உன்னில் சிக்க வைக்கிற II -27
காலிங் பெல்லை அழுத்திவிட்டு கதவருகே இனியன் நின்றான்.. கதவை திறந்தது சந்தோஷ்.. நீயா சலித்துக்கொண்டு கேட்டான்..
யாருபா என்று உள்ளிருந்து சந்தோஷின் பாட்டி கேட்க..
ம்ம்...எங்க தேனு, இனியன் முதுகின்பின்னால் எட்டி பார்த்தான்... அதுவா பாட்டி கலெக்டர் வந்திருக்காரு... சொல்லும்போதே காரின் கதவை திறந்து தேன்மொழியாள் இனியன் அருகே வந்தாள்..
ஹாய் தேனு.. என்று சந்தோஷ் அனைத்துக்கொள்ள..
திகைத்தபடி இனியனை பார்த்தாள்... வா சந்தோஷ் சிறியதாக புன்னகைக்க..
அவளின் கையை பிடித்து தன் பக்கம் இழுத்தான் இனியன்.. வா உள்ளே போகலாம்..
ஹாலில் வர... ஹோ இனியன் தம்பியா.. நல்லாயிருக்கீயா பா. அடுத்த வார்த்தையே நீ எப்ப டைவர்ஸ் தருவ தம்பி.. வர தைக்குள்ள தேனுக்கும் சந்தோஷுக்கும் கல்யாணம் முடிச்சிடலாம் பேசியிருக்கோம்...
அங்கே அவர்கள் பேச பேச தன்னவளை மட்டுமே இமைக்காமல் பார்த்திருந்தான்..
கடைசியில என் தேனு எனக்குதான் கடவுள் எழுதிருக்காரு போல சந்தோஷும் இட்டுகட்டி பேசினான்..
சந்தோஷ் என்ன பேசற புரிஞ்சு பேசு தேனு அவனை அதட்டினால்...
தேனுவின் கையை இறுக்க பிடித்திருந்தான், விறுவிறுன்னு அவளை இழுத்துக்கொண்டு மேலே அவளின் ரூமிற்குச் சென்று கதவை டமால் என்று தாளிட்டான் இனியன்...
அவனின் கோபத்தை அறியாதவளா பேதை, இல்ல மாமா அவன் சும்மா கலாய்க்கிறான்..
ப்ளாருன்னு ஒரு அறை, அடுத்த வார்த்தை பேசவில்லை தேனு, கண்கலங்கி இனியனை ஏறிட்டாள்.. இப்ப எதுக்கு அடிச்ச என்ற கேள்வியோடு...
அவன் வந்தது உனக்கு தெரியும்தானே..
ம்ம்..என்று தலையை ஆட்டினாள்...
எல்லாம் ஜாயின்ட் அடிச்சிட்டிங்க... ஆனா உனக்கு நான்மட்டும் ஆகல.. இது என்ன லாஜீக்கு தேனு...
மாமா... நீ என்னை சந்தேகப்படுறீயா.. ஓடிச்சென்று அவனின் முதுகை கட்டியனைத்துக் கொண்டாள்.. இந்த உயிர் இருக்கும்வரை உன்னைதவிர யாரும் என் மனசில வரமுடியாது மாமா..
போதும்டி உன் நடிப்பு... கட்டியிருந்த அவளின் கைகளை பிரித்து விட்டான். இன்னைக்கு கல்யாண நாளில்ல உனக்கு பரிசு கொடுக்கட்டுமா தேனு..
அய்யோ இவரை எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியலையே, கையை பிசைந்துக்கொண்டு நின்றாள்...
மாமா...
தேனு... தேனு என்று கீழியிருந்து அவளின் பாட்டி அழைக்க...
என் புருஷனோடு இருக்கேன் சொல்லுடி.. என்று கத்தினான் இனியன்..
மாமா தப்பா நினைச்சுப்பாங்க... என்ன என்று கேட்டுவரட்டுமா...
