உயிர் 2❤❤❤
அஷ்வினி அர்ஜுன் திருமணம் முடிவு செய்யப்பட்டு ஒரு மாதத்தில் நிச்சயம் மூன்று மாதத்தில் திருமணம் என்று உறுதி செய்யப்பட்டது.
அன்று மாலை அனைவரும் இருக்கும்போது அங்கு வந்த சிவா "நாளைக்கு நம்ம குலதெய்வம் கோவில் திருவிழா அங்க போகணும் எல்லாரும் தேவையானதை தயார் பண்ணிக்கோங்க, அப்புறம் சம்மந்தி வீட்லயும் சொல்லிருக்கேன் அவங்களும் வருவாங்க "என்று கூறிவிட்டு,
"அன்பரசியை பார்த்து எனக்கு மூணு பிள்ளைங்க இருக்குனு மட்டும் தான் சொல்லிருக்கேன் சம்மந்தி வீட்டுல உனக்குப் புரியும்னு நெனைக்கிறேன்" என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்று விட்டார்.
........,......,...,..........................
நிலா ஆதியிடம் கோபத்தில் கத்திகொண்டிருந்தாள்" மாமா நீங்க என்ன நெனச்சுட்டு இருக்கீங்க? எதுக்கு இந்த மாறி வேலை எல்லாம் ஒத்துக்கிறீங்க? நான் கேட்டனா உங்கள கடன் வாங்கி என்ன படிக்க வைங்கனு
அதுக்காக செட்ல நைட் பகல் னு மாத்தி மாத்தி வேலை பாக்குறீங்க இப்போ என்னடா னு பார்த்த டிரைவர் வேலை பாக்க போறேன்னு சொல்றிங்க" என்று ஆத்திரத்தில் கத்தினாள்.
ஆதி (அட லூசே! இப்போ நான் என்ன சொன்னேன் வேலைக்கு தான போறேன்னு சொன்ன அதுக்கு ஏன் இந்த பொண்ணுக்குட்டி இப்டி பொங்குது என்ற ரீதியில் பார்த்திருந்தான்.)
நிலா " நீங்க இப்டி கஷ்டப்படரத பாக்கிறதுக்கு அன்னைக்கே நான் செத்து போயிருக்கலாம்"என்று கூற...
ஆதி "ஏய் என்னடி?என்ன பேசிட்டு இருக்கே நீ? இப்போ என்ன அது ஒரு வேலை தான அதுக்கு என்னமோ இப்டி பேசற" என்று கோவமாக கேட்டான்.
நிலாவோ அவன் கத்தியதில் கோவம் கொண்டவள் எதும் பேசாமல் சென்று விட்டாள்.
மறுநாள் காலை நிலா ஆதிக்கு மதிய உணவை சமைத்து கட்டி வைத்தாள், அப்போது அவளுக்கு பின்னிருந்து "இனிக்குட்டி குட் மோர்னிங்" என்று அவளை அணைத்து கொண்டான்.
அவளோ "பேட் மார்னிங்" என முகத்தை சுளித்து அவனுக்கு அழகு காட்ட அவனோ அவனவளின் சிறுபிள்ளை தனத்தில் சிரித்தவன்.
அவளது மூக்கை ஆட்டி "உனக்கு கோவம் கூட சரியா வரல செல்லக்குட்டி" என கூற, அவள் சிரித்துவிட்டாள்.(எவ்ளோ நேரமா கோவமா இருக்க மாறியே நடிக்கிறது ?).
ஆதி "இனிமா கிளம்பிட்டியா? உன்ன விட்டுட்டு நான் அப்டியே கிளம்புறேன்"என்று கூறிக்கொண்டே அவளை பார்க்க,அவளோ அவனை முறைத்து கொண்டே "போகலாம்" என்று நடந்து வர அவனுக்கோ அவளை நினைத்து சிரிப்பு மட்டுமே.
ஆதி "ஆள் தான் வளந்துருக்கா இப்போவும் அஞ்சு வருசத்துக்கு முன்னாடி பார்த்த அதே மாறி தான் இருக்கா" (ஆளும் வளரல அறிவும் வளரல )என்று அவளை நினைத்து சிரித்து கொண்டான்.
...............................................
