Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

karisal kaathal -1

Advertisement

ஆண் பிள்ளை இல்லை என்றாலும்...அந்த குறையை மனதில் வைத்துக் கொண்டு அவர் வண்ணமதியையும்,சுமதியையும் ஒரு நாளும் பார்த்ததில்லை.அவர்களுக்கு ஒன்று என்றால் துடித்துப் போய்விடுவார்.

அதிலும் மூத்த பெண் வண்ணமதி மீது அவருக்கு அளவற்ற பாசம் என்று கூட சொல்லலாம்.

பலகோடி ரூபாய் பெறுமானமுள்ள சொத்துக்கள்..நிலங்களாக இருந்தது அவர்களுக்கு.ஆனால் பிரிக்கபடாமல் இருந்தது.

அண்ணன்,தம்பிகளுக்குள் ஒற்றுமை இல்லாத ஒரே காரணத்தினால் அந்த நிலங்கள் முழுவதும் எதற்கு உபயோகப்படாமல் இருந்தது.விட்டுக் கொடுக்கும் மனம் அங்கே யாருக்கும் இல்லை.

இதில் மனோகரன் கொஞ்சம் விதிவிலக்கு.தனக்கு சேர வேண்டியது வந்தால் போதும் என்று என்னும் ராகம்.ஆனால் அதை அவ்வளவு சீக்கிரம் பிரித்துக் கொள்ள யாரும் முன் வரவில்லை.

ஊருக்குள் பேர் சொல்லும்படி ஒரு காலத்தில் வாழ்ந்த குடும்பம்.இன்று நாறிக் கிடக்கிறது.

அண்ணன்களின் பிள்ளைகள் அண்ணனைப் போலவே குணத்திலும் இருக்க...தம்பியின் பிள்ளைகளும் தம்பியின் குணத்தை நகல் எடுத்திருக்க...அவர்களின் சண்டையும்,சச்சரவுகளும் ஊர் அறிந்த ஒரு விஷயம்.

இவர்களுக்கு வாய்த்த மனைவிகளில் பார்வதி மட்டும் கொஞ்சம் விதி விலக்கு.யாருடனும் சண்டைக்கு போக மாட்டார்.வீண் வம்புகளை இழுக்க மாட்டார்.சண்டை என்றாலே பத்தடி தள்ளி நிற்கும் குணம்.

இதனால் அந்தா ஊருக்குள் அவருக்கென்று ஒரு நல்ல பெயர் இருந்தது.அது தான்...பொறுமையானவள் என்ற பெயர்.

ஆனால் பார்வதி மனதளவில் மிகத் திடமானவர்.அவரின் கஷ்ட்டம் அவர் சொன்னாலே ஒழிய..அவர் முகத்தில் கூட தெரியாது.எல்லாவற்றையும் மனதிற்குள் போட்டு மறுகும் ரகம்.

இரண்டு பெண் குழந்தைகளின் தாய் என்ற பொறுப்பு அவர் நடத்தையிலும்,அவர் பேச்சிலும் தெரியும்.மிகவும் கண்டிப்பானவர்.அதற்கு பின் பல காயங்கள் அடங்கியுள்ளது என்பதை அவரை அறிந்தவர்களுக்குத் தெரியும்.

வீட்டின் முன்னால் வண்டி நிற்க...வண்டியிலிருந்து இறங்கினாள் வண்ண மதி.

“வீட்டுக்குள்ள போமா..! நான் புல்லுக்கட்டை மாட்டுக் கொட்டகையில் போட்டுட்டு வந்துடுறேன்..” என்றபடி மனோகரன் செல்ல...வீட்டினுள் அடியெடுத்து வைக்க போன மதிக்குள்...பல நியாபகங்கள்.

“ஹைய் அக்கா...வாக்கா...நீ எப்போ வருவ வருவன்ன அம்மாகிட்ட கேட்டுகிட்டே இருந்தேன்..” என்றபடி ஓடி வந்த அவளின் தங்கை சுமதி அவளை அணைத்துக் கொண்டாள்.

“எப்படி சுமதி இருக்க..?” என்றாள் பாசமாய்.

“எனக்கென்னக்கா நீ இல்லைங்கிற ஒரு குறையைத் தவிர நான் நல்லா இருக்கேன்..!” என்றாள் வெகுளியாய்.
“நீதான்க்கா ஆளே மாறிப் போயிட்ட ..! ரொம்ப அழகா வேற ஆகிட்டக்கா..” என்றாள் சிரிப்புடன்.

“வா மதி..!” என்றார் பார்வதி.

“அம்மா..!” என்று ஒரு நிமிடம் கண் கலங்கியவள்...தன் தாயை அணைத்துக் கொண்டாள்.

“இப்ப எதுக்கு கண் கலங்கிட்டு இருக்க...போ..போய் குளிச்சுட்டு வா..” என்றார்.

