உன் அழகிய தேடல் நான்…04
கதவை திறந்து கொண்டு ஜெகனந்தன் வெளியே வர அவனை தொடர்ந்து கடுகடுவென்று முகத்தை வைத்துக்கொண்டு அழகம்மாளும் வெளியே வர, அதே நேரம் வினோத்தும் காருடன் அங்கு வந்து சேர்ந்தான்.
அவனை கண்ட ஜெகனந்தன் கேள்வியாக நோக்க,
“ இல்ல சார் இப்போ நீங்க கால் பண்ணுன நம்பர் சுவிட்ச் ஆப்ன்னு வந்தது. உங்களுக்கு எதுவும் பிரச்சனையா என்னன்னு தெரியல. அதான் நீங்க இங்க வந்திங்களா என்னன்னு பார்க்க வந்தேன். ஆனா நீங்க இந்நேரம் இங்க என்ன சார்??” என வினோத் கேட்க
“ சொல்றேன் வினோத். ஒன் செகண்ட்” என கூறிவிட்டு திரும்பி அழகம்மாளை பார்க்க அதற்குள் அவள் வீட்டை நோக்கி வேக நடையுடன் சென்றுகொண்டிருந்தாள்.
“ வினோத் அதோ அங்க போற பொண்ணை follow பண்ணு அவ வீட்டை மட்டும் தெரிஞ்சுக்கிட்டா போதும்” என ஜெகனந்தன் கூற
அழகம்மாள் அவள் வீட்டை அடைந்து கதவை சாற்றிய பின் அவளறியாமல் பின் தொடர்ந்த ஜெகனந்தனும் வினோத்தும் ஒரு ரெஸ்டாரெண்டில் வண்டியை நிறுத்தி சிறுது நேரம் பேசிவிட்டு ஜெகனந்தன் நாளை காலை செய்ய வேண்டிய பணிகளை கூறிவிட்டு அவனின் வீட்டிற்கு சென்றுவிட்டான்.
ஜெகநந்தன் வீட்டிற்குள் நுழைய ஹாலில் அவனிற்காக காத்திருந்த வேத நந்தனையும் மாதுரியையும் கண்டு கொள்ளாது அவனின் அறைக்குள் செல்ல பார்த்த ஜெகனந்தனை கண்டு,
“ ஜெகா என்னடா தாத்தாவும் நானும் காத்திருக்குறோம் நீ கொஞ்சம் கூட கண்டுக்காம போற” என கேட்ட மாதுரியிடம் ஒன்னும் கூறாது வேதனந்தனின் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தான். அவனை பார்த்த வேதனந்தன்,
“ ஜெகா”
“ ஹ்ம்ம் தாத்தா”
“ இன்னும் எத்தனை நாளு நீ இப்படி குடும்பத்தோட ஒட்டாம இருப்ப???” என கேட்க
“ எனக்கு தோன்றவரைக்கும்” என கூறிய ஜெகனந்தனிடம்
“ இது பதிலாடா??” என ஆதங்கமாக கேட்ட மாதுரியிடம்
“ என்ன அம்மா??” என சலிப்பாக கேட்ட ஜெகனந்தனிடம்
“ என்னடா சலிச்சுக்குற இந்த வீட்டோட மூத்த வாரிசுடா நீ ஆனா உனக்கும் இந்த குடும்பத்துக்கும் சம்மந்தமே இல்லாதமாதிரி நடந்துக்குற. ஏன்டா இப்படி இருக்க??. இந்த கேள்வியை கேட்டு கேட்டு நான்தான்டா சலிச்சுக்கணும்” என கூறிய மாதுரியிடம்
“ அம்மா already I am very tired so நான் தூங்க போறேன் morning பேசலாம். Good night தாத்தா” என கூறிவிட்டு அவர்களின் பதிலை எதிர்பார்க்காது தனது அறைக்கு சென்றுவிட்டான் ஜெகனந்தன். அவன் சென்றதை கண்டு,
“ என்ன மாமா இவன் இப்படி இருக்கான்??” என மாதுரி கேட்க
“ அட விடுமா இவன் இப்படிதான்னு நமக்கு தெரியாதா. சீக்கிரம் ஒரு பொண்ணை பார்த்து கட்டி வச்சா மாறிடுவான்” என கூறிய வேதனந்தனிடம்
“ மாமா நீங்க முதல்ல சொன்னிங்கன்னுதான் எல்லாம் பண்ணுனோம். ஆனா அதுக்குள்ள இப்படி…..”
“ மாதுரி முதல்ல நடந்த விஷயத்தை பத்தி பேச வேணாம். அதுல முழுக்க முழுக்க எல்லா தப்பும் என் பேருலதான். நான் தான் சரியாய் விசாரிக்காம எதோ செய்ய போய் அது அவனுக்கு கஷ்டத்தை குடுத்துடுச்சு. அதை சரி செய்ய வேண்டியது என் பொறுப்பு. நான் பார்த்துக்குறேன் நீ போய் தூங்குமா” என கூறிவிட்டு வேதனந்தன் கூறிவிட்டு அவர் அறைக்கு சென்றுவிட
“ மறுபடியும் இவரை நம்பியா ஹம்ம்ஹும் நாமளே களத்துல குத்துச்சுட வேண்டியதுதான்” என எண்ணிக்கொண்டே மாதுரியும் உறங்க சென்றுவிட்டார்.
மறுநாள் ஆயுத பூஜை விடுமுறை தினம் என்பதால் அழகம்மாளுக்கு அன்றைய தினம் பரபரப்பு இல்லாது நன்றாக ஓய்வெடுக்க ஜெகனந்தனுக்கோ அன்றும் சில பல வேலைகளுடனும் சில திட்டமிடலுடனும் கடந்தது.
