நாம் வேலைக்கு போயி சம்பாதிச்சாலும் நம்மள பண விசயத்தில் சுதந்திரமா இருக்க 90 சதவீத ஆம்பளைங்க விட மாட்டாங்க. அவங்க சொந்தத்துல ஏதாவது விசேஷம்னா ஒரு மாதிரியும் நம்ம சொந்தம்னா ஒரு மாதிரியும் தான் செய்வாங்க.
இத்தனை வருஷம் கூட இருந்து குடும்பத்தில் நல்லது கெட்டது தெரியாத?
புருஷன் தானே கேட்டா என்னவா? நீ என்ன பிச்சையா போடுற? ஓங்கிட்ட கேக்குறதுக்கு? பொண்டாட்டி ன்ற
உரிமைய எவளுக்கோ குடுத்தப்புறமும் ஒன்னோட காலடியில் நாய் மாதிரி இருக்கணும் னு எதிர் பாக்குற.
ஷாலினியோட இருக்கும் போது
ஒன்னோட குடும்பம் நம்ம பிள்ளைகள்ன்ற எண்ணம் இல்லை. இப்ப தா குடும்பம்கிற நெனப்பே வருதா.
ஒனக்கு வந்தாலும் புரயோஜனம் இல்ல. கால் சுத்துன ஷாலினின்ற பாம்பு ஒன்ன அவ்வளவு சீக்கிரம் விடாது. ஒனக்கு இன்னும் இருக்குடா.
சாலா ஒன்ன கடந்து வந்தாச்சு..... இனி நீ தல கீழ் பின்னாலும் புருஷனா இருக்க முடியாது.
பிள்ளைகளுக்கு அப்பனா மட்டும் இருக்க வேண்டியது தான்.
இனி ஷாலினிய பாப்பியோ இல்ல வேற சனியன பாப்பியோ.... ஊர் மேஞ்சிட்டு திரிய வேண்டியது தான்....