கே செல்வது?' என்ற சிந்தனையில் இருந்தவனுக்கு, அந்த வாய்ப்பை தானாக வழங்கினார், மதி தனது அழைப்பின் மூலம்…
"மே ஐ கம்மின்" என்றதும், "எஸ்" என்ற கம்பீர குரலுக்கு அடுத்து, உள்ளே சென்ற சந்துருவின் மனமோ, குதிரை பந்தையத்தில் ஓடும் குதிரையை விடவும் வேகமாய் துடித்தது.. தன் நண்பனின் கவலையான முகம் பார்க்க வேண்டுமே என்ற தவிப்பால்..
ஆனால் அங்கோ, சந்துருவின் எதிர்பார்ப்பிற்கு, முற்றிலும் மாறாக, நண்பனின் புன்னகை முகத்தில், குழம்பி போய், அவனையும், அங்கிருந்த மதியையும் மாறி மாறி பார்த்திருந்தான்.. 'யாராவது சொல்வார்களா, காரணத்தை!' என்ற எண்ணத்தில்…
"என்ன.. சந்துரு. உன் கூட்டாளி மூஞ்சில எரியற பல்பு விசயத்த சொல்லாம சொல்லுதா? இல்ல நா விளக்கி சொல்லட்டுமா?!" என்றதும், சந்துருவிற்கு அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் ஒருங்கே கிடைத்தது.
மகிழ்வுடன் நண்பனை பார்த்தவன், 'நிஜமாவா?!' என கண்களால் கேட்க, தன் இமைகளை மூடி திறந்து, 'ஆம்' என்றதும் இருக்கும் இடம் மறந்து, "வாவ்.. " என்ற சத்தத்துடன் செழியனை கட்டிபிடித்திருந்தான் சந்துரு..
நண்பனின் இத்தனை ஆண்டு தவத்திற்கு பலனளிக்க, அவனின் குருவே ஒப்புதல் அளித்த பின், யாராலும் அதை தடுக்க இயலாது என்பது அவனுக்கு தெரியாதா என்ன..!!
இருவரின் பாச பிணைப்பு பற்றி நன்றாக தெரிந்திருந்தாலும், என்றும் போல இன்றும், அதுரமாக அவர்களை பார்த்துக்கொண்டிருந்த மதிக்கு கண்கள் கலங்கித்தான் போனது.
அதனை மறைத்து.. "செழியப்பா, இப்பவே சந்திராகிட்ட நா பேசிட்டு, இதழினி வீட்டுலையும் பேசிடுறேன். நீ அதுவரை கொஞ்சம் இதுவரைக்கும், அடங்கி இருந்த மாதிரி இருக்க. சரியா?!" என்றதும்,
மதியை நெருங்கி அவரை அணைத்தவன், "ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மதிம்மா.. நா கேட்டதுக்காக இவ்வளவு வருஷமா, அவளுக்காக பார்த்து பார்த்து செஞ்சதோட, அவளுக்கு பாதுகாப்பும் கொடுத்திருக்கீங்க.
இப்போ அவளை முறையா, என்கிட்ட ஒப்படைக்கிறேன்னு சொன்னது போலவே செய்யவும் போறீங்க.
ஐ'யம் சோ ஹேப்பிம்மா.. லவ் யூ ம்மா.." என சந்தோஷமாக ஆர்ப்பாட்டம் செய்தவனுடன், சந்துருவும் இணைந்து கொள்ள, அந்த அறையே சந்தோஷ கூச்சலால் நிரம்பி வலிந்தது.
அவர்களை பார்த்தவரே, அமர்ந்த மதிக்கோ, செழியன் நான்கு வருடத்திற்கு முன் தன்னை காண வந்த நாள், கண் முன் வந்து போனது.
**********
நான்கு வருடத்திற்கு முன்பு...
இதழினியிடம் காதலை சொல்லி, அதற்கு அவளின் மறுப்பையும், அவளின் உதாசினத்தையும் பொறுத்துக்கொள்ள இயலாது, தனக்கு எப்போதும் குருவாய், நல்ல வழிகாட்டியாய் நினைக்கும் தனது மதியம்மாவின் வீட்டிற்கு விரைந்தான் செழியன், தனது மனபாரத்தை இறக்கிட வேண்டி..
செழியனை பார்த்ததும், முகத்தில் எப்போதும் சந்தோஷத்தையும், குறும்பையும் மட்டுமே காட்டும், தன் மகனின் கண்கள், இன்று ஒளியிழந்து தவிப்புடன் இருக்க, அதை சகிக்காத மதி, "செழியப்பா. என்னடா?!" என்ற வார்த்தையை முடிக்கும் முன்பு, அவரின் மடியில் தலை சாய்த்தவன்..
