அத்தியாயம் – 13
ஒருவரின் இல்லம் என்பது வெறும் கட்டுமான பொருட்களால் ஆனது மட்டுமில்லை. அதையும் தாண்டி அங்கே நிறைய நிறைய உணர்வுகளும், உரிமைகளும் நடக்கம்.. இவையனைத்தையும் திகட்ட திகட்ட அனுபவித்தவனுக்கும், கண் முன்னே இருந்தும் கூட தன்னுரிமை என்று தெரிந்தும் தள்ளி நின்று வேடிக்கை மட்டுமே பார்த்த மனிதர்களுக்குத் தான் அந்த அருமை புரியும்.. உணர்ந்துகொள்ளவும் முடியும்..
இதில் பமீலா முதல் ரகம் என்றால், கமலி இரண்டாவது ரகம்.. கண் முன்னே அனைத்தும் இருந்தும், அவளுக்கான அந்த உரிமையும் இருந்தும் இதுநாள் வரைக்கும் அவ்வீட்டினில் அவளுக்கென்று எதுவுமில்லை..
இந்த வீட்டினை முழுதாய் அவள் பார்த்தது கூட கிடையாது. மகுடேஸ்வரன் மரணத்தின் போதுகூட, வரவேற்பறையில் மட்டுமே அவள் அமர்ந்திருந்தாள். பமீலாவைப் போல இவ்வீட்டின் உரியவளாய் அவள் அன்று எதுவும் செய்யவில்லை.. ஆக இன்றுதான் இந்த வீட்டினை முழுதாய் பார்க்கும் நேரம் வந்தது என்று ஒவ்வொரு இடமாய் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
சிவகாசியின் பிரசித்திப் பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைத்துதான் வனமாலிக்கும் கமலிக்கும் திருமணம் நடந்தது.. இருபக்கத்து உறவினர்கள், பின்னே முரளியின் குடும்பத்தினர் இவ்வளவுதான்.. நரசிம்மன் வந்திருந்தார்.. அதற்குமேல் யாருமல்ல.. பமீலா இந்திரா வரவில்லையா என்று ஒருசிலர் கேட்டனர்.
மணிராதா அதற்கு பதில் சொல்லாமலேயே இருந்துகொண்டார். சிவகாமி திருமணம் முடியும் வரைக்கும் மணிராதாவோடு தான் நின்றிருந்தார். வார்த்தைகள் பேசிக்கொள்ளவில்லை என்றாலும், இருவருக்கும் இருவரின் உணர்வுகளும் நன்கு புரிந்தது.
முரளியின் அம்மா வந்து “இப்போதான் சந்தோசமா இருக்கு.. முன்னமே சொல்லிருந்தா ரெண்டு கல்யாணத்தையும் ஒரேதா செஞ்சிருக்கலாம்..” என்றார்..
முரளியும் அதையே வனமாலியிடம் சொல்ல “இல்ல மச்சான் அவ்வளோ லேட் செய்ய முடியாது..” என்று வனமாலி எதோ ஒரு யோசனையில் சொல்லிவிட,
“அடடா பார்த்து மச்சான் நீங்க ரொம்ப ஸ்பீடா போறீங்க...” என்று முரளி கிண்டல் செய்ய, கமலிக்கு இவர்கள் பேசுவது எல்லாம் கொஞ்சம் வேடிக்கையாய் இருந்தது..
அவள்தான் யாரிடமும் இப்படி பேசியதில்லையே..
வந்தனா வந்து “அண்ணன் பொண்டாட்டி ஆகிட்ட.. அண்ணி சொல்லணுமா???” என்று கமலியிடம் கேட்க,
“கண்டிப்பா சொல்லணும்...” என்று பதில் சொன்னது வனமாலி..
கமலியோ அவனை முறைத்து “என்னைத்தானே கேட்டாங்க...” என, “ஹலோ ம்மா கல்யாணம் ஆகிடுச்சு.. இனி நீ வேற நான் வேற இல்லை புரிஞ்சதா...” என்றான் ஒரு பார்வை பார்த்து..