*****
அன்பரசியின் குடும்பத்தினர் அனைவரும் கிளம்பி அருகில் உள்ள அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வெளிய வர,அப்போது வந்து அவர்களுடன் இணைந்து கொண்டனர் அர்ஜுனின் குடும்பத்தினர்.
அப்போது அன்பரசி அர்ஜுனின் அன்னை ஒரு மாதிரியாக இருக்க கண்டு, "என்னாச்சு? சிந்து உங்களுக்கு உடம்பு முடியலையா? முகம் ஒரு மாதிரியா இருக்கே?"என்று கேட்டார்.
சிந்து "இல்ல அண்ணி... அப்டிலாம் இல்ல நான் நல்லாத்தான் இருக்கேன்" என சிரித்தவரே சமாளித்தார்.
அன்பரசி அங்கிருந்து நகர்ந்ததும், கிருஷ்ணன் சிந்துவிடம் "என்னடா நீ ஏன் இப்படி இருக்க? இவ்ளோ வருஷம் கழிச்சு நம்ம மகனுக்கு நல்லது நடக்குது ஆனா நீ இப்படி இருக்க எனக்கும் புரியுது நீ அம்முவ(நிலா )நெனச்சு வருத்தப்படுறன்னு நீயே சொல்லு அன்னிக்கு அவசரப்பட்டு அவளை அனுப்பிட்டேன்.இப்போ நெனச்சு வருத்த படறேன் என் தங்கம் எங்க இருக்குனு தெரில" (ஆதி உசுர வாங்கிட்டு இருக்கு )என்று கண் கலங்கினார்.
"கடந்த அஞ்சு வருசமா நாமலும் தேடிட்டு தான இருக்கோம் "அவ எங்க இருக்கானு தெரியல நீங்க தான் அவளை நெனச்சு வருத்தப்படுறீங்க...இவ்ளோ வருசமா அவ நமக்கு குடுத்த அவமானத்தை மறைக்க இப்போ இந்த கல்யாணம் கை கூடி வந்துருக்கு வந்த வேலைய பாக்கலாம்" ஏன் கூறினார் சாரதா கிருஷ்ணா வின் தங்கை. (ஒவ்வொரு வீட்டுக்கும் ஒன்னு இருக்கு இந்த மாறி டிசைன் ல ).
அஷ்வின் அங்கே இருந்த சிவாவிடம் "அப்பா யார் வண்டி ஓட்ட போறாங்க? வண்டி எடுத்துட்டு வான்னு சொன்னிங்க ஓட்டிட்டு வந்தேன். நானே டிரைவ் பண்ணவா இல்லை.டிரைவர் ரெடி பண்ணிட்டிங்களா?"என்று கேட்டான்.
சிவா "ஆமாம் அஷ்வின் நாராயணன் கிட்ட சொல்லிருக்கேன் அவனோட செட்ல வேலை செய்ற ஆள கூட்டிட்டு வரேன்னு சொல்லிருக்கான் "என கூறிகொண்டிருக்கும் போதே, ஆதி, குட்டியுடன் வந்து சேர்ந்தார் நாராயணன் ஆதி வேலை செய்யும் மெக்கானிக்கல் செட்டின் ஓனர்.
ஆதியை அழைத்து கொண்டு அங்கே வந்த நாராயணன், சிவாவிடம், "அண்ணே!இவன் நம்ம பையன் தான் நல்லா வண்டி ஓட்டுவான். எல்லா ப்ரூப் வச்சிருக்கான்.எந்த கெட்ட பழக்கமும் இல்ல, நம்பி போகலாம் கிளம்புங்க" என கூறியவர் , ஆதியிடம் "பார்த்து போய்ட்டு வா" என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
ஆதியை பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் எதுவும் பேசாமல் நிற்க, அன்பரசிக்கோ உலகமே சுற்றியது. தன் மகனை பார்த்தது மகிழ்ச்சி என்றாலும் தன் மகனின் கோலம் நெஞ்சை பிசைந்தது.
நிறம் மங்கி தாடியுடன் மகன் இருந்த கோலம், அதுவும் தங்களுக்கே அவன் டிரைவர் ஆக நினைக்க மனம் விம்மியது.
அன்பரசி அழுகையை அடக்கிகொண்டார். ஏன்?அஷ்வினும் ஆதவணுமே அதிர்ந்து நின்றனர். சிவப்பிரகாசம் உள்ளுக்குள் ஏதோ உடைந்தது போல உணர்ந்தார்.
