கரிசல் 17:
“யாரைக் கேட்டு முடிவு பண்ணுன மலரு..?” என்று விஷயம் தெரிந்து குதித்துக் கொண்டிருந்தார் பெரியசாமி.
“ஏங்க உங்களுக்கு தான் மதியைப் பிடிக்குமே...! அப்பறம் என்னங்க?” என்றார் மலர்.
“பிடிச்சா..மருமகளா கொண்டு வரணும்ன்னு ஏதாவது சட்டம் இருக்கா...? என் பையன் எம்புட்டு பெரிய படிப்பு படிக்கிறான்...அவனுக்கு குடிகாரன் பொண்ணை கட்டி வைப்பியா..?” என்றார்.
“எங்கண்ணன் குடிக்கிறதுக்கு மதி என்ன செய்வா..? பாவம்..! தங்கமான பொண்ணுங்க...நாம தேடித் போனாக் கூட இப்படிக் கிடைக்காது..!” என்று மலர் சொல்ல..
“வீட்டுல ஆம்பிள்ளை நான் ஒருத்தன் இருக்கேன்..என்னைக் கேட்காம நீயா எப்படி முடிவு பண்ணுவ..?” என்று ஏகத்திற்கும் குதிக்க...
“முகிலனுக்கு மதியைப் பிடிக்குது..! கட்டினா மதியை தான் கட்டுவேன்னு சொல்லிட்டான்..!” என்றார் ஒரே போடாய்.
“இல்ல..! எம்மவன் அப்படி சொல்லியிருக்க மாட்டன்..!” என்று அவர் நம்பிக்கையுடன் சொல்ல..
“உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னா...முகிலன் கிட்டயே கேட்டுக்கோங்க..! ஆனா எனக்கு மனோகரன் அண்ணன் பொண்ணு தான் மருமகளா வரணும்...!” என்று மலர் ஊன்றி அடிக்க...மனையாளை அதற்கு மேல் எதிர்க்க அவருக்கு துணிவில்லை.அது எப்போதும் இருந்ததில்லை. இருந்தாலும் பெரியசாமிக்கு மனம் இல்லை.
அவர் யோசனையில் இருக்க...முகிலனுக்கும் அந்த யோசனை தான்.அம்மாவிடம் சரி என்று சொல்லி விட்டலும்..மனதிற்குள் பல யோசனைகள்.
“எனக்கு கல்யாணம்ன்னு கூட படிக்கிறவங்களுக்கு தெரிஞ்சா எப்படி கிண்டல் பண்ணுவாங்க..? எல்லாமே டவுன்ல இருந்து படிக்க வர பிள்ளைங்க வேற...?” என்று அவனும் ஒரு பக்கம் யோசித்துக் கொண்டிருந்தான்.ஆனால் மதியை இழக்க அவன் அந்த நிலையிலும் தயாராக இல்லை.
“ம்மா என்னம்மா இப்படி சொல்றிங்க...? என்னை கண்டிப்பா படிக்க வைக்கிறேன்னு சொன்னிங்க தான..?” என்று வண்ண மதி அவள் அம்மாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
“சொன்னேன் தான்..ஆனா இப்போ தான் சூழ்நிலை சரியில்லையே..! அதனால பேசாம முகிலனைக் கல்யாணம் பண்ணிக்க..!” என்றார் பார்வதி.
“என்னால இப்ப கல்யாணம் எல்லாம் பண்ண முடியாது..! நான் படிச்சு பெரிய டீச்சர் ஆகணும்...நான் படிச்ச ஸ்கூலுக்கே டீச்சரா போகணும்..!” என்று அவள் வார்த்தைகளில் தன்னம்பிக்கை மிதக்க...
“அம்மா உன் நல்லதுக்காக மட்டும் தான் சொல்லுவேன் மதி.இன்னைக்கு இப்படி பேசுன ஊரு..நாளைக்கு எப்படி வேணும்ன்னாலும் பேசும்..உங்கப்பா நிலையா இருந்தா கூட பரவாயில்லை.அவரும் எப்ப பாரு தண்ணியை போட்டுட்டு..வீடு, பிள்ளைகுட்டின்னு கவலை இல்லாம திரியறாரு..!