அவகளின் வீடு ஓட்டு வீடு.ஆனால் விசாலமான வீடு.நடுவில் முற்றம்,பின்னால் மாட்டுக் கொட்டகை என கொஞ்சம் பழமையாக..அதே சமயம் அழகாக இருக்கும்.வீட்டை சுற்றிலும் இருக்கும் மரங்கள்,பூச்செடிகள் தான்...அந்த வீட்டிற்கு அழகே.

பத்து வருடங்களுக்கு முன்னால் வீடு எப்படி இருந்ததோ..இப்பவும் அப்படியேதான் இருந்தது.மரம் செடி,கொடிகள் தான் வளர்ந்திருந்தன.வேறு எந்த மாற்றமும் இல்லை.

வீட்டின் கொள்ளை புறத்தில் (பாத்ரூம்) குளித்து விட்டு வந்த வண்ண மதிக்கு...சூடாக சாதத்தை பரிமாறினார் பார்வதி.

தட்டில் மீன் குழம்பைப் பார்த்த மதிக்கு கண்களில் கண்ணீர்.அம்மாவின் கையால் சாப்பிடும் மீன் குழம்பின் ருசி அறிந்தவள் அவள்.பல வருடங்கள் கழித்து மீண்டும் அதே மணத்துடன் இருந்தது சாப்பாடு.

கண்களில் தேங்கிய கண்ணீருடன்..அவள் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டே நின்று விட்டார் பார்வதி.சுமதியும் தட்டை எடுத்துக் கொண்டு சாப்பிட அமர...மனோகரனும் வந்தார்.

அப்பா,பிள்ளைகள் என மூவரும் சாப்பிட..பார்வதிக்கு பார்க்க பார்க்க..மனம் நிறைந்து போனது.

அவள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது...

”டேய் முத்து இங்க வாடா..!” என்ற குரல் கேட்க...

அந்த பெயரில் திகைத்து...எடுத்த கவளம் வாய்க்குள் செல்லாமல்..பாதியில் நின்றது.

கண்ணில் இருந்து...கண்ணீர் வெளியேறத் தயாராய் இருந்தது.பார்வதி முறைத்துப் பார்க்கவும் கண்ணீரை அடக்கிக் கொண்டாள்.

ஆனால் மனதை..?

காதல் தொடரும்...
super start mam
 
ஆண் பிள்ளை இல்லை என்றாலும்...அந்த குறையை மனதில் வைத்துக் கொண்டு அவர் வண்ணமதியையும்,சுமதியையும் ஒரு நாளும் பார்த்ததில்லை.அவர்களுக்கு ஒன்று என்றால் துடித்துப் போய்விடுவார்.

அதிலும் மூத்த பெண் வண்ணமதி மீது அவருக்கு அளவற்ற பாசம் என்று கூட சொல்லலாம்.

பலகோடி ரூபாய் பெறுமானமுள்ள சொத்துக்கள்..நிலங்களாக இருந்தது அவர்களுக்கு.ஆனால் பிரிக்கபடாமல் இருந்தது.

அண்ணன்,தம்பிகளுக்குள் ஒற்றுமை இல்லாத ஒரே காரணத்தினால் அந்த நிலங்கள் முழுவதும் எதற்கு உபயோகப்படாமல் இருந்தது.விட்டுக் கொடுக்கும் மனம் அங்கே யாருக்கும் இல்லை.

இதில் மனோகரன் கொஞ்சம் விதிவிலக்கு.தனக்கு சேர வேண்டியது வந்தால் போதும் என்று என்னும் ராகம்.ஆனால் அதை அவ்வளவு சீக்கிரம் பிரித்துக் கொள்ள யாரும் முன் வரவில்லை.

ஊருக்குள் பேர் சொல்லும்படி ஒரு காலத்தில் வாழ்ந்த குடும்பம்.இன்று நாறிக் கிடக்கிறது.

அண்ணன்களின் பிள்ளைகள் அண்ணனைப் போலவே குணத்திலும் இருக்க...தம்பியின் பிள்ளைகளும் தம்பியின் குணத்தை நகல் எடுத்திருக்க...அவர்களின் சண்டையும்,சச்சரவுகளும் ஊர் அறிந்த ஒரு விஷயம்.

இவர்களுக்கு வாய்த்த மனைவிகளில் பார்வதி மட்டும் கொஞ்சம் விதி விலக்கு.யாருடனும் சண்டைக்கு போக மாட்டார்.வீண் வம்புகளை இழுக்க மாட்டார்.சண்டை என்றாலே பத்தடி தள்ளி நிற்கும் குணம்.

இதனால் அந்தா ஊருக்குள் அவருக்கென்று ஒரு நல்ல பெயர் இருந்தது.அது தான்...பொறுமையானவள் என்ற பெயர்.