இனியன் முறைத்த முறைப்பில் கதவை திறந்து பாட்டி நான் அவருடன் இருக்கேன் மேலிருந்து கீழே கொஞ்சம் குரலை உயர்த்தி கூறினாள்...
இனியன் தேனுவின் பெட்டில் அமர்ந்து கால்களை நீட்டினான்... கதவை தாளிட்டு அவன் பக்கத்தில் போய் நின்றாள்..
என்ன பத்திரிக்கையெல்லாம் அடிச்சாச்சா, கல்யாண பெண்ணே, உன் முன்னாள் புருஷனாச்சே ஹனிமூனுக்கு டிக்கட் புக் பண்ணட்டா தேனு....
இனியன் பேசுவதை காதுக்கொடுத்து கேட்கமுடியவில்லை தேனுவால்.. பாத்ரூம் நோக்கி நகர அவளின் கையை பிடித்து இழுத்து மடியில் உட்கார வைத்தான் இனியன்..
என்னடி எஸ் ஆக பார்க்கிற.. ஹாங் கல்யாண நாளில்ல நல்ல கிப்ட் கொடுக்கனும் நினைச்சேன்... என்ன தரலாம் என்று அவளின் உதட்டை பிடித்து இழுத்தான்..
ஸோ ஸாப்ட் உன் லிப்ஸ்... ஆனா பயங்கற விஷம்.. அது.
எதுவுமே பேசவில்லை தேனு , பேசினால் காலில் சலங்கை கட்டாமலே ஆடுவான் என்று தெரியும்.. ஆனால் ஒன்றுமட்டும் புரியவில்லை அவளுக்கு ஏன் சந்தோஷும், பாட்டியும் இப்படி பேசினார்கள் என்று..
நைட் ஒன்பது மணிக்கு பால்கனி கதவை திறந்து நில்லேன்.. உனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கு...
கீழே ரேனுகா தனது மாமியாரிடம், ரொம்ப நன்றி அத்தை என்று கூறினாள்..
அத்தை இது ஒரு சின்ன விஷியம்தான் இதுக்குபோய் சந்தோஷும் தன் அத்தையை சமாதானம் படுத்தினான்...
நல்லகாலம் அத்தை, இனியன் நல்ல மூடுல இருந்திருப்பான்... இல்லைன்னா அடிவாங்கியிருப்பேன்.. இரண்டுபேரும் சேர்ந்துடுவாங்க, ஈகோ தான் இருவருக்கும்... அதை கிளம்பிவிட்டாச்சு... சண்டையில போய் சமாதானத்தில முடிப்பாங்க... எனக்கு கொஞ்சம் வெளியே வேலையிருக்கு நான் போயிட்டு வரேன்.. என்று கிளம்பினான்..
.....
மேலே, இனியனால் தன்னை கட்டுபடுத்திக் கொள்ளமுடியவில்லை, அவன் எப்படி என்னை பார்த்து இப்படி கேட்பான்..
யாரு மாமா..
ஹா.. கடவுளு உன்னை அவனுக்காக படைச்சாங்கன்னு சொன்னானே அந்த எரும..
சும்மா... சொல்லிருப்பான்.
அதெப்படி என் பொண்டாட்டிய பார்த்து சொல்லுவான்..
சிரித்துவிட்டாள் தேனுமொழியாள்.. டக்கென்று தன் வாயை மூடிக்கொள்ள
சிரிச்சியா..
இல்ல என்று தலையை ஆட்டினாள்..
ரொம்ப கஷ்டப்படுற போல, இந்த வாரத்திற்குள் டைவர்ஸ் கொடுத்திடுவேன்... உங்க பாட்டிக்கிட்ட சொல்லு.. எழுந்து வெளியே சென்றான்..
.....
அன்று இரவு, ஒன்பது மணிக்கு தலையில் பூ சூடி தன் மாமனை காண பால்கனி கதவை திறந்தாள்...
அவள் கண்ட காட்சி, உயிரே அவளை விட்டு சென்றதுபோல் நினைத்தாள்... கண்கள் கலங்க எதிரே பார்க்க..
