தோகை 7:
“இதென்ன இவ்வளவு சின்ன இடமா இருக்கு..? இதுல நான் எப்படி சிட் பண்ண முடியும்...? “ என்று உதவியாளரிடம் காய்ந்து கொண்டிருந்தாள் துப்னா.
சக்தி...அருகில் உள்ள பெரிய வரப்பில் இருந்து பார்த்துக் கொண்டிருக்க.... அஜய்க்கோ...அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வு.ஆனால் முடியாத சூழ்நிலையில் இருந்தான்.
கதைப்படி...அஜய்க்கும்,துப்னாவிற்கும் இடையிலான ஒரு பாடல் அங்கு படமாக்கப் படுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க...நடன இயக்குனர்..அஜய்யின் அருகில் இருந்து அனைத்தையும் விளக்கிக் கொண்டிருந்தார்.
“ஒரு சீன்க்கு மட்டும் வயலுக்கு உள்ள இறங்கி நில்லுங்க சார்..துப்னா மேம்..நீங்களும்...” என்று டைரக்டர் சொல்ல...
“சார்...வெறும் காலோட போங்க..இல்லன்னா அந்த பொண்ணு...சண்டைக்கு வந்துடும்..” என்று மகேஷ் நியாபகமாய் சொல்ல...
ஒரு நிமிடம் யோசித்தவன்...தனது செருப்பைக் கலட்டி விட்டு வெறும் காலுடன் உள்ளே இறங்கினான்.
“வாட் நான் சென்ஸ்...வெறும் காலோட எப்படி இறங்க முடியும்..என்னால முடியாது..” என்று அவள் கத்திக் கொண்டிருக்க...
“மேடம் புருஞ்சுக்கங்க...” என்று மகேஷ் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
அஜய் வயலுக்குள் நின்றபடி முறைத்துக் கொண்டிருக்க....துப்னாவின் அருகில் சென்ற இயக்குனர்..
“நீங்க வெறும் காலோட இறங்குனாதான் உங்களுக்கு சேப்டி..இல்லைன்னா தவறி விழுந்தா..உங்களுக்கு தான் சங்கடமாய் போய்டும்..!” என்று சொல்ல..
“ஆமாம்..அப்பறம்..மீடியாக்காரன் கிழிகிழின்னு கிழிப்பான்..” என்று மனதில் எண்ணியவள்...அவர் சொன்னபடியே செய்தாள்.
காட்சிப்படி...அஜய்யின் தோளில் முன்னால் இருந்து சற்று சாய்ந்த படி...ஒரு கையை அவன் கையுடன் மடக்கியும்....ஒரு கையை அவன் கையுடன் விரிந்தபடி இணைத்து... சாய்ந்து ஒரு இரண்டு ஸ்டெப் போட வேண்டும்...
அஜய் தனக்குள் பொறுமையை வரவழைத்துக் கொண்டவனாய் நிற்க...துப்னாவிற்கோ...மிகுந்த சந்தோசம்.அவள் தான் அஜயை கைக்குள் போடுவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறாளே..!
“என்ன சக்தி...இப்படி தான் படம் எடுப்பாங்களா..?” என்றாள் அருகில் இருந்த பெண்.
“என்னைக் கேட்டா..எனக்கு என்னக்கா தெரியும்...நானும் இப்பதான பார்க்குறேன்..!” என்ற சக்திக்கு ஏனோ மனது ஒரு மாதிரியாக இருந்தது.
“படத்துல பார்க்க நல்லாருக்கு..ஆனா நேர்ல பார்க்க கன்றாவியா இருக்கு..” என்று அந்த பெண் சொன்ன விதத்தில் சக்தி பட்டென்று சிரிக்க..அந்த சிரிப்பு சத்தத்தில் திரும்பினான் அஜய்.
அவள் சிரிப்பதை ஒரு நிமிடம் ரசித்துப் பார்த்தவன்...”எதுக்கு சிரிக்கிறா..?” என்று யோசித்தபடி நின்றான்.
இதையெல்லாம் கண்ணனும் பார்த்துக் கொண்டிருக்க..”கடவுளே..இது மட்டும் நடக்கவே கூடாது..அந்த பொண்ணை பார்த்தால் அப்பாவியாய் தெரியுது..!” என்று கடவுளை வேண்டிக் கொண்டான்.
“ரெடி..டேக்..ஆக்சன்...” என்ற வார்த்தையில் நினைவுக்கு திரும்பியவன்...டைரக்டர் சொன்னபடி செய்ய...துப்னாவோ அதற்கு ஒரு படி மேலே போய்..தன் முழு உடலும் அவன் மீது படும் படி சாய..அதைப் பார்த்த சக்திக்கு வெறுப்பாக இருந்தது.