‘அட.. இவன் இன்னும் இந்த வார்த்தையை விடலையா???!!’ என்று கமலி பார்க்க,
“அண்ணா... நேரமாகுது.. கொஞ்சம் போட்டோஸ் மட்டும் தனியா நீங்க எடுத்தா, எல்லாம் கிளம்பிடலாம்..” என்றுசொல்ல,
கமலி வேண்டுமென்றே அவனிடம் “நீங்க எப்படி என்னை அண்ணி சொல்வீங்களா??” என்றாள் வேடிக்கையாய்..
என்னவோ அவளுக்கு அதை கேட்கவேண்டும் போலிருக்க, வந்தனா கூட இதை பார்த்தவள் “ஆமாம்னு சொல்லிடு தனா.. எதுக்கும் இப்போவே துண்டு போட்டிடுவோம்..” என, இவர்களுக்குள் சொல்லாமல் கொள்ளாமல் ஒரு ஒட்டுதல் வந்து ஒட்டிக்கொண்டது. அவர்களோடு வந்து முரளியும் நின்றுகொண்டான்.
மணிராதா இதனை எல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். இத்தனை வருடங்களில் பமீலா இப்படி வீட்டினரோடு சிரித்து பேசியது கிடையாது, அதிலும் வந்தனா வனமாலி கோவர்த்தனோடு இப்படி ஒன்றாய் நின்று பேசியதெல்லாம் கிடையாது..
அவரையும் அறியாது பமீலா கமலியிடையே ஒரு ஒப்பீடு மனம் செய்ய, “ச்சே ச்சே பமீலா நான் வளர்த்த பொண்ணு... இவ சிவகாமி பொண்ணு..” என்று தன்னை மீட்டுக்கொண்டார்.
ஆனால் இருவருமே தன் தம்பியின் மகள்கள் என்று எண்ணத் தோன்றவில்லை போல..
இறைவன் சந்நிதியை ஒருமுறை சுற்றிவந்து, பின் புகைப்படங்கள் எடுத்து என்று எல்லாம் முடிந்து அனைவரும் வீடு கிளம்ப, ‘கோவர்த்தனா..’ என்று அழைத்த மணிராதா,
மகன் தன்னருகே வரவும் “எல்லாரையும் ஹோட்டலுக்கு கூட்டிட்டு போயிடு... அப்புறம் நீ வா வீட்டுக்கு..” என்றார்..
அங்கே வந்ததில் இருந்து இப்போதுதான் பேசியிருக்கிறார்.. சில பல விஷயங்கள் என்னதான் நாம் எதிர்பாராதது பிடிக்காதது நடந்தாலும், நம்மின் குணம் நம்மை விட்டு போகாது அல்லவா.. அதுவும் பிறரை அதட்டி உறுட்டும் சுபாவம் கொண்ட மணிராதா இத்தனை நேரம் சும்மா இருந்ததே பெருசு..
யாராவது தன்னோடு பேசுவார்கள் என்று பார்த்தால், அனைவருமே அவரவர் வேலையைப் பார்த்துகொண்டு இருக்க, இத்தனை வருடங்கள் எதிலும் கலந்துகொள்ளாமல் இருந்த சிவகாமி கூட எளிதில் அனைவரோடும் கலந்துவிட்டார், ஆனால் தான் மட்டும் தனித்து நிற்பதாய் தோன்ற, வாய் பூட்டு கழண்டு விட்டது.
கோவர்த்தனும் சரியென்று சொல்லி அனைவரையும் கூட்டிக்கொண்டு ஹோட்டல் செல்ல, “நீங்களும் கூட போயிட்டு வாங்க...” என்று சங்கிலிநாதனை சிவகாமி அனுப்பி வைத்தார்..
