அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் !!!
முத்துப் பற்கள் காட்டி நான் நகைக்க
முகம் மலரும் அன்னையுண்டு.
அன்பில் கண்ணீர் மல்கி கரைகையிலே
அள்ளி அணைத்து முத்தமிடும் தந்தையுண்டு.
அய்யனார் போல அருகிருந்து எனைக் காக்க
அண்ணன் தம்பியுண்டு.
அத்தை மாமா சித்தி பெரியப்பா என
அன்பில் குளிப்பாட்ட என்னை சுற்றி
எப்போதும் ஆயிரம் உறவுண்டு.
உடுக்கை இழக்கும் முன்னே,
இடுக்கண் களையும் நட்புக்கள்
நங்கையை சுற்றி பலருண்டு.
இத்தனை இருந்தென்ன செய்ய?
ஆறு முதல் அறுபது வரை
ஆயிரம் இன்னல்கள் அணிவகுத்து நிற்கையிலே!
பிஞ்சென்றும் பாராமல் பிய்த்தெறியும் கூட்டம்!
அன்னையிடமும் அரிவாள் தூக்கும் அரைமூடர்!
அரைக் காசில்லாதவள் என அனாதையாய்
அலையவிட்ட அவள் வீட்டு சொந்தம்!
சங்குக் கழுத்துக்கு முத்தால் மாலையிட்ட
கணவன் எனும் உறவு தந்த தாலியறுத்து
தரையில் தள்ளிச்சென்ற திருட்டுக் கூட்டம்!
புற அழகு கண்டு காதல் என
காயப்படுத்தி கண்ணீர் சிந்தவைக்கும் கயவர்!
இன்னும் எண்ணி எண்ணி சொல்ல
எண்ணிலடங்கா துயரம் சூழ்
எம்மாதர் வாழ்வில்
மாதவம் செய்த மகிழ்வு தருவது எது???
எண்ணமெல்லாம் சுற்றி வர
எது என் மகிழ்வென்று தேடியலைந்தேன்!
நாளின் தொடக்கமாய் கிழக்கே பார்க்க
ஆயிரம் கதிர்கொண்டு ஆதவன்
எழும் காலையின் அழகா?
மதி மயங்கி மனம் நிறைய
மஞ்சத்தில் நான்கிடக்க
மயக்கும் தன் ஒளியால்
வானத்தை தன் வசமாக்கிய
நிலவின் நிறையொளியா?
மணம் சேர்த்து நிறம் சேர்த்து
நித்தம் மலரும் மலர்களா?
துயரென்று ஒன்று துரத்தாத தூரத்தில்
துள்ளிக் குதித்தாடும் தும்பிகள் கூட்டமா?
இயற்கையின் மடியில் என்னை நித்தம்
தாலாட்டும் இமயத்தின் சாரல்களா?
காலோடு உறவாடி கள்ளமில்லா
காதல் கொண்டு கரைதொட்டு
விளையாடும் கடலலையா?
அன்றொருநாள் அகம் மகிழ்ந்து
நான்நிற்க எனை நனைத்து
குளிர்வித்து முத்தமிட்ட மழையா?
இறறைவனின் இந்தப் படைப்புகளில்
எது என்னை மகிழ்வித்து மாதவம் செய்தேன் என
எண்ண வைக்கிறது?
எண்ணிப் பார்க்கையில் இவை
எதுவும் இல்லையே !!!
என்னை மகிழ்விக்கும் இவை எல்லாம்
இவ்வுலகில் வாழும் அனைவருக்கும் பொதுவே!!!
ரசிக்கும் கண்களும் மனமும் போதுமே,
இதற்கு மாதவம் தேவை இல்லையே.
பின் அந்த மாதவம் எதற்கு?
பெண்ணென்று பிறந்து எங்கும்
இன்னல்கள் மட்டுமே என் வாழ்க்கை என வாழவா?
மகளாகி சகோதரியாகி மனைவியாகி
தாயென்றும் ஆனபின்னே
மாதவம் ஏனென்று மகளே நீ எண்ணிப் பார் !!!
இன்பம் துன்பம் எதுவந்து சூழ்ந்த போதும்
இடிந்தொழிந்து போகாமல்
நாளை வரும் நாள் உனக்கு,
நானிலத்தில் நல்வாழ்வுதரும் எனும்
நம்பிக்கை கொண்டு,
எத்துயர் வந்து என்னை சாய்த்தாலும்
என் வாழ்க்கை என் கையில்
என நீ எழுந்து நிற்கும்
திடமும் தைரியமும் மட்டுமே
நீ செய்த மாதவத்தின் பலன் பெண்ணே!
உடைந்து ஒழிந்து போகாமல்
எது வந்த போதும் என் நிலையினின்று
பிறழேன், மீண்டும் எழுந்து நிற்பேன்!
என எண்ணி நீ நடையிடு!
உலகம் உன் வசம்!
அன்புடன்,
அசோகா.
மாதவம் செய்துவிட்டேன்!!!