இருபது வருடம் செல்லமாக வளர்ந்த மகன் இன்று ஐந்து வருடம் கழித்து அவரிடமே வேலைகாரானாக துடித்துப்போவிட்டார்.
அவன் தான் அவரின் செல்ல மகன் அஷ்வின் ஆதவனுமே அவரிடம் ஒதுங்கி பயந்து நிற்க இவன் மட்டுமே அவரின் செல்லம்.துடுக்குத் தனமாக ஏதேனும் செய்து அவரிடம் வாங்கி கட்டி கொள்வான். அவன் திருமண விஷயத்தில் தான் அவனை வெறுத்து விட்டார்.
மயூரியும் மல்லிகாவும் மறுபடியும் வந்துட்டானா?என்னும் ரீதியில் அவனை பார்த்திருந்தனர்.
இவர்கள் இப்படி இருக்க ஆதி அவர்களை கொண்டுகொள்ளவில்லை. வண்டி சரியாக இருக்கிறதா? என சோதித்து பார்த்து விட்டு சோட்டுவை(குட்டி )வண்டியில் ஏற கூறினான்.
அப்போது அவனை பார்த்த கிருஷ்ணன் "ஹேய் யங் மேன் எப்டி இருக்க?" என்று கேட்க "நல்லாருக்கேன் சார்" என கூறினான்.
மகிழனோ "பெரியப்பா உங்களுக்கு எப்டி இவரை தெரியும்?" என கேட்க...
"ஒரு மாசம் முன்னாடி நைட் 11மணிக்கு ஆபீஸ் ல இருந்து வீட்டுக்கு வரும்போது வண்டி பிரேக் டோவ்ன் ஆயிருச்சு அப்போ பக்கத்துல இருந்த மெக்கானிக்கல் செட்ல அப்போ இந்த தம்பி தான் வண்டி சரி பண்ணி குடுத்தாரு வெரி ஹார்டுஒர்கிங் பர்சன்" என்று சிலாகித்து கூறினார்.
சந்தோஷோ "பரவாயில்லை பிரதர் எங்க மாமா வாய்ல இருந்து இப்படி பட்ட வார்த்தை முதல் முறை கிரேட்" என்று கூறியவாறே ஆதியிடம் "ஐ ம் சந்தோஷ்" என அறிமுகம் செய்து கொண்டான்.
அண்ணே கிளம்பலாமா?என்றவறே சோட்டு வர, "ஹான் கிளம்பலாம்"என்று கூறியவன்
சிவாவிடம் வந்து "சார் சாவி கொடுங்க" என்று கேட்க அவன் சார் என்றதில் அதிர்ந்து, அவனிடம் சாவியைக் கொடுக்க அனைவரும் வண்டியில் அமர,ஆதி வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
சோட்டு ஆதிக்கு எதிரில் உள்ள ஒற்றை இருக்கையில் அமர்த்திருந்தான் ஒவ்வொருவரும் ஒரு வித அதிர்ச்சியில்...
குலதெய்வம் கோவிலுக்கு செல்ல சுமார் ஐந்து மணி நேரம் ஆகும்... என்பதால் பாடலை ஒலிக்க விட்டான் ஆதி.காலை 7மணிக்கு தொடங்கிய இவர்களின் பயணம் 11மணி அளவில் நிறைவடைந்தது.
அனைவரும் கோவிலுக்குள் நுழைய ஆதி யாரையும் கண்டுகொள்ளாமல் எங்கோ சென்று விட்டான் சோட்டுவுடன்...
பூஜை முடித்து வேண்டுதல் நிறைவேற்றி வெளியே வர, ஆதியை கண்ட கிருஷ்ணா "தம்பி நீயும் எங்களோட உள்ள வந்துருக்கலாம்ல எங்க போன? என்று கேட்டார்
ஆதி "அது இங்க பக்கத்துல தான் சார் கிளம்பலாமா?" என்று கேட்டான்.
அனைவரும் வண்டியில் ஏறி, அமர ஆதி கியர் போட்டு வண்டியை கிளப்பினான். சிறிது தூரம் வந்த பிறகு சோட்டு ஆதியிடம் "அண்ணே எனக்கு கொஞ்சம் வயிறு பசிக்கிற மாறி இருக்குனே சாப்பிட்டு போலாம்" என வயிற்றில் கை வைத்து பாவமாக கூற...