மறுநாள் காலையில் எழுந்து எப்பொழுதும் போல தனது வேலைகளை முடித்துக்கொண்டு வேலைக்கு கிளம்பிய அழகம்மாளிடம் வந்த முனியம்மா,
“ இந்தா பிள்ளை அழகு”
“ என்னக்கா??”
“ இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் வரியா வீட்டுக்கு??”
“ எதுக்குக்கா??”
“ அது என் ஒன்னு விட்ட தம்பி ஒருத்தன் சொந்தமா ஆட்டோ ஓட்டுறான். பேரு பழனி”
“ சரி”
“ அவனுக்கு பொண்ணு பார்க்குறாங்க போல நான் உன்னைய பத்தி சொன்னேன். அதான் அவனே நேருல பார்த்துட்டு சொல்றேன்னு சொன்னான். நீயும் அவனை பார்த்துட்டினா நான் மேற்கொண்டு ஆக வேண்டியதை பார்த்திடுவேன். ஆயி அப்பன் இல்லாத பொண்ணு. உனக்கு எதாவது நல்லது பண்ணனும்ன்னு தோணுது பிள்ளை.
இங்க இருக்குற சில வெண்ணையெல்லாம் உன்னைய பத்தி பேசுறதை மட்டுமே வேலையா வச்சுருக்காங்க. அதான் நீ சீக்கிரம் வந்திரியா??” என கேட்ட முனியம்மாவிடம் என்ன கூறுவது என தெரியாது
“ ஹான் பார்க்கலாம்க்கா இன்னைக்கு முதலாளி வரேன்னு சொல்லிருக்காரு நான் கேட்டு பார்க்குறேன் வர முடியலைன்னா கோச்சுக்காதீங்க” என அவசரமாக வாய்க்கு வந்ததை கூறிவிட்டு அழகம்மாள் வேலைக்கு சென்றுவிட
“ என்ன இந்த பிள்ளை எதோ சாப்பிட கூப்புட்டா மாதிரி பதில் சொல்லுது. கல்யாணம்ன்னு நான் சொன்னதை ஒழுங்கா கேட்டுச்சா” என யோசித்துக்கொண்டே முனியம்மாவும் அவரின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
குடோனிற்கு வந்த அழகம்மாளோ முனியம்மாளை எண்ணையே இல்லாது வறுத்துக்கொண்டிருந்தாள்.
“ நான் கேட்டேனா இல்ல நான் கேட்டேனா இந்த அக்காட்ட கல்யாணம் பண்ணி வைங்கன்னு. நான் என்ன பிளான் போட்டு இருக்கேன்……. இந்த அக்கா சொன்ன மாதிரி கல்யாணம் பண்ணுனா என்னைய போட்டுடுவாங்களே. ஐயோ சீக்கிரம் பணம் சேர்த்து இங்க இருந்து சீக்கிரம் ஜூட் விடணும் அழகு” என மனதோடு புலம்பிக்கொண்டிருக்கையில்
அங்கு வேலை பார்க்கும் வேணி “ அழகு….. அழகு….” என அழகம்மாளை அழைத்தாள்.
அதில் சுயம் பெற்று,
“ என்ன அக்கா??”
“ இன்னைக்கு முதலாளி கடைக்கு உன்னைய பார்க்க வர சொன்னதா மேனேஜர் சொல்லிட்டு போறாரு. சீக்கிரம் கடைக்கு போயி முதலாளியை பார்த்துட்டு வா” என வேணி கூற
“ முதலாளி என்னைய எதுக்குக்கா பார்க்கணும்??” என அழகம்மாள் பதட்டத்தோடு கேட்க
“ தெரியல உடனே வர சொன்னாராம் சீக்கிரம் போத்தா” என கூறிவிட்டு வேணி அங்கிருந்து நகர
“ என்னடா கால கொடுமை இன்னைக்கு. ஒரு வித பதட்டமாவே வச்சுருக்காரு ஆண்டவே. ஹ்ம்ம் சரி இந்த முதலை எதுக்கு என்னைய கூபிடுச்சுன்னுன்னு தெரியலையே” என எண்ணிக்கொண்டு குடோனில் முன் பகுதில் இருந்து கடைக்கு விரைந்து சென்றாள் அழகம்மாள்.
நந்தன் டெக்ஸ்டைல்ஸ் என பெரிதாக பெயர் பொறிக்க பட்டு கம்பீரமாக நின்ற அந்த புதுமை கட்டிடத்திற்குள் முன் வாசல் வழியாக நுழைந்தாள் அழகம்மாள். அங்கிருப்போர் அவளை அருவெறுப்புடன் சிலர் முக சுளிப்புடன் சிலர் யார் இவள் என கேள்வி பாவனையுடனும் சிலர் கண்டும் காணாமலும் சிலரின் கவனத்தில் பதித்தும் பதியாமல் என அனைவரையும் ஒரு முறை இவளை பார்க்க வைத்தது இவளின் பதட்டமான முகமும், வேர்வை வழிந்த உள்ளங்கையை தனது ஓவர் கோட்டில் அழுத்தி துடைத்துக்கொண்டு ஓடிவந்த விதமும்.
அந்த பிரம்மாண்ட கடையினுள் முதல் முறையாக நுழைந்தவள் எங்கு செல்வது யாரை கேட்பது என அறியாது முழிக்க அதே நேரம் அங்கு வந்த வினோத்,
“ மிஸ் அழகம்மாள்” என கம்பீரமாக அழைக்க அதில் திடுக்கிட்டு “ எஸ் சார்” என சத்தமாக கத்தினாள் அழகம்மாள்.
அதனை கண்டு சிலர் மௌனமாகவும் சத்தமாகவும் சிரிக்க அவர்களை பார்வையில் அடக்கிய வினோத்,
“ அழகம்மாள்”
“ ஹ்ம்ம்”
“ என் பின்னாடி வாங்க. சார் உங்களுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க” என கூறிவிட்டு அங்கிருந்து வேக நடையுடன் நகர அவன் பின்னாடி கிட்டத்தட்ட ஓடினாள் அழகம்மாள்.