வீட்டினர் மட்டுமே இருக்க, “ம்மா கிளம்பலாமா???” என்று வனமாலி கேட்க,
“இன்னும் நம்ம இவங்க கூட தனியா போட்டோ எடுக்கலை...” என்றாள் கமலி..
வந்தனாவிற்கோ ஒருப்பக்கம் சிரிப்பு.. இந்த கமலியை எதில் சேர்ப்பது.. அவள் சும்மா இருந்தாலும் அவள் செய்வது எல்லாம் ஏதாவது யாரையாவது தாக்குவதாகவே இருந்தது. வனமாலி கமலியை முறைக்க, “என்ன??” என்றாள் புரியாது..
சிவகாமியோ “கமலி.. அத்தைன்னு சொல்லணும்..” என்றுசொல்ல,
“ஓ....!! முன்ன பின்ன சொல்லிருந்தா, டக்குனு வந்திருக்கும்.. இனிமே பழகிக்கிறேன் ம்மா...” என்றுவிட, வனமாலிக்கோ வீட்டிற்கு போனால் போதும் என்றானது.
மணிராதா பல்லைக் கடித்து நிற்க “ம்மா வா நம்ம எல்லாம் சேர்ந்து போட்டோ எடுத்துப்போம்..” என்று வந்தனா அழைத்து, அண்ணன் அண்ணியோடு நிற்க வைக்க “அதெல்லாம் வேண்டாம்...” என்று பிகு செய்துகொண்டார் அவர்..
“அட சும்மா நில்லும்மா..” என்று வனமாலி அவரின் தோளில் கை போட்டு இறுக்கி பிடித்துக்கொள்ள,
“டேய் விடு டா...” என்று திமிறினாலும், மணிராதாவின் முகம் கேமராவைப் பார்க்க, சிவகாமி இதனை ஒரு சிரிப்போடு பார்த்துகொண்டு இருக்க,
“ம்மா நீயும் வா...” என்றாள் கமலி..
“இல்ல நீங்க எடுங்க...”
ஒருவரின் இல்லம் என்பது வெறும் கட்டுமான பொருட்களால் ஆனது மட்டுமில்லை. அதையும் தாண்டி அங்கே நிறைய நிறைய உணர்வுகளும், உரிமைகளும் நடக்கம்.. இவையனைத்தையும் திகட்ட திகட்ட அனுபவித்தவனுக்கும், கண் முன்னே இருந்தும் கூட தன்னுரிமை என்று தெரிந்தும் தள்ளி நின்று வேடிக்கை மட்டுமே பார்த்த மனிதர்களுக்குத் தான் அந்த அருமை புரியும்.. உணர்ந்துகொள்ளவும் முடியும்..
இதில் பமீலா முதல் ரகம் என்றால், கமலி இரண்டாவது ரகம்.. கண் முன்னே அனைத்தும் இருந்தும், அவளுக்கான அந்த உரிமையும் இருந்தும் இதுநாள் வரைக்கும் அவ்வீட்டினில் அவளுக்கென்று எதுவுமில்லை..
இந்த வீட்டினை முழுதாய் அவள் பார்த்தது கூட கிடையாது. மகுடேஸ்வரன் மரணத்தின் போதுகூட, வரவேற்பறையில் மட்டுமே அவள் அமர்ந்திருந்தாள். பமீலாவைப் போல இவ்வீட்டின் உரியவளாய் அவள் அன்று எதுவும் செய்யவில்லை.. ஆக இன்றுதான் இந்த வீட்டினை முழுதாய் பார்க்கும் நேரம் வந்தது என்று ஒவ்வொரு இடமாய் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
சிவகாசியின் பிரசித்திப் பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைத்துதான் வனமாலிக்கும் கமலிக்கும் திருமணம் நடந்தது.. இருபக்கத்து உறவினர்கள், பின்னே முரளியின் குடும்பத்தினர் இவ்வளவுதான்.. நரசிம்மன் வந்திருந்தார்.. அதற்குமேல் யாருமல்ல.. பமீலா இந்திரா வரவில்லையா என்று ஒருசிலர் கேட்டனர்.