அர்ஜுனோ "ஆமா ஆதித்யா ஒரு நல்லா ஹோட்டலா பார்த்து வண்டிய நிறுத்துங்க எல்லாருக்கும் பசிக்குது சாப்பிட்டு போலாம்" என்று கூறினான்.
சிறிது தூரம் சென்று ஒரு ஹோட்டலில் வண்டியை நிறுத்த அனைரும் இறங்க, "சந்தோஷ் ஆதி பிரதர், நீங்க ரெண்டு பேரும் வாங்க சாப்பிடலாம்" என்று அழைத்தான்.
ஆதி பதில் கூறும் முன்...
"இல்ல அண்ணா நீங்க எல்லாரும் போய் சாப்பிட்டு பொறுமையா வாங்க" என்று கூற...
சந்தோஷ் "நீ தான இப்போ பசிக்குது னு சொன்ன வாங்க" என்று அழைத்தான்.
சோட்டு " அது இல்லனா எங்க அண்ணி சாப்பாடு குடுத்துருக்காங்கஅண்ணனுக்கு வெளிய சாப்பிட்ட ஒத்துக்காது அதான். நானும் அண்ணா கூட சாப்பிட்டுகிறேன் அண்ணி சாப்பாடு முன்ன ஹோட்டல் எல்லாம் வேஸ்ட்" என நாக்கை சப்பு கொட்டியவறே கூற...
"சரி சாப்பிடுங்க" என்று கூறிவிட்டு சென்று விட்டனர். நிலா கொடுத்த சாப்பாடை ரசித்து சாப்பிட்டனர் இருவரும்.
உணவு முடித்து அவர்கள் வெளிய வர, கிளம்பினார்கள். சிறிது தூரம் சென்றதும் வண்டி பன்ஜ்ர் ஆகி நிற்க, அருகில் எந்த கடையும் வீடும் இல்லாத பொட்டள் காடு.
ஆதி இறங்கி ஸ்டெபினி எடுத்து மாட்ட தயாராக, சரியான வெயில் அனல் காற்று அடிக்க வியர்த்து வழிந்தது. அனைவரும் இறங்கி அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்தனர்.
கிருஷ்ணன் "ஏன்டா இப்படி எல்லாரும் வந்து நிக்கலைன்னா அந்த தம்பிக்கு உதவி பண்ணலாம்ல?" என்று கேட்டார்.
ஆனந்தோ "சத்தியமா நம்மால இதெல்லாம் செய்ய முடியாது பா இவ்ளோ வெயில்ல அந்த மனுஷன் பாவம்" என்று கூறினான்.
குமரன் "அவனுக்கும் உங்க வயசு தான் இருக்கும் பாருங்க எப்டி இந்த வயசுல வேலை செய்றான்" என்று கூறினார்.
அவனோ கைகளில் க்ரீசுடன் வியர்க்க விறு விறுக்க வேலையை பார்த்து கொண்டிருந்தான்.
அஷ்வினோ ஆதியின் அருகில் சென்றவன் "கஷ்டப்படாத ஆதி மெக்கானிக் யாரையும் வர சொல்லலாம்" என்று கூறினான்.
அவனை பார்த்து சிரித்தவன் "நானே மெக்கானிக் தான் சர் அஞ்சு வருசமா செய்றேன் ஒரு ஸ்டெபினி மாட்ட முடியாது நான் பார்த்துகிறேன்.நீங்க போய் நிழல் லா நில்லுங்க வெயில் அதிகமா இருக்கு" என்று கூறிவிட்டு அவனின் வேலையை பார்த்தான்.
அன்பரசியின் மனமோ காலையில் இருந்து ஒரு நிலையில் இல்லை."உன்ன இப்படி ஒரு நிலையில் பாக்கிறதுக்கா இவ்ளோ நாளா நான் தவம் இருந்தேன் ".என்றே மறுகி கொண்டிருந்தார்.
அவனின் உடன் பிறந்த மூவரோ சற்று ஆடித்தான் போயிருந்தனர். அவனின் இந்த அவதாரத்தில்...
ஒரு வழியாய் ஒவ்வொருவரும் ஒரு சிந்தனையுடன் சென்னை வந்தடைந்தனர்...
to be continued...