அவள் ஓடி வருவதை கண்டு தன் நடையின் வேகம் குறைத்த வினோத்திடம்,
“ சார் இன்னாத்துக்கு நீங்க இவ்வளவு வேகமா போறீங்க எதோ பஸ்ஸை புடிக்க போறவன் மாதிரி” என கேட்ட அழகம்மாளை கண்ட வினோத்,
‘ முகத்துல இருக்குற அப்பாவி தனத்துக்கும் பேச்சுக்கும் சம்மந்தம் இல்ல போல. ஆனா சார் எதுக்கு இவளை கூட்டிட்டு வர சொல்லறாருன்னு தெரியல’ என யோசித்துக்கொண்டு அழகம்மாளின் கேள்விக்கு பதில் கூறாது அமைதியாக ஒரு அறைக்கு அழைத்து சென்றவன் அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமர சொன்னவன் அங்கிருந்து சென்றுவிட,
‘ என்னடா இது எதுக்கு நம்மள கூப்பிட்டு இருப்பாங்க நாம நேத்து ஒரு வேளை முதலாளி வந்தப்போ தூங்கிட்டு இருத்துருப்போமோ’ என எண்ணிக்கொண்டு இருக்கையில்,
அடர் நீல நிற ஜீன்சும் வெள்ளை சட்டையும் அணிந்து தன் முழுக்கை சட்டையின் கை பகுதியையே மணிக்கட்டிற்கு மேல ஏற்றிக்கொண்டு கம்பீரமாக அறையினுள் நுழைந்த ஜெகனந்தனை கண்டு விழி விரிப்புடன் எழுந்த அழகம்மாள்
“ யோவ்!!.. நீ என்னய்யா இங்க??...” என ஆர்வமாக அவனின் அருகில் சென்றவள் அவனின் பதிலை கேட்கும் எண்ணம் சிறுதும் இல்லாது
“ யோவ் நீ இங்கதான் வேலை பார்க்குறியா. அதான் உனக்கு நேத்து எல்லாம் இடமும் குடோன்ல தெரிஞ்சுருக்கு. அப்புறம் உன்னைய கடத்துனவனை கண்டு பிடிச்சுட்டியா” என எதற்கு வந்தோம் என்பதையே மறந்து பேசிக்கொண்டிருந்தவளிடம் எதுவும் கூறாது அமைதியாக அங்கிருந்த அவனின் நாற்காலியில் அமர, அதனை கண்டு,
“ யோவ் வளந்து கெட்டவனே கொஞ்சமாது அறிவிருக்கா உனக்கு??” என கேட்ட அழகம்மாளிடம் பதில் கூறாது முறைத்த ஜெகனந்தனிடம்
“ எதுக்கு இப்போ முறைக்குற கொஞ்சமாது வேலை செய்ற இடத்துலயும் வேலை செய்றவங்கட்டையும் மரியாதை இருக்கணும்யா. அதான் நல்ல பழக்கம்” என கோவமாக கூறிய அழகம்மாளிடம் புரியாது தனது இரு புருவங்களையும் தூக்கி கேள்வியாக பார்த்த ஜெகனந்தனிடம்
“ என்ன பார்க்குற நீவாட்டுக்கு வந்த முதலாளி ஷேர்ல உட்காருற” என எகிற அழகம்மாளிடம் எதுவும் கூறாது தனது பெயர் எழுதிய பலகையை திருப்பி அவள் முன் வைத்துவிட்டு பியூனை அழைத்து இரு காபி எடுத்து வர சொன்னான் அதனை புரியாது நோக்கி “ ஜெகனந்தன்” என்ற பெயரை சற்றே சத்தமாக படித்தவள். எதோ கேட்க வாயை திறக்கும் முன் பியூன் காபியை மேஜையில் வைத்துவிட்டு நகர கால்மேல் கால் போட்டு அமர்ந்தவன்.
“ well நான்தான் இந்த கடையோட ஓனர் அதாவது முதலாளி இப்போ என்ன கேட்கணும்” என அழுத்தமாக பார்த்துக்கொண்டே பேசியவன் அழகம்மாளின் அதிர்ந்த முகத்தினை கண்டு திருப்தியுடன் ஒரு காபி கப்பை எடுத்துக்கொண்டு ஒரு மிடறு குடித்தவன்
“ ஹ்ம்ம் குடி அப்போதான் நான் கேட்குற கேள்விக்கு தெம்பா பதில் சொல்லலாம்” என அதிகாரமாக பேசிய ஜெகனந்தனிடம் மறுப்பாக தலை அசைத்தாள்.
“ என்ன வேண்டாம் குடி முதல்ல. மரியாதை மனசுல இருந்தா போதும்” என ஜெகனந்தன் கூற அப்பொழுதும் அமைதியாக இருந்தவளிடம்
“ இங்க பாரு அழகம்மாள்…..” என எதோ கூற வந்த ஜெக நந்தனிடம்
“ சார் சும்மா சும்மா குடி குடின்னு சொல்லாதீங்க சார் பிடிச்சா குடிக்க மாட்டாங்களா” என அழகம்மாள் கூற அவள் கூறுவதின் அர்த்தம் புரியாது
“ என்ன??” என ஜெகனந்தன் கேட்க
“ எனக்கு காபி பிடிக்காது நீங்க சொல்லும்போதே எனக்கு என்ன வேணும்ன்னு கேட்டுருக்கலாம்ல. எனக்கு டி தான் பிடிக்கும். புலி பசிச்சாலும் புல்லை திங்காது சார் அது மாதிரி எம்புட்டு பசினாலும் காபி குடிக்க மாட்டா இந்த அழகம்மாள்” என கூறிக்கொண்டிருந்தவளிடம்
“ ஹ்ம்ம் சரி வேணாம்ன்னா விடு இப்போ நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்லு”
“ என்ன சார்??”