மணிராதா அதற்கு பதில் சொல்லாமலேயே இருந்துகொண்டார். சிவகாமி திருமணம் முடியும் வரைக்கும் மணிராதாவோடு தான் நின்றிருந்தார். வார்த்தைகள் பேசிக்கொள்ளவில்லை என்றாலும், இருவருக்கும் இருவரின் உணர்வுகளும் நன்கு புரிந்தது.
முரளியின் அம்மா வந்து “இப்போதான் சந்தோசமா இருக்கு.. முன்னமே சொல்லிருந்தா ரெண்டு கல்யாணத்தையும் ஒரேதா செஞ்சிருக்கலாம்..” என்றார்..
முரளியும் அதையே வனமாலியிடம் சொல்ல “இல்ல மச்சான் அவ்வளோ லேட் செய்ய முடியாது..” என்று வனமாலி எதோ ஒரு யோசனையில் சொல்லிவிட,
“அடடா பார்த்து மச்சான் நீங்க ரொம்ப ஸ்பீடா போறீங்க...” என்று முரளி கிண்டல் செய்ய, கமலிக்கு இவர்கள் பேசுவது எல்லாம் கொஞ்சம் வேடிக்கையாய் இருந்தது..
அவள்தான் யாரிடமும் இப்படி பேசியதில்லையே..
வந்தனா வந்து “அண்ணன் பொண்டாட்டி ஆகிட்ட.. அண்ணி சொல்லணுமா???” என்று கமலியிடம் கேட்க,
“கண்டிப்பா சொல்லணும்...” என்று பதில் சொன்னது வனமாலி..
கமலியோ அவனை முறைத்து “என்னைத்தானே கேட்டாங்க...” என, “ஹலோ ம்மா கல்யாணம் ஆகிடுச்சு.. இனி நீ வேற நான் வேற இல்லை புரிஞ்சதா...” என்றான் ஒரு பார்வை பார்த்து..
‘அட.. இவன் இன்னும் இந்த வார்த்தையை விடலையா???!!’ என்று கமலி பார்க்க,
“அண்ணா... நேரமாகுது.. கொஞ்சம் போட்டோஸ் மட்டும் தனியா நீங்க எடுத்தா, எல்லாம் கிளம்பிடலாம்..” என்றுசொல்ல,
கமலி வேண்டுமென்றே அவனிடம் “நீங்க எப்படி என்னை அண்ணி சொல்வீங்களா??” என்றாள் வேடிக்கையாய்..
என்னவோ அவளுக்கு அதை கேட்கவேண்டும் போலிருக்க, வந்தனா கூட இதை பார்த்தவள் “ஆமாம்னு சொல்லிடு தனா.. எதுக்கும் இப்போவே துண்டு போட்டிடுவோம்..” என, இவர்களுக்குள் சொல்லாமல் கொள்ளாமல் ஒரு ஒட்டுதல் வந்து ஒட்டிக்கொண்டது. அவர்களோடு வந்து முரளியும் நின்றுகொண்டான்.
மணிராதா இதனை எல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். இத்தனை வருடங்களில் பமீலா இப்படி வீட்டினரோடு சிரித்து பேசியது கிடையாது, அதிலும் வந்தனா வனமாலி கோவர்த்தனோடு இப்படி ஒன்றாய் நின்று பேசியதெல்லாம் கிடையாது..
அவரையும் அறியாது பமீலா கமலியிடையே ஒரு ஒப்பீடு மனம் செய்ய, “ச்சே ச்சே பமீலா நான் வளர்த்த பொண்ணு... இவ சிவகாமி பொண்ணு..” என்று தன்னை மீட்டுக்கொண்டார்.
ஆனால் இருவருமே தன் தம்பியின் மகள்கள் என்று எண்ணத் தோன்றவில்லை போல..