“ச்சி..அவங்க நடிக்க சொன்னா..இந்த பொண்ணு...நிஜமாளுமே பண்ற மாதிரி இருக்கே..!” என்று கண்டுபிடித்தாள்.
அஜய்யோ பல்லைக் கடித்தவன்..வெளியில் தெரியாமல் இருக்க..அரும்பாடு பட்டான்.
“கட்..கட்..” என்ற டைரக்டரின் வார்த்தையில் பட்டென்று அவளை விட..அவளோ தடுமாறி பின் நின்றாள்.
“சீன் ஓகே சார்..” என்று சொல்ல..அடுத்த சீனைப் பற்றி மகேஷிடம் பேசிக்கொண்டிருக்க...சுற்றும் முற்றும் பார்த்தான் அஜய்.
சக்தியும் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருக்க...பட்டென்று துப்னாவின் கன்னத்தில் அறைந்தான்.
இதை எதிர்பார்க்காத துப்னா..தடுமாறி விழப் போக..அவனோ பார்த்துக் கொண்டே நின்றிருந்தான்.
“இந்த மேல சாயிறது..ஒட்டிக்கிட்டு உரசுறது..இதையெல்லாம் வேற எங்கயாவது வச்சுக்க..என்கிட்டே வச்சுகிட்ட..என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..!” என்று அவன் எச்சரிக்க...
அவனையே பார்த்துக் கொண்டிருந்த சக்திக்கு..ஏனோ மனதில் இனம் புரியாத நிம்மதி ஒன்று இழையோடியது.
கோபத்தில் அறைந்தவன்....ஒன்றுமே தெரியாததைப் போல்...அடுத்த ஷாட்டுக்கு ரெடியாக...
“டச் அப்..”பண்ணி விட வந்த பெண்ணை...கடித்து துப்பிக் கொண்டிருந்தாள் துப்னா.
“ஒரு பொண்ணுக்கு இவ்வளவு அகங்காரம் இருக்க கூடாதுக்கா..!” என்று சக்தி அருகில் இருந்த பெண்ணிடம் சொல்ல..
“உண்மைதான் சக்தி....எனக்கென்னவோ..இதை பார்க்கவே பிடிக்கலை..வா நாம போவோம்...வேலையை கெடுத்துட்டு இங்க நின்னா..இந்த கன்றாவியை எல்லாம் பார்க்க வேண்டியிருக்கு...படத்துல இவ எவ்வளவு நல்லவளா இருக்கா..நேர்ல பாரு...மூஞ்சியும் முகரையும்...அந்த மூஞ்சில எவ்வளவைத் தேய்க்கிறான்னு பாரு...” என்று அவள் குமுற..
“சரி விடுங்கக்கா...படத்துல பார்க்குற மாதிரியே நேர்லயும் இருப்பாங்கன்னு...நாம தான் கற்பனை பண்ணிக்கிறோம்..ஆனா நேர்ல பார்த்தா..இவங்களா..ச்சி இப்படியான்னு போய்டும்...நாமளா இவங்க இப்படித்தான்னு கற்பனை பண்ணிக்கிறதுக்கு அவங்க எப்படி பொறுப்பாவாங்க..?” என்றாள்.
“அது என்னவோ உண்மைதான் சக்தி..!” என்றாள்.
“சரிக்கா..நீங்க போய் வேலையைப் பாருங்க...நான் வரேன்..!” என்று அவளை அனுப்பினாள் சக்தி.
தான் போக வேண்டும் என்று நினைத்தாலும் ஏதோ ஒன்று அந்த இடத்தை விட்டு அவளை நகர விடமால் தடுக்க..அப்படியே நின்றாள்.வயலுக்கு காவல் என்று தனக்குத் தானே காரணம் வேறு சொல்லிக் கொண்டாள்.
கேரவனை..சற்று தள்ளி..அங்கிருந்த மண் சாலையில் நிறுத்தியிருந்தனர். டிரஸ் சேன்ஜ் செய்வதற்காக உள்ளே சென்ற அஜய்யின் கண்களில்.. சக்தியின் இந்த தோற்றம் விழ...மனதிற்குள் குறித்துக் கொண்டான்.
அவளோ.... அங்கே இருந்த அனைவரையும் தீவிரமான பார்வையோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.ஆனால் அஜய் மேல் அவளுக்கு சந்தேகமே வரவில்லை.
அவ்வளவு பெரிய ஹீரோ மேல் சந்தேகப்பட அவள் என்ன முட்டாளா..? இல்லை இதையெல்லாம் அவன் தான் செய்திருக்க வேண்டும் என்று அவள் எதிர்பார்க்க முடியுமா..? அவள் இடத்தில் யார் இருந்திருந்தாலும் அவன் மேல் சந்தேகம் வர கூடுமா..?
