நானும் நிறைய கதைகள் படித்து வருகிறேன். என்னுடைய கருத்துக்களை பதிவு செய்ய இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு இதை எழுதுகிறேன்.எல்லா எழுத்தாளர்களுக்கும் கேட்டுக்கொள்கிறேன் தவறாகப்பட்டால் மன்னிக்கவும். எல்லா கதாநாயகிகளும் ரொம்ப அலட்சிய போக்குடனே, தான் செய்வதே சரி என்று நினைத்துக்கொண்டு கொஞ்சம் திமிர் போக்குடனே இருக்கிறார்கள். தன்னை ஒரு ராஜகுமாரியாக நினைத்துக்கொண்டு, அதி புத்திசாலியாக எண்ணிக்கொண்டு, கணவனோ காதலனோ தனக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதே எண்ணப்போக்கு இன்றைய இளம் பெண்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிடும் இல்லையா. ஏமாற்றத்தை சந்திக்க முடியாமல் துன்பப்படும் போதுதான் நிதாசனம் தெரியும் . புரிந்து கொள்ளலும், விட்டுக்கொடுப்பதும், ஒருவரை ஒருவர் மதிப்பதும் பரிவான செயல்களும் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதை இன்றைய பெண்கள் உணர வேண்டும். எனவே அதற்கேற்ப கதாபாத்திரங்கலாய் அமையுங்கள்