அதனால் முகிலனை கல்யாணம் பண்ணிக்க..மலர் மதினி உன்னைய ரொம்ப நல்லா பார்த்துக்குவாக..! அப்பறம் முகிலனைப் பத்தி நான் சொல்லவே வேணாம் உனக்கு.ரொம்ப தங்கம்..!” என்று பார்வதி நிதானமாக,பொறுமையுடன் எடுத்து சொல்ல....மதிக்கு அப்போதே தெரிந்து விட்டது. இனி நடக்க இருக்கும் விஷயத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று.
பார்வதி ஒரு விஷயத்தை தீர்மானமாக சொல்கிறார் என்றால்...அதற்கு மேல் எதிர்த்து பேச அவளால் முடியாது.அப்படி பேசினால் எப்படி அடி கிடைக்கும் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.
முகிலன்-மதி திருமண வேலைகள் படு வேகமாக நடக்க...நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த திலகாவிற்கு வயிறு எரிந்தது.
தன பாண்டியும்,குண பாண்டியும் கல்யாண வேலைகளில் உதவிக் கொண்டிருக்க..அதைப் பார்த்து விட்ட வந்த திலகா அதை அப்படியே அரசியிடம் போட்டுக் கொடுத்தார்.
“என்னக்கா...இவனுக ரெண்டு பேரும் அங்க மாடு மாதிரி வேலை பார்த்துட்டு இருக்கானுக...! இங்க வீட்ல ஒரு வேலை சொன்னா செய்றது இல்லை..அங்க போயி பாருங்க..!” என்று திலகா எடுத்துக் கொடுக்க..
“அட நீ வேற திலகா..என் புருஷனைக் கூட மாத்திட்டேன்...ஆனா இவனுங்களை என்னால் மாத்தவே முடியலை..அப்படி என்ன தான் மாயம் மந்திரம் செஞ்சாளுகளோ தெரியலை..அவளுகளைப் பத்தி பேசினா இவனுகளுக்கு கோபம் பலியா வருது..எப்படியோ போய் தொலைங்கன்னு விட்டுட்டேன்..!” என்று அரசி அலுத்துக் கொள்ள....திலகாவிற்கு புஸ் என்று ஆனது.
“அவளுக்கு வந்த வாழ்வைப் பாருங்கக்கா..! இவ மட்டும் முகிலனுக்கு பொண்டாட்டியா ஆகிட்டா..அப்பறம் அந்த பார்வதியை கைலையே பிடிக்க முடியாது..!” என்க..
“நீ சொல்றதும் உண்மைதான் திலகா...ஆனா இதுல நாம என்ன பண்றது..?” என்று அரசி அப்போதும் விலகிக் கொள்ள...
“அட என்னக்கா நீங்க..! நமக்கும் ஒரு சந்தர்ப்பம் வரும்...அப்ப காட்டுறேன் இந்த திலகா யாருன்னு..!” என்று வஞ்சனை கொண்டார்.
பெண்ணுக்கு பெண் தான் எதிரியோ..?
முகிலனுக்கு இன்னமும் யோசனை தீர்ந்தபாடில்லை.அப்போதைய திருமணத்தில் அவனுக்கு துளியும் விருப்பம் இல்லை.ஆனால் மதி அவனுக்கு வேண்டும்.இதை விட்டால் வேறு நல்ல சந்தர்ப்பமும் அவனுக்குக் கிடைக்காது என்று நன்றாகத் தெரியும்.
ஆனால் மதிக்கு தன்னைப் பிடித்திருக்கிறதா..? அவளுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமா..? என்று கேட்க துடியாய் துடித்துக் கொண்டிருந்தான்.ஆனால் அதற்கான சந்தர்ப்பம் தானாகவும் வாய்க்கவில்லை.அவனாலும் ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை.