“ ஹ்ம்ம் நீ எதுக்காக உன் மூஞ்சில இந்த மாதிரி கருப்பை பூசிக்கிட்டு என் குடோன்ல வேலை பார்க்குற” என ஜெகனந்தன் கேட்க அதில் அதிர்ந்து விழித்த அழகம்மாளுக்கு பதட்டத்தில் நாக்கு வறண்டுவிட யோசிக்காது காபியை சூட்டோடு குடித்து முடித்தாள். அதனை நமட்டு சிரிப்புடன் பார்த்துக்கொண்டே
“ ஹ்ம்ம் சொல்லுங்க மிஸ் அழகம்மாள்” என மீண்டும் கேட்டான் ஜெகனந்தன்
“ என்ன என்ன சொல்லணும்” என திக்கிய அழகம்மாளிடம்
“ இங்க பாரு நேத்து நீ பெருசா பாடி ஒப்பாரி வச்சியே அப்போ உன் கண்ணீரை துடைக்குறேன்னு நீ உன் முகத்தோட பாதியை துடைச்சுருப்ப போல. நான் கண்ணை திறந்து உன் முகத்தை பார்த்தவுடனே தெரிஞ்சுகிட்டேன் நீ மேக்கப் போட்டுருக்கன்னு. அதனால மறைக்காம உண்மையை மட்டும் சொல்லு” என சற்றே அதிகாரமாக கேட்ட ஜெகநந்தனை உற்றுநோக்கிய அழகம்மாள் ஒரு பெருமூச்சினை வெளியிட்டு
“ சொல்லமுடியாது. இன்னா சார் பண்ணுவ நீ??. வேலையை விட்டு தூக்குவியா?. தூக்கிக்கோ. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. ஆனா சொல்ல முடியாது சார் நான் ஏன் இப்படி மேக்அப் போட்டுருக்கேன்னு” என திமிராக கூறிய அழகம்மாளை கண்டு
“ ஹ்ம்ம் நான் பார்த்த கடந்து வந்த பொண்ணுங்கள்ள நீ கொஞ்சம் வித்தியாசமானவதான் தைரியமும் திமிரும் ஜாஸ்தி” என ஜெகனந்தன் பேசிக்கொண்டிருக்கையில்
“ நீ என்னைய எவ்வளவு புகழ்ந்தாலும் நான் மசிய மாட்டேன் உண்மைய சொல்லமாட்டேன் சார்”
“ ஹ்ம்ம் ஓகே ஓகே நீ சொல்லவேணாம் அழகிக்குட்டி” என கூறிய ஜெகனந்தனிடம்
“ ஏதே!!!!....” என ஒரு நிமிடம் அதிர்ந்த அழகம்மாளிடம்
“ என்ன பார்க்குற அழகி. நீங்க உண்மைய சொல்லவேணாம் இன்னும் கொஞ்ச நேரத்துல போலீஸ் வருவாங்க உன்னைய கைது பண்ண. அப்போ அவுங்கள்ட்ட உண்மையை சொல்லு”
“ போலீஸா!!....” என மீண்டும் அதிர்ந்து பயந்தவளிடம்
“ ஹ்ம்ம் போலிஸ் தான்.”
“ நான்….. நான்…. மேக்கப் போடுறது என் தனிப்பட்ட விஷயம் அதுக்கு எதுக்கு என்னைய போலீஸ் புடிக்கும். எனக்கும் சட்டம் தெரியும் சும்மா பூச்சாண்டி காட்டாதிங்க. நான் எந்த தப்பும் பண்ணலையே” என பயத்தை மறைத்துக்கொண்டு பேசிய அழகம்மாளிடம்
“ ஆஅஹான் ok . அப்போ நேத்து நீ என்னைய கடத்துனது…..” என நக்கலாக கேட்ட ஜெகனந்தனிடம்
“ என்ன நான் கடத்துனேனா??.... நான் உன்னைய கடத்தி என்னயா செய்ய போறேன்??”
“ அதை நீதான் சொல்லணும் அழகிக்குட்டி” என பாவமாக கூறியவனின் மூஞ்சியை பார்த்து எரிச்சல் அடைந்தவள்
“ யோவ் அறிவு கெட்டவனே நீ பெரிய மன்மதன். அப்படியே கடத்திட்டு போயி நாங்க மன்மதராசா மன்மதராசான்னு பாடி ஆடப்போறேன்” என கோவமாக கேட்டவளிடம்
“ இங்க பாரு அழகிகுட்டி நீ என்கூட என்ன பாட்டுக்கு வேணும்னாலு ஆடு ஆனா உன்னோட கை ரேகை நேத்து நீ என்னைய எழுப்புனப்போ என் சட்டைல இருக்கு. அப்புறம் உன்கூட என் PA வினோத் பார்த்துருக்கான். அதனால மிச்ச சாட்ச்சியை எல்லாம் நானே பக்கவா உனக்காக ரெடி பண்ண மாட்டேனா சொல்லு. அதனால நீ உண்மைய சொன்னா அழகிக்குட்டி அழகா வெளிய போலாம் இல்ல ஜெயிலுக்கு போலாம். நான் இன்னும் பத்து நிமிசத்துல வரேன் சரியா” என கூறிவிட்டு அங்கிருந்து நகர அவனை கண்டு பல்லை கடித்த அழகம்மாள்,
“ அடே இந்த அழகம்மாள் உனக்கு சாபம் குடுகுறேண்டா என்னைய இப்படி பயமுறுத்திருல இதே மாதிரி உன் பொண்டாட்டிகிட்ட பயபுடல நான் பிச்சமுத்து பேத்தி அழகம்மாள் இல்லடா” என புலம்பிக்கொண்டு அங்கிருந்த மேஜையில் தலை கவிழ்ந்து அமர்ந்து கொண்டாள்.
thanks for supporting &
plz drop ur comments friends
கதவை திறந்து கொண்டு ஜெகனந்தன் வெளியே வர அவனை தொடர்ந்து கடுகடுவென்று முகத்தை வைத்துக்கொண்டு அழகம்மாளும் வெளியே வர, அதே நேரம் வினோத்தும் காருடன் அங்கு வந்து சேர்ந்தான்.