அஷ்வினி அர்ஜுன் திருமணம் முடிவு செய்யப்பட்டு ஒரு மாதத்தில் நிச்சயம் மூன்று மாதத்தில் திருமணம் என்று உறுதி செய்யப்பட்டது.
அன்று மாலை அனைவரும் இருக்கும்போது அங்கு வந்த சிவா "நாளைக்கு நம்ம குலதெய்வம் கோவில் திருவிழா அங்க போகணும் எல்லாரும் தேவையானதை தயார் பண்ணிக்கோங்க, அப்புறம் சம்மந்தி வீட்லயும் சொல்லிருக்கேன் அவங்களும் வருவாங்க "என்று கூறிவிட்டு,
"அன்பரசியை பார்த்து எனக்கு மூணு பிள்ளைங்க இருக்குனு மட்டும் தான் சொல்லிருக்கேன் சம்மந்தி வீட்டுல உனக்குப் புரியும்னு நெனைக்கிறேன்" என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்று விட்டார்.
........,......,...,..........................
நிலா ஆதியிடம் கோபத்தில் கத்திகொண்டிருந்தாள்" மாமா நீங்க என்ன நெனச்சுட்டு இருக்கீங்க? எதுக்கு இந்த மாறி வேலை எல்லாம் ஒத்துக்கிறீங்க? நான் கேட்டனா உங்கள கடன் வாங்கி என்ன படிக்க வைங்கனு
அதுக்காக செட்ல நைட் பகல் னு மாத்தி மாத்தி வேலை பாக்குறீங்க இப்போ என்னடா னு பார்த்த டிரைவர் வேலை பாக்க போறேன்னு சொல்றிங்க" என்று ஆத்திரத்தில் கத்தினாள்.
ஆதி (அட லூசே! இப்போ நான் என்ன சொன்னேன் வேலைக்கு தான போறேன்னு சொன்ன அதுக்கு ஏன் இந்த பொண்ணுக்குட்டி இப்டி பொங்குது என்ற ரீதியில் பார்த்திருந்தான்.)
நிலா " நீங்க இப்டி கஷ்டப்படரத பாக்கிறதுக்கு அன்னைக்கே நான் செத்து போயிருக்கலாம்"என்று கூற...
ஆதி "ஏய் என்னடி?என்ன பேசிட்டு இருக்கே நீ? இப்போ என்ன அது ஒரு வேலை தான அதுக்கு என்னமோ இப்டி பேசற" என்று கோவமாக கேட்டான்.
நிலாவோ அவன் கத்தியதில் கோவம் கொண்டவள் எதும் பேசாமல் சென்று விட்டாள்.
மறுநாள் காலை நிலா ஆதிக்கு மதிய உணவை சமைத்து கட்டி வைத்தாள், அப்போது அவளுக்கு பின்னிருந்து "இனிக்குட்டி குட் மோர்னிங்" என்று அவளை அணைத்து கொண்டான்.
அவளோ "பேட் மார்னிங்" என முகத்தை சுளித்து அவனுக்கு அழகு காட்ட அவனோ அவனவளின் சிறுபிள்ளை தனத்தில் சிரித்தவன்.
அவளது மூக்கை ஆட்டி "உனக்கு கோவம் கூட சரியா வரல செல்லக்குட்டி" என கூற, அவள் சிரித்துவிட்டாள்.(எவ்ளோ நேரமா கோவமா இருக்க மாறியே நடிக்கிறது ?).
ஆதி "இனிமா கிளம்பிட்டியா? உன்ன விட்டுட்டு நான் அப்டியே கிளம்புறேன்"என்று கூறிக்கொண்டே அவளை பார்க்க,அவளோ அவனை முறைத்து கொண்டே "போகலாம்" என்று நடந்து வர அவனுக்கோ அவளை நினைத்து சிரிப்பு மட்டுமே.
ஆதி "ஆள் தான் வளந்துருக்கா இப்போவும் அஞ்சு வருசத்துக்கு முன்னாடி பார்த்த அதே மாறி தான் இருக்கா" (ஆளும் வளரல அறிவும் வளரல )என்று அவளை நினைத்து சிரித்து கொண்டான்.
...............................................