அவனுக்கு அதிக நாட்கள் விடுப்பும் எடுக்க முடியாது.
படிக்க வேண்டிய பாடங்கள் அவனுக்கு மலை போல் குவிந்து கிடக்க...அவனுக்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல் வந்தது.
ஒரு பக்கம் மனதுக்கு பிடித்த பெண்...ஒரு பக்கம் கஷ்ட்டபட்டு கிடைத்த படிப்பு ஒரு பக்கம்...என்று அவன் தள்ளாடிக் கொண்டிருந்தான்.அவனுக்கும் பக்குவப்படாத வயது தானே..!
ஏதோ ஒரு வேகத்தில் சரி என்று சொல்லிவிட்டோமோ..? என்று நூறாவது முறையாக யோசித்து விட்டான்.பதில் தான் கிடைத்தபாடில்லை.
“என்னாச்சு முகிலா..? ஏன் எப்பவும் யோசனை முகமாவே இருக்க..?”””” என்று மலர் கேட்க...
“எனக்கு மதி கூட பேசணும்..? அவளுக்கு இந்த கல்யாணத்துல சம்மதமான்னு கேட்கணும்..!”என்று சொன்னான்.
“என்ன முகில் இது புதுப்பழக்கம்..நம்ம ஊர்ல அப்படி கேட்குறது எல்லாம் வழக்கம் இல்லை..உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பேசினதுக்கு அப்பறம்..ரெண்டு பேரும் பாக்கவே கூடாது.இதுல எங்க இருந்து பேச..?” என்று மலர் கேட்க..
“அம்மா..! இதெல்லாம் அநியாயம்.அதுக்காக ஒரு வார்த்தை கேட்குறதுல என்ன குறைஞ்சிட போகுது..அவ சின்ன பிள்ளைம்மா..அவகிட்ட நான் சில விஷயங்களை சொல்லணும்...!” என்று முகிலன் மன்றாடிப் பார்க்க..மலர் அதுக்கு ஒப்புக் கொள்ளவேயில்லை.
எங்கே அவன் பேசப் போய்...வேறு ஒரு பஞ்சாயத்து வந்து விடுமோ என்ற பயம் தான் அவருக்கு.
முகிலனின் கதவுகள் அடைக்கபட...அங்கு மதியின் நிலையோ சொல்லவே வேண்டாம்.அவளை வீட்டை விட்டே பார்வதி வெளியேற்றவில்லை.பேசி முடித்த பொண்ணை வெளியே அனுப்பினால் காத்து கருப்பு அண்டி விடும் என்ற ஆதீத நம்பிக்கை அந்த ஊரில் நிலவிக் கொண்டிருந்தது நெடுங்காலமாய்.
மதியின் திருமணத்தில் கொஞ்சம் வருத்தம் இருந்தாலும்...மாப்பிள்ளை முகிலன் என்று கேள்விப்பட்டதில் இருந்து செல்விக்கும்,கங்காவுக்கும் அப்படி ஒரு சந்தோசம். அவளைப் பார்க்க வீட்டிற்கே சென்றிருந்தனர்.
“என்னடி வண்ணமதி...என்னமோ படிக்க போறேன்னு சொன்ன..? எங்களுக்கு முன்னாடி கல்யாணம் பண்ண போற..?” என்று செல்வி எதார்த்தமாக விளையாட்டாய் கேட்க..அது மதியின் மனதில் துணுக்காய் விழுந்தது.
குழப்பத்தில் இருக்கும் மனம்..எதை சொன்னாலும் தப்பர்த்தம் கற்ப்பிக்குமாம். அந்த நிலையில் இருந்தால் வண்ண மதி.
“என்ன கிண்டல் பண்றியா..?” என்று மதி கேட்க...
“உன்னைக் கிண்டல் பண்ணி எங்களுக்கு என்ன ஆகப் போகுது..? உனக்கு கல்யாணம்..அதுவும் முகிலன் அண்ணா கூட தான்னு கேள்விப்பட்டப்ப எவ்வளவு சந்தோசம் தெரியுமா எங்களுக்கு..!” என்று அவள் வெள்ளந்தியாய் சொல்ல..