மகிழ்வுறும் இவ்வையத்தில் மகளென்று பிறந்துவிட்டேன்.
முத்துப் பற்கள் காட்டி நான் நகைக்க
முகம் மலரும் அன்னையுண்டு.
அன்பில் கண்ணீர் மல்கி கரைகையிலே
அள்ளி அணைத்து முத்தமிடும் தந்தையுண்டு.
அய்யனார் போல அருகிருந்து எனைக் காக்க
அண்ணன் தம்பியுண்டு.
அத்தை மாமா சித்தி பெரியப்பா என
அன்பில் குளிப்பாட்ட என்னை சுற்றி
எப்போதும் ஆயிரம் உறவுண்டு.
உடுக்கை இழக்கும் முன்னே,
இடுக்கண் களையும் நட்புக்கள்
நங்கையை சுற்றி பலருண்டு.
இத்தனை இருந்தென்ன செய்ய?
ஆறு முதல் அறுபது வரை
ஆயிரம் இன்னல்கள் அணிவகுத்து நிற்கையிலே!
பிஞ்சென்றும் பாராமல் பிய்த்தெறியும் கூட்டம்!
அன்னையிடமும் அரிவாள் தூக்கும் அரைமூடர்!
அரைக் காசில்லாதவள் என அனாதையாய்
அலையவிட்ட அவள் வீட்டு சொந்தம்!
சங்குக் கழுத்துக்கு முத்தால் மாலையிட்ட
கணவன் எனும் உறவு தந்த தாலியறுத்து
தரையில் தள்ளிச்சென்ற திருட்டுக் கூட்டம்!
புற அழகு கண்டு காதல் என
காயப்படுத்தி கண்ணீர் சிந்தவைக்கும் கயவர்!
இன்னும் எண்ணி எண்ணி சொல்ல
எண்ணிலடங்கா துயரம் சூழ்
எம்மாதர் வாழ்வில்
மாதவம் செய்த மகிழ்வு தருவது எது???
எண்ணமெல்லாம் சுற்றி வர
எது என் மகிழ்வென்று தேடியலைந்தேன்!
நாளின் தொடக்கமாய் கிழக்கே பார்க்க
ஆயிரம் கதிர்கொண்டு ஆதவன்
எழும் காலையின் அழகா?
மதி மயங்கி மனம் நிறைய
மஞ்சத்தில் நான்கிடக்க
மயக்கும் தன் ஒளியால்
வானத்தை தன் வசமாக்கிய
நிலவின் நிறையொளியா?
மணம் சேர்த்து நிறம் சேர்த்து
நித்தம் மலரும் மலர்களா?
துயரென்று ஒன்று துரத்தாத தூரத்தில்
துள்ளிக் குதித்தாடும் தும்பிகள் கூட்டமா?
இயற்கையின் மடியில் என்னை நித்தம்
தாலாட்டும் இமயத்தின் சாரல்களா?
காலோடு உறவாடி கள்ளமில்லா
காதல் கொண்டு கரைதொட்டு
விளையாடும் கடலலையா?
அன்றொருநாள் அகம் மகிழ்ந்து
நான்நிற்க எனை நனைத்து
குளிர்வித்து முத்தமிட்ட மழையா?
இறறைவனின் இந்தப் படைப்புகளில்
எது என்னை மகிழ்வித்து மாதவம் செய்தேன் என
எண்ண வைக்கிறது?
எண்ணிப் பார்க்கையில் இவை
எதுவும் இல்லையே !!!
என்னை மகிழ்விக்கும் இவை எல்லாம்
இவ்வுலகில் வாழும் அனைவருக்கும் பொதுவே!!!
ரசிக்கும் கண்களும் மனமும் போதுமே,
இதற்கு மாதவம் தேவை இல்லையே.
பின் அந்த மாதவம் எதற்கு?
பெண்ணென்று பிறந்து எங்கும்
இன்னல்கள் மட்டுமே என் வாழ்க்கை என வாழவா?
மகளாகி சகோதரியாகி மனைவியாகி
தாயென்றும் ஆனபின்னே
மாதவம் ஏனென்று மகளே நீ எண்ணிப் பார் !!!
இன்பம் துன்பம் எதுவந்து சூழ்ந்த போதும்
இடிந்தொழிந்து போகாமல்
நாளை வரும் நாள் உனக்கு,
நானிலத்தில் நல்வாழ்வுதரும் எனும்
நம்பிக்கை கொண்டு,
எத்துயர் வந்து என்னை சாய்த்தாலும்
என் வாழ்க்கை என் கையில்
என நீ எழுந்து நிற்கும்
திடமும் தைரியமும் மட்டுமே
நீ செய்த மாதவத்தின் பலன் பெண்ணே!
உடைந்து ஒழிந்து போகாமல்
எது வந்த போதும் என் நிலையினின்று
பிறழேன், மீண்டும் எழுந்து நிற்பேன்!
என எண்ணி நீ நடையிடு!
உலகம் உன் வசம்!
அன்புடன்,
அசோகா.