அவனை கண்ட ஜெகனந்தன் கேள்வியாக நோக்க,
“ இல்ல சார் இப்போ நீங்க கால் பண்ணுன நம்பர் சுவிட்ச் ஆப்ன்னு வந்தது. உங்களுக்கு எதுவும் பிரச்சனையா என்னன்னு தெரியல. அதான் நீங்க இங்க வந்திங்களா என்னன்னு பார்க்க வந்தேன். ஆனா நீங்க இந்நேரம் இங்க என்ன சார்??” என வினோத் கேட்க
“ சொல்றேன் வினோத். ஒன் செகண்ட்” என கூறிவிட்டு திரும்பி அழகம்மாளை பார்க்க அதற்குள் அவள் வீட்டை நோக்கி வேக நடையுடன் சென்றுகொண்டிருந்தாள்.
“ வினோத் அதோ அங்க போற பொண்ணை follow பண்ணு அவ வீட்டை மட்டும் தெரிஞ்சுக்கிட்டா போதும்” என ஜெகனந்தன் கூற
அழகம்மாள் அவள் வீட்டை அடைந்து கதவை சாற்றிய பின் அவளறியாமல் பின் தொடர்ந்த ஜெகனந்தனும் வினோத்தும் ஒரு ரெஸ்டாரெண்டில் வண்டியை நிறுத்தி சிறுது நேரம் பேசிவிட்டு ஜெகனந்தன் நாளை காலை செய்ய வேண்டிய பணிகளை கூறிவிட்டு அவனின் வீட்டிற்கு சென்றுவிட்டான்.
ஜெகநந்தன் வீட்டிற்குள் நுழைய ஹாலில் அவனிற்காக காத்திருந்த வேத நந்தனையும் மாதுரியையும் கண்டு கொள்ளாது அவனின் அறைக்குள் செல்ல பார்த்த ஜெகனந்தனை கண்டு,
“ ஜெகா என்னடா தாத்தாவும் நானும் காத்திருக்குறோம் நீ கொஞ்சம் கூட கண்டுக்காம போற” என கேட்ட மாதுரியிடம் ஒன்னும் கூறாது வேதனந்தனின் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தான். அவனை பார்த்த வேதனந்தன்,
“ ஜெகா”
“ ஹ்ம்ம் தாத்தா”
“ இன்னும் எத்தனை நாளு நீ இப்படி குடும்பத்தோட ஒட்டாம இருப்ப???” என கேட்க
“ எனக்கு தோன்றவரைக்கும்” என கூறிய ஜெகனந்தனிடம்
“ இது பதிலாடா??” என ஆதங்கமாக கேட்ட மாதுரியிடம்
“ என்ன அம்மா??” என சலிப்பாக கேட்ட ஜெகனந்தனிடம்
“ என்னடா சலிச்சுக்குற இந்த வீட்டோட மூத்த வாரிசுடா நீ ஆனா உனக்கும் இந்த குடும்பத்துக்கும் சம்மந்தமே இல்லாதமாதிரி நடந்துக்குற. ஏன்டா இப்படி இருக்க??. இந்த கேள்வியை கேட்டு கேட்டு நான்தான்டா சலிச்சுக்கணும்” என கூறிய மாதுரியிடம்
“ அம்மா already I am very tired so நான் தூங்க போறேன் morning பேசலாம். Good night தாத்தா” என கூறிவிட்டு அவர்களின் பதிலை எதிர்பார்க்காது தனது அறைக்கு சென்றுவிட்டான் ஜெகனந்தன். அவன் சென்றதை கண்டு,
“ என்ன மாமா இவன் இப்படி இருக்கான்??” என மாதுரி கேட்க
“ அட விடுமா இவன் இப்படிதான்னு நமக்கு தெரியாதா. சீக்கிரம் ஒரு பொண்ணை பார்த்து கட்டி வச்சா மாறிடுவான்” என கூறிய வேதனந்தனிடம்
“ மாமா நீங்க முதல்ல சொன்னிங்கன்னுதான் எல்லாம் பண்ணுனோம். ஆனா அதுக்குள்ள இப்படி…..”
“ மாதுரி முதல்ல நடந்த விஷயத்தை பத்தி பேச வேணாம். அதுல முழுக்க முழுக்க எல்லா தப்பும் என் பேருலதான். நான் தான் சரியாய் விசாரிக்காம எதோ செய்ய போய் அது அவனுக்கு கஷ்டத்தை குடுத்துடுச்சு. அதை சரி செய்ய வேண்டியது என் பொறுப்பு. நான் பார்த்துக்குறேன் நீ போய் தூங்குமா” என கூறிவிட்டு வேதனந்தன் கூறிவிட்டு அவர் அறைக்கு சென்றுவிட
“ மறுபடியும் இவரை நம்பியா ஹம்ம்ஹும் நாமளே களத்துல குத்துச்சுட வேண்டியதுதான்” என எண்ணிக்கொண்டே மாதுரியும் உறங்க சென்றுவிட்டார்.
மறுநாள் ஆயுத பூஜை விடுமுறை தினம் என்பதால் அழகம்மாளுக்கு அன்றைய தினம் பரபரப்பு இல்லாது நன்றாக ஓய்வெடுக்க ஜெகனந்தனுக்கோ அன்றும் சில பல வேலைகளுடனும் சில திட்டமிடலுடனும் கடந்தது.
மறுநாள் காலையில் எழுந்து எப்பொழுதும் போல தனது வேலைகளை முடித்துக்கொண்டு வேலைக்கு கிளம்பிய அழகம்மாளிடம் வந்த முனியம்மா,
“ இந்தா பிள்ளை அழகு”
“ என்னக்கா??”
“ இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் வரியா வீட்டுக்கு??”
“ எதுக்குக்கா??”
“ அது என் ஒன்னு விட்ட தம்பி ஒருத்தன் சொந்தமா ஆட்டோ ஓட்டுறான். பேரு பழனி”
“ சரி”
“ அவனுக்கு பொண்ணு பார்க்குறாங்க போல நான் உன்னைய பத்தி சொன்னேன். அதான் அவனே நேருல பார்த்துட்டு சொல்றேன்னு சொன்னான். நீயும் அவனை பார்த்துட்டினா நான் மேற்கொண்டு ஆக வேண்டியதை பார்த்திடுவேன். ஆயி அப்பன் இல்லாத பொண்ணு. உனக்கு எதாவது நல்லது பண்ணனும்ன்னு தோணுது பிள்ளை.
இங்க இருக்குற சில வெண்ணையெல்லாம் உன்னைய பத்தி பேசுறதை மட்டுமே வேலையா வச்சுருக்காங்க. அதான் நீ சீக்கிரம் வந்திரியா??” என கேட்ட முனியம்மாவிடம் என்ன கூறுவது என தெரியாது
“ ஹான் பார்க்கலாம்க்கா இன்னைக்கு முதலாளி வரேன்னு சொல்லிருக்காரு நான் கேட்டு பார்க்குறேன் வர முடியலைன்னா கோச்சுக்காதீங்க” என அவசரமாக வாய்க்கு வந்ததை கூறிவிட்டு அழகம்மாள் வேலைக்கு சென்றுவிட
“ என்ன இந்த பிள்ளை எதோ சாப்பிட கூப்புட்டா மாதிரி பதில் சொல்லுது. கல்யாணம்ன்னு நான் சொன்னதை ஒழுங்கா கேட்டுச்சா” என யோசித்துக்கொண்டே முனியம்மாவும் அவரின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
குடோனிற்கு வந்த அழகம்மாளோ முனியம்மாளை எண்ணையே இல்லாது வறுத்துக்கொண்டிருந்தாள்.
“ நான் கேட்டேனா இல்ல நான் கேட்டேனா இந்த அக்காட்ட கல்யாணம் பண்ணி வைங்கன்னு. நான் என்ன பிளான் போட்டு இருக்கேன்……. இந்த அக்கா சொன்ன மாதிரி கல்யாணம் பண்ணுனா என்னைய போட்டுடுவாங்களே. ஐயோ சீக்கிரம் பணம் சேர்த்து இங்க இருந்து சீக்கிரம் ஜூட் விடணும் அழகு” என மனதோடு புலம்பிக்கொண்டிருக்கையில்
அங்கு வேலை பார்க்கும் வேணி “ அழகு….. அழகு….” என அழகம்மாளை அழைத்தாள்.
அதில் சுயம் பெற்று,
“ என்ன அக்கா??”
“ இன்னைக்கு முதலாளி கடைக்கு உன்னைய பார்க்க வர சொன்னதா மேனேஜர் சொல்லிட்டு போறாரு. சீக்கிரம் கடைக்கு போயி முதலாளியை பார்த்துட்டு வா” என வேணி கூற
“ முதலாளி என்னைய எதுக்குக்கா பார்க்கணும்??” என அழகம்மாள் பதட்டத்தோடு கேட்க
“ தெரியல உடனே வர சொன்னாராம் சீக்கிரம் போத்தா” என கூறிவிட்டு வேணி அங்கிருந்து நகர
“ என்னடா கால கொடுமை இன்னைக்கு. ஒரு வித பதட்டமாவே வச்சுருக்காரு ஆண்டவே. ஹ்ம்ம் சரி இந்த முதலை எதுக்கு என்னைய கூபிடுச்சுன்னுன்னு தெரியலையே” என எண்ணிக்கொண்டு குடோனில் முன் பகுதில் இருந்து கடைக்கு விரைந்து சென்றாள் அழகம்மாள்.
நந்தன் டெக்ஸ்டைல்ஸ் என பெரிதாக பெயர் பொறிக்க பட்டு கம்பீரமாக நின்ற அந்த புதுமை கட்டிடத்திற்குள் முன் வாசல் வழியாக நுழைந்தாள் அழகம்மாள். அங்கிருப்போர் அவளை அருவெறுப்புடன் சிலர் முக சுளிப்புடன் சிலர் யார் இவள் என கேள்வி பாவனையுடனும் சிலர் கண்டும் காணாமலும் சிலரின் கவனத்தில் பதித்தும் பதியாமல் என அனைவரையும் ஒரு முறை இவளை பார்க்க வைத்தது இவளின் பதட்டமான முகமும், வேர்வை வழிந்த உள்ளங்கையை தனது ஓவர் கோட்டில் அழுத்தி துடைத்துக்கொண்டு ஓடிவந்த விதமும்.
அந்த பிரம்மாண்ட கடையினுள் முதல் முறையாக நுழைந்தவள் எங்கு செல்வது யாரை கேட்பது என அறியாது முழிக்க அதே நேரம் அங்கு வந்த வினோத்,
“ மிஸ் அழகம்மாள்” என கம்பீரமாக அழைக்க அதில் திடுக்கிட்டு “ எஸ் சார்” என சத்தமாக கத்தினாள் அழகம்மாள்.
அதனை கண்டு சிலர் மௌனமாகவும் சத்தமாகவும் சிரிக்க அவர்களை பார்வையில் அடக்கிய வினோத்,
“ அழகம்மாள்”
“ ஹ்ம்ம்”
“ என் பின்னாடி வாங்க. சார் உங்களுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க” என கூறிவிட்டு அங்கிருந்து வேக நடையுடன் நகர அவன் பின்னாடி கிட்டத்தட்ட ஓடினாள் அழகம்மாள்.