“எல்லாத்துக்கும் நீங்க தாண்டி காரணம்..என் மூஞ்சியிலேயே முழிக்காதிங்க..!” என்றாள் பட்டென்று.
“நாங்க என்னடி பண்ணினோம்..? எங்க மேல கோபப்படுற..?” என்று கங்கா கேட்க..
“ஆமா..அன்னைக்கு எக்ஸாம் முடிச்சுட்டு வரப்ப..நான் உங்களையும் கூப்பிட்டேன்..நீங்கதான் பிகு பண்ணிக்கிட்டு வரலை.நீங்க மட்டும் அன்னைக்கு என்கூட துணைக்கு வந்திருந்தா..இவ்வளவு பிரச்சனையும் வந்திருக்காது..! நானும் இப்படி படிப்பைக் கெடுத்து கல்யாணம் செய்ற அளவுக்கு போயிருக்க மாட்டேன்..!” என்று சொல்லி கொண்டிருந்தவளின் கண்கள் கலங்க..
“ஏய் மதி...! இப்படி எல்லாம் நடக்கும்ன்னு நாங்க என்ன கனவா கண்டோம்...!நாங்க என்னடி பண்ணோம்...எங்களை கோவிச்சுக்காத மதி..” என்று செல்வி கெஞ்ச..
“வேண்டாம் போய்டுங்க..! என்கூட பேசாதிங்க..! இனி எப்பவும் பழம் விட மாட்டேன்..!” என்று சொல்ல....
“பழம் விட மாட்டியா..? நாங்க உன் பிரண்டுக தாண்டி...உனக்கு எப்ப பேசனும்ன்னு தோணுதோ அப்ப பேசு..! நீ வாடி செல்வி..!” என்று கங்கா அவளை அழைத்துக் கொண்டு செல்ல...அதற்கும் கண்கலங்கினாள் மதி.
“யாரைக் கேட்டு முடிவு பண்ணுன மலரு..?” என்று விஷயம் தெரிந்து குதித்துக் கொண்டிருந்தார் பெரியசாமி.
“ஏங்க உங்களுக்கு தான் மதியைப் பிடிக்குமே...! அப்பறம் என்னங்க?” என்றார் மலர்.
“பிடிச்சா..மருமகளா கொண்டு வரணும்ன்னு ஏதாவது சட்டம் இருக்கா...? என் பையன் எம்புட்டு பெரிய படிப்பு படிக்கிறான்...அவனுக்கு குடிகாரன் பொண்ணை கட்டி வைப்பியா..?” என்றார்.
“எங்கண்ணன் குடிக்கிறதுக்கு மதி என்ன செய்வா..? பாவம்..! தங்கமான பொண்ணுங்க...நாம தேடித் போனாக் கூட இப்படிக் கிடைக்காது..!” என்று மலர் சொல்ல..
“வீட்டுல ஆம்பிள்ளை நான் ஒருத்தன் இருக்கேன்..என்னைக் கேட்காம நீயா எப்படி முடிவு பண்ணுவ..?” என்று ஏகத்திற்கும் குதிக்க...
“முகிலனுக்கு மதியைப் பிடிக்குது..! கட்டினா மதியை தான் கட்டுவேன்னு சொல்லிட்டான்..!” என்றார் ஒரே போடாய்.
“இல்ல..! எம்மவன் அப்படி சொல்லியிருக்க மாட்டன்..!” என்று அவர் நம்பிக்கையுடன் சொல்ல..
“உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னா...முகிலன் கிட்டயே கேட்டுக்கோங்க..! ஆனா எனக்கு மனோகரன் அண்ணன் பொண்ணு தான் மருமகளா வரணும்...!” என்று மலர் ஊன்றி அடிக்க...மனையாளை அதற்கு மேல் எதிர்க்க அவருக்கு துணிவில்லை.அது எப்போதும் இருந்ததில்லை. இருந்தாலும் பெரியசாமிக்கு மனம் இல்லை.