“இதென்ன இவ்வளவு சின்ன இடமா இருக்கு..? இதுல நான் எப்படி சிட் பண்ண முடியும்...? “ என்று உதவியாளரிடம் காய்ந்து கொண்டிருந்தாள் துப்னா.
சக்தி...அருகில் உள்ள பெரிய வரப்பில் இருந்து பார்த்துக் கொண்டிருக்க.... அஜய்க்கோ...அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வு.ஆனால் முடியாத சூழ்நிலையில் இருந்தான்.
கதைப்படி...அஜய்க்கும்,துப்னாவிற்கும் இடையிலான ஒரு பாடல் அங்கு படமாக்கப் படுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க...நடன இயக்குனர்..அஜய்யின் அருகில் இருந்து அனைத்தையும் விளக்கிக் கொண்டிருந்தார்.
“ஒரு சீன்க்கு மட்டும் வயலுக்கு உள்ள இறங்கி நில்லுங்க சார்..துப்னா மேம்..நீங்களும்...” என்று டைரக்டர் சொல்ல...
“சார்...வெறும் காலோட போங்க..இல்லன்னா அந்த பொண்ணு...சண்டைக்கு வந்துடும்..” என்று மகேஷ் நியாபகமாய் சொல்ல...
ஒரு நிமிடம் யோசித்தவன்...தனது செருப்பைக் கலட்டி விட்டு வெறும் காலுடன் உள்ளே இறங்கினான்.
“வாட் நான் சென்ஸ்...வெறும் காலோட எப்படி இறங்க முடியும்..என்னால முடியாது..” என்று அவள் கத்திக் கொண்டிருக்க...
“மேடம் புருஞ்சுக்கங்க...” என்று மகேஷ் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
அஜய் வயலுக்குள் நின்றபடி முறைத்துக் கொண்டிருக்க....துப்னாவின் அருகில் சென்ற இயக்குனர்..
“நீங்க வெறும் காலோட இறங்குனாதான் உங்களுக்கு சேப்டி..இல்லைன்னா தவறி விழுந்தா..உங்களுக்கு தான் சங்கடமாய் போய்டும்..!” என்று சொல்ல..
“ஆமாம்..அப்பறம்..மீடியாக்காரன் கிழிகிழின்னு கிழிப்பான்..” என்று மனதில் எண்ணியவள்...அவர் சொன்னபடியே செய்தாள்.
காட்சிப்படி...அஜய்யின் தோளில் முன்னால் இருந்து சற்று சாய்ந்த படி...ஒரு கையை அவன் கையுடன் மடக்கியும்....ஒரு கையை அவன் கையுடன் விரிந்தபடி இணைத்து... சாய்ந்து ஒரு இரண்டு ஸ்டெப் போட வேண்டும்...
அஜய் தனக்குள் பொறுமையை வரவழைத்துக் கொண்டவனாய் நிற்க...துப்னாவிற்கோ...மிகுந்த சந்தோசம்.அவள் தான் அஜயை கைக்குள் போடுவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறாளே..!
“என்ன சக்தி...இப்படி தான் படம் எடுப்பாங்களா..?” என்றாள் அருகில் இருந்த பெண்.
“என்னைக் கேட்டா..எனக்கு என்னக்கா தெரியும்...நானும் இப்பதான பார்க்குறேன்..!” என்ற சக்திக்கு ஏனோ மனது ஒரு மாதிரியாக இருந்தது.
“படத்துல பார்க்க நல்லாருக்கு..ஆனா நேர்ல பார்க்க கன்றாவியா இருக்கு..” என்று அந்த பெண் சொன்ன விதத்தில் சக்தி பட்டென்று சிரிக்க..அந்த சிரிப்பு சத்தத்தில் திரும்பினான் அஜய்.
அவள் சிரிப்பதை ஒரு நிமிடம் ரசித்துப் பார்த்தவன்...”எதுக்கு சிரிக்கிறா..?” என்று யோசித்தபடி நின்றான்.
இதையெல்லாம் கண்ணனும் பார்த்துக் கொண்டிருக்க..”கடவுளே..இது மட்டும் நடக்கவே கூடாது..அந்த பொண்ணை பார்த்தால் அப்பாவியாய் தெரியுது..!” என்று கடவுளை வேண்டிக் கொண்டான்.
“ரெடி..டேக்..ஆக்சன்...” என்ற வார்த்தையில் நினைவுக்கு திரும்பியவன்...டைரக்டர் சொன்னபடி செய்ய...துப்னாவோ அதற்கு ஒரு படி மேலே போய்..தன் முழு உடலும் அவன் மீது படும் படி சாய..அதைப் பார்த்த சக்திக்கு வெறுப்பாக இருந்தது.