"ஏம்மா, நான் விளையாட்டு பிள்ளை தான். ஆனா இதுவரை யாரையாவது ஏமாத்த நினச்சிருக்கேனா?! எப்படிம்மா அவ அப்படி சொல்றா?!" என வேதனையோடு கேட்க..
செழியனின், 'அவ' என்ற பதத்திலேயே, இது காதல் விவகாரம் என புரிந்து கொண்ட மதி, அவனின் தலையை கோதிய படியே,
"யாருடா அந்த பொண்ணு ?!" என சாதாரணமாக கேட்க,
அவளை பற்றி, ஆதி முதல் அந்தம் வரை சிறிதும் தடங்கல் இல்லாமல், சொன்னதிலேயே, அவனின் உண்மை காதல் புரிந்து போனது மதிக்கு…
அதேநேரம், செழியன் புரிந்து கொள்ள தவறிய இதழினியின் நிலை, தாயாய் மட்டுமல்ல, சிறந்த தொழிலதிபராய் இருக்கும், மதிக்கு நன்றாகவே புரிந்து போனது.
ஆறுதலாய் அவனின் தலை கோதியபடியே, "செழியப்பா, நீ அந்த பொண்ண ரொம்ப விரும்பறீயா, இல்ல... இந்த காலத்து பசங்களுக்கு வர்ற மாதிரி, இன்ஸ்டன்ட் காதலா?!" என்றதும்,
பகுதி 11
ஹரிஹரன், அங்கிருந்து சென்றதும், தோய்ந்து போய் சில நிமிடம் அமர்ந்த இதழினியின் மனமோ, 'தான் எடுத்த முடிவு சரி தான். இதில் மாற்று கருத்து இல்லை' என்ற தெளிவு கிட்டும் வரையிலும், அலைபாய்ந்தபடி இருக்க, மனம் தெளிவானவுடன் பழைய நிமிர்வும், துணிவும் வர, தனது வேலையை தொடர சென்றாள்.
இதுவரை, அங்கு இதழினியின் பேச்சினை கேட்டது, ஹரிஹரன் மட்டுமல்ல, வேறு இரு நபர்களும் கூட தான்!
சந்துருவிடம் சென்ற இதழினி, தனது முடிந்த வேலைக்கான ரிப்போர்ட்டை ஒப்படைத்தவள், அவளின் மற்ற வேலையில் ஆழ்ந்து போக..
சந்துருவுக்கோ, மீண்டும் இதழினியை பார்த்ததும், செழியன் பற்றிய சிந்தனையும், அங்கு அவன் எப்படியான கேள்வியில் சிக்கி தவிக்கிறானோ?! என்ற நினைவும் பாட்டாய் படுத்திட, 'நேராக அங்கே செல்வதும் சரிவராது. எப்படி, என்ன காரணம் கொண்டு, அங்கே செல்வது?' என்ற சிந்தனையில் இருந்தவனுக்கு, அந்த வாய்ப்பை தானாக வழங்கினார், மதி தனது அழைப்பின் மூலம்…
"மே ஐ கம்மின்" என்றதும், "எஸ்" என்ற கம்பீர குரலுக்கு அடுத்து, உள்ளே சென்ற சந்துருவின் மனமோ, குதிரை பந்தையத்தில் ஓடும் குதிரையை விடவும் வேகமாய் துடித்தது.. தன் நண்பனின் கவலையான முகம் பார்க்க வேண்டுமே என்ற தவிப்பால்..
ஆனால் அங்கோ, சந்துருவின் எதிர்பார்ப்பிற்கு, முற்றிலும் மாறாக, நண்பனின் புன்னகை முகத்தில், குழம்பி போய், அவனையும், அங்கிருந்த மதியையும் மாறி மாறி பார்த்திருந்தான்.. 'யாராவது சொல்வார்களா, காரணத்தை!' என்ற எண்ணத்தில்…
"என்ன.. சந்துரு. உன் கூட்டாளி மூஞ்சில எரியற பல்பு விசயத்த சொல்லாம சொல்லுதா? இல்ல நா விளக்கி சொல்லட்டுமா?!" என்றதும், சந்துருவிற்கு அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் ஒருங்கே கிடைத்தது.
மகிழ்வுடன் நண்பனை பார்த்தவன், 'நிஜமாவா?!' என கண்களால் கேட்க, தன் இமைகளை மூடி திறந்து, 'ஆம்' என்றதும் இருக்கும் இடம் மறந்து, "வாவ்.. " என்ற சத்தத்துடன் செழியனை கட்டிபிடித்திருந்தான் சந்துரு..
