செல்வாவிற்கு அவளுடன் செல்ல uncomfortable uh உணர்ந்தான்.அதனலே 8.30 ஆபீஸ்ற்கு 7.30 க்கு புறப்பட்டான்.மாலை அதே போல் சிப்டி நேரம் முடியும் போது அவன் கேபின் இல்லாமல் எங்கேயாவது சென்று ஒளிந்துக்கொள்வான். இப்படியே ஒரு வாரம் சென்றது.ஒரு நாள் மாலை அதே போல் ஒளிய முயற்சிக்கும் போது எதிர்பாராமல் அனிதா பார்த்துவிட்டால்.அதன் பின் அனிதா செல்வா வை அழைத்து உங்களோடு நான் தனியாக பேச வேண்டும் என்று கூறி அவனை அழைத்து கொண்டு வீட்டு மொட்டை மாடியில் இரவு 8 மணி அளவில் இருவரும் சந்தித்தனர்.உனக்கு என்னோடு வர விருப்பமில்லை என்றால் என் முகத்திற்கு நேராக சொல்லிவிடு அதை விட்டு இப்படி ஓடி ஒளியிற வேலை வேண்டாம்.பார்ப்பவர்கள் என்னை ஒரு மாதிரி நினைப்பார்கள் என்றாள் அனிதா.அதற்கு செல்வா இல்லை அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று சொல்ல முயன்றான்.அதை கூட கேட்காமல் நீங்கள் எதையும் சொல்ல வேண்டாம் என்று அவனை அனிதா தடுத்தாள்.இனி நீங்கள் யாரோ நான் யாரோ உங்கள் முன் எதற்கும் வர மாட்டேன் என்று கூறி அனிதா கீழே சென்று விட்டாள்.