இனியன் மேலாடையில்லாமல் தேனுவை பார்த்து நிற்க..அவனை கட்டியனைத்து காதுமடலில் முத்தமிட்டுக் கொண்டிருந்தாள் ஒரு பெண்... அவளும் அறைகுறை ஆடையுடன்..
அண்ணா சொன்ன மாடலிங் செய்யும் பெண் லேகாதானே அது... அவளின் முதுகு மட்டுமே தேனுவிற்கு தெரிந்தது...
இனியனின் கழுத்தில் முத்தமிட.. சிரித்தபடியே தேனுவை பார்த்தான்.. நீ இதைதானே எதிர்ப்பார்த்த... இன்னோரு பெண்ணை மனம் முடிக்க சொல்லி... நல்லா பாரு அவள் என்னிடம் வரம்பு மீறும் காட்சியை, மெதுவாக அவனின் பேன்ட்டை கழிட்டினாள்...
ஒரு நிமிடம் டார்லிங்.. நான் பால்கனி கதவை மூடிட்டு வரேன்... கதவை சாற்றினான்..
பிரம்மையில் தேனுவின் கண் முன்னே அடுத்த காட்சிகள் ஓட ஆரம்பித்தன... நோ.. நான் எதுவும் நடக்கவிடமாட்டேன்.. உடனே மோகனை அழைத்தாள் தனது போனில்..
என்னக்கா... வேளச்சேரி மால்ல சினிமா பார்த்துட்டுயிருக்கேன்... மாமாதான் டிக்கெட் வாங்கிக்கொடுத்துச்சு..
உடனே வீட்டுக்கு வாடா..
அக்கா படமே இப்பதான் ஆரம்பிச்சாங்க...
வாடா என்று கத்தினாள்..
இனியன் வீட்டு காலிங்பெல் அடிக்க... கதவை திறந்தான் இனியன் சிவ பூஜையில கரடி நுழைஞ்ச மாதிரி யாருடா...என்று திறக்க.
ஸார் தண்ணீ கேன் போட வந்திருக்கேன்..
நான் கேட்கலையே என்றான்...
ஸார் போன் வந்தது.. உடனே அர்ஜென்ட்..
சரி வச்சிட்டு போ.. அவன் சென்றவுடன் கதவை தாளிட்டு... ரூமிற்குள் செல்ல..
மறுபடியும் காலிங் பெல் அடித்தது...
கதவை திறந்தான்... ஸார் சோமேட்டா இருந்து காய்கறி கேட்டீங்க கொண்டுவந்திருக்கேன்.. ஆர்டர் கரெக்டா பாருங்க என்று பாஸ்கெட்டை ஹாலில் வைத்தான்..
நான் ஆர்டர் பண்ணலையே..
இந்த முகவரிதான் ஸார், நீங்க இனியன் ஸார்தானே...
அவன் சென்றபிறகு கதவை தாளிட்டான்..
மறுபடியும் காலிங்பெல் அடித்தது... ஸார் பிஸ்ஸா ஹட்டிலிருந்து பிஸ்ஸா எடுத்து தந்தான்..
ச்சே மூடே போயிடுச்சு...
கதவை தாளிடவில்லை சோபாவில் உட்கார்ந்தான்... வீட்டில யாருங்க இரண்டு பெரியவர் வந்தார்கள்...
ஸார் இந்த தெருவில இருக்க விநாயகர் கோவிலுக்கு சுற்றி டையில்ஸ் போட போறோம்... உங்களால முடிந்தா நன்கொடை தாங்க... காலையில வந்தா நீ இல்ல அதான் இந்த டைமில்ல வந்தோம்...
இனியன் யோசிக்க..
இந்த டைமில்ல தான் நீங்க இருப்பீங்க உங்க மனைவி சொன்னாங்க..
எல்லாம் அந்த பிசாசு செய்யர வேலையா.. அவர்களை அனுப்பிவிட்டு.. பால்கனி கதவை திறந்தான்..
ஏய்... இனியன் கத்த..
ஹாப்பி வெட்டிங் டே மாமா என்றாள் தேனு...