இறைவன் சந்நிதியை ஒருமுறை சுற்றிவந்து, பின் புகைப்படங்கள் எடுத்து என்று எல்லாம் முடிந்து அனைவரும் வீடு கிளம்ப, ‘கோவர்த்தனா..’ என்று அழைத்த மணிராதா,
மகன் தன்னருகே வரவும் “எல்லாரையும் ஹோட்டலுக்கு கூட்டிட்டு போயிடு... அப்புறம் நீ வா வீட்டுக்கு..” என்றார்..
அங்கே வந்ததில் இருந்து இப்போதுதான் பேசியிருக்கிறார்.. சில பல விஷயங்கள் என்னதான் நாம் எதிர்பாராதது பிடிக்காதது நடந்தாலும், நம்மின் குணம் நம்மை விட்டு போகாது அல்லவா.. அதுவும் பிறரை அதட்டி உறுட்டும் சுபாவம் கொண்ட மணிராதா இத்தனை நேரம் சும்மா இருந்ததே பெருசு..
யாராவது தன்னோடு பேசுவார்கள் என்று பார்த்தால், அனைவருமே அவரவர் வேலையைப் பார்த்துகொண்டு இருக்க, இத்தனை வருடங்கள் எதிலும் கலந்துகொள்ளாமல் இருந்த சிவகாமி கூட எளிதில் அனைவரோடும் கலந்துவிட்டார், ஆனால் தான் மட்டும் தனித்து நிற்பதாய் தோன்ற, வாய் பூட்டு கழண்டு விட்டது.
கோவர்த்தனும் சரியென்று சொல்லி அனைவரையும் கூட்டிக்கொண்டு ஹோட்டல் செல்ல, “நீங்களும் கூட போயிட்டு வாங்க...” என்று சங்கிலிநாதனை சிவகாமி அனுப்பி வைத்தார்..
வீட்டினர் மட்டுமே இருக்க, “ம்மா கிளம்பலாமா???” என்று வனமாலி கேட்க,
“இன்னும் நம்ம இவங்க கூட தனியா போட்டோ எடுக்கலை...” என்றாள் கமலி..
வந்தனாவிற்கோ ஒருப்பக்கம் சிரிப்பு.. இந்த கமலியை எதில் சேர்ப்பது.. அவள் சும்மா இருந்தாலும் அவள் செய்வது எல்லாம் ஏதாவது யாரையாவது தாக்குவதாகவே இருந்தது. வனமாலி கமலியை முறைக்க, “என்ன??” என்றாள் புரியாது..
சிவகாமியோ “கமலி.. அத்தைன்னு சொல்லணும்..” என்றுசொல்ல,
“ஓ....!! முன்ன பின்ன சொல்லிருந்தா, டக்குனு வந்திருக்கும்.. இனிமே பழகிக்கிறேன் ம்மா...” என்றுவிட, வனமாலிக்கோ வீட்டிற்கு போனால் போதும் என்றானது.
மணிராதா பல்லைக் கடித்து நிற்க “ம்மா வா நம்ம எல்லாம் சேர்ந்து போட்டோ எடுத்துப்போம்..” என்று வந்தனா அழைத்து, அண்ணன் அண்ணியோடு நிற்க வைக்க “அதெல்லாம் வேண்டாம்...” என்று பிகு செய்துகொண்டார் அவர்..
“அட சும்மா நில்லும்மா..” என்று வனமாலி அவரின் தோளில் கை போட்டு இறுக்கி பிடித்துக்கொள்ள,
“டேய் விடு டா...” என்று திமிறினாலும், மணிராதாவின் முகம் கேமராவைப் பார்க்க, சிவகாமி இதனை ஒரு சிரிப்போடு பார்த்துகொண்டு இருக்க,
“ம்மா நீயும் வா...” என்றாள் கமலி..
“இல்ல நீங்க எடுங்க...”