*****
அன்பரசியின் குடும்பத்தினர் அனைவரும் கிளம்பி அருகில் உள்ள அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வெளிய வர,அப்போது வந்து அவர்களுடன் இணைந்து கொண்டனர் அர்ஜுனின் குடும்பத்தினர்.
அப்போது அன்பரசி அர்ஜுனின் அன்னை ஒரு மாதிரியாக இருக்க கண்டு, "என்னாச்சு? சிந்து உங்களுக்கு உடம்பு முடியலையா? முகம் ஒரு மாதிரியா இருக்கே?"என்று கேட்டார்.
சிந்து "இல்ல அண்ணி... அப்டிலாம் இல்ல நான் நல்லாத்தான் இருக்கேன்" என சிரித்தவரே சமாளித்தார்.
அன்பரசி அங்கிருந்து நகர்ந்ததும், கிருஷ்ணன் சிந்துவிடம் "என்னடா நீ ஏன் இப்படி இருக்க? இவ்ளோ வருஷம் கழிச்சு நம்ம மகனுக்கு நல்லது நடக்குது ஆனா நீ இப்படி இருக்க எனக்கும் புரியுது நீ அம்முவ(நிலா )நெனச்சு வருத்தப்படுறன்னு நீயே சொல்லு அன்னிக்கு அவசரப்பட்டு அவளை அனுப்பிட்டேன்.இப்போ நெனச்சு வருத்த படறேன் என் தங்கம் எங்க இருக்குனு தெரில" (ஆதி உசுர வாங்கிட்டு இருக்கு )என்று கண் கலங்கினார்.
"கடந்த அஞ்சு வருசமா நாமலும் தேடிட்டு தான இருக்கோம் "அவ எங்க இருக்கானு தெரியல நீங்க தான் அவளை நெனச்சு வருத்தப்படுறீங்க...இவ்ளோ வருசமா அவ நமக்கு குடுத்த அவமானத்தை மறைக்க இப்போ இந்த கல்யாணம் கை கூடி வந்துருக்கு வந்த வேலைய பாக்கலாம்" ஏன் கூறினார் சாரதா கிருஷ்ணா வின் தங்கை. (ஒவ்வொரு வீட்டுக்கும் ஒன்னு இருக்கு இந்த மாறி டிசைன் ல ).
அஷ்வின் அங்கே இருந்த சிவாவிடம் "அப்பா யார் வண்டி ஓட்ட போறாங்க? வண்டி எடுத்துட்டு வான்னு சொன்னிங்க ஓட்டிட்டு வந்தேன். நானே டிரைவ் பண்ணவா இல்லை.டிரைவர் ரெடி பண்ணிட்டிங்களா?"என்று கேட்டான்.
சிவா "ஆமாம் அஷ்வின் நாராயணன் கிட்ட சொல்லிருக்கேன் அவனோட செட்ல வேலை செய்ற ஆள கூட்டிட்டு வரேன்னு சொல்லிருக்கான் "என கூறிகொண்டிருக்கும் போதே, ஆதி, குட்டியுடன் வந்து சேர்ந்தார் நாராயணன் ஆதி வேலை செய்யும் மெக்கானிக்கல் செட்டின் ஓனர்.
ஆதியை அழைத்து கொண்டு அங்கே வந்த நாராயணன், சிவாவிடம், "அண்ணே!இவன் நம்ம பையன் தான் நல்லா வண்டி ஓட்டுவான். எல்லா ப்ரூப் வச்சிருக்கான்.எந்த கெட்ட பழக்கமும் இல்ல, நம்பி போகலாம் கிளம்புங்க" என கூறியவர் , ஆதியிடம் "பார்த்து போய்ட்டு வா" என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
ஆதியை பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் எதுவும் பேசாமல் நிற்க, அன்பரசிக்கோ உலகமே சுற்றியது. தன் மகனை பார்த்தது மகிழ்ச்சி என்றாலும் தன் மகனின் கோலம் நெஞ்சை பிசைந்தது.
நிறம் மங்கி தாடியுடன் மகன் இருந்த கோலம், அதுவும் தங்களுக்கே அவன் டிரைவர் ஆக நினைக்க மனம் விம்மியது.
அன்பரசி அழுகையை அடக்கிகொண்டார். ஏன்?அஷ்வினும் ஆதவணுமே அதிர்ந்து நின்றனர். சிவப்பிரகாசம் உள்ளுக்குள் ஏதோ உடைந்தது போல உணர்ந்தார்.