அவர் யோசனையில் இருக்க...முகிலனுக்கும் அந்த யோசனை தான்.அம்மாவிடம் சரி என்று சொல்லி விட்டலும்..மனதிற்குள் பல யோசனைகள்.
“எனக்கு கல்யாணம்ன்னு கூட படிக்கிறவங்களுக்கு தெரிஞ்சா எப்படி கிண்டல் பண்ணுவாங்க..? எல்லாமே டவுன்ல இருந்து படிக்க வர பிள்ளைங்க வேற...?” என்று அவனும் ஒரு பக்கம் யோசித்துக் கொண்டிருந்தான்.ஆனால் மதியை இழக்க அவன் அந்த நிலையிலும் தயாராக இல்லை.
“ம்மா என்னம்மா இப்படி சொல்றிங்க...? என்னை கண்டிப்பா படிக்க வைக்கிறேன்னு சொன்னிங்க தான..?” என்று வண்ண மதி அவள் அம்மாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
“சொன்னேன் தான்..ஆனா இப்போ தான் சூழ்நிலை சரியில்லையே..! அதனால பேசாம முகிலனைக் கல்யாணம் பண்ணிக்க..!” என்றார் பார்வதி.
“என்னால இப்ப கல்யாணம் எல்லாம் பண்ண முடியாது..! நான் படிச்சு பெரிய டீச்சர் ஆகணும்...நான் படிச்ச ஸ்கூலுக்கே டீச்சரா போகணும்..!” என்று அவள் வார்த்தைகளில் தன்னம்பிக்கை மிதக்க...
“அம்மா உன் நல்லதுக்காக மட்டும் தான் சொல்லுவேன் மதி.இன்னைக்கு இப்படி பேசுன ஊரு..நாளைக்கு எப்படி வேணும்ன்னாலும் பேசும்..உங்கப்பா நிலையா இருந்தா கூட பரவாயில்லை.அவரும் எப்ப பாரு தண்ணியை போட்டுட்டு..வீடு, பிள்ளைகுட்டின்னு கவலை இல்லாம திரியறாரு..!
அதனால் முகிலனை கல்யாணம் பண்ணிக்க..மலர் மதினி உன்னைய ரொம்ப நல்லா பார்த்துக்குவாக..! அப்பறம் முகிலனைப் பத்தி நான் சொல்லவே வேணாம் உனக்கு.ரொம்ப தங்கம்..!” என்று பார்வதி நிதானமாக,பொறுமையுடன் எடுத்து சொல்ல....மதிக்கு அப்போதே தெரிந்து விட்டது. இனி நடக்க இருக்கும் விஷயத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று.
பார்வதி ஒரு விஷயத்தை தீர்மானமாக சொல்கிறார் என்றால்...அதற்கு மேல் எதிர்த்து பேச அவளால் முடியாது.அப்படி பேசினால் எப்படி அடி கிடைக்கும் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.
முகிலன்-மதி திருமண வேலைகள் படு வேகமாக நடக்க...நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த திலகாவிற்கு வயிறு எரிந்தது.
தன பாண்டியும்,குண பாண்டியும் கல்யாண வேலைகளில் உதவிக் கொண்டிருக்க..அதைப் பார்த்து விட்ட வந்த திலகா அதை அப்படியே அரசியிடம் போட்டுக் கொடுத்தார்.
“என்னக்கா...இவனுக ரெண்டு பேரும் அங்க மாடு மாதிரி வேலை பார்த்துட்டு இருக்கானுக...! இங்க வீட்ல ஒரு வேலை சொன்னா செய்றது இல்லை..அங்க போயி பாருங்க..!” என்று திலகா எடுத்துக் கொடுக்க..