நண்பனின் இத்தனை ஆண்டு தவத்திற்கு பலனளிக்க, அவனின் குருவே ஒப்புதல் அளித்த பின், யாராலும் அதை தடுக்க இயலாது என்பது அவனுக்கு தெரியாதா என்ன..!!
இருவரின் பாச பிணைப்பு பற்றி நன்றாக தெரிந்திருந்தாலும், என்றும் போல இன்றும், அதுரமாக அவர்களை பார்த்துக்கொண்டிருந்த மதிக்கு கண்கள் கலங்கித்தான் போனது.
அதனை மறைத்து.. "செழியப்பா, இப்பவே சந்திராகிட்ட நா பேசிட்டு, இதழினி வீட்டுலையும் பேசிடுறேன். நீ அதுவரை கொஞ்சம் இதுவரைக்கும், அடங்கி இருந்த மாதிரி இருக்க. சரியா?!" என்றதும்,
மதியை நெருங்கி அவரை அணைத்தவன், "ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மதிம்மா.. நா கேட்டதுக்காக இவ்வளவு வருஷமா, அவளுக்காக பார்த்து பார்த்து செஞ்சதோட, அவளுக்கு பாதுகாப்பும் கொடுத்திருக்கீங்க.
இப்போ அவளை முறையா, என்கிட்ட ஒப்படைக்கிறேன்னு சொன்னது போலவே செய்யவும் போறீங்க.
ஐ'யம் சோ ஹேப்பிம்மா.. லவ் யூ ம்மா.." என சந்தோஷமாக ஆர்ப்பாட்டம் செய்தவனுடன், சந்துருவும் இணைந்து கொள்ள, அந்த அறையே சந்தோஷ கூச்சலால் நிரம்பி வலிந்தது.
அவர்களை பார்த்தவரே, அமர்ந்த மதிக்கோ, செழியன் நான்கு வருடத்திற்கு முன் தன்னை காண வந்த நாள், கண் முன் வந்து போனது.
**********
நான்கு வருடத்திற்கு முன்பு...
இதழினியிடம் காதலை சொல்லி, அதற்கு அவளின் மறுப்பையும், அவளின் உதாசினத்தையும் பொறுத்துக்கொள்ள இயலாது, தனக்கு எப்போதும் குருவாய், நல்ல வழிகாட்டியாய் நினைக்கும் தனது மதியம்மாவின் வீட்டிற்கு விரைந்தான் செழியன், தனது மனபாரத்தை இறக்கிட வேண்டி..
செழியனை பார்த்ததும், முகத்தில் எப்போதும் சந்தோஷத்தையும், குறும்பையும் மட்டுமே காட்டும், தன் மகனின் கண்கள், இன்று ஒளியிழந்து தவிப்புடன் இருக்க, அதை சகிக்காத மதி, "செழியப்பா. என்னடா?!" என்ற வார்த்தையை முடிக்கும் முன்பு, அவரின் மடியில் தலை சாய்த்தவன்..
"ஏம்மா, நான் விளையாட்டு பிள்ளை தான். ஆனா இதுவரை யாரையாவது ஏமாத்த நினச்சிருக்கேனா?! எப்படிம்மா அவ அப்படி சொல்றா?!" என வேதனையோடு கேட்க..
செழியனின், 'அவ' என்ற பதத்திலேயே, இது காதல் விவகாரம் என புரிந்து கொண்ட மதி, அவனின் தலையை கோதிய படியே,
"யாருடா அந்த பொண்ணு ?!" என சாதாரணமாக கேட்க,
அவளை பற்றி, ஆதி முதல் அந்தம் வரை சிறிதும் தடங்கல் இல்லாமல், சொன்னதிலேயே, அவனின் உண்மை காதல் புரிந்து போனது மதிக்கு…
அதேநேரம், செழியன் புரிந்து கொள்ள தவறிய இதழினியின் நிலை, தாயாய் மட்டுமல்ல, சிறந்த தொழிலதிபராய் இருக்கும், மதிக்கு நன்றாகவே புரிந்து போனது.
ஆறுதலாய் அவனின் தலை கோதியபடியே, "செழியப்பா, நீ அந்த பொண்ண ரொம்ப விரும்பறீயா, இல்ல... இந்த காலத்து பசங்களுக்கு வர்ற மாதிரி, இன்ஸ்டன்ட் காதலா?!" என்றதும்,