இனிமே உன்னால ஒண்ணும் செய்யமுடியாதுடி... எதை நடக்ககூடாதுன்னு தடுத்துயோ அது நடக்கபோகுது..
மாமா என்று மோகன் இனியன் அறைக்குள் நுழைந்தான்...
என்னடா பாதியிலே வந்துட்டே..
ஒரே தலைவலி மாமா அதான் சினிமா பார்க்காம வந்துட்டேன்.. நீங்க எப்போ அசோக் அண்ணா வந்தீங்க கேட்டுவிட்டு ,அவனது அறைக்குள் சென்றான்..
தனது அக்காவிற்கு போனை போட்டான்... எதுக்கு வரச்சொன்ன..
தேனு கேட்ட கேள்விக்கு...
யாரும் இங்க வரல, என் தலைவன் படத்தை பார்க்கவிடாம பண்ணிட்டே... உங்க ரெண்டுபேருக்கும் இதே வேலையா கேட்கிறேன்..
டேய் அசோக் அடுத்த பைலை எடு... இன்கம் டாக்ஸ் நாளைக்கு சம்மிட் செய்யனும், வேலையை பார்க்கவிடுறாளா பாரு... அலுத்துக் கொண்டான் இனியன்..
உங்க ரெண்டுபேருக்கும் நான் ஊறுகாயாடா... அசோக் சொல்ல
ஊறுகாயில்ல சிக்கன் பீஸ்ஸூ.
.......
வேலை முடித்துவிட்டு படுக்க மணி ஒன்றானது இனியனுக்கு... தேனுவை நினைத்தபடியே படுத்திருந்தான்... தேனுவின் அறை முழுவது இனியன் போட்டோ மற்றுமே இருந்தது.. எவ்வளவு லவ் என்மேலடி, மேகம் மறைந்த நிலவுபோல எல்லாத்தையும் மறைச்சிட்டு இருக்க..
....
உன்னில் சிக்க வைக்கிற
அன்பு நன்பர்களே...
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
உங்கள் அன்பு
லக்ஷூ
காலிங் பெல்லை அழுத்திவிட்டு கதவருகே இனியன் நின்றான்.. கதவை திறந்தது சந்தோஷ்.. நீயா சலித்துக்கொண்டு கேட்டான்..
யாருபா என்று உள்ளிருந்து சந்தோஷின் பாட்டி கேட்க..
ம்ம்...எங்க தேனு, இனியன் முதுகின்பின்னால் எட்டி பார்த்தான்... அதுவா பாட்டி கலெக்டர் வந்திருக்காரு... சொல்லும்போதே காரின் கதவை திறந்து தேன்மொழியாள் இனியன் அருகே வந்தாள்..
ஹாய் தேனு.. என்று சந்தோஷ் அனைத்துக்கொள்ள..
திகைத்தபடி இனியனை பார்த்தாள்... வா சந்தோஷ் சிறியதாக புன்னகைக்க..
அவளின் கையை பிடித்து தன் பக்கம் இழுத்தான் இனியன்.. வா உள்ளே போகலாம்..
ஹாலில் வர... ஹோ இனியன் தம்பியா.. நல்லாயிருக்கீயா பா. அடுத்த வார்த்தையே நீ எப்ப டைவர்ஸ் தருவ தம்பி.. வர தைக்குள்ள தேனுக்கும் சந்தோஷுக்கும் கல்யாணம் முடிச்சிடலாம் பேசியிருக்கோம்...
அங்கே அவர்கள் பேச பேச தன்னவளை மட்டுமே இமைக்காமல் பார்த்திருந்தான்..
கடைசியில என் தேனு எனக்குதான் கடவுள் எழுதிருக்காரு போல சந்தோஷும் இட்டுகட்டி பேசினான்..
சந்தோஷ் என்ன பேசற புரிஞ்சு பேசு தேனு அவனை அதட்டினால்...
தேனுவின் கையை இறுக்க பிடித்திருந்தான், விறுவிறுன்னு அவளை இழுத்துக்கொண்டு மேலே அவளின் ரூமிற்குச் சென்று கதவை டமால் என்று தாளிட்டான் இனியன்...