அவள் ஓடி வருவதை கண்டு தன் நடையின் வேகம் குறைத்த வினோத்திடம்,
“ சார் இன்னாத்துக்கு நீங்க இவ்வளவு வேகமா போறீங்க எதோ பஸ்ஸை புடிக்க போறவன் மாதிரி” என கேட்ட அழகம்மாளை கண்ட வினோத்,
‘ முகத்துல இருக்குற அப்பாவி தனத்துக்கும் பேச்சுக்கும் சம்மந்தம் இல்ல போல. ஆனா சார் எதுக்கு இவளை கூட்டிட்டு வர சொல்லறாருன்னு தெரியல’ என யோசித்துக்கொண்டு அழகம்மாளின் கேள்விக்கு பதில் கூறாது அமைதியாக ஒரு அறைக்கு அழைத்து சென்றவன் அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமர சொன்னவன் அங்கிருந்து சென்றுவிட,
‘ என்னடா இது எதுக்கு நம்மள கூப்பிட்டு இருப்பாங்க நாம நேத்து ஒரு வேளை முதலாளி வந்தப்போ தூங்கிட்டு இருத்துருப்போமோ’ என எண்ணிக்கொண்டு இருக்கையில்,
அடர் நீல நிற ஜீன்சும் வெள்ளை சட்டையும் அணிந்து தன் முழுக்கை சட்டையின் கை பகுதியையே மணிக்கட்டிற்கு மேல ஏற்றிக்கொண்டு கம்பீரமாக அறையினுள் நுழைந்த ஜெகனந்தனை கண்டு விழி விரிப்புடன் எழுந்த அழகம்மாள்
“ யோவ்!!.. நீ என்னய்யா இங்க??...” என ஆர்வமாக அவனின் அருகில் சென்றவள் அவனின் பதிலை கேட்கும் எண்ணம் சிறுதும் இல்லாது
“ யோவ் நீ இங்கதான் வேலை பார்க்குறியா. அதான் உனக்கு நேத்து எல்லாம் இடமும் குடோன்ல தெரிஞ்சுருக்கு. அப்புறம் உன்னைய கடத்துனவனை கண்டு பிடிச்சுட்டியா” என எதற்கு வந்தோம் என்பதையே மறந்து பேசிக்கொண்டிருந்தவளிடம் எதுவும் கூறாது அமைதியாக அங்கிருந்த அவனின் நாற்காலியில் அமர, அதனை கண்டு,
“ யோவ் வளந்து கெட்டவனே கொஞ்சமாது அறிவிருக்கா உனக்கு??” என கேட்ட அழகம்மாளிடம் பதில் கூறாது முறைத்த ஜெகனந்தனிடம்
“ எதுக்கு இப்போ முறைக்குற கொஞ்சமாது வேலை செய்ற இடத்துலயும் வேலை செய்றவங்கட்டையும் மரியாதை இருக்கணும்யா. அதான் நல்ல பழக்கம்” என கோவமாக கூறிய அழகம்மாளிடம் புரியாது தனது இரு புருவங்களையும் தூக்கி கேள்வியாக பார்த்த ஜெகனந்தனிடம்
“ என்ன பார்க்குற நீவாட்டுக்கு வந்த முதலாளி ஷேர்ல உட்காருற” என எகிற அழகம்மாளிடம் எதுவும் கூறாது தனது பெயர் எழுதிய பலகையை திருப்பி அவள் முன் வைத்துவிட்டு பியூனை அழைத்து இரு காபி எடுத்து வர சொன்னான் அதனை புரியாது நோக்கி “ ஜெகனந்தன்” என்ற பெயரை சற்றே சத்தமாக படித்தவள். எதோ கேட்க வாயை திறக்கும் முன் பியூன் காபியை மேஜையில் வைத்துவிட்டு நகர கால்மேல் கால் போட்டு அமர்ந்தவன்.
“ well நான்தான் இந்த கடையோட ஓனர் அதாவது முதலாளி இப்போ என்ன கேட்கணும்” என அழுத்தமாக பார்த்துக்கொண்டே பேசியவன் அழகம்மாளின் அதிர்ந்த முகத்தினை கண்டு திருப்தியுடன் ஒரு காபி கப்பை எடுத்துக்கொண்டு ஒரு மிடறு குடித்தவன்
“ ஹ்ம்ம் குடி அப்போதான் நான் கேட்குற கேள்விக்கு தெம்பா பதில் சொல்லலாம்” என அதிகாரமாக பேசிய ஜெகனந்தனிடம் மறுப்பாக தலை அசைத்தாள்.
“ என்ன வேண்டாம் குடி முதல்ல. மரியாதை மனசுல இருந்தா போதும்” என ஜெகனந்தன் கூற அப்பொழுதும் அமைதியாக இருந்தவளிடம்
“ இங்க பாரு அழகம்மாள்…..” என எதோ கூற வந்த ஜெக நந்தனிடம்
“ சார் சும்மா சும்மா குடி குடின்னு சொல்லாதீங்க சார் பிடிச்சா குடிக்க மாட்டாங்களா” என அழகம்மாள் கூற அவள் கூறுவதின் அர்த்தம் புரியாது
“ என்ன??” என ஜெகனந்தன் கேட்க
“ எனக்கு காபி பிடிக்காது நீங்க சொல்லும்போதே எனக்கு என்ன வேணும்ன்னு கேட்டுருக்கலாம்ல. எனக்கு டி தான் பிடிக்கும். புலி பசிச்சாலும் புல்லை திங்காது சார் அது மாதிரி எம்புட்டு பசினாலும் காபி குடிக்க மாட்டா இந்த அழகம்மாள்” என கூறிக்கொண்டிருந்தவளிடம்
“ ஹ்ம்ம் சரி வேணாம்ன்னா விடு இப்போ நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்லு”
“ என்ன சார்??”