“அட நீ வேற திலகா..என் புருஷனைக் கூட மாத்திட்டேன்...ஆனா இவனுங்களை என்னால் மாத்தவே முடியலை..அப்படி என்ன தான் மாயம் மந்திரம் செஞ்சாளுகளோ தெரியலை..அவளுகளைப் பத்தி பேசினா இவனுகளுக்கு கோபம் பலியா வருது..எப்படியோ போய் தொலைங்கன்னு விட்டுட்டேன்..!” என்று அரசி அலுத்துக் கொள்ள....திலகாவிற்கு புஸ் என்று ஆனது.
“அவளுக்கு வந்த வாழ்வைப் பாருங்கக்கா..! இவ மட்டும் முகிலனுக்கு பொண்டாட்டியா ஆகிட்டா..அப்பறம் அந்த பார்வதியை கைலையே பிடிக்க முடியாது..!” என்க..
“நீ சொல்றதும் உண்மைதான் திலகா...ஆனா இதுல நாம என்ன பண்றது..?” என்று அரசி அப்போதும் விலகிக் கொள்ள...
“அட என்னக்கா நீங்க..! நமக்கும் ஒரு சந்தர்ப்பம் வரும்...அப்ப காட்டுறேன் இந்த திலகா யாருன்னு..!” என்று வஞ்சனை கொண்டார்.
பெண்ணுக்கு பெண் தான் எதிரியோ..?
முகிலனுக்கு இன்னமும் யோசனை தீர்ந்தபாடில்லை.அப்போதைய திருமணத்தில் அவனுக்கு துளியும் விருப்பம் இல்லை.ஆனால் மதி அவனுக்கு வேண்டும்.இதை விட்டால் வேறு நல்ல சந்தர்ப்பமும் அவனுக்குக் கிடைக்காது என்று நன்றாகத் தெரியும்.
ஆனால் மதிக்கு தன்னைப் பிடித்திருக்கிறதா..? அவளுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமா..? என்று கேட்க துடியாய் துடித்துக் கொண்டிருந்தான்.ஆனால் அதற்கான சந்தர்ப்பம் தானாகவும் வாய்க்கவில்லை.அவனாலும் ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை.
அவனுக்கு அதிக நாட்கள் விடுப்பும் எடுக்க முடியாது.
படிக்க வேண்டிய பாடங்கள் அவனுக்கு மலை போல் குவிந்து கிடக்க...அவனுக்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல் வந்தது.
ஒரு பக்கம் மனதுக்கு பிடித்த பெண்...ஒரு பக்கம் கஷ்ட்டபட்டு கிடைத்த படிப்பு ஒரு பக்கம்...என்று அவன் தள்ளாடிக் கொண்டிருந்தான்.அவனுக்கும் பக்குவப்படாத வயது தானே..!
ஏதோ ஒரு வேகத்தில் சரி என்று சொல்லிவிட்டோமோ..? என்று நூறாவது முறையாக யோசித்து விட்டான்.பதில் தான் கிடைத்தபாடில்லை.
“என்னாச்சு முகிலா..? ஏன் எப்பவும் யோசனை முகமாவே இருக்க..?”””” என்று மலர் கேட்க...
“எனக்கு மதி கூட பேசணும்..? அவளுக்கு இந்த கல்யாணத்துல சம்மதமான்னு கேட்கணும்..!”என்று சொன்னான்.
“என்ன முகில் இது புதுப்பழக்கம்..நம்ம ஊர்ல அப்படி கேட்குறது எல்லாம் வழக்கம் இல்லை..உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பேசினதுக்கு அப்பறம்..ரெண்டு பேரும் பாக்கவே கூடாது.இதுல எங்க இருந்து பேச..?” என்று மலர் கேட்க..
“அம்மா..! இதெல்லாம் அநியாயம்.அதுக்காக ஒரு வார்த்தை கேட்குறதுல என்ன குறைஞ்சிட போகுது..அவ சின்ன பிள்ளைம்மா..அவகிட்ட நான் சில விஷயங்களை சொல்லணும்...!” என்று முகிலன் மன்றாடிப் பார்க்க..மலர் அதுக்கு ஒப்புக் கொள்ளவேயில்லை.