அவனின் கோபத்தை அறியாதவளா பேதை, இல்ல மாமா அவன் சும்மா கலாய்க்கிறான்..
ப்ளாருன்னு ஒரு அறை, அடுத்த வார்த்தை பேசவில்லை தேனு, கண்கலங்கி இனியனை ஏறிட்டாள்.. இப்ப எதுக்கு அடிச்ச என்ற கேள்வியோடு...
அவன் வந்தது உனக்கு தெரியும்தானே..
ம்ம்..என்று தலையை ஆட்டினாள்...
எல்லாம் ஜாயின்ட் அடிச்சிட்டிங்க... ஆனா உனக்கு நான்மட்டும் ஆகல.. இது என்ன லாஜீக்கு தேனு...
மாமா... நீ என்னை சந்தேகப்படுறீயா.. ஓடிச்சென்று அவனின் முதுகை கட்டியனைத்துக் கொண்டாள்.. இந்த உயிர் இருக்கும்வரை உன்னைதவிர யாரும் என் மனசில வரமுடியாது மாமா..
போதும்டி உன் நடிப்பு... கட்டியிருந்த அவளின் கைகளை பிரித்து விட்டான். இன்னைக்கு கல்யாண நாளில்ல உனக்கு பரிசு கொடுக்கட்டுமா தேனு..
அய்யோ இவரை எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியலையே, கையை பிசைந்துக்கொண்டு நின்றாள்...
மாமா...
தேனு... தேனு என்று கீழியிருந்து அவளின் பாட்டி அழைக்க...
என் புருஷனோடு இருக்கேன் சொல்லுடி.. என்று கத்தினான் இனியன்..
மாமா தப்பா நினைச்சுப்பாங்க... என்ன என்று கேட்டுவரட்டுமா...
இனியன் முறைத்த முறைப்பில் கதவை திறந்து பாட்டி நான் அவருடன் இருக்கேன் மேலிருந்து கீழே கொஞ்சம் குரலை உயர்த்தி கூறினாள்...
இனியன் தேனுவின் பெட்டில் அமர்ந்து கால்களை நீட்டினான்... கதவை தாளிட்டு அவன் பக்கத்தில் போய் நின்றாள்..
என்ன பத்திரிக்கையெல்லாம் அடிச்சாச்சா, கல்யாண பெண்ணே, உன் முன்னாள் புருஷனாச்சே ஹனிமூனுக்கு டிக்கட் புக் பண்ணட்டா தேனு....
இனியன் பேசுவதை காதுக்கொடுத்து கேட்கமுடியவில்லை தேனுவால்.. பாத்ரூம் நோக்கி நகர அவளின் கையை பிடித்து இழுத்து மடியில் உட்கார வைத்தான் இனியன்..
என்னடி எஸ் ஆக பார்க்கிற.. ஹாங் கல்யாண நாளில்ல நல்ல கிப்ட் கொடுக்கனும் நினைச்சேன்... என்ன தரலாம் என்று அவளின் உதட்டை பிடித்து இழுத்தான்..
ஸோ ஸாப்ட் உன் லிப்ஸ்... ஆனா பயங்கற விஷம்.. அது.
எதுவுமே பேசவில்லை தேனு , பேசினால் காலில் சலங்கை கட்டாமலே ஆடுவான் என்று தெரியும்.. ஆனால் ஒன்றுமட்டும் புரியவில்லை அவளுக்கு ஏன் சந்தோஷும், பாட்டியும் இப்படி பேசினார்கள் என்று..
நைட் ஒன்பது மணிக்கு பால்கனி கதவை திறந்து நில்லேன்.. உனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கு...
கீழே ரேனுகா தனது மாமியாரிடம், ரொம்ப நன்றி அத்தை என்று கூறினாள்..
அத்தை இது ஒரு சின்ன விஷியம்தான் இதுக்குபோய் சந்தோஷும் தன் அத்தையை சமாதானம் படுத்தினான்...
