"தனலஷ்மி டீச்சர்"-----------------------------Teacher's day
எனது Content Shortlist-ல் "தனலஷ்மி டீச்சர்" ஆறு மாதமாகவே கிடப்பில் இருந்து, ஆசிரியர் தினமான இன்றதை எழுதுவது வெறும் Casual Coincidence என்பதால், "ஆசிரியர் தினம்னா போதுமே, ஒரு write up தூக்கினு வந்துருவானுங்க" என்ற நகைசொல்லிலிருந்து நகர்ந்தெழுதுகிறேன்.
1995
பாட்ஷா படம் ரிலீஸ் ஆகி வெறித்தனமாக ஓடிக்கொண்டிருந்த நேரம். ஆனால் அதற்கும் நான் கீழே எழுதியிருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்பதால், அப்படியே கடந்து விடுவோம்.
Always Speak in English, Speak in English.. என்று ஓயாப்புராணம் பாடிக்கொண்டிருந்த என் பள்ளியில், ஒரு காலாண்டு தேர்வின் தமிழ் விடைத்தாள் கொடுக்கும்போது....
அ x x x மா - 57 மார்க்..
பா x x x யா - 72 மார்க்..
ச x x x ன் - 21 மார்க்..
அx x x த் - 96 மார்க்...!
வாங்கிக்கொண்டு பேசாது சென்றமர்ந்தேன். எல்லாருக்கும் கொடுத்து முடித்துவிட்டு, வழக்கம்போலான ஸ்டூடெண்ட்ஸ் முணுமுணுப்பு, மதிப்பெண் கூட்டல் இரைச்சல்கள் இடையே, பேசாதமர்ந்திருந்த என்னை அவர் அழைத்தார்.
டேய் ஒழக்கு...இங்க வா...
சென்றேன்.
"ஆமா..தமிழ் பாடத்துல இவ்ளோ மார்க்கு வாங்கிருக்கியே? ஏன்னு தெரியுமா?"
"படிச்சத எழுதிருப்பேன் மிஸ்.. அதுவா இருக்கலாம்"... பவ்யப்பட்டேன்.
"தப்பு. படிச்சத எழுதலங்கறதாலதான் இவ்ளோ மார்க் போட்டேன். அதுவுமந்த ஒத்த துணைப்பாடத்துக்கு, கதையோட கருவை மாத்தாம சொந்தமா நீயே வார்த்தைகளை போட்டு எழுதி இருந்ததுக்கு." ….ஆமா, நெறய புத்தகம் படிப்பியா?
"ஆமா மிஸ்.. வெறும் பேப்பர் தவிர எது கிடைச்சாலும்.. இந்த குமுதம்,கல்கண்டு,ஆனந்த விகடன், ஜு.வி, ராணி, வாரமலர்,சிறுவர்மலர், நக்கீரன், தராசு, துக்ளக்...".. (90s kid)
"டேய் டேய் டேய்.. போதும் போதும். பாடப்புத்தகத்தையும் அப்பப்போ படிக்கணும். புரியுதா?"
"சரிங் மிஸ்..படிச்சுதான் எழுத நெனச்சேன் எக்ஸாம்ல.. மனப்பாடம் பண்ணேன்..ஆனா வரல"..
"மனப்பாடமா? அந்த தப்ப மட்டும் செஞ்சுறாத".!!..எழுத்து போயிரும்.
"சரிங் மிஸ்"..
ஆமா... பின்னால என்னவா ஆக போற?" என்ஜினீயர்..., டாக்டர்.... ? (தொண்ணூறுகளில் அவை மட்டுமே பிராப்தம்)
“தெரில மிஸ்”.. (ஆறாவதில் என்ன தெரியும்?)
சிரித்தார்.. நீ என்னவா ஆவனு எனக்கு தெரியாது. ஆனா என்னவா ஆகலாம்னு மட்டும் புரியுது. காலமே உன்னை அங்க கொண்டு நிறுத்தும். போய் உட்காரு...!!!
இது பெருமைக்கு சொன்னதல்ல. ஏனெனில், "Clumsy " என்று ஹிந்து பேப்பரில் படித்ததை ஆங்கில எக்ஸாமில் பயன்படுத்திய என் வகுப்பு அருணை, இங்கிலீஷ் வாத்தியார் கூப்பிட்டு வைத்து பாராட்டியதும் அறிவேன் யான். மொழி இங்கு பொருட்டல்ல..அதை பயன்படுத்த ஊக்கப்படுத்திய அன்றைய ஆசிரியர்கள் தான் அரிது. ஏனெனில், மாணவ மூளையின் இடவல பேதமெல்லாம் கண்டுகொள்ள நேரமில்லாத காலகட்டம் அது.
அன்று நூற்றுக்கு தொன்னூற்றாறு போடாது, "படவா கதையா எழுதி வெச்சுருக்க??" என்று தனலஷ்மி மிஸ் என்னை முட்டி போட வைத்திருந்தால், இன்றென் எழுத்தும் முட்டி போட்டு முடங்கியிருக்கும். ...
நான் நல்ல எழுத்தாளனா என்பதை காலம் சொல்லலாம், சொல்லாமலும் போகலாம். ஆனால் இன்று எழுதுவதற்காக என்னை கண்டதையும் படிக்க தூண்டுவதெல்லாம், அன்று படித்த "கண்டதையெல்லாம்" எழுத சொன்ன அந்த "ஆசிரியை"யின் வார்த்தைகள் மட்டுமே.!!!