இருபது வருடம் செல்லமாக வளர்ந்த மகன் இன்று ஐந்து வருடம் கழித்து அவரிடமே வேலைகாரானாக துடித்துப்போவிட்டார்.
அவன் தான் அவரின் செல்ல மகன் அஷ்வின் ஆதவனுமே அவரிடம் ஒதுங்கி பயந்து நிற்க இவன் மட்டுமே அவரின் செல்லம்.துடுக்குத் தனமாக ஏதேனும் செய்து அவரிடம் வாங்கி கட்டி கொள்வான். அவன் திருமண விஷயத்தில் தான் அவனை வெறுத்து விட்டார்.
மயூரியும் மல்லிகாவும் மறுபடியும் வந்துட்டானா?என்னும் ரீதியில் அவனை பார்த்திருந்தனர்.
இவர்கள் இப்படி இருக்க ஆதி அவர்களை கொண்டுகொள்ளவில்லை. வண்டி சரியாக இருக்கிறதா? என சோதித்து பார்த்து விட்டு சோட்டுவை(குட்டி )வண்டியில் ஏற கூறினான்.
அப்போது அவனை பார்த்த கிருஷ்ணன் "ஹேய் யங் மேன் எப்டி இருக்க?" என்று கேட்க "நல்லாருக்கேன் சார்" என கூறினான்.
மகிழனோ "பெரியப்பா உங்களுக்கு எப்டி இவரை தெரியும்?" என கேட்க...
"ஒரு மாசம் முன்னாடி நைட் 11மணிக்கு ஆபீஸ் ல இருந்து வீட்டுக்கு வரும்போது வண்டி பிரேக் டோவ்ன் ஆயிருச்சு அப்போ பக்கத்துல இருந்த மெக்கானிக்கல் செட்ல அப்போ இந்த தம்பி தான் வண்டி சரி பண்ணி குடுத்தாரு வெரி ஹார்டுஒர்கிங் பர்சன்" என்று சிலாகித்து கூறினார்.
சந்தோஷோ "பரவாயில்லை பிரதர் எங்க மாமா வாய்ல இருந்து இப்படி பட்ட வார்த்தை முதல் முறை கிரேட்" என்று கூறியவாறே ஆதியிடம் "ஐ ம் சந்தோஷ்" என அறிமுகம் செய்து கொண்டான்.
அண்ணே கிளம்பலாமா?என்றவறே சோட்டு வர, "ஹான் கிளம்பலாம்"என்று கூறியவன்
சிவாவிடம் வந்து "சார் சாவி கொடுங்க" என்று கேட்க அவன் சார் என்றதில் அதிர்ந்து, அவனிடம் சாவியைக் கொடுக்க அனைவரும் வண்டியில் அமர,ஆதி வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
சோட்டு ஆதிக்கு எதிரில் உள்ள ஒற்றை இருக்கையில் அமர்த்திருந்தான் ஒவ்வொருவரும் ஒரு வித அதிர்ச்சியில்...
குலதெய்வம் கோவிலுக்கு செல்ல சுமார் ஐந்து மணி நேரம் ஆகும்... என்பதால் பாடலை ஒலிக்க விட்டான் ஆதி.காலை 7மணிக்கு தொடங்கிய இவர்களின் பயணம் 11மணி அளவில் நிறைவடைந்தது.
அனைவரும் கோவிலுக்குள் நுழைய ஆதி யாரையும் கண்டுகொள்ளாமல் எங்கோ சென்று விட்டான் சோட்டுவுடன்...
பூஜை முடித்து வேண்டுதல் நிறைவேற்றி வெளியே வர, ஆதியை கண்ட கிருஷ்ணா "தம்பி நீயும் எங்களோட உள்ள வந்துருக்கலாம்ல எங்க போன? என்று கேட்டார்
ஆதி "அது இங்க பக்கத்துல தான் சார் கிளம்பலாமா?" என்று கேட்டான்.
அனைவரும் வண்டியில் ஏறி, அமர ஆதி கியர் போட்டு வண்டியை கிளப்பினான். சிறிது தூரம் வந்த பிறகு சோட்டு ஆதியிடம் "அண்ணே எனக்கு கொஞ்சம் வயிறு பசிக்கிற மாறி இருக்குனே சாப்பிட்டு போலாம்" என வயிற்றில் கை வைத்து பாவமாக கூற...