நல்லகாலம் அத்தை, இனியன் நல்ல மூடுல இருந்திருப்பான்... இல்லைன்னா அடிவாங்கியிருப்பேன்.. இரண்டுபேரும் சேர்ந்துடுவாங்க, ஈகோ தான் இருவருக்கும்... அதை கிளம்பிவிட்டாச்சு... சண்டையில போய் சமாதானத்தில முடிப்பாங்க... எனக்கு கொஞ்சம் வெளியே வேலையிருக்கு நான் போயிட்டு வரேன்.. என்று கிளம்பினான்..
.....
மேலே, இனியனால் தன்னை கட்டுபடுத்திக் கொள்ளமுடியவில்லை, அவன் எப்படி என்னை பார்த்து இப்படி கேட்பான்..
யாரு மாமா..
ஹா.. கடவுளு உன்னை அவனுக்காக படைச்சாங்கன்னு சொன்னானே அந்த எரும..
சும்மா... சொல்லிருப்பான்.
அதெப்படி என் பொண்டாட்டிய பார்த்து சொல்லுவான்..
சிரித்துவிட்டாள் தேனுமொழியாள்.. டக்கென்று தன் வாயை மூடிக்கொள்ள
சிரிச்சியா..
இல்ல என்று தலையை ஆட்டினாள்..
ரொம்ப கஷ்டப்படுற போல, இந்த வாரத்திற்குள் டைவர்ஸ் கொடுத்திடுவேன்... உங்க பாட்டிக்கிட்ட சொல்லு.. எழுந்து வெளியே சென்றான்..
.....
அன்று இரவு, ஒன்பது மணிக்கு தலையில் பூ சூடி தன் மாமனை காண பால்கனி கதவை திறந்தாள்...
அவள் கண்ட காட்சி, உயிரே அவளை விட்டு சென்றதுபோல் நினைத்தாள்... கண்கள் கலங்க எதிரே பார்க்க..
இனியன் மேலாடையில்லாமல் தேனுவை பார்த்து நிற்க..அவனை கட்டியனைத்து காதுமடலில் முத்தமிட்டுக் கொண்டிருந்தாள் ஒரு பெண்... அவளும் அறைகுறை ஆடையுடன்..
அண்ணா சொன்ன மாடலிங் செய்யும் பெண் லேகாதானே அது... அவளின் முதுகு மட்டுமே தேனுவிற்கு தெரிந்தது...
இனியனின் கழுத்தில் முத்தமிட.. சிரித்தபடியே தேனுவை பார்த்தான்.. நீ இதைதானே எதிர்ப்பார்த்த... இன்னோரு பெண்ணை மனம் முடிக்க சொல்லி... நல்லா பாரு அவள் என்னிடம் வரம்பு மீறும் காட்சியை, மெதுவாக அவனின் பேன்ட்டை கழிட்டினாள்...
ஒரு நிமிடம் டார்லிங்.. நான் பால்கனி கதவை மூடிட்டு வரேன்... கதவை சாற்றினான்..
பிரம்மையில் தேனுவின் கண் முன்னே அடுத்த காட்சிகள் ஓட ஆரம்பித்தன... நோ.. நான் எதுவும் நடக்கவிடமாட்டேன்.. உடனே மோகனை அழைத்தாள் தனது போனில்..
என்னக்கா... வேளச்சேரி மால்ல சினிமா பார்த்துட்டுயிருக்கேன்... மாமாதான் டிக்கெட் வாங்கிக்கொடுத்துச்சு..
உடனே வீட்டுக்கு வாடா..
அக்கா படமே இப்பதான் ஆரம்பிச்சாங்க...
வாடா என்று கத்தினாள்..
இனியன் வீட்டு காலிங்பெல் அடிக்க... கதவை திறந்தான் இனியன் சிவ பூஜையில கரடி நுழைஞ்ச மாதிரி யாருடா...என்று திறக்க.
ஸார் தண்ணீ கேன் போட வந்திருக்கேன்..
நான் கேட்கலையே என்றான்...