“ ஹ்ம்ம் நீ எதுக்காக உன் மூஞ்சில இந்த மாதிரி கருப்பை பூசிக்கிட்டு என் குடோன்ல வேலை பார்க்குற” என ஜெகனந்தன் கேட்க அதில் அதிர்ந்து விழித்த அழகம்மாளுக்கு பதட்டத்தில் நாக்கு வறண்டுவிட யோசிக்காது காபியை சூட்டோடு குடித்து முடித்தாள். அதனை நமட்டு சிரிப்புடன் பார்த்துக்கொண்டே
“ ஹ்ம்ம் சொல்லுங்க மிஸ் அழகம்மாள்” என மீண்டும் கேட்டான் ஜெகனந்தன்
“ என்ன என்ன சொல்லணும்” என திக்கிய அழகம்மாளிடம்
“ இங்க பாரு நேத்து நீ பெருசா பாடி ஒப்பாரி வச்சியே அப்போ உன் கண்ணீரை துடைக்குறேன்னு நீ உன் முகத்தோட பாதியை துடைச்சுருப்ப போல. நான் கண்ணை திறந்து உன் முகத்தை பார்த்தவுடனே தெரிஞ்சுகிட்டேன் நீ மேக்கப் போட்டுருக்கன்னு. அதனால மறைக்காம உண்மையை மட்டும் சொல்லு” என சற்றே அதிகாரமாக கேட்ட ஜெகநந்தனை உற்றுநோக்கிய அழகம்மாள் ஒரு பெருமூச்சினை வெளியிட்டு
“ சொல்லமுடியாது. இன்னா சார் பண்ணுவ நீ??. வேலையை விட்டு தூக்குவியா?. தூக்கிக்கோ. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. ஆனா சொல்ல முடியாது சார் நான் ஏன் இப்படி மேக்அப் போட்டுருக்கேன்னு” என திமிராக கூறிய அழகம்மாளை கண்டு
“ ஹ்ம்ம் நான் பார்த்த கடந்து வந்த பொண்ணுங்கள்ள நீ கொஞ்சம் வித்தியாசமானவதான் தைரியமும் திமிரும் ஜாஸ்தி” என ஜெகனந்தன் பேசிக்கொண்டிருக்கையில்
“ நீ என்னைய எவ்வளவு புகழ்ந்தாலும் நான் மசிய மாட்டேன் உண்மைய சொல்லமாட்டேன் சார்”
“ ஹ்ம்ம் ஓகே ஓகே நீ சொல்லவேணாம் அழகிக்குட்டி” என கூறிய ஜெகனந்தனிடம்
“ ஏதே!!!!....” என ஒரு நிமிடம் அதிர்ந்த அழகம்மாளிடம்
“ என்ன பார்க்குற அழகி. நீங்க உண்மைய சொல்லவேணாம் இன்னும் கொஞ்ச நேரத்துல போலீஸ் வருவாங்க உன்னைய கைது பண்ண. அப்போ அவுங்கள்ட்ட உண்மையை சொல்லு”
“ போலீஸா!!....” என மீண்டும் அதிர்ந்து பயந்தவளிடம்
“ ஹ்ம்ம் போலிஸ் தான்.”
“ நான்….. நான்…. மேக்கப் போடுறது என் தனிப்பட்ட விஷயம் அதுக்கு எதுக்கு என்னைய போலீஸ் புடிக்கும். எனக்கும் சட்டம் தெரியும் சும்மா பூச்சாண்டி காட்டாதிங்க. நான் எந்த தப்பும் பண்ணலையே” என பயத்தை மறைத்துக்கொண்டு பேசிய அழகம்மாளிடம்
“ ஆஅஹான் ok . அப்போ நேத்து நீ என்னைய கடத்துனது…..” என நக்கலாக கேட்ட ஜெகனந்தனிடம்
“ என்ன நான் கடத்துனேனா??.... நான் உன்னைய கடத்தி என்னயா செய்ய போறேன்??”
“ அதை நீதான் சொல்லணும் அழகிக்குட்டி” என பாவமாக கூறியவனின் மூஞ்சியை பார்த்து எரிச்சல் அடைந்தவள்
“ யோவ் அறிவு கெட்டவனே நீ பெரிய மன்மதன். அப்படியே கடத்திட்டு போயி நாங்க மன்மதராசா மன்மதராசான்னு பாடி ஆடப்போறேன்” என கோவமாக கேட்டவளிடம்
“ இங்க பாரு அழகிகுட்டி நீ என்கூட என்ன பாட்டுக்கு வேணும்னாலு ஆடு ஆனா உன்னோட கை ரேகை நேத்து நீ என்னைய எழுப்புனப்போ என் சட்டைல இருக்கு. அப்புறம் உன்கூட என் PA வினோத் பார்த்துருக்கான். அதனால மிச்ச சாட்ச்சியை எல்லாம் நானே பக்கவா உனக்காக ரெடி பண்ண மாட்டேனா சொல்லு. அதனால நீ உண்மைய சொன்னா அழகிக்குட்டி அழகா வெளிய போலாம் இல்ல ஜெயிலுக்கு போலாம். நான் இன்னும் பத்து நிமிசத்துல வரேன் சரியா” என கூறிவிட்டு அங்கிருந்து நகர அவனை கண்டு பல்லை கடித்த அழகம்மாள்,
“ அடே இந்த அழகம்மாள் உனக்கு சாபம் குடுகுறேண்டா என்னைய இப்படி பயமுறுத்திருல இதே மாதிரி உன் பொண்டாட்டிகிட்ட பயபுடல நான் பிச்சமுத்து பேத்தி அழகம்மாள் இல்லடா” என புலம்பிக்கொண்டு அங்கிருந்த மேஜையில் தலை கவிழ்ந்து அமர்ந்து கொண்டாள்.
thanks for supporting &
plz drop ur comments friends
Last edited: