விழிகள் வழி மாறியது
சிபிரஞ்சன் ஶ்ரீரஞ்சன் இரட்டையர்கள் மும்பையை பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆடை உற்பத்தி வடிவமைப்பு மற்றும் ஏற்றுமதி தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் பெற்றோர் ரகுபதி _ மாலினி agmark higher society parents
சிபிரஞ்சன் நம் கதையின் நாயகன்.....பெற்றோர்களின் கவனிப்பின்றி தாத்தாவிடம் வளர்ந்து அவரிடம் தொழிலும் கற்று அவருக்கு பின் குடும்ப அமைப்பிற்காக ஏங்குபவன் ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் தன்னை இறுக்கமாக வைத்துக் கொண்டு இருப்பவன்
ஆனால் அவனும் ஒரு பெண்ணிடம் தன் மனதை தொலைத்து தம்பிக்கும் காதலிக்கும் இடையில் அல்லாடும் நாள் வெகு அருகில்
ஶ்ரீ ரஞ்சன் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்பவன்
மதுரிமா உடன் காதல் கொண்டு எதிர்காலத்தில் இவனின் விட்டேத்தியான குணத்தால் காதலையும் இழந்து தன் இயல்பான குணத்தையும் இழந்து திருமணத்தை வெறுத்து மறுக்கும் காலமும் வெகு அருகில்
மதுரிமா நம் கதையின் நாயகி.... மதுரை அலங்காநல்லூரை பூர்வீகமாகக் கொண்டவள் பெற்றோர்களை சிறுவயதிலேயே இழந்து தாத்தா சொக்கலிங்கம் பாட்டி பட்டம்மாள் சித்தப்பா அவர்களின் பிள்ளைகளுடன் வாழ்பவள் படிப்பை முடித்து மும்பையில் ரஞ்சன் நிறுவனத்தில் பணி புரிந்து ஶ்ரீயின் காதலியாக நமக்கு காட்சி படுத்தபடுகிறாள்
இத்தருணத்தில் மது தன் காதலை தன் பாட்டியிடம் கூற பெரியவர்கள் அவளின் காதலனை ஊருக்கு அழைத்து வருமாறும் அவனை பார்த்து அவனின் குணத்தை அறிந்த பிறகு மேற்க்கொண்டு முடிவு எடுப்பதாக கூற....!!!
மது இதனை தன் காதலனிடம் கூறி ஊருக்கு வருமாறு அழைக்க ஶ்ரீ கிராமத்துக்கு வர தயங்கி தனக்கு காலில் அடி பட்டு விட்டதாக நாடகமாடி தன் அண்ணனை மதுவின் காதலனாக ஊருக்கு அனுப்பி வைக்கிறான்...!!!
இரட்டையர்களின் வாழ்க்கை அலங்காநல்லூரில் தான் மாறுகிறது...!!!
சிபிரஞ்சன்.....மதுவின் குடும்ப அமைப்பில் மனம் கவரப்பட்டவனாய் தம்பியின் காதலியிடம் தன் மனதை தொலைத்து அவளிடம் காதல் வயப்படுகிறான்
மதுவும் சிபியின் நற்பண்புகளில் கவரப்பட்டு தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் அவன் செய்யும் நற்செயல்களினால் சிபியிடம் தன் மனதை தொலைக்கிறாள்
பிறகு என்ன நடக்கிறது... இவர்கள் இருவரும் காதலில் ஜெயிக்கிறார்களா...???!!! யார் யாருடன் இணைகிறார்கள் என்பதனை எழுத்தாளர் தன் பாணியில் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் ரசிக்கும் படியாகவும் மிக அழகாக கூறியுள்ளார்
நாயகன் நாயகியின் ஆழமான காதலும் ஶ்ரீ யின் மனமாற்றமும் கூடிய மூவரும் நம் மனதை கவர்கிறார்கள்
குடும்ப சூழலுக்கு இடையில் அழகான அருமையான காதல் கதையை நிறைவாக தந்தமைக்கு எழுத்தாளருக்கு நம் பாராட்டுக்கள்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
சிபிரஞ்சன் ஶ்ரீரஞ்சன் இரட்டையர்கள் மும்பையை பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆடை உற்பத்தி வடிவமைப்பு மற்றும் ஏற்றுமதி தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் பெற்றோர் ரகுபதி _ மாலினி agmark higher society parents
சிபிரஞ்சன் நம் கதையின் நாயகன்.....பெற்றோர்களின் கவனிப்பின்றி தாத்தாவிடம் வளர்ந்து அவரிடம் தொழிலும் கற்று அவருக்கு பின் குடும்ப அமைப்பிற்காக ஏங்குபவன் ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் தன்னை இறுக்கமாக வைத்துக் கொண்டு இருப்பவன்
ஆனால் அவனும் ஒரு பெண்ணிடம் தன் மனதை தொலைத்து தம்பிக்கும் காதலிக்கும் இடையில் அல்லாடும் நாள் வெகு அருகில்
ஶ்ரீ ரஞ்சன் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்பவன்
மதுரிமா உடன் காதல் கொண்டு எதிர்காலத்தில் இவனின் விட்டேத்தியான குணத்தால் காதலையும் இழந்து தன் இயல்பான குணத்தையும் இழந்து திருமணத்தை வெறுத்து மறுக்கும் காலமும் வெகு அருகில்
மதுரிமா நம் கதையின் நாயகி.... மதுரை அலங்காநல்லூரை பூர்வீகமாகக் கொண்டவள் பெற்றோர்களை சிறுவயதிலேயே இழந்து தாத்தா சொக்கலிங்கம் பாட்டி பட்டம்மாள் சித்தப்பா அவர்களின் பிள்ளைகளுடன் வாழ்பவள் படிப்பை முடித்து மும்பையில் ரஞ்சன் நிறுவனத்தில் பணி புரிந்து ஶ்ரீயின் காதலியாக நமக்கு காட்சி படுத்தபடுகிறாள்
இத்தருணத்தில் மது தன் காதலை தன் பாட்டியிடம் கூற பெரியவர்கள் அவளின் காதலனை ஊருக்கு அழைத்து வருமாறும் அவனை பார்த்து அவனின் குணத்தை அறிந்த பிறகு மேற்க்கொண்டு முடிவு எடுப்பதாக கூற....!!!
மது இதனை தன் காதலனிடம் கூறி ஊருக்கு வருமாறு அழைக்க ஶ்ரீ கிராமத்துக்கு வர தயங்கி தனக்கு காலில் அடி பட்டு விட்டதாக நாடகமாடி தன் அண்ணனை மதுவின் காதலனாக ஊருக்கு அனுப்பி வைக்கிறான்...!!!
இரட்டையர்களின் வாழ்க்கை அலங்காநல்லூரில் தான் மாறுகிறது...!!!
சிபிரஞ்சன்.....மதுவின் குடும்ப அமைப்பில் மனம் கவரப்பட்டவனாய் தம்பியின் காதலியிடம் தன் மனதை தொலைத்து அவளிடம் காதல் வயப்படுகிறான்
மதுவும் சிபியின் நற்பண்புகளில் கவரப்பட்டு தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் அவன் செய்யும் நற்செயல்களினால் சிபியிடம் தன் மனதை தொலைக்கிறாள்
பிறகு என்ன நடக்கிறது... இவர்கள் இருவரும் காதலில் ஜெயிக்கிறார்களா...???!!! யார் யாருடன் இணைகிறார்கள் என்பதனை எழுத்தாளர் தன் பாணியில் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் ரசிக்கும் படியாகவும் மிக அழகாக கூறியுள்ளார்
நாயகன் நாயகியின் ஆழமான காதலும் ஶ்ரீ யின் மனமாற்றமும் கூடிய மூவரும் நம் மனதை கவர்கிறார்கள்
குடும்ப சூழலுக்கு இடையில் அழகான அருமையான காதல் கதையை நிறைவாக தந்தமைக்கு எழுத்தாளருக்கு நம் பாராட்டுக்கள்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்