ஸார் போன் வந்தது.. உடனே அர்ஜென்ட்..
சரி வச்சிட்டு போ.. அவன் சென்றவுடன் கதவை தாளிட்டு... ரூமிற்குள் செல்ல..
மறுபடியும் காலிங் பெல் அடித்தது...
கதவை திறந்தான்... ஸார் சோமேட்டா இருந்து காய்கறி கேட்டீங்க கொண்டுவந்திருக்கேன்.. ஆர்டர் கரெக்டா பாருங்க என்று பாஸ்கெட்டை ஹாலில் வைத்தான்..
நான் ஆர்டர் பண்ணலையே..
இந்த முகவரிதான் ஸார், நீங்க இனியன் ஸார்தானே...
அவன் சென்றபிறகு கதவை தாளிட்டான்..
மறுபடியும் காலிங்பெல் அடித்தது... ஸார் பிஸ்ஸா ஹட்டிலிருந்து பிஸ்ஸா எடுத்து தந்தான்..
ச்சே மூடே போயிடுச்சு...
கதவை தாளிடவில்லை சோபாவில் உட்கார்ந்தான்... வீட்டில யாருங்க இரண்டு பெரியவர் வந்தார்கள்...
ஸார் இந்த தெருவில இருக்க விநாயகர் கோவிலுக்கு சுற்றி டையில்ஸ் போட போறோம்... உங்களால முடிந்தா நன்கொடை தாங்க... காலையில வந்தா நீ இல்ல அதான் இந்த டைமில்ல வந்தோம்...
இனியன் யோசிக்க..
இந்த டைமில்ல தான் நீங்க இருப்பீங்க உங்க மனைவி சொன்னாங்க..
எல்லாம் அந்த பிசாசு செய்யர வேலையா.. அவர்களை அனுப்பிவிட்டு.. பால்கனி கதவை திறந்தான்..
ஏய்... இனியன் கத்த..
ஹாப்பி வெட்டிங் டே மாமா என்றாள் தேனு...
இனிமே உன்னால ஒண்ணும் செய்யமுடியாதுடி... எதை நடக்ககூடாதுன்னு தடுத்துயோ அது நடக்கபோகுது..
மாமா என்று மோகன் இனியன் அறைக்குள் நுழைந்தான்...
என்னடா பாதியிலே வந்துட்டே..
ஒரே தலைவலி மாமா அதான் சினிமா பார்க்காம வந்துட்டேன்.. நீங்க எப்போ அசோக் அண்ணா வந்தீங்க கேட்டுவிட்டு ,அவனது அறைக்குள் சென்றான்..
தனது அக்காவிற்கு போனை போட்டான்... எதுக்கு வரச்சொன்ன..
தேனு கேட்ட கேள்விக்கு...
யாரும் இங்க வரல, என் தலைவன் படத்தை பார்க்கவிடாம பண்ணிட்டே... உங்க ரெண்டுபேருக்கும் இதே வேலையா கேட்கிறேன்..
டேய் அசோக் அடுத்த பைலை எடு... இன்கம் டாக்ஸ் நாளைக்கு சம்மிட் செய்யனும், வேலையை பார்க்கவிடுறாளா பாரு... அலுத்துக் கொண்டான் இனியன்..
உங்க ரெண்டுபேருக்கும் நான் ஊறுகாயாடா... அசோக் சொல்ல
ஊறுகாயில்ல சிக்கன் பீஸ்ஸூ.
.......
வேலை முடித்துவிட்டு படுக்க மணி ஒன்றானது இனியனுக்கு... தேனுவை நினைத்தபடியே படுத்திருந்தான்... தேனுவின் அறை முழுவது இனியன் போட்டோ மற்றுமே இருந்தது.. எவ்வளவு லவ் என்மேலடி, மேகம் மறைந்த நிலவுபோல எல்லாத்தையும் மறைச்சிட்டு இருக்க..
....
உன்னில் சிக்க வைக்கிற
அன்பு நன்பர்களே...
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
உங்கள் அன்பு
லக்ஷூ