“ச்சி..அவங்க நடிக்க சொன்னா..இந்த பொண்ணு...நிஜமாளுமே பண்ற மாதிரி இருக்கே..!” என்று கண்டுபிடித்தாள்.
அஜய்யோ பல்லைக் கடித்தவன்..வெளியில் தெரியாமல் இருக்க..அரும்பாடு பட்டான்.
“கட்..கட்..” என்ற டைரக்டரின் வார்த்தையில் பட்டென்று அவளை விட..அவளோ தடுமாறி பின் நின்றாள்.
“சீன் ஓகே சார்..” என்று சொல்ல..அடுத்த சீனைப் பற்றி மகேஷிடம் பேசிக்கொண்டிருக்க...சுற்றும் முற்றும் பார்த்தான் அஜய்.
சக்தியும் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருக்க...பட்டென்று துப்னாவின் கன்னத்தில் அறைந்தான்.
இதை எதிர்பார்க்காத துப்னா..தடுமாறி விழப் போக..அவனோ பார்த்துக் கொண்டே நின்றிருந்தான்.
“இந்த மேல சாயிறது..ஒட்டிக்கிட்டு உரசுறது..இதையெல்லாம் வேற எங்கயாவது வச்சுக்க..என்கிட்டே வச்சுகிட்ட..என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..!” என்று அவன் எச்சரிக்க...
அவனையே பார்த்துக் கொண்டிருந்த சக்திக்கு..ஏனோ மனதில் இனம் புரியாத நிம்மதி ஒன்று இழையோடியது.
கோபத்தில் அறைந்தவன்....ஒன்றுமே தெரியாததைப் போல்...அடுத்த ஷாட்டுக்கு ரெடியாக...
“டச் அப்..”பண்ணி விட வந்த பெண்ணை...கடித்து துப்பிக் கொண்டிருந்தாள் துப்னா.
“ஒரு பொண்ணுக்கு இவ்வளவு அகங்காரம் இருக்க கூடாதுக்கா..!” என்று சக்தி அருகில் இருந்த பெண்ணிடம் சொல்ல..
“உண்மைதான் சக்தி....எனக்கென்னவோ..இதை பார்க்கவே பிடிக்கலை..வா நாம போவோம்...வேலையை கெடுத்துட்டு இங்க நின்னா..இந்த கன்றாவியை எல்லாம் பார்க்க வேண்டியிருக்கு...படத்துல இவ எவ்வளவு நல்லவளா இருக்கா..நேர்ல பாரு...மூஞ்சியும் முகரையும்...அந்த மூஞ்சில எவ்வளவைத் தேய்க்கிறான்னு பாரு...” என்று அவள் குமுற..
“சரி விடுங்கக்கா...படத்துல பார்க்குற மாதிரியே நேர்லயும் இருப்பாங்கன்னு...நாம தான் கற்பனை பண்ணிக்கிறோம்..ஆனா நேர்ல பார்த்தா..இவங்களா..ச்சி இப்படியான்னு போய்டும்...நாமளா இவங்க இப்படித்தான்னு கற்பனை பண்ணிக்கிறதுக்கு அவங்க எப்படி பொறுப்பாவாங்க..?” என்றாள்.
“அது என்னவோ உண்மைதான் சக்தி..!” என்றாள்.
“சரிக்கா..நீங்க போய் வேலையைப் பாருங்க...நான் வரேன்..!” என்று அவளை அனுப்பினாள் சக்தி.
தான் போக வேண்டும் என்று நினைத்தாலும் ஏதோ ஒன்று அந்த இடத்தை விட்டு அவளை நகர விடமால் தடுக்க..அப்படியே நின்றாள்.வயலுக்கு காவல் என்று தனக்குத் தானே காரணம் வேறு சொல்லிக் கொண்டாள்.
கேரவனை..சற்று தள்ளி..அங்கிருந்த மண் சாலையில் நிறுத்தியிருந்தனர். டிரஸ் சேன்ஜ் செய்வதற்காக உள்ளே சென்ற அஜய்யின் கண்களில்.. சக்தியின் இந்த தோற்றம் விழ...மனதிற்குள் குறித்துக் கொண்டான்.
அவளோ.... அங்கே இருந்த அனைவரையும் தீவிரமான பார்வையோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.ஆனால் அஜய் மேல் அவளுக்கு சந்தேகமே வரவில்லை.
அவ்வளவு பெரிய ஹீரோ மேல் சந்தேகப்பட அவள் என்ன முட்டாளா..? இல்லை இதையெல்லாம் அவன் தான் செய்திருக்க வேண்டும் என்று அவள் எதிர்பார்க்க முடியுமா..? அவள் இடத்தில் யார் இருந்திருந்தாலும் அவன் மேல் சந்தேகம் வர கூடுமா..?