அர்ஜுனோ "ஆமா ஆதித்யா ஒரு நல்லா ஹோட்டலா பார்த்து வண்டிய நிறுத்துங்க எல்லாருக்கும் பசிக்குது சாப்பிட்டு போலாம்" என்று கூறினான்.
சிறிது தூரம் சென்று ஒரு ஹோட்டலில் வண்டியை நிறுத்த அனைரும் இறங்க, "சந்தோஷ் ஆதி பிரதர், நீங்க ரெண்டு பேரும் வாங்க சாப்பிடலாம்" என்று அழைத்தான்.
ஆதி பதில் கூறும் முன்...
"இல்ல அண்ணா நீங்க எல்லாரும் போய் சாப்பிட்டு பொறுமையா வாங்க" என்று கூற...
சந்தோஷ் "நீ தான இப்போ பசிக்குது னு சொன்ன வாங்க" என்று அழைத்தான்.
சோட்டு " அது இல்லனா எங்க அண்ணி சாப்பாடு குடுத்துருக்காங்கஅண்ணனுக்கு வெளிய சாப்பிட்ட ஒத்துக்காது அதான். நானும் அண்ணா கூட சாப்பிட்டுகிறேன் அண்ணி சாப்பாடு முன்ன ஹோட்டல் எல்லாம் வேஸ்ட்" என நாக்கை சப்பு கொட்டியவறே கூற...
"சரி சாப்பிடுங்க" என்று கூறிவிட்டு சென்று விட்டனர். நிலா கொடுத்த சாப்பாடை ரசித்து சாப்பிட்டனர் இருவரும்.
உணவு முடித்து அவர்கள் வெளிய வர, கிளம்பினார்கள். சிறிது தூரம் சென்றதும் வண்டி பன்ஜ்ர் ஆகி நிற்க, அருகில் எந்த கடையும் வீடும் இல்லாத பொட்டள் காடு.
ஆதி இறங்கி ஸ்டெபினி எடுத்து மாட்ட தயாராக, சரியான வெயில் அனல் காற்று அடிக்க வியர்த்து வழிந்தது. அனைவரும் இறங்கி அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்தனர்.
கிருஷ்ணன் "ஏன்டா இப்படி எல்லாரும் வந்து நிக்கலைன்னா அந்த தம்பிக்கு உதவி பண்ணலாம்ல?" என்று கேட்டார்.
ஆனந்தோ "சத்தியமா நம்மால இதெல்லாம் செய்ய முடியாது பா இவ்ளோ வெயில்ல அந்த மனுஷன் பாவம்" என்று கூறினான்.
குமரன் "அவனுக்கும் உங்க வயசு தான் இருக்கும் பாருங்க எப்டி இந்த வயசுல வேலை செய்றான்" என்று கூறினார்.
அவனோ கைகளில் க்ரீசுடன் வியர்க்க விறு விறுக்க வேலையை பார்த்து கொண்டிருந்தான்.
அஷ்வினோ ஆதியின் அருகில் சென்றவன் "கஷ்டப்படாத ஆதி மெக்கானிக் யாரையும் வர சொல்லலாம்" என்று கூறினான்.
அவனை பார்த்து சிரித்தவன் "நானே மெக்கானிக் தான் சர் அஞ்சு வருசமா செய்றேன் ஒரு ஸ்டெபினி மாட்ட முடியாது நான் பார்த்துகிறேன்.நீங்க போய் நிழல் லா நில்லுங்க வெயில் அதிகமா இருக்கு" என்று கூறிவிட்டு அவனின் வேலையை பார்த்தான்.
அன்பரசியின் மனமோ காலையில் இருந்து ஒரு நிலையில் இல்லை."உன்ன இப்படி ஒரு நிலையில் பாக்கிறதுக்கா இவ்ளோ நாளா நான் தவம் இருந்தேன் ".என்றே மறுகி கொண்டிருந்தார்.
அவனின் உடன் பிறந்த மூவரோ சற்று ஆடித்தான் போயிருந்தனர். அவனின் இந்த அவதாரத்தில்...
ஒரு வழியாய் ஒவ்வொருவரும் ஒரு சிந்தனையுடன் சென்னை வந்தடைந்தனர்...
to be continued...