ஆனால் பார்வதி மனதளவில் மிகத் திடமானவர்.அவரின் கஷ்ட்டம் அவர் சொன்னாலே ஒழிய..அவர் முகத்தில் கூட தெரியாது.எல்லாவற்றையும் மனதிற்குள் போட்டு மறுகும் ரகம்.

இரண்டு பெண் குழந்தைகளின் தாய் என்ற பொறுப்பு அவர் நடத்தையிலும்,அவர் பேச்சிலும் தெரியும்.மிகவும் கண்டிப்பானவர்.அதற்கு பின் பல காயங்கள் அடங்கியுள்ளது என்பதை அவரை அறிந்தவர்களுக்குத் தெரியும்.

வீட்டின் முன்னால் வண்டி நிற்க...வண்டியிலிருந்து இறங்கினாள் வண்ண மதி.

“வீட்டுக்குள்ள போமா..! நான் புல்லுக்கட்டை மாட்டுக் கொட்டகையில் போட்டுட்டு வந்துடுறேன்..” என்றபடி மனோகரன் செல்ல...வீட்டினுள் அடியெடுத்து வைக்க போன மதிக்குள்...பல நியாபகங்கள்.

“ஹைய் அக்கா...வாக்கா...நீ எப்போ வருவ வருவன்ன அம்மாகிட்ட கேட்டுகிட்டே இருந்தேன்..” என்றபடி ஓடி வந்த அவளின் தங்கை சுமதி அவளை அணைத்துக் கொண்டாள்.

“எப்படி சுமதி இருக்க..?” என்றாள் பாசமாய்.

“எனக்கென்னக்கா நீ இல்லைங்கிற ஒரு குறையைத் தவிர நான் நல்லா இருக்கேன்..!” என்றாள் வெகுளியாய்.
“நீதான்க்கா ஆளே மாறிப் போயிட்ட ..! ரொம்ப அழகா வேற ஆகிட்டக்கா..” என்றாள் சிரிப்புடன்.

“வா மதி..!” என்றார் பார்வதி.

“அம்மா..!” என்று ஒரு நிமிடம் கண் கலங்கியவள்...தன் தாயை அணைத்துக் கொண்டாள்.

“இப்ப எதுக்கு கண் கலங்கிட்டு இருக்க...போ..போய் குளிச்சுட்டு வா..” என்றார்.

அவகளின் வீடு ஓட்டு வீடு.ஆனால் விசாலமான வீடு.நடுவில் முற்றம்,பின்னால் மாட்டுக் கொட்டகை என கொஞ்சம் பழமையாக..அதே சமயம் அழகாக இருக்கும்.வீட்டை சுற்றிலும் இருக்கும் மரங்கள்,பூச்செடிகள் தான்...அந்த வீட்டிற்கு அழகே.

பத்து வருடங்களுக்கு முன்னால் வீடு எப்படி இருந்ததோ..இப்பவும் அப்படியேதான் இருந்தது.மரம் செடி,கொடிகள் தான் வளர்ந்திருந்தன.வேறு எந்த மாற்றமும் இல்லை.

வீட்டின் கொள்ளை புறத்தில் (பாத்ரூம்) குளித்து விட்டு வந்த வண்ண மதிக்கு...சூடாக சாதத்தை பரிமாறினார் பார்வதி.

தட்டில் மீன் குழம்பைப் பார்த்த மதிக்கு கண்களில் கண்ணீர்.அம்மாவின் கையால் சாப்பிடும் மீன் குழம்பின் ருசி அறிந்தவள் அவள்.பல வருடங்கள் கழித்து மீண்டும் அதே மணத்துடன் இருந்தது சாப்பாடு.

கண்களில் தேங்கிய கண்ணீருடன்..அவள் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டே நின்று விட்டார் பார்வதி.சுமதியும் தட்டை எடுத்துக் கொண்டு சாப்பிட அமர...மனோகரனும் வந்தார்.

அப்பா,பிள்ளைகள் என மூவரும் சாப்பிட..பார்வதிக்கு பார்க்க பார்க்க..மனம் நிறைந்து போனது.

அவள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது...

”டேய் முத்து இங்க வாடா..!” என்ற குரல் கேட்க...

அந்த பெயரில் திகைத்து...எடுத்த கவளம் வாய்க்குள் செல்லாமல்..பாதியில் நின்றது.

கண்ணில் இருந்து...கண்ணீர் வெளியேறத் தயாராய் இருந்தது.பார்வதி முறைத்துப் பார்க்கவும் கண்ணீரை அடக்கிக் கொண்டாள்.

ஆனால் மனதை..?

காதல் தொடரும்...
Muthu mama nee engairuka
 
சூப்பர் எப்பி
கிராமத்து வாழ்வின் எதார்த்தம்..
சஸ்பென்ஸ் ah போகுது..
பகையாளிங்க
பெரியப்பா சித்தப்பா வீடேவா:cry::cautious:
 

Advertisement

Latest Posts

Top