------------------
#Teachersday
#Charithraas
எனது Content Shortlist-ல் "தனலஷ்மி டீச்சர்" ஆறு மாதமாகவே கிடப்பில் இருந்து, ஆசிரியர் தினமான இன்றதை எழுதுவது வெறும் Casual Coincidence என்பதால், "ஆசிரியர் தினம்னா போதுமே, ஒரு write up தூக்கினு வந்துருவானுங்க" என்ற நகைசொல்லிலிருந்து நகர்ந்தெழுதுகிறேன்.
1995
பாட்ஷா படம் ரிலீஸ் ஆகி வெறித்தனமாக ஓடிக்கொண்டிருந்த நேரம். ஆனால் அதற்கும் நான் கீழே எழுதியிருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்பதால், அப்படியே கடந்து விடுவோம்.
Always Speak in English, Speak in English.. என்று ஓயாப்புராணம் பாடிக்கொண்டிருந்த என் பள்ளியில், ஒரு காலாண்டு தேர்வின் தமிழ் விடைத்தாள் கொடுக்கும்போது....
அ x x x மா - 57 மார்க்..
பா x x x யா - 72 மார்க்..
ச x x x ன் - 21 மார்க்..
அx x x த் - 96 மார்க்...!
வாங்கிக்கொண்டு பேசாது சென்றமர்ந்தேன். எல்லாருக்கும் கொடுத்து முடித்துவிட்டு, வழக்கம்போலான ஸ்டூடெண்ட்ஸ் முணுமுணுப்பு, மதிப்பெண் கூட்டல் இரைச்சல்கள் இடையே, பேசாதமர்ந்திருந்த என்னை அவர் அழைத்தார்.
டேய் ஒழக்கு...இங்க வா...
சென்றேன்.
"ஆமா..தமிழ் பாடத்துல இவ்ளோ மார்க்கு வாங்கிருக்கியே? ஏன்னு தெரியுமா?"
"படிச்சத எழுதிருப்பேன் மிஸ்.. அதுவா இருக்கலாம்"... பவ்யப்பட்டேன்.
"தப்பு. படிச்சத எழுதலங்கறதாலதான் இவ்ளோ மார்க் போட்டேன். அதுவுமந்த ஒத்த துணைப்பாடத்துக்கு, கதையோட கருவை மாத்தாம சொந்தமா நீயே வார்த்தைகளை போட்டு எழுதி இருந்ததுக்கு." ….ஆமா, நெறய புத்தகம் படிப்பியா?
"ஆமா மிஸ்.. வெறும் பேப்பர் தவிர எது கிடைச்சாலும்.. இந்த குமுதம்,கல்கண்டு,ஆனந்த விகடன், ஜு.வி, ராணி, வாரமலர்,சிறுவர்மலர், நக்கீரன், தராசு, துக்ளக்...".. (90s kid)
"டேய் டேய் டேய்.. போதும் போதும். பாடப்புத்தகத்தையும் அப்பப்போ படிக்கணும். புரியுதா?"
"சரிங் மிஸ்..படிச்சுதான் எழுத நெனச்சேன் எக்ஸாம்ல.. மனப்பாடம் பண்ணேன்..ஆனா வரல"..
"மனப்பாடமா? அந்த தப்ப மட்டும் செஞ்சுறாத".!!..எழுத்து போயிரும்.
"சரிங் மிஸ்"..
ஆமா... பின்னால என்னவா ஆக போற?" என்ஜினீயர்..., டாக்டர்.... ? (தொண்ணூறுகளில் அவை மட்டுமே பிராப்தம்)
“தெரில மிஸ்”.. (ஆறாவதில் என்ன தெரியும்?)
சிரித்தார்.. நீ என்னவா ஆவனு எனக்கு தெரியாது. ஆனா என்னவா ஆகலாம்னு மட்டும் புரியுது. காலமே உன்னை அங்க கொண்டு நிறுத்தும். போய் உட்காரு...!!!
இது பெருமைக்கு சொன்னதல்ல. ஏனெனில், "Clumsy " என்று ஹிந்து பேப்பரில் படித்ததை ஆங்கில எக்ஸாமில் பயன்படுத்திய என் வகுப்பு அருணை, இங்கிலீஷ் வாத்தியார் கூப்பிட்டு வைத்து பாராட்டியதும் அறிவேன் யான். மொழி இங்கு பொருட்டல்ல..அதை பயன்படுத்த ஊக்கப்படுத்திய அன்றைய ஆசிரியர்கள் தான் அரிது. ஏனெனில், மாணவ மூளையின் இடவல பேதமெல்லாம் கண்டுகொள்ள நேரமில்லாத காலகட்டம் அது.
அன்று நூற்றுக்கு தொன்னூற்றாறு போடாது, "படவா கதையா எழுதி வெச்சுருக்க??" என்று தனலஷ்மி மிஸ் என்னை முட்டி போட வைத்திருந்தால், இன்றென் எழுத்தும் முட்டி போட்டு முடங்கியிருக்கும். ...
நான் நல்ல எழுத்தாளனா என்பதை காலம் சொல்லலாம், சொல்லாமலும் போகலாம். ஆனால் இன்று எழுதுவதற்காக என்னை கண்டதையும் படிக்க தூண்டுவதெல்லாம், அன்று படித்த "கண்டதையெல்லாம்" எழுத சொன்ன அந்த "ஆசிரியை"யின் வார்த்தைகள் மட்டுமே.!!!
------------------
#Teachersday
#Charithraas