First of all thanks for accepting my point of view. It is really very very very sweet of you. You are such a humble soul.?????
அவன் காதல் சொன்ன மறுநொடியே விலகியிருப்பாள் தான்…பிரிவுகளும், தேடல்களும், வலிகளும் வேதனைகளும் கட்டாயம் தொடர்ந்திருக்கும்.
ஒருவேளை இந்தவொரு தடுமாற்றம் இல்லாமல் இருந்திருந்தால், விஷ்வாவின் “காத்திருப்புடன் கூடிய காதல்” இன்னும் இன்னும் உயர்வாக இருந்திருக்கும்.
கண்டிப்பா சகி ! இந்த கருத்தை என்னால மறுக்க முடியல.. ஏத்துக்குறேன்
கொஞ்சம் வித்தியாசமா ட்ரை பண்ணதா நினைச்சிக்கிறேன் ?
பட் ஒன்திங், விஷ்வாவோட பதினைந்து வருட சன்னியாசம், இந்த சபலம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இன்னுமே நீடித்துக் கொண்டு தான் இருந்திருக்கும். வாழ்நாள் பூராக நீடித்திருக்கவும் வாய்ப்புண்டு!
தமயந்தி, தான் வெறுக்கும் சென்னைக்கு வர முதல் காரணமே ஸ்ரீ! குற்றவுணர்ச்சி தீர முன்பே விஷ்வஜித்தை மீண்டும் வீட்டுக்கு வந்து செல்ல அனுமதிக்கக் காரணம் ஸ்ரீ! சலிப்புத் தட்டிய அவளது வாழ்க்கைக்கு இத்தனை வருடங்கள் உயிர்ப்பூட்டியது ஸ்ரீ!
அந்த ஸ்ரீயே, விஷ்வாவின் சிறு சபலத்தினால் உருவானவள் தானே? அவள் இல்லையென்றால், தமயந்தியின் வாழ்வில் ஒரு பிடித்தம் இருந்திருக்காது. இந்தப் பதினைந்து வருடங்கள் மிக மோசமாக கடந்து போயிருக்கலாம், இல்லைங்களா?
?
இதுக்கு மேல என்னனு சொல்றது! உங்க பாயிண்ட் ஆஃப் வியூ என்னனு எனக்கு புரியுது சகி. நான் என் பக்க நியாயத்தை சொல்ல வர்றேன். இந்த சபலத்தை கதைக்குள் உட்புகுத்துவதற்கான காரணத்தை சொல்ல வரேன். ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட்!
அதுவுமில்லாம, கதையாக இருப்பினும் அது சமூகத்துக்கு ஏதாவது கருத்து சொல்லுற மாதிரி இருந்தா நல்லாருக்கும்னு ஆசைப்பட்டேன்.
புள்ளைங்களைப் பத்தி யோசிக்காம எடுத்தான், கவிழ்த்தான்ங்குற மாதிரி முடிவுகள் எடுக்குற பெற்றோர், சின்னவங்க மனநிலையை அநேகமா புரிஞ்சிக்க தவறிடறாங்க இல்லையா? ஸ்ரீயை வைச்சு அதைப் புரிய வைக்கலாம்னு ஆசைப்பட்டேன். விஷ்வாவின் சபலம் இல்லாமல் இது சாத்தியம் இல்லையே?!
பைநல்லி, மை மைண்ட் வாய்ஸ் பீ லைக், 'நீ ரொம்ப அறுக்குற! போதும்பா, அவங்களை விட்டுறேன்!' ??