எங்கே அவன் பேசப் போய்...வேறு ஒரு பஞ்சாயத்து வந்து விடுமோ என்ற பயம் தான் அவருக்கு.
முகிலனின் கதவுகள் அடைக்கபட...அங்கு மதியின் நிலையோ சொல்லவே வேண்டாம்.அவளை வீட்டை விட்டே பார்வதி வெளியேற்றவில்லை.பேசி முடித்த பொண்ணை வெளியே அனுப்பினால் காத்து கருப்பு அண்டி விடும் என்ற ஆதீத நம்பிக்கை அந்த ஊரில் நிலவிக் கொண்டிருந்தது நெடுங்காலமாய்.
மதியின் திருமணத்தில் கொஞ்சம் வருத்தம் இருந்தாலும்...மாப்பிள்ளை முகிலன் என்று கேள்விப்பட்டதில் இருந்து செல்விக்கும்,கங்காவுக்கும் அப்படி ஒரு சந்தோசம். அவளைப் பார்க்க வீட்டிற்கே சென்றிருந்தனர்.
“என்னடி வண்ணமதி...என்னமோ படிக்க போறேன்னு சொன்ன..? எங்களுக்கு முன்னாடி கல்யாணம் பண்ண போற..?” என்று செல்வி எதார்த்தமாக விளையாட்டாய் கேட்க..அது மதியின் மனதில் துணுக்காய் விழுந்தது.
குழப்பத்தில் இருக்கும் மனம்..எதை சொன்னாலும் தப்பர்த்தம் கற்ப்பிக்குமாம். அந்த நிலையில் இருந்தால் வண்ண மதி.
“என்ன கிண்டல் பண்றியா..?” என்று மதி கேட்க...
“உன்னைக் கிண்டல் பண்ணி எங்களுக்கு என்ன ஆகப் போகுது..? உனக்கு கல்யாணம்..அதுவும் முகிலன் அண்ணா கூட தான்னு கேள்விப்பட்டப்ப எவ்வளவு சந்தோசம் தெரியுமா எங்களுக்கு..!” என்று அவள் வெள்ளந்தியாய் சொல்ல..
“எல்லாத்துக்கும் நீங்க தாண்டி காரணம்..என் மூஞ்சியிலேயே முழிக்காதிங்க..!” என்றாள் பட்டென்று.
“நாங்க என்னடி பண்ணினோம்..? எங்க மேல கோபப்படுற..?” என்று கங்கா கேட்க..
“ஆமா..அன்னைக்கு எக்ஸாம் முடிச்சுட்டு வரப்ப..நான் உங்களையும் கூப்பிட்டேன்..நீங்கதான் பிகு பண்ணிக்கிட்டு வரலை.நீங்க மட்டும் அன்னைக்கு என்கூட துணைக்கு வந்திருந்தா..இவ்வளவு பிரச்சனையும் வந்திருக்காது..! நானும் இப்படி படிப்பைக் கெடுத்து கல்யாணம் செய்ற அளவுக்கு போயிருக்க மாட்டேன்..!” என்று சொல்லி கொண்டிருந்தவளின் கண்கள் கலங்க..
“ஏய் மதி...! இப்படி எல்லாம் நடக்கும்ன்னு நாங்க என்ன கனவா கண்டோம்...!நாங்க என்னடி பண்ணோம்...எங்களை கோவிச்சுக்காத மதி..” என்று செல்வி கெஞ்ச..
“வேண்டாம் போய்டுங்க..! என்கூட பேசாதிங்க..! இனி எப்பவும் பழம் விட மாட்டேன்..!” என்று சொல்ல....
“பழம் விட மாட்டியா..? நாங்க உன் பிரண்டுக தாண்டி...உனக்கு எப்ப பேசனும்ன்னு தோணுதோ அப்ப பேசு..! நீ வாடி செல்வி..!” என்று கங்கா அவளை அழைத்துக் கொண்டு செல்ல...அதற்கும் கண்கலங்கினாள் மதி.